Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 25 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---25

ஆஷிக் சீப் கெஸ்ட்டாக அழைத்த அமைச்சரின் குடோனில் பரினிதா வாய் துணியால் அடைத்தும் ,கைய், கட்டிய நிலையிலும் மயக்கத்தின் பிடியில் மயங்கி இருந்தாள். அப்போது அங்கு வந்த அமைச்சர் தன் அடியாட்களிடம் “என்னங்கடா...குட்டியே தூக்கிட்டிங்களா….” என்று கேட்டாவாரே பரினிதாவின் அருகில் வந்து அவள் முகத்தை பார்த்தார்.

பரினிதாவின் முகத்தை பார்த்த அமைச்சர் இப்பெண்ணின் முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...என்று தன் நியாபக அடுக்கில் இருக்கும் நினைவுகளை தட்டி எழுப்பி யோசித்ததில் நினைவு வந்தவனாக தன் அடியாட்களின் ஒருவனிடம் “ஏய் அன்று *****ஸ்டார் ஒட்டலில் ஆஷிக் கூட பார்த்த பெண் தானே இவள்.” என்று கேட்டதற்க்கு.

“ஆம் தலைவா உங்களுக்கு தான் தெரியுமே...சித்தார்த் ஆஷிக் சகோதரியைய் தான் திருமணம் செய்துக் கொண்டான் என்று.இவள் சித்தார்த்தின் தங்கை தானே தலைவா...அதனால் அன்று இரண்டு பேரும் சேர்ந்து எங்காவது போய் இருப்பாங்க.” என்று தன் அடியாள் விளக்கம் அளித்தாலும் ஏனோ அமைச்சரின் மனம் அதை ஏற்க மறுத்தது.

பரினிதாவின் முகம் பார்த்தவாரே நாம் தவறு செய்து விட்டோமோ...என்று தான் நினைக்க தோன்றியது.இவள் சித்தார்த்தின் தங்கை அளவுக்கு தான் ஆஷிக்குக்கு சொந்தம் என்றால் பரவாயில்லை. ஆனால் அதையும் தாண்டி அவர்களுக்குள் உறவு ஏதாவது இருந்தால் தன் கதி அதோ கதி தான் என்று எண்ணிக் கொண்டான்.

அமைச்சரின் மனம் அன்று தான் பார்த்த போது ஆஷிக் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை பார்த்து விட்டு தானே...தன் ஆட்களிடம் அந்த பெண்ணை பற்றி விசாரிக்க சொன்னான். ஏன் என்றால் ஆஷிக்கை அந்த அமைச்சருக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக தெரியும்.

ஒரு பெண்ணிடம் நின்று பேசி அவர் பார்த்தது கிடையாது. அப்படி பட்டவன் ஒரு பெண்ணிடம் இவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறான் என்றால் அதை சாதரணமாக நினைக்க தோன்ற வில்லை.அதனால் தான் விசாரிக்க சொன்னார்.

பின் தான் விசாரிக்க சொன்னவனிடம் “டேய் அன்று இவளை பற்றி விசாரிக்க சொன்னனே...விசாரிச்சிங்களாடா.” என்று கேட்டதற்க்கு.

“விசாரிச்சோம் தலைவா அது தான் சொன்னனே...இந்த பெண் சித்தார்த்தின் தங்கை. ஆஷிக்கின் சகோதரி சித்தார்த்தை தான் திருமணம் செய்து இருக்கிறாள் என்று .” சொல்பவனை ஒரு கொலை வெறியோடு பார்த்து.

“ஏய் பண்ணாடை. ஊர் அறிந்த விஷயத்தை நீ எனக்கு விசாரிச்சி சொன்ன மாதிரி பேசுறே...நான் ஆஷிக்குக் இந்த பெண்ணுக்கும் பழக்கம் எந்த அளவு என்று விசாரிக்க சொன்னேன். அதை விசாரிச்சிங்களா…” என்ற அமைச்சரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தன் தலையை சொரிந்துக் கொண்டே…

“இல்லையே தலைவா…” என்றவனை ஓங்கி தன் காலால் எட்டி உதைத்தான்.

மெல்லிய முனகல் சத்தத்தில் தான் உதைத்தவனை பார்த்தார். இந்த எருமைமாடு இப்படி அழகாக முனகாதே என்று அவர் எண்ணமிடும் போதே...சத்தம் பரினிதாவிடம் இருந்து வருவதை பார்த்து அமைச்சர் அவள் அருகில் விரைந்து சென்றார்.

இந்த பெண்ணிடமே ஆஷிக்குக்கு இவளுக்கும் என்ன உறவு என்று கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்து பரினிதா அருகில் சென்று “ஏய் குட்டி எழுந்துடு.” என்று சொல்லியும் பரினிதா எழாமல் இருக்க பக்கத்தில் இருக்கும் ஆட்களிடம்.

“ஏய் இங்க படமா காட்டுறாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்க. போய் தண்ணி கொண்டா...தெளிச்சாவது எழுப்பி அவள் கிட்டயே விசாரிக்கலாம்.” என்று சொன்னதும் ஒரு அடியாள் ஓடி போய் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து அந்த அமைச்சரிடம் கொடுத்தான்.

அந்த அமைச்சர் அந்த தண்ணியைய் பரினிதாவின் முகத்தில் தெளித்ததும் கொஞ்சம் தெளிவு வந்தவளாக முதலில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். பார்த்தவள் மிக அருகில் அமைச்சரின் முகம் பார்த்து அலண்டவளாக தன் மற்றொறு கண்ணையும் திறந்து அமைச்சரை ஒரு பயத்துடன் பார்த்தாள்.

என்னதான் விளையாட்டு பெண்ணாக இருந்தாலும் பெண்ணுக்கே உண்டான பயம் மனதில் வந்து போனது. அதுவும் அமைச்சரின் முகமும்,பக்கத்தில் இருக்கும் ஆட்களின் முகமும் அவளுக்கு பயத்தையே ஏற்படுத்தியது. ஒரு மிரண்ட பார்வையோடு அமைச்சரை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அமைச்சர் பரினிதாவை மிரட்டவில்லை. ஒரு சமயம் தான் சந்தேகப்பட்டது உண்மையாக இருந்தால் இந்த பெண்ணை கடத்தியதுக்கே ஆஷிக் தன்னை சும்மா விட மாட்டான். இதில் இப்பெண்ணை மிரட்டி அதை இவள் ஆஷிக்கிடம் சொன்னால்,தான் தப்பும் சிறு வாய்ப்பும் அதோ கதி தான் என்று நினைத்து பரினிதாவை பார்த்து.

“குட்டி பயப்படதே...நான் ஒன்று கேட்பேன் அதற்க்கு உண்மை சொன்னால் உன்னை கண்டிப்பாக விட்டு விடுவேன்.” என்ற அமைச்சரின் அந்த குட்டி பரினிதாவுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தன் அண்ணனும் அவளை குட்டிம்மா என்று தான் அழைப்பார். ஆனால் அதில் ஒரு பாசம் மறைந்து இருக்கும்.

பின் நினைவு வந்தவளாக ஆஷிக்கின் அழைப்பும் தன் மனதில் மின்னி மறைந்தது. ஆஷிக்கும் தன்னை குட்டிம்ம்மா...பேபிம்மா...என்று தானே அழைப்பான். அந்த அழைப்பில் தன் அண்ணன் போல் இல்லாமல் வேறு ஏதோ இருந்ததே...என்று இப்போது அவன் அழைப்பை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாள். அது என்ன என்று தெரிய விட்டாலும் அது அவளுக்கு பிடித்தே இருந்தது.

இவள் முகத்தையே பார்த்திருந்த அமைச்சரை பார்த்த பக்கத்தில் உள்ள அடியாள் “தே...குட்டி அய்யா கேட்குறாங்களே… அதற்க்கு பதில் சொல்லாமல் என்ன பிராக்கு பார்த்துட்டு இருக்கிறே…” என்ற அந்த அடியாளின் பேச்சில் பரினிதா விதிர்த்து போனவளாக பயத்திடன் தலையாட்டினாள்.

அதற்க்கு அமைச்சர் “ஏய் சும்மா இருலே ஏற்கனவே ஆஷிக்குக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாமல் பயந்துட்டு இருக்கேன் நீ வேறே… நான் சந்தேகப்பட்ட மாதிரி இருந்தால் நம் கதி அவ்வளவு தான். இவள் அண்ணன் நான் கட்டிய பிள்டிங்கை முறையா கட்டவில்லை என்று சொல்லி அதை இடிக்க நோடிஸ் அனுப்பினான். அதை தடுக்க இந்த பெண்ணை தூக்கவே முதலில் யோசித்தேன். என்னடா அந்த கலெக்டர் பைய்யன் ஆஷிக்கின் சகோதரியை கல்யாணம் செய்துகிறானே...இந்த பென்ணை தூக்கினா அவன் சும்மாவிடுவனா என்று.

இப்போது இந்த பெண்ணை பார்த்துட்டு என் அண்டா சடச்சரமே அலண்டு போய் கிடக்கிறேன். அதனால் எது என்றாலும் நானே பொறுமையா விசாரிக்கிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என்று சொல்லி விட்டு பரினிதாவிடம்.

“குட்டி உனக்கு ஆஷிக் உன் அண்ணன் அவன் சகோதரியைய் திருமணம் செய்ய போது தானே தெரியும். அது தவிர உனக்கும் ஆஷிக்குக்கும் வேறு சம்மந்தம் இல்லையே…?” என்று கேட்டு விட்டு ஒரு வித பதட்டத்துடன் அவள் முகத்தை பார்த்தான்.

பரினிதா அந்த அடியாளின் அதட்டலுக்கு அமைச்சர் பேசியதிலேயே பாதி விஷயம் தெரிந்து விட்டது. தன் அண்ணனை தன்னை காட்டி மிரட்டி காரியம் சாதிக்க பார்க்கிறார்கள் என்றும். ஆனால் அதையும் தாண்டி ஆஷிக் மேல் இவர்களுக்கு பயம் உள்ளதும் என்றும் தெரிந்த பரினிதாவுக்கு இப்போது கொஞ்சம் பயம் அகன்றது.

இவர்கள் ஆஷிக்கின் மேல் உள்ள பயத்தால் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்து இப்போது அந்த அமைச்சரை பார்த்தாள். எதுவும் பேசாமல் தன்னையே பார்த்திருந்த பரினிதாவை பார்த்த அந்த அமைச்சருக்கும் கோபம் தான் வந்தது.

இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு “குட்டி நான் கேட்டதுக்கு ஏதும் சொல்லலியே….” என்ற அமைச்சரிடம் துணி அடைத்த வாயில் இருந்து முதலில் போட்ட மாதிரி தான் மெல்லிய சத்தம் எழுப்ப முடிந்தது. அந்த சத்தமும் வரக்காரணம் வாயில் துணி அடைத்தவன் சரியாக அடைக்காததால் தான் அந்த சத்தமும் போட முடிந்தது.

அப்போது தான் பரினிதா வாயில் இருந்த துணியைய் பார்த்தவன் அதை எடுத்தவாரே “நான் ஒரு முட்டாள். துணி அடைத்து விட்டு பேசு பேசுன்னா எப்படி பேசும்.” என்று சொல்லிக் கொண்டே துணியைய் எடுத்து போட்டு விட்டு பின் கைய் கட்டையும் அவிழ்த்தான்.

வாயில் இருந்து துணி எடுத்ததும் தொண்டை காய்ந்ததால் பேச முடியாமல் சைகையில் தண்ணி வேண்டும் என்று கேட்டதுக்கு பக்கத்தில் இருக்கும் தண்ணியை அந்த அமைச்சர் எடுத்து பரினிதாவுக்கு கொடுத்தார்.

அதை மெல்ல பருகியபடியே இந்த ஆள் எதற்க்கு தனக்கும் ஆஷிக்குக்கும் உள்ள உறவை இப்படி பதட்டத்துடன் கேட்கிறார்.அதுவும் முதலில் ஆஷிக்கின் சகோதரியை அண்ணன் திருமணம் செய்தும் கடத்த துணிந்த இந்த ஆள் இப்போது வேறு எந்த புது உறவுக்காக பயப்படுகிறார் என்ற நினைவு ஓடும் போதே ஒ அப்படி இருக்குமோ நானும் ஆஷிக்கும் விரும்புகிறோம் என்று தவறாக நினைத்து விட்டானா...என்று யோசித்துக் கொண்டே தண்ணியை குடித்து முடித்து அந்த பாட்டிலை கீழே வைத்து விட்டு அமைச்சரை பார்த்து.

“நீ ஒரு வடிகட்டிய முட்டாள் தான். இதில் உனக்கு சந்தேகம் வேறா…” என்று தெனாவட்டாக கேட்டு அமைச்சரை கேலியாக ஒரு பார்வை பார்த்தாள்.

அவளின் அந்த பேச்சில் பக்கத்தில் இருக்கும் ஆட்கள் ஆவேசத்துடன் ஏய் என்று சத்தமிடும் போதே அமைச்சர் அவர்களை அடக்கி விட்டு பரினிதாவிடம் “ அப்போ நீ...நீங்க ஆஷிக்கை.”

அமைச்சர் சொல்லாமல் நிறுத்திய வார்த்தையைய் பரினிதா பூர்த்தி செய்தாள். “நானும் ஆஷ்க்குக்கும் திருமணம் செய்துக் கொள்ள போகிறோம்.” என்று சொல்வதை கேட்டுக் கொண்ட அந்த இடத்துக்கு ஆஷிக்கும், சித்தார்த்தும் வந்து சேர்ந்தனர்.

பரினிதா அமைச்சரிடம் பேசியதை கேட்ட ஆஷிக் அந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சிந்தவனாய் அவளை பார்த்தான். பின் இருக்கும் இடம் கருதி அங்கு பரினிதாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த அமைச்சரின் சட்டையை பிடித்து மேலே தூக்கிவிட்டு காலால் ஓங்கி ஒரு உதை உதைத்தான்.

அந்த உதையில் அமைச்சர் ஒரு மூலையில் போய் விழுந்தவனை திரும்பவும் ஆஷிக் நெருங்கும் வேலையில் சித்தார்த் ஆஷிக்கை தடுத்து நிறுத்தினான்.பின் ஆஷிக் பக்கத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் வேண்டிய நடவடிக்கை எடுக்கும் மாறு சொல்லி விட்டு பரினிதாவை நோக்கி சென்றான்.

சித்தார்த்துக்கு முன்னே பரினிதாவிடம் சென்று அவள் கைய் கட்டியதால் ஏற்பட்ட சிவப்பை தடவிய வாரே…”ரொம்ப வலிக்குதா...பேபிம்மா.” என்று தனக்கே வலிப்பது போல் அந்த குரலில் அப்படி ஒரு வலியோடு கேட்டான்.
 
ஹா ஹா ஹா
உன்னோட தவறான பில்டிங்கை
கலெக்டர் இடிக்கச் சொன்னதுக்கு
அவன் தங்கையைத் தூக்கிட்டியே
அமைச்சு
இனி உனக்கு சங்குதாண்டி மினிஸ்டர் மாப்பி
 
Last edited:
ஒரு பொண்ணைத் தூக்கும்முன்னே
அவள் யாரு என்ன யாரோட லவ்வரு
இத்தெல்லாம் ரவையூண்டு ரோசன
பண்ண மாட்டியா மினிஸ்டரு மாப்பி
இனி நீ கஞ்சி கஞ்சிதாண்டி
 
நல்லவேளையா நாங்கள் கல்யாணம்
பண்ணப் போறோம்ன்னு பரினிதா
சொன்னதைக் கேட்டு மினிஸ்டர்
கரை வேட்டியிலேயே சுச்சா
போறதுக்குள்ள ஆஷிக் வந்து
மந்தி மந்திரியை உதைச்சு
சுச்சா போகாம காப்பாத்திட்டான்
வேட்டி தப்பிச்சுது, விஜி டியர்
 
Last edited:
Top