Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 28 2

Advertisement

Admin

Admin
Member
அவன் எதிர் பார்த்த மாதிரியே இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டும் தன் அண்ணியிடம் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தவள். இவன் அறிவிப்பால் கொஞ்சம் பதட்டத்துடன் தன் நகத்தை கடிக்க ஆராம்பித்து இருந்தாள்.

அஷிக் கண்ணாலயே தன் அருகில் அழைத்து மைக்கை ஒரு கையால் மூடிக் கொண்டே “குட்டிம்மா நான் பக்கத்தில் இருக்கும் போது உனக்கு என்ன பயம்.” என்று சொன்னதும் சுச்சு தட்டியது போல் அவள் முகம் பிரகாசமாக மாறியது.

அதனை பார்த்த ஆஷிக் “இப்படி தான் இருக்க வேண்டும்.” என்று சொன்னவன் அவள் முகத்தை தன் கட்சீப்பால் துடைத்தான்.

அதனை பார்த்த ஆரு “ஆஷிக் இதெல்லாம் அப்புறம் வைச்சிக்க கூடதா...பார் எல்லோரும் உங்களையே தான் பார்க்கிறாங்க. முதலில் சொல்ல வந்ததை சொல்லி முடி.” என்றதும்.

சிரித்துக் கொண்டே மைக்கின் மீது இருந்த கையை எடுத்து விட்டு “என் வருங்களா மனைவி” பரினிதா என்று அவன் சொல்வதற்குள் அங்கு இருந்த அனைவரும் பரினிதா என்று சொன்னதை கேட்டு ஆருவிடம் “ஏய் முந்திரி கொட்டை எனக்கு முன்னவே நீ சொல்லிட்டியா…?”

அதற்க்கு ஆரு வாய் திறப்பதற்குள் சித்தார்த் “இப்போ எதற்க்கு அவளை திட்டுறே...நீ வழியர வழிசலில் தெரியாமல் இருந்தால் தான் அதிசயம்.” என்று சித்தார்த் வாய் மூடுவதற்குள்.

பரினிதா “அவர் யாரிடம் வழிந்தார் என்னிடம் தானே…” என்று சிலிர்த்து எழுந்துக் கேட்டாள்.

“அப்படி சொல்லு பேபி.” என்று அங்கு இளைவர்களின் கல கலப்பில் முதயவர்களின் மனது நிறைந்து நிறைவாக அந்த விழாவை முடித்தார்கள்.அன்று அனைவரும் சித்தார்த்தின் வீட்டுக்கு தான் அனைவரும் போவதாக முதலில் முடிவாகியது.

ஆனால் ஆஷிக் மட்டும் அனைவரையும் பார்த்து “நீங்கள் எல்லோரும் போங்க நான் நாளை வருகிறேன்.” என்று கூறியதற்க்கு அனைவரும் ஒத்துக் கொண்டனர். என்ன இருந்தாலும் திருமணத்திற்க்கு முன்னே வந்து தங்குவதற்க்கு தயங்குகிறான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டனர்.

ஆனால் சித்தார்த் மட்டும் “இந்த இரவு நேரத்தில் அப்படி என்ன முக்கியமான வேலை.” என்று கேள்வி எழுப்பியதை பார்த்து ஆஷிக் வாய் திறப்பதற்க்குள் பாட்டிம்மா… “சித்து என்ன பேச்சி பேசுரே ஆஷிக் உனக்கு மச்சான் மட்டும் இல்லை. நம் வீட்டின் மாப்பிள்ளையும். அதனால் மரியாதையாக பேசு.” என்று அதட்டியத்துக்கு.

சித்தார்த் மனதுக்குள் இந்த பாட்டிம்மா வேறு நிலமை புரியாமல் பேசுவாங்க என்று நினைத்தன் வெளியில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆனால் ஆஷிக் மற்றொரு காரில் ஏற போகும் போது அவன் அருகில் சென்று “வேண்டாம் ஆஷிக் அந்த அமைச்சரை ஒன்றும் செய்யாதே…” என்றதற்க்கு.

“என் பரினிதாவை பயப்படுத்தியவனை அப்படியே விட்டு விட சொல்கிறயா...சித்தார்த். அவன் உயிர் போகாது அதற்க்கு நான் உத்திரவாதம் தருகிறேன். ஆனால் உயிர் போய் இருந்தால் நல்லா இருந்து இருக்கலாமோ… என்று அவன் கருதுவான்” என்று கூறிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு அமைச்சரை அடைத்தி வைத்திருந்த கேளாம்பாக்கத்தில் உள்ள தன் குடோனுக்கு சென்றான்.

காரை விட்டு இறங்கியதும் உள்ளே சென்ற ஆஷிக் அமைச்சரை கட்டி வைத்திருந்த இடத்தின் அருகில் சென்று அந்த கட்டை அவிழ்த்தவாரே…. நீ போகலாம்.” என்ற இரு வார்த்தையோடு முடித்துக் கொன்டவனின் பேச்சை நம்ப முடியாமல் பார்த்தான் அமைச்சர்.

ஆஷிக் திரும்பவும் “நீ போகலாம்.” என்று சொல்லி விட்டு அங்கு இருந்த தன் ஆட்களிடம் “நீங்களும் போகலாம்” என்று சொல்லும் போதே... சித்தார்த்திடம் இருந்து அழைப்பு வந்தது.

அதை தான் அட்டென் செய்யாமல் அமைச்சரிடம் கொடுத்து விட்டு சிறிது தள்ளி நின்றுக் கொண்டான். சித்தார்த் அமைச்சரிடம் என்ன கேட்டானோ என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சர் சொன்ன விட்டு விட்டார்.ஆமாம் சார் நிஜம் தான் என்னை விட்டு விட்டார். என்று சொல்லி விட்டு போனை ஆஷிக்கிடம் கொடுத்த அமைச்சர் “என்னை மன்னித்து விடு ஆஷிக் தம்பி.” என்றவனின் பேச்சை போதும் என்று வாய் திறந்து சொல்லாமல் சைகையில் காமித்து பின் போகவும் என்று அதே கைய் அசைவில் சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அந்த அமைச்சர் ஆஷிக் தன்னை ஒன்றும் செய்யாமல் விட்டதுக்கு சித்தார்த் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அவசர அவசரமாக சென்றான் என்றால். ஆஷிக்கின் மனேஜர் இது பின் என்ன மறைந்து இருக்கிறதோ என்று சிந்தனையுடன் சென்றார்.

வீட்டுக்கு வந்த ஆஷிக் அங்கு யாரும் இல்லாததை பார்த்து ஒரு வெருமை சூழ்ந்தது.பேசாமல் நாமும் அவர்களுடனே பரினிதா வீட்டுக்கு சென்று இருக்கலாமோ...என்று எண்ணினான்.

அவன் மாப்பிள்ளை முறுக்கு என்ற காரணத்துக்கு எல்லாம் பரினிதா வீட்டுக்கு செல்லமால் இல்லை.தனிமையில் அவன் செய்யமுடிக்க வேண்டிய வேலை ஒன்று இருந்ததால் தான். தன் அம்மாவை பரினிதா வீட்டுக்கு அனுப்பி விட்டு தன் வீட்டுக்கு தனியே வந்தான்.

வந்தவன் ஒரு போன் காலுக்காக தன் போனையே பார்த்திருக்க போன் வந்தது.ஆனால் தான் எதிர் பார்த்த இடத்தில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் இருந்து வந்தது. அந்த நம்பரை சேவ் செய்து வைத்திருந்த பேபிம்மா என்ற வார்த்தையை ஒரு முறை தானும் மென்மையாக ஒரு தடவை படித்து விட்டே போனை ஆன் செய்து காதில் வைத்து

“என்ன பேபிம்மா இன்னும் தூங்கலையாடா…? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் பரினிதா.. “அந்த அமைச்சரை என்ன செஞ்சீங்க…?” என்று மறுகேள்வி எழுப்பினாள்.

“நான் என்றும் செய்யவில்லையே…” என்ற அவன் பதிலில் நம்பிக்கை வராமல் “நிஜமா…”

“நிஜம் பேபிம்மா...வேண்டும் என்றால் உன் அண்ணாவையே கேள்.” என்ற அவன் பேச்சில் பரினிதாவின் குரல் கொஞ்சம் உள்வாங்கி “நிஜமாவே அவனை விட்டு விட்டீர்களா மாமா.”

“ஏன் பரினிதா நான் அவனை என்ன செய்து இருக்கனும் என்று நீ எதிர் பார்க்கிறே…”

“ஒன்னும் இல்லை.” என்று சொல்லி விட்டு போனை வைத்தவளுக்கு சொன்ன மாதிரி நான் என்ன எதிர் பார்த்தேன். நானும் ஆஷிக் அந்த அமைச்சரை ஒன்றும் செய்யக்கூடாது என்று தானே கருதினேன்.

அதே தானே அவனும் செய்தான்.அதற்க்கு நான் சந்தோஷப்படாமல் ஏன் ஒரு ஏமாந்த உணர்வு வருகிறது என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அவளுக்கு தன் மனதின் எண்ணம் விளங்கியது.

அது ஆஷிக் தனக்காக அந்த அமைச்சரை சும்மா விட மாட்டான். கண்டிப்பாக கொலை கூட செய்து விடுவான் என்று பயந்து தான் பரினிதா ஆஷிக்குக்கு போன் செய்தது.ஆனால் ஆஷிக் இப்படி சட்டென்று அவனை விட்டு விட்டேன் என்று கூறியதும். இவ்வளவு தான் ஆஷிக் தன் மீது வைத்திருக்கும் காதலா...என்று நினைக்கும் போதே…ஆஷிக் தன்னை காதலிக்கிறனா…? என்று தனக்குள்ளேயே…. கேள்வி கேட்டுக் கொண்டவள்.

நான் அவனை காதலிக்கிறேனா….என்று மற்றொறு கேள்வியும் தன்னால் எழுந்தது.முதல் கேள்விக்கான விடை தெரியாவிட்டாலும் இரண்டாம் கேள்விக்கான விடை தன் மனதில் நிகழ்ந்த நினைவுகள் மூலம் அவளுக்கு புரிய ஆராம்பித்தது.

முதலாவதாக தான் முதலில் ஸ்ரீதரை மணந்துக் கொள்வேன் என்று சொன்ன போதே...அதை ஆஷிக் மறுத்து விட்டு அவனை எல்லாம் நீ மணக்க கூடாது என்று அவன் திட்டிய போது தனக்கு கோபம் வராமல் ஏன் நிம்மதி ஏற்பட்டது.

பின் எந்த ஒரு விஷயத்துக்கும் தன் மனம் ஏன் ஆஷிக்கையே நாடியது.தன் தனிமையை யாரிடமும் சொல்லதா நான் ஏன் ஆஷிக்கிடம் மட்டும் சொன்னேன். கடைசியாக தன்னை மணக்க கேட்ட போது அவன் கண்ணை பார்த்து விட்டு சிறிதும் யோசிக்காமல் சம்மதம் சொன்னனே...அதுவும் அந்த சம்மதம் எனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டது.

கடைசியாக அவன் வாங்கி கொடுத்த புடவை என்று தெரிந்ததும் யாரும் சொல்லாமலேயே அதனை கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்த போது இதில் என்னை பார்த்தால் ஆஷிக் என்ன நினைப்பான் என்று தானே நினைக்க தோன்றியது.

தான் கற்பனையிலும் நினையதா ஒரு பார்வை அவன் தன்னை பார்த்த போது தன் உடலில் ஒரு மாற்றம் ஏற்பட்டதே...அப்போ அது பெயர் தான் காதலா…? தன் தோழிகள் கூட ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பார்களே ...அய்யோ அவர்கள் பேசுவதை அப்போதே கவனித்து கேட்டுக் கொண்டு இருக்கலாம். நாம் எப்போதும் செய்வது போல் அவர்கள் பேச்சை காதில் வாங்காது வேடிக்கை பார்த்தது தவறு என்று எண்ணியவளாக பல பல விதமாக யோசித்து கடைசியில் ஆஷிக் மீது தனக்கு ஏற்பட்டது காதல் தான் என்று உணர்ந்தவளாக போனை எடுத்து ஒரு வித பதட்டத்துடன் அவனின் பெயர் கொண்ட எண் மீது விரல் வைப்பதும் பின் எடுப்பதுமாக விளையாடி கொண்டு இருந்தவளுக்கு அந்த எண்ணின் அழைப்பு மூலமே விளையாட்டுக்கு முற்று புள்ளி வைக்க பட்டது.
 
என்னாங்கடா இது
அண்ணனும் தங்கச்சியும் விளையாடுறீங்களா?
அண்ணன் என்னடான்னா மினிஸ்டரை விட்டுடுங்கிறான்
தங்கச்சி என்னடான்னா இவளை அந்த மினிஸ்டர் ஒண்ணுமே பண்ணலை ஆஷிக் பேரைக் கேட்டு பயந்து போனவனை ஆஷிக்கைக் கண்ணாலம் கட்டப்போறேன்னு சொல்லி கரை வேட்டியிலேயே
 
Last edited:
Top