தோகை 3:
காலை எட்டு மணியானாலும்...நகரங்களில் விடிந்ததற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.ஆனால் கிராமங்களில் அப்படியில்லை.இருள் விலகாத காலைப் பொழுதில் அவர்கள் விழித்து விடுவது வழக்கம்.
காலை நான்கு மணிக்கே...ஊரின் ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டது.வேகமாக எழுந்த சக்தி....குளித்து முடித்து....வீட்டின் வாசலில் சாணம் தெளித்துக் கொண்டிருந்தாள்.
குப்பாயி...அங்குள்ள மாட்டுக் கொட்டகையில்... கூட்டி அள்ளிக் கொண்டிருக்க...மகாலிங்கம் எழுந்து வெளியே சென்று விட்டார்.ஊரில் இருந்த அந்த ஒரு டீக்கடையில்...இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க....தோட்டங்களுக்கு செல்வோர்...ஒவ்வொரு புறமாய் சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் இதை எல்லாம் அறியாமல்...கேரவனுக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அஜய்.
அவர்கள் ஷாட் எடுக்கப் போகும் பகுதியில்....ஷாட் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க...இருள் மறைந்து விடியத் தொடங்கியிருந்தது.
“கண்ணன்..நீங்க சாரை இப்ப எழுப்பி விட்டா சரியா இருக்கும்..” என்று இயக்குனர் சொல்ல...அவரை ஆமோதிப்பதைப் போல்...சென்றான் கண்ணன்.
அஜய்யை எழுப்ப சென்ற கண்ணனுக்கோ...அவன் உறங்கும் நிலை பார்த்து எழுப்ப மனமே வரவில்லை.
அவன் இப்படி அசந்து தூங்குவது இதுவே முதல் முறை.கட்டுக் கடங்காத காளை ஒன்று...சிறிது ஓய்வு எடுப்பதைப் போல் தோன்றியது கண்ணனுக்கு.
“சார்...” என்று மெதுவாக கண்ணன் அழைக்க...அவனிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை.
“சார்..சார்..” என்று கொஞ்சம் குரலை உயர்த்த....அவன் அழைப்பில் லேசாய் புரண்டான் அஜய்.
கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தவனுக்கு..அப்பொழுது தான் நியாபகம் வந்தது..அவன் நன்னியூரில் இருப்பது.
“நீங்க போங்க கண்ணன்...நான் இன்னும் அரைமணி நேரத்தில் ரெடி ஆகிடுவேன்னு போய் சொல்லுங்க..!” என்றபடி..தன் வேலைகளை முடிக்க தயாரானான்.
கண்ணனுக்கு அவனைக் கண்டு ஒரு பக்கம் பிரமிப்பாக இருந்தது. அவனுக்கெல்லாம் அவனை தூக்கத்தில் எழுப்பினால்..ஒரு அரைமணி நேரம் கழித்து தான் எழுவான்...ஆனால் அஜய்யோ...உடனே எழுந்தது மட்டுமல்லாமல்...சிறிதும் தொய்வின்றி....கிளம்புவதைப் பார்க்கும் போது..கண்ணனுக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.
“அப்படி இருப்பதால் தான் அவன் அவ்வளவு பெரிய ஹீரோ..” என்று கண்ணனின் மனம் நக்கலடிக்க...”அது என்னவோ உண்மைதான்..” என்று எண்ணியபடி சென்றான் கண்ணன்.
குளித்து முடித்து...ரெடியாகிக் கொண்டிருந்த அஜய்....கண்ணாடி முன் நிற்க...ஏனோ அவனை அறியாமல் அவள் நியாபகம்.
புல்லுக் கட்டைத் தூக்கிக் கொண்டு....அவள் சென்ற கோலம்..அவன் கண் முன்னே....ஜன்னலில் தெரிந்த அவள் முகம் அவன் முன்னே... என்று வரிசையாக படமெடுத்து நிற்க...அவள் யோசனையில் நின்றவன்...
“சார்..மேக்கப் மேன் ரெடி..” என்ற குரலில் கலைந்தான்.
இயக்குனர் கையைப் பிசைந்து கொண்டிருக்க...”சார்...இப்ப வந்துடுவார்,...” என்ற கண்ணன்...அவருடைய பதட்டம் பார்த்து....
“என்ன சார்..எனி பிராப்ளம்..?” என்றான்.
“அதை ஏன்ப்பா கேக்குற...ஹீரோயின் இன்னும் வந்த பாடில்லை...வேற பட ஷூட்டிங்கல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சாம்...இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்ன்னு சொல்றாங்க...!” என்று கடுப்புடன் சொல்ல..
“ஐயோ சார்...என்ன இப்படி சொல்றிங்க..? சார்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது..அவ்வளவு தான்...” என்று கண்ணனும் அவன் பங்குக்கு பதற...
இயக்குனருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அஜய்க்கு எப்பொழுதும் நேரம் தவறாமை மிகவும் முக்கியம்...கொஞ்சம் முன்னால் கூட வந்து விடுவான்..ஆனால் தாமதாமாக வர மாட்டான்.
“எந்த காலத்திலும் ஹீரோயிங்களுக்காக காத்திருக்க மாட்டேன்..”. என்று சொல்வது தான் அவன் முதல் கண்டிஷன்.
“இப்ப என்ன பண்றது..?” என்று இயக்குனர் கையைப் பிசைய...
“சார்..பேசாம அஜய் சார் சீன்ஸ் எல்லாம் எடுப்போம்..” என்று கேமரா மேன் சொல்ல...
“யோவ்..நீ வேற ஆத்திரத்தை தூண்டாத..நாம இங்க என்ன முழு படத்தையுமா எடுக்க போறோம்...ஜஸ்ட் ஒரு சாங்...ஒரு பைட்...ஒரு லவ் சீன்....அவ்ளோதான்...இதுல எல்லாத்துலையும் ஹீரோயின் ரோலும் இருக்கு..அப்பறம் எப்படி எடுக்குறது..?” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர...
கேரவனுக்குள் சென்ற கண்ணன்..மெதுவாக அஜய்யிடம் விஷயத்தை சொல்ல...அவனின் முகமோ உக்கிரமாய் மாறியது...விருட்டென்று அந்த இடத்த விட்டு எழுந்தவன்...
“என்ன நடக்குது இங்க..?” என்றான் இயக்குனரிடம் கோபமாய்.
“சார்...கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க....இப்ப வந்துடுவாங்க..பிளீஸ்..” என்று அவர் கெஞ்ச...
“ஹீராயின் யாரு...?” என்றான் கேள்வியாய்.
“துப்னா சார்..” என்றார்.
அவ்வளவு தான்...அஜய்க்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை.அவன் முகம் கண்டு அந்த இயக்குனருக்கு ஜன்னியே வந்துவிடும் போல் இருந்தது.
“கண்ணா இங்க வா..!” என்றான் ஆக்ரோஷமாய்.
“சார்..!” என்று அவன் வேகமாய் அருகில் வர..
“துப்னா தான் ஹீரோயின்னு உனக்கு தெரியுமா..?” என்றான்.
“தெ..தெரியும் சார்...!” என்று அவன் திக்கித் திணறி சொல்ல...
அஜய் அவனை விட்ட அரையில் அவன் செவி கலங்கியது.அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்க...
“இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை...” என்று உக்கிர மூர்த்தியாய் கேட்க....
“சாந்தா மேம் தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க...படத்துக்கு பூஜை போடுறப்ப நீங்க இல்லாததால..எல்லாத்தையும் அவங்க தான் சார் பார்த்துகிட்டாங்க....” என்றான் திக்கித் திணறி.
அவனுக்கும்,துப்னாவிற்கும் எப்பொழுதும் ஆகாது.ஆகாது என்பதைக் காட்டிலும் அவளைக் கண்டால் இவனுக்கு அறவே பிடிக்காது. இவனுடன் நடிக்க...எல்லா ஹீரோயின்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்க... இவளை புக் செய்திருப்பது...அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.
“சார்..துப்னாவும் பேமஸ் ஹீரோயின் தான சார்..!” என்று அந்த இயக்குனர் திக்கித் திணறி சொல்ல..
“அது எனக்குத் தேவையில்லாத ஒன்று..!” என்றவன்...கண்ணனிடம் திரும்பி..
“கால்ஷீட்டை குளோஸ் பண்ணுங்க...அட்வான்சை ரீபே பண்ணிடுங்க..!” என்றவன் அங்கிருந்து செல்ல முற்பட..
“சார்...பிளீஸ்...ஹீரோயின் என்னோட செலக்சன் கிடையாது... தயாரிப்பாளர் அவங்க தான் ஹீரோயின்னு சொல்லிட்டாங்க...சார் எனக்கு இது முதல் படம்...எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு இந்த கதையை ஓகே பண்ணியிருக்கேன்...தயவுசெஞ்சு என் வயித்தில் அடிச்சுடாதிங்க..” என்று மன்றாட...
“நெவர்..கடவுளே வந்து சொன்னாலும்...பிடிக்காத ஒரு விஷயத்தை இந்த அஜய் எப்பவுமே செய்ய மாட்டான்..செய்ய வைக்கவும் முடியாது..” என்றான் திமிராய்.
“சார்...ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க...நான் பேசிப் பார்க்குறேன்..” என்று அவர் நகர...
“சார்...” என்று இழுத்தான் கண்ணன்.
“என்ன..?” என்பதைப் போல் பார்த்தான்.
“சார்..அவரைப் பார்த்தா பாவமா இருக்கு....ஒரு ரெண்டு சீன் தான சார்...அப்பறம் ரெண்டாவது ஹீரோயின் வந்திடுவாங்க சார்...” என்றான் அமைதியாய்.
அஜய் அமைதியாய் இருப்பதைப் பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தான்.
“பாவம் சார்...ரொம்ப திறமையானவர்...நெறைய ஷார்ட் பிலிம்ஸ் பண்ணிருக்கார்..எல்லாமே வித்தியாசமான கதைக் கரு...கஷ்ட்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கார்...இதுல தான் சார் அவர் வாழ்க்கையே இருக்கு...” என்று கண்ணன் சொல்லிக் கொண்டிருக்க...
“அவரை வரச் சொல்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.
சந்தோஷமாய் அவனைப் பார்த்த கண்ணன்...வேகமாய் இயக்குனரிடம் சென்று..”சார் உங்களைக் கூப்பிடுறார்...” என்றவுடன்..”இதோ கூப்பிடுறேன் சார்..!” என்றபடி போனை வைத்து விட்டு வந்தார் அவர்.
“என்ன சீன்ஸ் இங்க எடுக்க போறீங்க..கதை என்ன..?” என்றான்.
அவனை அதிர்ச்சியாய் பார்த்த இயக்குனர்...கதையே இவருக்குத் தெரியாதா...என்று ஆச்சர்யமாய் பார்த்தவர்...”எப்படி சார்..கதையே தெரியாம..சீன்ஸ் தெரியமா....டேக் எப்படி போவிங்க..?” என்றார்.
“அது என்பாடு...நீங்க இப்ப இந்த லோக்கேஷன்ல என்ன சீன் எடுக்க போறீங்க அதை மட்டும் சொல்லுங்க...” என்றான்.
“சார்...உங்களுக்கு ஒரு இன்ட்ரோ சாங்...வித் ஹீரோயினோட...அப்பறம் ஒரு பைட் சீன்....அப்பறம் துப்னாவோட டெத் சீன்...கதைப்படி உங்களுக்கு இந்த படத்தில் ரெண்டு ஹீரோயின் சார்...துப்னா கதையோட பிளாஸ்பேக் மட்டும் தான் வருவாங்க...இங்க பிளாஷ் பேக் சீன் தான் எடுக்க போறோம்..” என்றார்.
காலை எட்டு மணியானாலும்...நகரங்களில் விடிந்ததற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.ஆனால் கிராமங்களில் அப்படியில்லை.இருள் விலகாத காலைப் பொழுதில் அவர்கள் விழித்து விடுவது வழக்கம்.
காலை நான்கு மணிக்கே...ஊரின் ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டது.வேகமாக எழுந்த சக்தி....குளித்து முடித்து....வீட்டின் வாசலில் சாணம் தெளித்துக் கொண்டிருந்தாள்.
குப்பாயி...அங்குள்ள மாட்டுக் கொட்டகையில்... கூட்டி அள்ளிக் கொண்டிருக்க...மகாலிங்கம் எழுந்து வெளியே சென்று விட்டார்.ஊரில் இருந்த அந்த ஒரு டீக்கடையில்...இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க....தோட்டங்களுக்கு செல்வோர்...ஒவ்வொரு புறமாய் சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் இதை எல்லாம் அறியாமல்...கேரவனுக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அஜய்.
அவர்கள் ஷாட் எடுக்கப் போகும் பகுதியில்....ஷாட் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க...இருள் மறைந்து விடியத் தொடங்கியிருந்தது.
“கண்ணன்..நீங்க சாரை இப்ப எழுப்பி விட்டா சரியா இருக்கும்..” என்று இயக்குனர் சொல்ல...அவரை ஆமோதிப்பதைப் போல்...சென்றான் கண்ணன்.
அஜய்யை எழுப்ப சென்ற கண்ணனுக்கோ...அவன் உறங்கும் நிலை பார்த்து எழுப்ப மனமே வரவில்லை.
அவன் இப்படி அசந்து தூங்குவது இதுவே முதல் முறை.கட்டுக் கடங்காத காளை ஒன்று...சிறிது ஓய்வு எடுப்பதைப் போல் தோன்றியது கண்ணனுக்கு.
“சார்...” என்று மெதுவாக கண்ணன் அழைக்க...அவனிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை.
“சார்..சார்..” என்று கொஞ்சம் குரலை உயர்த்த....அவன் அழைப்பில் லேசாய் புரண்டான் அஜய்.
கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தவனுக்கு..அப்பொழுது தான் நியாபகம் வந்தது..அவன் நன்னியூரில் இருப்பது.
“நீங்க போங்க கண்ணன்...நான் இன்னும் அரைமணி நேரத்தில் ரெடி ஆகிடுவேன்னு போய் சொல்லுங்க..!” என்றபடி..தன் வேலைகளை முடிக்க தயாரானான்.
கண்ணனுக்கு அவனைக் கண்டு ஒரு பக்கம் பிரமிப்பாக இருந்தது. அவனுக்கெல்லாம் அவனை தூக்கத்தில் எழுப்பினால்..ஒரு அரைமணி நேரம் கழித்து தான் எழுவான்...ஆனால் அஜய்யோ...உடனே எழுந்தது மட்டுமல்லாமல்...சிறிதும் தொய்வின்றி....கிளம்புவதைப் பார்க்கும் போது..கண்ணனுக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.
“அப்படி இருப்பதால் தான் அவன் அவ்வளவு பெரிய ஹீரோ..” என்று கண்ணனின் மனம் நக்கலடிக்க...”அது என்னவோ உண்மைதான்..” என்று எண்ணியபடி சென்றான் கண்ணன்.
குளித்து முடித்து...ரெடியாகிக் கொண்டிருந்த அஜய்....கண்ணாடி முன் நிற்க...ஏனோ அவனை அறியாமல் அவள் நியாபகம்.
புல்லுக் கட்டைத் தூக்கிக் கொண்டு....அவள் சென்ற கோலம்..அவன் கண் முன்னே....ஜன்னலில் தெரிந்த அவள் முகம் அவன் முன்னே... என்று வரிசையாக படமெடுத்து நிற்க...அவள் யோசனையில் நின்றவன்...
“சார்..மேக்கப் மேன் ரெடி..” என்ற குரலில் கலைந்தான்.
இயக்குனர் கையைப் பிசைந்து கொண்டிருக்க...”சார்...இப்ப வந்துடுவார்,...” என்ற கண்ணன்...அவருடைய பதட்டம் பார்த்து....
“என்ன சார்..எனி பிராப்ளம்..?” என்றான்.
“அதை ஏன்ப்பா கேக்குற...ஹீரோயின் இன்னும் வந்த பாடில்லை...வேற பட ஷூட்டிங்கல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சாம்...இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்ன்னு சொல்றாங்க...!” என்று கடுப்புடன் சொல்ல..
“ஐயோ சார்...என்ன இப்படி சொல்றிங்க..? சார்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது..அவ்வளவு தான்...” என்று கண்ணனும் அவன் பங்குக்கு பதற...
இயக்குனருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அஜய்க்கு எப்பொழுதும் நேரம் தவறாமை மிகவும் முக்கியம்...கொஞ்சம் முன்னால் கூட வந்து விடுவான்..ஆனால் தாமதாமாக வர மாட்டான்.
“எந்த காலத்திலும் ஹீரோயிங்களுக்காக காத்திருக்க மாட்டேன்..”. என்று சொல்வது தான் அவன் முதல் கண்டிஷன்.
“இப்ப என்ன பண்றது..?” என்று இயக்குனர் கையைப் பிசைய...
“சார்..பேசாம அஜய் சார் சீன்ஸ் எல்லாம் எடுப்போம்..” என்று கேமரா மேன் சொல்ல...
“யோவ்..நீ வேற ஆத்திரத்தை தூண்டாத..நாம இங்க என்ன முழு படத்தையுமா எடுக்க போறோம்...ஜஸ்ட் ஒரு சாங்...ஒரு பைட்...ஒரு லவ் சீன்....அவ்ளோதான்...இதுல எல்லாத்துலையும் ஹீரோயின் ரோலும் இருக்கு..அப்பறம் எப்படி எடுக்குறது..?” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர...
கேரவனுக்குள் சென்ற கண்ணன்..மெதுவாக அஜய்யிடம் விஷயத்தை சொல்ல...அவனின் முகமோ உக்கிரமாய் மாறியது...விருட்டென்று அந்த இடத்த விட்டு எழுந்தவன்...
“என்ன நடக்குது இங்க..?” என்றான் இயக்குனரிடம் கோபமாய்.
“சார்...கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க....இப்ப வந்துடுவாங்க..பிளீஸ்..” என்று அவர் கெஞ்ச...
“ஹீராயின் யாரு...?” என்றான் கேள்வியாய்.
“துப்னா சார்..” என்றார்.
அவ்வளவு தான்...அஜய்க்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை.அவன் முகம் கண்டு அந்த இயக்குனருக்கு ஜன்னியே வந்துவிடும் போல் இருந்தது.
“கண்ணா இங்க வா..!” என்றான் ஆக்ரோஷமாய்.
“சார்..!” என்று அவன் வேகமாய் அருகில் வர..
“துப்னா தான் ஹீரோயின்னு உனக்கு தெரியுமா..?” என்றான்.
“தெ..தெரியும் சார்...!” என்று அவன் திக்கித் திணறி சொல்ல...
அஜய் அவனை விட்ட அரையில் அவன் செவி கலங்கியது.அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்க...
“இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை...” என்று உக்கிர மூர்த்தியாய் கேட்க....
“சாந்தா மேம் தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க...படத்துக்கு பூஜை போடுறப்ப நீங்க இல்லாததால..எல்லாத்தையும் அவங்க தான் சார் பார்த்துகிட்டாங்க....” என்றான் திக்கித் திணறி.
அவனுக்கும்,துப்னாவிற்கும் எப்பொழுதும் ஆகாது.ஆகாது என்பதைக் காட்டிலும் அவளைக் கண்டால் இவனுக்கு அறவே பிடிக்காது. இவனுடன் நடிக்க...எல்லா ஹீரோயின்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்க... இவளை புக் செய்திருப்பது...அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.
“சார்..துப்னாவும் பேமஸ் ஹீரோயின் தான சார்..!” என்று அந்த இயக்குனர் திக்கித் திணறி சொல்ல..
“அது எனக்குத் தேவையில்லாத ஒன்று..!” என்றவன்...கண்ணனிடம் திரும்பி..
“கால்ஷீட்டை குளோஸ் பண்ணுங்க...அட்வான்சை ரீபே பண்ணிடுங்க..!” என்றவன் அங்கிருந்து செல்ல முற்பட..
“சார்...பிளீஸ்...ஹீரோயின் என்னோட செலக்சன் கிடையாது... தயாரிப்பாளர் அவங்க தான் ஹீரோயின்னு சொல்லிட்டாங்க...சார் எனக்கு இது முதல் படம்...எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு இந்த கதையை ஓகே பண்ணியிருக்கேன்...தயவுசெஞ்சு என் வயித்தில் அடிச்சுடாதிங்க..” என்று மன்றாட...
“நெவர்..கடவுளே வந்து சொன்னாலும்...பிடிக்காத ஒரு விஷயத்தை இந்த அஜய் எப்பவுமே செய்ய மாட்டான்..செய்ய வைக்கவும் முடியாது..” என்றான் திமிராய்.
“சார்...ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க...நான் பேசிப் பார்க்குறேன்..” என்று அவர் நகர...
“சார்...” என்று இழுத்தான் கண்ணன்.
“என்ன..?” என்பதைப் போல் பார்த்தான்.
“சார்..அவரைப் பார்த்தா பாவமா இருக்கு....ஒரு ரெண்டு சீன் தான சார்...அப்பறம் ரெண்டாவது ஹீரோயின் வந்திடுவாங்க சார்...” என்றான் அமைதியாய்.
அஜய் அமைதியாய் இருப்பதைப் பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தான்.
“பாவம் சார்...ரொம்ப திறமையானவர்...நெறைய ஷார்ட் பிலிம்ஸ் பண்ணிருக்கார்..எல்லாமே வித்தியாசமான கதைக் கரு...கஷ்ட்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கார்...இதுல தான் சார் அவர் வாழ்க்கையே இருக்கு...” என்று கண்ணன் சொல்லிக் கொண்டிருக்க...
“அவரை வரச் சொல்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.
சந்தோஷமாய் அவனைப் பார்த்த கண்ணன்...வேகமாய் இயக்குனரிடம் சென்று..”சார் உங்களைக் கூப்பிடுறார்...” என்றவுடன்..”இதோ கூப்பிடுறேன் சார்..!” என்றபடி போனை வைத்து விட்டு வந்தார் அவர்.
“என்ன சீன்ஸ் இங்க எடுக்க போறீங்க..கதை என்ன..?” என்றான்.
அவனை அதிர்ச்சியாய் பார்த்த இயக்குனர்...கதையே இவருக்குத் தெரியாதா...என்று ஆச்சர்யமாய் பார்த்தவர்...”எப்படி சார்..கதையே தெரியாம..சீன்ஸ் தெரியமா....டேக் எப்படி போவிங்க..?” என்றார்.
“அது என்பாடு...நீங்க இப்ப இந்த லோக்கேஷன்ல என்ன சீன் எடுக்க போறீங்க அதை மட்டும் சொல்லுங்க...” என்றான்.
“சார்...உங்களுக்கு ஒரு இன்ட்ரோ சாங்...வித் ஹீரோயினோட...அப்பறம் ஒரு பைட் சீன்....அப்பறம் துப்னாவோட டெத் சீன்...கதைப்படி உங்களுக்கு இந்த படத்தில் ரெண்டு ஹீரோயின் சார்...துப்னா கதையோட பிளாஸ்பேக் மட்டும் தான் வருவாங்க...இங்க பிளாஷ் பேக் சீன் தான் எடுக்க போறோம்..” என்றார்.