Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 30 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---30

அன்று காலையில் தான் ஆஷிக் கையில் தாலியை வாங்கிக் கொண்ட பரினிதா கட்டில் மேல் வைத்திருந்த சூட்கேஸில் துணியை அடுக்குவதும் அதை எடுத்து வேறு ஒன்று வைப்பதையும் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த பாட்டிம்மா அவள் தலையில் கொட்டி விட்டு அவள் கட்டில் மேல் பரப்பி வைத்துக் கொண்டு இருந்த ட்ரஸை காண்பித்து

“இது எல்லாம் என்ன ட்ரஸ்டி இன்னும் நீ என்ன சின்ன பெண்ணா….இனி லட்சணமா புடவை கட்டி பழகு.” என்பவரிடம்.

“அய்யோ புடவையா..எனக்கு கட்ட தெரியதே…” என்று சொன்னதோடு விடாமல் பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருந்த ஆஷிக்கின் காதில் விழுவதற்க்காக உரத்த குரலில் கேட்டாள் பார் ஒரு கேள்வி .

“மாமா உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா…?”

அதற்க்கு பாட்டிம்மா தன் தலையிலேயே அடித்துக் கொண்டு “இதில் உன்னை மட்டும் என்னால் குறை சொல்ல முடியாது.மாப்பிள்ளையும் சேர்த்து தான் சொல்ல வேண்டும். கல்யாணத்திற்க்கு கூட நாங்க சொல்ல சொல்ல ரெடிமேட் சாரியைய் தான் உனக்கு எடுத்து கொடுத்தார் பார் அவரை சொல்லனும்.” இது வரை தன்னை மட்டுமே குறை சொல்லிக் கொண்டு இருந்தவர் இப்போது ஆஷிக்கையும் அதில் சேர்த்து கொள்வதை பொறுக்காதவளாக பொங்கி விட்டாள் நம் ஆஷிக்கின் பேபிம்மா…

“இதோ பாருங்க பாட்டிம்மா. திட்டுவது என்றால் என்னை மட்டும் திட்டுங்க மாமாவை திட்டும் வேலை எல்லாம் வேண்டாம் .அது மட்டும் இல்லாமல் எல்லா வற்றிலும் நம் குடும்ப பழக்கம் என்று பேசுவீங்க.இதில் எங்க போயிடுச்சீ உங்க குடும்ப பழக்கம். இப்படி தான் வீட்டு மாப்பிள்ளையை பேசுவாங்களா...எங்க அத்தையை பார்க்கிறீங்களே...அவர் எப்படி அண்ணாவுக்கு மரியாதை கொடுக்கிறார்.” என்று பேசுபவளை வாயில் விரலை வைத்து கேட்டுக் கொண்டு இருந்தார் நம் வரலட்சுமி பாட்டிம்மா…

பரினிதாவின் பேச்சை பாத்ரூமில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த ஆஷிக் சட்டென்று தன் குளியலை முடித்து விட்டு டவளை கட்டிக் கொண்டவன் அப்படியே செல்லாமல் பாட்டிம்மா இருப்பதால் அவிழ்த்து போட்டு சட்டையையே மாட்டிக் கொண்டு ரூமுக்கு வந்தவன் பரினிதாவிடம்

“பேபிம்மா என்ன பேச்சி இது.பெரியவர்களிடம் இப்படி தான் பேசுவாயா…” என்றதற்க்கு பரினிதா ஒன்றும் பேசாமல் ஒழுங்கு காட்டினாள் என்றால் பாட்டிம்மா “இல்லே ஆஷிக் அவள் இப்படி பேசுவது தான் எனக்கு பிடித்து இருக்கிறது.

அவள் இப்போது தான் அவள் வயதுக்கு ஏத்த மாதிரியே பேசுகிறான்.இவள் அம்மாவும் அப்படிதான். அவள் புருஷனை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டாள்.” என்றவர் பின் ஆஷிக்கிடம்

“அது என்ன பிடிவாதமோ நமக்கு இருக்கும் வசதிக்கு ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கே செல்லாம்,சித்தார்த் தான் வேலையை காரணம் காட்டி நம் ஏற்காட்டிலேயே அவன் ஹனிமூனை முடித்துக் கொண்டான் என்றால், நீங்களும் வம்படியாக அங்கயே செல்ல வேண்டும் என்ற காரணம் தாம் எனக்கு புரியவில்லை. அதுவும் இல்லாமல் இது போல் விஷயத்தில் இதற்க்கு மேலும் உங்களிடம் பேசமுடியவில்லை.”என்று சொன்னவர்.

பரினிதாவிடம் தான் கையில் கொண்டு வந்த புடவையை கொடுத்து “ ஒழுங்கு மரியாதையாக இதை எடுத்துக் கொண்டு போ.புடவை கட்ட தெரியவில்லை என்றால் உன் அண்ணியிடம் கற்றுக் கொள்.”

தான் பேச பேச எதுவும் பேசாமல் ஆஷிக்கையே பார்த்துக் கொண்டு இருந்த பரினிதாவை பார்த்து “என்ன நான் சொன்னது உன் காதில் விழுந்ததா...இல்லையா…?”

அதற்க்கு அவள் வாய் திறப்பதற்குள் ஆஷிக் “பாட்டிம்மா அவள் விருப்பம் எதுவோ அதையே அவள் உடுத்திக் கொள்ளட்டுமே….அவள் எப்போதும் இருப்பது போலவே இருக்கட்டும் பாட்டிம்மா...யாரும் அவளை கட்டுப் படுத்த வேண்டாம்.” என்ற மாப்பிள்ளையின் பேச்சில் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வெளியில் “அவளை அவள் அண்ணன் தான் செல்லம், கொடுத்து கெடுக்கிறான் என்றால் அதற்க்கு மேல் நீங்கள் இருக்கிறீர்கள்.” என்று சொன்னவர்.

இதற்க்கு மேல் புதியதாக திருமணம் செய்துக் கொண்டவர்களுடன் தான் இருப்பது நாகரிகம் கிடையாது என்று நினைத்து அவ்விடத்தை விட்டு அகன்றார். அவர் அகன்றதும் பரினிதா ஆஷிக்கிடம் “நானும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் மாமா. அது என்ன ஹனிமூனுக்கு ஏற்காடுக்கு தான் போக வேண்டும் என்று சொல்றீங்க.”

“அது அங்கு போய் சொல்றேன் பேபிம்மா..”

“அது என்ன அங்கு இங்கயே சொல்லக் கூடாதா…” என்று கொஞ்சியவளின் பேச்சில் முற்றிலுமாக தன்னை இழந்தான். இது வரை தன் மனதில் காதல் இருந்தாலும் அவன் அவளை நெருங்கியதே கிடையாது.ஏன் இன்னும் சொல்ல போனால் இதோ இவர்களுக்கு திருமணமே முடிந்து விட்டது.

ஆனால் அவன் தன் காதலை அவளிடத்தில் சொன்னது கிடையாது. அது போலவே அவள் விருப்பதை அவளிடம் அவன் கேட்டதும் கிடையாது. இருந்தும் அவன் அவள் செயலின் மூலம் புரிந்துக் கொண்டது இது தான் பரினிதாவுக்கு தன்னை பிடித்து இருக்கிறது.

ஆனால் அவள் விளையாட்டு குணத்தால் அது காதல் என்று அவள் புரியாமல் இருக்கிறாள் என்று. அவன் ஏற்காட்டில் தான் தன் ஹனிமூன் என்று அவன் முடிவு எடுத்ததுக்கு முக்கிய காரணம். அங்கு தானே சித்தார்த்தின் டைரியை அவள் எடுத்தது. அதனால் தானே அவளே தன்னை தேடிக் கொன்டு வந்தாள்.

அதன் பின் வந்த ஒவ்வொறு நினைவும் அவனால் மறக்க முடியாததாக அமைந்தது.அப்போதே முடிவு செய்து விட்டான் தன் ஹனிமூன் ஏற்காடு என்று. அதனை இவளிடம் எப்படி சொல்வது.

அதுவும் இல்லாமல் இப்போது அவளிடம் நெருங்கினால் விலகுவது கடினம் என்று தான் அவளை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்றான்.முதலில் அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் பிறகு தான் அனைத்தும் என்றும் நினைத்து இருந்தான்.

ஆனால் இவள் கொஞ்சியே அதனை கெடுத்து விடுவாள் போலவே என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே இன்னும் அவனை சோதிக்கும் படியாக அவனை நெருங்கி பரினிதா அவன் காதில் “காரணம் நான் சொல்லட்டுமா…” என்று கண் சிமிட்டியவளை பார்த்து தன்னை அடக்க முடியாமல் தன் முகத்துக்கு அருகில் இருக்கும் அவளை இழுத்து அவள் இதழோடு தன் இதழை சேர்த்து விட்டான்.

அவன் இதழ் பட்டதும் சிமிட்டிய தன் கண் அசையாமல் அப்படியே விழி விரித்து நின்று விட்டது. பின் அந்த சுகத்தில் அவளும் மயங்கியவளாக தன் கண்ணை மூடிக் கொண்டு தன் கைய்யை அவன் தலையின் பின் பக்கம் எடுத்து சென்றவள்.தன் விரலால் அவன் முடியை கோதி அவனை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து சென்றாள்.

ஏற்கனவே கல்லுண்ட வண்டாக இருந்தவன் அவள் முடி கோதலில் இன்னும் இன்னும் அவள் இதழை பிரிக்கவே கூடாது என்ற முடிவோடு ஒரு யுத்தமே நடத்திக் கொண்டு இருந்தாள்.ஆனால் பரினிதாவோ அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சு வாங்க அவன் முடியை கோதிக் கொண்டு இருந்தவள் அப்படியே அவன் முடியை தன் கையால் தன் முகத்தை விட்டு அகலும் படி இழுத்தாள்.

அந்த இழுப்பில் தன் நினைவுக்கு வந்த ஆஷிக் அவள் உதட்டை எடுத்து அப்போது தான் பரினிதாவை பார்த்தான். அவள் உதடு விடு பட்டதும் தான் அவளாள் ஒழுங்காவே மூச்சு விட முடிந்தது. பின் இன்னும் இரு முறை மூச்சை இழுத்து விட்டவளை பார்த்தது “சாரி பேபிம்மா ..சாரி பேபிம்மா” என்று சொன்னவன் அவள் முதுகை தடவி விட்டுக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் சென்று தான் பரினிதா தன் நிலைக்கே வந்தாள். வந்தவள் சும்மாவா இருப்பாள் “மாமா இது மாதிரி எல்லாம் செய்யாதீங்க என்னால் முடியலே…”

அவள் பழைய நிலைக்கு வந்ததும் ஆஷிக்குக்கு மீண்டும் அவளை நெருங்கும் எண்ணம் ஏற்பட்டு “எனக்கு குழந்தை ஆறு வேண்டும்,ஏழு வேண்டும் என்று சொல்லி விட்டு சும்மா இருந்தா வர நீ என்ன குந்தி தேவியா….சூரியனை பார்த்து மந்திரம் சொன்னதும் கையில் வந்து குழந்தை விழ..” என்ற அவனின் பேச்சுக்கு பரினிதா சும்மா இல்லாமல்.

“அது எல்லாம் எங்களுக்கும் தெரியும் சும்மா இருந்தா குழந்தை பிறக்காது என்று.” அவள் பேச்சில் இன்னும் அவளிடம் நெருங்கும் எண்ணம் ஏற்பட்டது ஆஷிக்குக்கு.

“அப்போ என்ன செய்யனும் பேபிம்மா..”

“சீ இதெல்லாம்மாவா சொல்லுவாங்க”

“அப்போ சொல்ல வேண்டாம் செயல் போதும் என்று சொல்றீயா...நீ சொல்வதும் சரி தான்.” என்று சொல்லி அவள் முகம் நோக்கி குனிய அவளிடன் இருந்து விலகிய பரினிதா அவனுக்கு ஒழுங்கு காண்பித்து அந்த ரூமை விட்டு வெளியேறினாள்.

அவள் வெளியில் சென்ற பிறகும் அவனுக்கு அந்த அறை முழுவதும் அவள் மணமே இருப்பது போல் இருந்தது. மனதுக்குள் அவ்வளவு நிம்மதி இதே சிறிது நேரம் முன் வரை கூட இன்று இரவு இவளை எப்படி நெருங்குவது.

இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே... நாம் நெருங்கும் வேலையில் அவள் பயந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணமே ஒடிக் கொண்டு இருந்தது. இப்படி யோசித்தானே தவிர கொஞ்சம் டைம் எடுத்துக் கொள்ளலாம் என்று அவன் சிறிதும் யோசிக்க வில்லை.

ஏன் என்றால் அவனுக்கே விளங்கி விட்டது இனி அவளை விட்டு நம்மால் தள்ளி இருக்க முடியாது என்று அந்த யோசனையுடனே இருந்தவனின் பரினிதாவின் இந்த நெருக்கம் அவனுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியையும்,சந்தோஷத்தையும் கொடுத்தது.

பரவாயில்லை பேபிம்மா நாம் நினைக்கும் அளவுக்கு பேபி இல்லை என்று நினைத்துக் கொண்டே பரினிதா சூட்கேஸில் பாட்டிம்மா கொடுத்த புடவையை எடுத்து விட்டு அவள் முதலில் வைத்த லாங் ஸ்கட்டையே வைத்தான்.

அந்த சந்தோஷத்துடனே ஆஷிக் பரினிதாவோடு ஏற்காட்டுக்கு வந்து சேரும் போது நடுயிரவு கடந்து விட்டது.அவர்களுக்கு என்று பாட்டிம்மா வேலையாள் மூலம் ஏற்பாடு செய்த அறையில் வேலையாள் லக்கேஜை கொண்டு வந்து வைத்து விட்டு அவர்கள் சென்ற உடன் பரினிதாவை பார்த்தான்.

பரினிதாவோ அவன் பார்த்த இரு நிமிடத்துக்குள்ளாகவே குறைந்தது நான்கு முறையாவது கோட்டு வாய் விட்டு இருப்பாள். அதனை பார்த்த ஆஷிக் “பேபிம்மா தூக்கம் வருகிறதா…?”

அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை இருபக்கமும் ஆட்டி வைத்தாள்.வரும் போதே பாட்டிம்மா அவளை பற்றி நன்கு தெரிந்தவளாக

“போன உடனே நீ பாட்டுக்கு தூங்கி விடாதே…நான் தோட்டக்காரனின் மனைவியுடம் உங்களுக்கு சாப்பாடு செய்யும் மாறு சொல்லி இருக்கிறேன்.நீ மாப்பிள்ளைக்கு போட்டு விட்டு நீயும் சாப்பிட்டு, அவர் கொடுக்கும் பாலையும் எடுத்துக் கொண்டு தான் ரூமுக்கு போக வேண்டும் நான் சொல்வது கேட்டது தானே” என்று குறைந்தது பத்து தடவையாவது சொல்லி அனுப்பி இருப்பார்.

இப்போது தூக்கம் வருகிறது என்று எப்படி சொல்வது என்று தான் தலையை நாலா புறமும் ஆட்டி வைத்தாள்.அவள் தலையாட்டலை நிறுத்திய ஆஷிக் “என்ன பேபிம்மா நாம் வரும் போது பாட்டிம்மா உன்னிடம் ஏதாவது சொன்னார்களா…?”

அதற்க்கு மட்டும் வேகமா ஆமாம் என்று தலையாட்டினாள். அதை பார்த்து சிரித்துக் கொண்டே “பெரியவர்கள் அப்படி தான் சொல்வார்கள் பேபிம்மா...ஆனால் இந்த விஷயத்தில் நம் விருப்பம் போல் தான் இருக்க வேண்டும்.” என்று ஆஷிக் சொன்னது தான் தாமதம்.

உடனே பரினிதா “அப்போ நான் தூங்கட்டுமா” என்றதற்க்கு உள்ளே ஏமாற்றம் பரவினாலும்,”சரி தூங்கு. ஆனால் பாலாவது குடித்து விட்டு தூங்கு.” என்று அவன் சொல்வதற்க்கும் கதவை யாரோ தட்டுவதற்க்கு சரியாக இருந்தது.

கதவை திறக்க எழுந்த பரினிதாவை தடுத்து விட்டு அவனே போய் கதவை திறந்தான். அங்கு வேலையாள் இருப்பதை பார்த்து என்ன என்று கேட்டதற்க்கு “சாப்பாடு எல்லாம் செய்து விட்டேன் அய்யா….வந்து சாப்பிடுறீங்களா…” என்று கேட்வனிடம் “சாப்பாடு வேண்டாம் எங்கள் இரண்டு பேருக்கு பால் மட்டும் போதும்.” என்று சொல்லி கதவை சாத்தியவன்.

“பேபிம்மா குளிக்கிறீயா…?”

“வேண்டாம் குளித்தால் தூக்கம் போயிடும்.” என்று சொல்லி விட்டு அந்த கட்டிலில் எக்ஸ் வடிவில் படுத்து தூங்கவே ஆராம்பித்து விட்டாள்.பின் ஆஷிக் தான் வேலையாள் கொடுத்த பாலை குடிக்கும் மாறு வற்புறுத்தி குடிக்க வைத்து அவனும் குடித்து விட்டு அவள் கட்டிலில் நடுவில் படுத்து உறங்குவதால் ஒரு ஒராமாக படுத்து உறங்க முற்பட்டான்.

பாவம் உறங்க தான் முற்பட்டான். ஆனால் அவனால் அது முடியவில்லை.ஆசைப் பட்ட அழகிய மனைவி பக்கத்தில் இருக்கும் போது உறக்கம் அவனிடம் வருவேனா என்று அடம் பிடித்து அவனை விட்டு தள்ளி நின்றது.

அறை மணி நேரமாக அப்படி, இப்படி என்று கட்டிலில் திரும்பி திரும்பி படுத்தவன் முடியாமல் போக பக்கத்தில் படுத்து இருந்த பரினிதாவை பார்த்தான்.அவள் இந்த உலகத்திலேயே இல்லாது ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல் போக தன்னை கட்டுபடுத்த எண்ணி எழுந்து பால் கனிக்கு சென்று தோட்டத்தையே பார்த்திருந்தான்.

எவ்வளவு நேரம் நின்று இருப்பானோ தன் தோள் மீது கைய் பட திரும்பி பார்த்தான். அங்கு பரினிதாவை பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டாலும், “ என்ன பேபிம்மா தூக்கம் வரவில்லையா…?”

“அதே தான் அத்தான் நானும் கேக்கிறேன் தூக்கம் வரவில்லையா…?”

“ஏய் இப்போ என்ன சொன்னே...அத்தானா…?”

“ஆமாம் அத்தான் தான். ஏன் நான் அப்படி கூப்பிட கூடாதா…”

“நான் அப்படி சொல்வேனா...பேபிம்மா.ஆமாம் திடிர் என்று என்ன அத்தான் என்று அழைப்பு எல்லாம் பலமா இருக்கு.” என்று சொல்பவனின் அருகில் வந்து நின்ற பரினிதா “தூக்கம் வரவில்லை என்றால் என்னை எழுப்பி இருக்கலாமே அத்தான்.” என்ற அவள் பேச்சிலேயே அவள் எதற்க்கு சொல்கிறால் என்று புரிந்துக் கொண்ட ஆஷிக் ஒரு கள்ள சிரிப்புடன்.

“எதற்க்கு பேபிம்மா உன்னை எழுப்பனும். எனக்கு தான் தூக்கம் வரவில்லை நீயாவது நிம்மதியா தூங்கலாம் இல்லையா…?” என்று சொல்பவனை சந்தேகமாக பார்த்தாள். இவன் தெரிந்து பேசுகிறனா...இல்லை தெரியாமல் பேசுகிறனா… என்று.

அவன் உதட்டின் ஒரத்தில் எவ்வளவு கட்டு படுத்தியும் முடியாமல் சிரிப்பு வெளிபட்டு விட அதனை பார்த்த பரினிதா “ஏய் பிராடு என்னை தூங்கவா சொல்றே..சரி தூங்குகிறேன். ஆனால் நாளை காலை ஆறு மணிக்கு எல்லாம் எழுப்பி விட்டு விடுங்க. என்று சொன்னவள் அத்தோடு விடாமல் என் புருஷன் இது மாதிரி ஒரு மாக்காணா இருந்தா குழந்தைக்காக சூரியபகவான் உதவியை தான் நாடியாக வேண்டும் .” என்று சொல்லி விட்டு செல்பவனின் கையைய் பிடித்த ஆஷிக்.

“யாருடி மாக்கா.”

“என்னது டியா…”

ஆமாம் டிடிடி…”

“வேண்டாம் அத்தான் நீங்க டி சொன்னா...நான் டான்னு சொல்லுவேன் உங்களை.”

“சொல்லுடி…” என்றவனின் பேச்சில் கோபம் கொண்டவளாக “போடா” என்று சொல்லி விட்டு ஒட பார்த்தவளை பின்னால் இருந்து அணைத்த ஆஷிக் “என்னை டா என்று சொல்லு பேபிம்மா...அது ஒரு கிக்கா தான் இருக்கு. ஆனால் பேச்சிக்கு கூட போடா என்று சொல்லாதே...வாடா என்று சொல்.” என்ற கணவனின் காதலில் கட்டு உண்ட பரினிதா தன் வயிற்று பகுதியில் இருக்கி இருந்த அவனின் கையைய் பிரித்து எடுத்தவள் அவனை தனக்கு முன்னே தன் முகம் பார்க்கும் மாறு கொண்டு வந்தவள் “என் மீது அவ்வளவு காதலா அத்தான். நான் உங்களுக்கு எந்த வகையிலுமே பொறுத்தம் இல்லையே அத்தான்.” என்றவளின் உதட்டில் இருந்து மறு வார்த்தை பேச முடியாமல் தனக்கு பிடித்த மாதிரி வாயை அடைத்த ஆஷிக் சிறிது நேரம் கழித்து தான் அவளை விடு வித்தான்.
 
Top