தோகை 17:
மேலே சென்ற அஜய்..சிறிது நேரத்தில் தயாராகி வர...சக்தியும் தயாராகி வந்தாள்.மனதிற்குள் எண்ணி வந்த எதையும் செயல்படுத்த முடியவில்லை சக்தியாள்.
அந்த வீட்டின் பூஜையறையில்....கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள் சக்தி.அவளை அப்படிப் பார்த்த அவளின் பாட்டிக்கும்,அப்பாவிற்கும் மனம் நெகிழ...அஜய்யின் அழைப்பை தட்ட முடியாமல்..வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தார் சாந்தா.
மீண்டும் ஒருமுறை தாலியைக் கட்டினான் அஜய்.ஆனால் அது அவள் கழட்டி எறிந்த அதே தாலியாக இருக்க...அதைக் கண்ட சக்தி திகைத்தாள்.
அதே அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க...அவனோ அவளை சட்டையே செய்யவில்லை.
“இப்ப உங்களுக்கு திருப்திதான பாட்டி..!” என்றான்.
“ரொம்ப சந்தோசம் தம்பி..!” என்று அவர் சொல்ல...
“ஊருல இருக்குறவங்களைப் பத்தி அக்கரைப் பட்டா போதாது அஜய்.பெத்த தாய்..என்னைப் பத்தின அக்கறை இருக்கா உனக்கு..? நான் சொல்ல சொல்ல கேட்காம..இப்படி ஒரு காரியம் பண்ண எப்படி மனசு வந்தது உனக்கு..
இப்படி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ற அளவுக்கு இப்ப என்ன வந்தது...?நீ என்ன இவங்களை மாதிரி அன்னாடங் காச்சியா...இப்படி யாருமில்லாம கல்யாணம் பண்ண..?
உன்னைப் பத்தி எவ்வளவு கனவு கண்டிருந்தேன்..? எத்தனை பிரபலம்..உன் கல்யாணத்துக்கு வந்திருக்கணும்...அதை..இந்த மொத்த சினிமாத்துறையே கொண்டாடி இருக்கும்...
ஆனா...இப்போ...நான் என்னன்னு வெளிய தலையைக் காட்டுவேன்..?” என்று அவர் ஆற்றாமையில் பொங்க....
“அப்போ..வெளிய தலையைக் காட்டாதிங்க..!” என்றான் பட்டென்று.
“கண்ணன்..”
“சார்..”
மீடியாவுக்கு சொல்லியாச்சா..?”
“எஸ் சார்....வெளிய வெயிட் பண்றாங்க..!” என்றான்.
சக்தியின் கையைப் பிடித்தபடி அவன் நடக்க..அவளோ..அவன் கையில் இருந்து தன் கையை உருவ முனைய..அவளின் முயற்சி அறிந்தவனாய்...அவனுடைய பிடி இரும்புப் பிடியாய் இறுகியது.
அதே..மீடியா..அதே மனிதர்கள்...
“சார்...இவங்க யாருனே தெரியாதுன்னு சொன்னிங்க..? இப்போ மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டிங்க..?” என்றனர்.
“சாரி..! நேத்து சக்தி சொன்னது தான் உண்மை..நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்..இடையில கொஞ்சம் மனஸ்தாபம்..அதான் கோபத்துல யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன்..மத்தபடி எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை...!” என்றான் அமைதியாய்.
“இவ்வளவு சீக்கிரம் நீங்க கல்யாணம் பண்ணுனதுக்கு காரணம் துப்னா மேடமா..?” என்றாள் ஒரு பெண்.
அவள் பேரைக் கேட்ட சக்தியின் முகம் இறுக...அவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு.
“அவங்களும் ஒரு காரணம்..!” என்றான்.
“உங்கம்மா.....அவங்க கூட தான் திருமணம் நடக்கப் போகுதுன்னு சொன்னாங்களே..!”
“எங்கம்மாவுக்கு அந்த ஆசை இருக்கு..ஆனா என்னோட ஆசையை புருஞ்சுகிட்டு...அவங்க சமாதானம் ஆகிட்டாங்க..!”
“அடப்பாவி எப்படியெல்லாம் புளுகுறான்..?” என்று எண்ணிக் கொண்டிருந்தாள் சக்தி.
“நீங்க...சொசைட்டில..இவ்வளவு பெரிய ஹீரோ..ஆனா நீங்க இப்படி சாதாரணமான ஒரு பெண்ணை திருமணம் செய்ய...வேற காரணம் இருக்கா..?” என்ற கேள்வியில் கோபமடைந்தான் அஜய்.
“அதென்ன..சாதாரண..? இந்த கேள்விக்கு என்னோட பதில் அவசியமில்லாதது.இருந்தாலும் சொல்றேன்...
நாம எல்லாரும் அதே சாதாரண வாழ்க்கையில் இருந்து வந்தவங்க தான்...இந்த சினிமாத்துறையில...பல பேர்..கஷ்ட்டப்பட்டு வந்தவங்க தான்..அடிமட்டத்துல இருந்து வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க..!
அதே மாதிரி..எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை....பொதுவெளியில் விவாதிப்பதை நான் அனுமதிக்க முடியாது.
“உங்களை நல்லவர்ன்னு சொல்லிக்கிறிங்களா..?”
தான் செய்யற தப்பு வெளிய தெரியாத வரைக்கும் தான்..எந்த மனுஷனுமே நல்லவன்...எங்க துறையில் தெரியுது..நிறைய இடத்தில் தெரியலை..அதான் உண்மை.எல்லா மனுஷனுக்குமே ஒரு கருப்பு பக்கம் இருக்கு..எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் இருக்கு.
இது எல்லாம் நமக்கு நல்லா தெரியும்..தெரிஞ்சாலும்...நல்லவன் மாதிரியே வேஷம் போட்டுட்டு..எப்படா..யார் சிக்குவாங்க..அவங்களை வறுப்போம்...யார் பிரச்சனையில் மாட்டுவாங்க..அவங்களுக்கு அறிவுரை சொல்லுவோம்ன்னு திரியறது...
என்னோட பொண்டாட்டியை சாதாரண பொண்ணுன்னு சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..? என்று அவன் கத்த..
“இப்ப எதுக்கு சார் கோபப்படுறிங்க...?” என்று கேள்வி வர..
“நீங்க ஏன் கோபம் வர மாதிரி கேள்வி கேட்குறிங்க..?” என்றான்.
“உங்க கல்யாணம்..உங்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியா இருக்காதா..?”
“நல்ல விஷயங்களுக்கு அதிர்ச்சி தேவையில்லை..!” என்றான்.
“வாழ்த்துக்கள் சார்..!”
“தேங்க்ஸ்..!” என்றபடி அவன் உள்ளே செல்ல...அங்கு நடந்ததைப் பார்த்த சக்த்திக்கு தலையே வலித்தது.
“என்ன சக்தி..? இதுக்கே தலைவலி வந்தா எப்படி..இது தான ஆரம்பம்..இன்னும் நீ எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு..!” என்று மனசாட்சி சொல்ல...
இவர்களின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த துப்னாவிற்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு ஆக்ரோஷம்..அந்த நிமிடம்...அவள் வீட்டின் டிவி..அவள் கையால் மரணத்தை தழுவியிருந்தது.அவளின் முழு கோபமும் சாந்தாவின் மேல் திரும்பியிருந்தது.எல்லாம் அவரால் வந்தது..என்று எண்ணியவள்...அவருக்கான நேரத்தை யோசித்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ..நாங்க கிளம்புறோம் தம்பி..!” என்று மகாலிங்கம் சொல்ல..
“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டிங்க..? கொஞ்ச நாள் இங்கயே இருக்கலாமே..!” என்றான்.
“அது சரிவராது தம்பி...பொண்ணக் குடுத்த இடத்துல உட்கார்ந்து சாப்பிடறது மரியாதையா இருக்காது..! நாங்க இப்போ கிளம்பினாத்தான்....சரியா இருக்கும்..” என்றார்.
“இல்லை..சக்திக்கு இது புது இடம்...! அவ மட்டும் எப்படி தனியா சமாளிப்பா..எனக்கு ஈவ்னிங் ஷூட்டிங் வேற இருக்கு...நீங்க பாட்டியை இங்க விட்டுட்டு போங்களேன்...கொஞ்ச நாள் அவங்க சக்தி கூட இருந்தா சக்திக்கும் துணையா இருக்கும்..!” என்றான்.
“ஆமா...பாட்டி..!” என்றவளின் கண்கள் குளம் கட்டி நிற்க..
சிறிது நேரம் யோசித்த பாட்டி...”ஆமா லிங்கம்...நீ கிளம்பிப் போயி...ஊர்ல செய்ய வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்..! இங்க நடக்க வேண்டியதை எல்லாம் நான் இருந்து பார்த்துக்கறேன்..!” என்றார்.
“சொல்றேன்னு தப்பா நினைக்க கூடாது தம்பி...சொந்த பந்தமெல்லாம்..கூடி நின்னு நடக்க வேண்டிய கல்யாணம்..இப்படியொரு நிலையில் நடக்க வேண்டியதா போயிட்டது..உங்களுக்கு எப்ப சவுகரியப்படுமோ...அப்போ..சக்தியைக் கூட்டிட்டு ஊருக்கு வந்திங்கன்னா...நாங்க செய்யற சாங்கியம் எல்லாம் செஞ்சு புடுவோம்...” என்றார்.
“சாரி அங்கிள்...அப்படி நினச்ச நேரத்துக்கு என்னால வர முடியாது..என்னோட நிலைமை அப்படி...ஆனா கண்டிப்பா எப்படியாவது சக்தியை கூட்டிட்டு வரேன்..!” என்று வாக்குக் குடுத்தான்.
இத்தனைப் பேச்சுக்கு மத்தியிலும் சக்தி அமைதியாய் இருந்தாள்.இத்தனை நாள் இல்லாமல்...இப்போ என் வீட்டுக்கு நான் போகக் கூட..இவனிடம் கெஞ்சிட்டு இருக்காரே.. அப்பா....என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
சக்தியின் அப்பாவும் கிளம்பிப் போக...வந்த அசதியில் பாட்டியும் உறங்கி விட்டார்.
“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிக்க போற..?” என்றவனின் கேள்வியில் அவனை முறைத்தான்.
“என்ன முறைப்பு..?”
“ஒண்ணுமில்ல..!” என்றாள்.
“அப்ப ஏதோ ஒன்னு இருக்கு..!” என்றான்.
“ஆமா..! இருக்கு.இப்போ அதுக்கு என்ன..?” என்றாள்.
“ஒண்ணுமில்லை...” என்றபடி அவன் அறைக்கு செல்ல..அவளுக்கு தான் அங்கே இருக்க தயக்கமாக இருந்தது.அதுவரை தெரியாத முரண்பாடுகள்..அவளுக்கு அப்போது தெரிய ஆரம்பித்திருந்தது.
“எப்படி வீட்டுக்குள்ளயே இருக்குறது..?” என்று அவள் நொந்து கொள்ள..அவளை அந்த வீட்டின் வேலைக்காரர்கள்...சுவாரஸ்யமுடன் பார்த்துக் கொண்டிருக்க.... அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே அவன் பின்னே சென்றாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல....
ஷூட்டிங் சென்று ஐந்து நாட்களாகியும் அஜய் வீடு திரும்பவில்லை.சக்திக்கு தான் எரிச்சலாய் இருந்தது.பாட்டியும் இல்லையென்றால் அவளுக்கு நிச்சயமாக பைத்தியம் பிடித்திருக்கும்.
“பாட்டி..!”
“சொல்லு சக்தி..!”
மேலே சென்ற அஜய்..சிறிது நேரத்தில் தயாராகி வர...சக்தியும் தயாராகி வந்தாள்.மனதிற்குள் எண்ணி வந்த எதையும் செயல்படுத்த முடியவில்லை சக்தியாள்.
அந்த வீட்டின் பூஜையறையில்....கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள் சக்தி.அவளை அப்படிப் பார்த்த அவளின் பாட்டிக்கும்,அப்பாவிற்கும் மனம் நெகிழ...அஜய்யின் அழைப்பை தட்ட முடியாமல்..வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தார் சாந்தா.
மீண்டும் ஒருமுறை தாலியைக் கட்டினான் அஜய்.ஆனால் அது அவள் கழட்டி எறிந்த அதே தாலியாக இருக்க...அதைக் கண்ட சக்தி திகைத்தாள்.
அதே அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க...அவனோ அவளை சட்டையே செய்யவில்லை.
“இப்ப உங்களுக்கு திருப்திதான பாட்டி..!” என்றான்.
“ரொம்ப சந்தோசம் தம்பி..!” என்று அவர் சொல்ல...
“ஊருல இருக்குறவங்களைப் பத்தி அக்கரைப் பட்டா போதாது அஜய்.பெத்த தாய்..என்னைப் பத்தின அக்கறை இருக்கா உனக்கு..? நான் சொல்ல சொல்ல கேட்காம..இப்படி ஒரு காரியம் பண்ண எப்படி மனசு வந்தது உனக்கு..
இப்படி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ற அளவுக்கு இப்ப என்ன வந்தது...?நீ என்ன இவங்களை மாதிரி அன்னாடங் காச்சியா...இப்படி யாருமில்லாம கல்யாணம் பண்ண..?
உன்னைப் பத்தி எவ்வளவு கனவு கண்டிருந்தேன்..? எத்தனை பிரபலம்..உன் கல்யாணத்துக்கு வந்திருக்கணும்...அதை..இந்த மொத்த சினிமாத்துறையே கொண்டாடி இருக்கும்...
ஆனா...இப்போ...நான் என்னன்னு வெளிய தலையைக் காட்டுவேன்..?” என்று அவர் ஆற்றாமையில் பொங்க....
“அப்போ..வெளிய தலையைக் காட்டாதிங்க..!” என்றான் பட்டென்று.
“கண்ணன்..”
“சார்..”
மீடியாவுக்கு சொல்லியாச்சா..?”
“எஸ் சார்....வெளிய வெயிட் பண்றாங்க..!” என்றான்.
சக்தியின் கையைப் பிடித்தபடி அவன் நடக்க..அவளோ..அவன் கையில் இருந்து தன் கையை உருவ முனைய..அவளின் முயற்சி அறிந்தவனாய்...அவனுடைய பிடி இரும்புப் பிடியாய் இறுகியது.
அதே..மீடியா..அதே மனிதர்கள்...
“சார்...இவங்க யாருனே தெரியாதுன்னு சொன்னிங்க..? இப்போ மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டிங்க..?” என்றனர்.
“சாரி..! நேத்து சக்தி சொன்னது தான் உண்மை..நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்..இடையில கொஞ்சம் மனஸ்தாபம்..அதான் கோபத்துல யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன்..மத்தபடி எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை...!” என்றான் அமைதியாய்.
“இவ்வளவு சீக்கிரம் நீங்க கல்யாணம் பண்ணுனதுக்கு காரணம் துப்னா மேடமா..?” என்றாள் ஒரு பெண்.
அவள் பேரைக் கேட்ட சக்தியின் முகம் இறுக...அவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு.
“அவங்களும் ஒரு காரணம்..!” என்றான்.
“உங்கம்மா.....அவங்க கூட தான் திருமணம் நடக்கப் போகுதுன்னு சொன்னாங்களே..!”
“எங்கம்மாவுக்கு அந்த ஆசை இருக்கு..ஆனா என்னோட ஆசையை புருஞ்சுகிட்டு...அவங்க சமாதானம் ஆகிட்டாங்க..!”
“அடப்பாவி எப்படியெல்லாம் புளுகுறான்..?” என்று எண்ணிக் கொண்டிருந்தாள் சக்தி.
“நீங்க...சொசைட்டில..இவ்வளவு பெரிய ஹீரோ..ஆனா நீங்க இப்படி சாதாரணமான ஒரு பெண்ணை திருமணம் செய்ய...வேற காரணம் இருக்கா..?” என்ற கேள்வியில் கோபமடைந்தான் அஜய்.
“அதென்ன..சாதாரண..? இந்த கேள்விக்கு என்னோட பதில் அவசியமில்லாதது.இருந்தாலும் சொல்றேன்...
நாம எல்லாரும் அதே சாதாரண வாழ்க்கையில் இருந்து வந்தவங்க தான்...இந்த சினிமாத்துறையில...பல பேர்..கஷ்ட்டப்பட்டு வந்தவங்க தான்..அடிமட்டத்துல இருந்து வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க..!
அதே மாதிரி..எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை....பொதுவெளியில் விவாதிப்பதை நான் அனுமதிக்க முடியாது.
“உங்களை நல்லவர்ன்னு சொல்லிக்கிறிங்களா..?”
தான் செய்யற தப்பு வெளிய தெரியாத வரைக்கும் தான்..எந்த மனுஷனுமே நல்லவன்...எங்க துறையில் தெரியுது..நிறைய இடத்தில் தெரியலை..அதான் உண்மை.எல்லா மனுஷனுக்குமே ஒரு கருப்பு பக்கம் இருக்கு..எல்லாருக்குள்ளயும் ஒரு மிருகம் இருக்கு.
இது எல்லாம் நமக்கு நல்லா தெரியும்..தெரிஞ்சாலும்...நல்லவன் மாதிரியே வேஷம் போட்டுட்டு..எப்படா..யார் சிக்குவாங்க..அவங்களை வறுப்போம்...யார் பிரச்சனையில் மாட்டுவாங்க..அவங்களுக்கு அறிவுரை சொல்லுவோம்ன்னு திரியறது...
என்னோட பொண்டாட்டியை சாதாரண பொண்ணுன்னு சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..? என்று அவன் கத்த..
“இப்ப எதுக்கு சார் கோபப்படுறிங்க...?” என்று கேள்வி வர..
“நீங்க ஏன் கோபம் வர மாதிரி கேள்வி கேட்குறிங்க..?” என்றான்.
“உங்க கல்யாணம்..உங்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியா இருக்காதா..?”
“நல்ல விஷயங்களுக்கு அதிர்ச்சி தேவையில்லை..!” என்றான்.
“வாழ்த்துக்கள் சார்..!”
“தேங்க்ஸ்..!” என்றபடி அவன் உள்ளே செல்ல...அங்கு நடந்ததைப் பார்த்த சக்த்திக்கு தலையே வலித்தது.
“என்ன சக்தி..? இதுக்கே தலைவலி வந்தா எப்படி..இது தான ஆரம்பம்..இன்னும் நீ எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு..!” என்று மனசாட்சி சொல்ல...
இவர்களின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த துப்னாவிற்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு ஆக்ரோஷம்..அந்த நிமிடம்...அவள் வீட்டின் டிவி..அவள் கையால் மரணத்தை தழுவியிருந்தது.அவளின் முழு கோபமும் சாந்தாவின் மேல் திரும்பியிருந்தது.எல்லாம் அவரால் வந்தது..என்று எண்ணியவள்...அவருக்கான நேரத்தை யோசித்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ..நாங்க கிளம்புறோம் தம்பி..!” என்று மகாலிங்கம் சொல்ல..
“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டிங்க..? கொஞ்ச நாள் இங்கயே இருக்கலாமே..!” என்றான்.
“அது சரிவராது தம்பி...பொண்ணக் குடுத்த இடத்துல உட்கார்ந்து சாப்பிடறது மரியாதையா இருக்காது..! நாங்க இப்போ கிளம்பினாத்தான்....சரியா இருக்கும்..” என்றார்.
“இல்லை..சக்திக்கு இது புது இடம்...! அவ மட்டும் எப்படி தனியா சமாளிப்பா..எனக்கு ஈவ்னிங் ஷூட்டிங் வேற இருக்கு...நீங்க பாட்டியை இங்க விட்டுட்டு போங்களேன்...கொஞ்ச நாள் அவங்க சக்தி கூட இருந்தா சக்திக்கும் துணையா இருக்கும்..!” என்றான்.
“ஆமா...பாட்டி..!” என்றவளின் கண்கள் குளம் கட்டி நிற்க..
சிறிது நேரம் யோசித்த பாட்டி...”ஆமா லிங்கம்...நீ கிளம்பிப் போயி...ஊர்ல செய்ய வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்..! இங்க நடக்க வேண்டியதை எல்லாம் நான் இருந்து பார்த்துக்கறேன்..!” என்றார்.
“சொல்றேன்னு தப்பா நினைக்க கூடாது தம்பி...சொந்த பந்தமெல்லாம்..கூடி நின்னு நடக்க வேண்டிய கல்யாணம்..இப்படியொரு நிலையில் நடக்க வேண்டியதா போயிட்டது..உங்களுக்கு எப்ப சவுகரியப்படுமோ...அப்போ..சக்தியைக் கூட்டிட்டு ஊருக்கு வந்திங்கன்னா...நாங்க செய்யற சாங்கியம் எல்லாம் செஞ்சு புடுவோம்...” என்றார்.
“சாரி அங்கிள்...அப்படி நினச்ச நேரத்துக்கு என்னால வர முடியாது..என்னோட நிலைமை அப்படி...ஆனா கண்டிப்பா எப்படியாவது சக்தியை கூட்டிட்டு வரேன்..!” என்று வாக்குக் குடுத்தான்.
இத்தனைப் பேச்சுக்கு மத்தியிலும் சக்தி அமைதியாய் இருந்தாள்.இத்தனை நாள் இல்லாமல்...இப்போ என் வீட்டுக்கு நான் போகக் கூட..இவனிடம் கெஞ்சிட்டு இருக்காரே.. அப்பா....என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
சக்தியின் அப்பாவும் கிளம்பிப் போக...வந்த அசதியில் பாட்டியும் உறங்கி விட்டார்.
“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிக்க போற..?” என்றவனின் கேள்வியில் அவனை முறைத்தான்.
“என்ன முறைப்பு..?”
“ஒண்ணுமில்ல..!” என்றாள்.
“அப்ப ஏதோ ஒன்னு இருக்கு..!” என்றான்.
“ஆமா..! இருக்கு.இப்போ அதுக்கு என்ன..?” என்றாள்.
“ஒண்ணுமில்லை...” என்றபடி அவன் அறைக்கு செல்ல..அவளுக்கு தான் அங்கே இருக்க தயக்கமாக இருந்தது.அதுவரை தெரியாத முரண்பாடுகள்..அவளுக்கு அப்போது தெரிய ஆரம்பித்திருந்தது.
“எப்படி வீட்டுக்குள்ளயே இருக்குறது..?” என்று அவள் நொந்து கொள்ள..அவளை அந்த வீட்டின் வேலைக்காரர்கள்...சுவாரஸ்யமுடன் பார்த்துக் கொண்டிருக்க.... அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே அவன் பின்னே சென்றாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல....
ஷூட்டிங் சென்று ஐந்து நாட்களாகியும் அஜய் வீடு திரும்பவில்லை.சக்திக்கு தான் எரிச்சலாய் இருந்தது.பாட்டியும் இல்லையென்றால் அவளுக்கு நிச்சயமாக பைத்தியம் பிடித்திருக்கும்.
“பாட்டி..!”
“சொல்லு சக்தி..!”