Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 4

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 4

விடுமுறை நாள் என்று நளினா ஷாப்பிங் மால் சென்று இருந்தாள். செல்போனில் சஹியுடன் பேசிக்கொண்டே, லிப்ட்னினுள் சென்றாள்.

லிப்டிருக்குள் ஏற்கனவே நிறைய கூட்டம் இருந்ததால் ஒரு ஓரமாக நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

“சஹி என்னடி ஊருக்கு போய் சேர்ந்தாச்சா?” என்றாள்.

இந்த குரலை கேட்டதும் திரும்பி பார்த்தான் பரத். மனதினுள் "அட நம்ம பட்டாசு" என்று சொல்லிக்கொண்டான்.

பரத்தும் அவ்யுக்தும் அன்று அதே மாலுக்கு ஷாப்பிங் வந்திருந்தனர்.
பரத் திரும்பி அவ்யுக்திடம், “டேய் அவ்யுக்த், அங்க பாரு உன் சிஸ்டர் நிக்கறா.” என்றான்.


அவ்யுக்த் திரு திரு என்று முழித்தான். “எனக்கு ஏதுடா சிஸ்டர்? எங்க அம்மாக்கு நான் ஒரே பிள்ளை தானே?”என்றான்.

மனதினுள் ஒருவேளை "தன்" சிஸ்டர் என்று சொன்னானோ என்று நினைத்தான். “இவனுக்கு சிஸ்டேர்சே இல்லையே ஒரே ஒரு அண்ணா தானே அவரும் அமெரிக்காலே இருக்காரே.... இவனோட ஒரே தொல்லையா போச்சு என்று நினைத்தபடியே, “டேய் என்னடா சொல்ற ஒண்ணும் புரியல?” என்றான் அவ்யுக்த்.

“ம்ம் உன் சிஸ்டர் அங்க நிக்கறா பாரு.” என்றான் பரத். கூடவே ' உன்' என்ற வார்த்தையை அழுத்தி உச்சரித்தான்.

“டேய்” என்று பல்லை கடித்தான் அவ்யுக்த்.

“கூல் அவ்யுக்த், என் வைப் உனக்கு சிஸ்டர் தான?”

“கண்டிப்பா டா பட் உனக்கு தான் இன்னும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “டேய் நிஜமாவாடா யாருடா, ப்ரொபோஸ் பண்ணிட்டியா?” என்றான்.

“இல்லை டா, நான் உனக்கு சொன்னேனே அந்த பட பட பட்டாசு தான் டா.”

“பரத் எதுல தான் விளையாடறதுன்னு இல்லையா?”

“அவ்யுக்த், உன் கிட்ட பேசும் போது நான் விளையாட்டுக்கு தான் பேசினேன் டா, பட் அவளோட முகமே திருப்பி திருப்பி என் மனசுக்குள்ள வந்திட்டே இருந்துச்சு டா, அப்போ தான் இது சம்திங் ஸ்பெஷல் ன்னு புரிஞ்சுகிட்டேன், சோ இது விளையாட்டில்ல புரிஞ்சிக்கோ.”

தன் நண்பனின் மனநிலையை அறிந்த அவ்யுக்த்,”ஆல் தி பெஸ்ட் டா சிக்கிரம் அவங்க கிட்ட சொல்லிடு, எங்க இருக்காங்க காமி நான் பார்க்கிறேன்” என்றான்.

“அதோ அங்க கிரீன் கலர் சல்வார் போட்டு இருக்கா இல்லை அவ தான் டா.”

“ஓகே டா, நான் இந்த ப்ளோர்லேயே இறங்கிக்கிறேன், நீ போய் பேசிட்டு வா.”

“டேய் இருடா அன்னிக்கு அவ என் மேல ரொம்ப கோபமா இருந்தா, இப்போ எப்படியோ தெரியல, அதனால நீயும் என் கூட வந்தன்னா நீயே அவ கிட்ட பேசி சமாதானப் படுத்தலாம், கூடவே அவ பிரண்டு பத்தியும் விசாரிக்கலாம்.”

அதுவரை தன் நண்பனுடன் போகலாம் என்று நினைத்தவனை, பரத்தோட கடைசி வாக்கியம் தடுத்தது.

“டேய் நான் எங்கயும் வரலை, உன் பாடு அவங்க பாடு ஆள விடு.” என்று
கோபமாக உரைத்துவிட்டு லிப்ட் நின்ற தளத்தில் இறங்கி சென்றான்.

அந்த தளத்திலேயே லிப்ட்டில் இருந்த அனைவரும் இறங்கினர். பரத்தையும் நளினாவையும் தவிர.

இதை உணராமலே நளினா சஹியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
பரத்தும் அவளை தொந்தரவு செய்யாமல் அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

நளினா சற்று பூசிய உடல்வாகுடன் கன்னத்தில் விழும் குழியுடனும் கழுத்து வரை வெட்டப்பட்ட கூந்தலுடனும் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள்.பரத்திற்கு பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அதனால் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.

தன்னை யாரோ உற்று பார்ப்பது போல் தோன்ற திரும்பினாள் நளினா.
அங்கே பரத் நின்று தன்னை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தாள்.

பரத் ஆவலுடன் பேச யத்தனிக்கும்போது லிப்ட் நின்றதினால் நளினா அவனை கோபமாக முறைத்துக்கொண்டே இறங்கி சென்று விட்டாள்.

“பரத் உன் நிலைமை ரொம்ப மோசம் டா” என்று நினைத்துக்கொண்டே அவனும் இறங்கி வேகமான எட்டு வைத்து நளினா வின் அருகே சென்று “Excuse Me” என்றான்.

நளினாவும் 'எஸ்' என்றபடியே திரும்பினாள். அங்கே பரத்தை பார்த்ததும் கோபமாக “என்ன சார் எதுக்கு என்னை பாலோ பண்றிங்க?” என்றாள்.

“முதலுக்கே மோசமா போச்சே, என்னை யாருன்னே தெரியல இவகிட்ட என்னனு பேசி அய்யோ பரத் உன் நிலைமை இப்படியா ஆகணும்.” என்று தன் மனதோடு பேசினான்.

“ஹலோ என்ன சார்?” என்ற குரலில் திரும்பி பார்த்த பரத், “என்ன இது புதுசா சார் எல்லாம் போடற?” என்றான்.

நளினா அவனை கோபமாக முறைக்க, “வெயிட் வெயிட் திருப்பியும் முறைக்காத நளின் நிஜமாவே என்னை தெரியலையா?”

“யோவ், நீ என்ன பிஎம்மா?”

பரத்திற்கு புரிந்தது, நம்மளை தெரிந்து கொண்டே தான் இப்படி பேசுகிறாள், அம்மணி என் மீது சரியான கோபத்தில் இருக்காங்க எப்படி சமாதானம் படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“நளின் வாயேன் காபிஷாப்ல உட்கார்ந்துட்டே பேசலாம்.”

“உன் கூட எல்லாம் என்னால் காபி சாப்பிட முடியாது... போய்யா உன் வேலைய பார்த்துட்டு.” என்றாள்.

பரத் உன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்.. இவ ரொம்ப பேசறா என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே நளினாவை நெருங்கினான்.

நளினா பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள். சட்டென்று பரத் அவள் கையை பிடித்து தன் நெஞ்சில் மேல் வைத்துக்கொண்டு, "நளின், நீ அழகா இருக்கன்னு நினைக்கலை... உன் கூட பேசணும்னு நினைக்கலை.. பட் இது எல்லாம் நடந்திடுமோன்னு பயமாயிருக்கு... யோசிச்சு சொல்லு' என்று சொல்லிவிட்டு அவள் கரத்தில் தன் இதழை ஒற்றி எடுத்துவிட்டு ஓடி சென்று விட்டான்.

நளினா இருந்த இடத்தை விட்டு அசையாமல் சிலையாக நின்று விட்டாள்.

சற்று தள்ளி நின்று கொண்ட பரத் தன் மனதினுள், “டேய் நீ பெரிய மாதவன்னு நினைப்பு மனசுல..., இதுக்கும் சேர்த்து அவளிடம் நன்றாக வாங்கிக்கட்டி கொள்ள போகிறேன்”ன்னு நினைத்துக்கொண்டே நளினாவை பார்த்தான்.

அவள் இருந்த இடத்தில் இருந்து அசையாமல் நின்று கொண்டிருந்தததை பார்த்ததும் தான் செய்துவிட்டு வந்தது புரிந்தது.

திருப்பி அவளருகே வந்து, “சாரி நளின், நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணனும் ன்னு நினைக்கலை.... பட் இது பொய்யும் இல்லை.... எஸ் ஐ லவ் யு சோ மச் டியர்.” என்றான்.

நளினா அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.
 
En da bharath ivlo fast ah erukiye da madhavan thodama pesinan da nee kaila mutham kuduthutu love solra adi kudukardu kulla odi poidu da, nice update Satya dear thanks.
 
Top