Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnaalae Ellam Unnaalae அத்தியாயம் - 3

Advertisement

janaki janu

New member
Member
UEU - 3


டே அர்ஜுன் விடுடா அவன , இப்ப என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு அதுவும் உண்மையான பதிலா இருக்கனும் சமாளிக்கணும் பாக்காத , டே முதல கேள்விய கேளுடா சொல்றன் ஹ்ம்ம் .. அடுத்தவனோ நீ எங்கல தப்ப நினைக்க கூடாதுடா, டே முதல்ல என்னனு கேளுங்க சொல்ட்றேன் . எல்லோரும் அவர்கள் முகத்தையே பார்த்து கொண்டனர்

அர்ஜுன் உன்னோட நண்பர்கள்ல ஒருத்திய நான் கேட்கறேன் நீங்க ரெண்டு பெரும் காதலிக்கிறிங்களா இந்த கேள்வி எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்குள்ளயும் இருக்கு , பூஜாவையும் என்னையும் தவிர நீங்க 5 பேரும் ஸ்கூல் டேஸ்ல இருந்து பிரண்ட்ஸ் இப்ப நாம காலேஜ் முடிக்க போறோம் அப்பறம் யாரு எங்க இருப்பமோ தெரியல

திவ்யா இப்ப உனக்கு இல்ல இல்ல உங்களுக்கு என்ன தெரியணும் நாங்க காதலிக்கறமா இல்லையானு அவளோ தான ,பூஜாவை பார்த்தான் அவள் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இன்னும் சாப்பிட்டு கொண்டு இருந்தால்.

ஆமாடா நாங்க காதலிக்கறோம் இதை கேட்டு பூஜாவின் கை ஒரு செகண்ட் நின்றது மறுபடியும் சாப்பிட ஆரம்பித்தாள். உங்க கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல நீங்களா கேட்ட சொல்லலாம்னு விட்டுட்டோம் ஆனா உங்களுக்கு இப்பதான் கேட்க தோணிருக்கு .

அடப்பாவி ஏன்டா சொல்ல மாட்ட நீங்க ரெண்டு பேரும் காதலிக்கறவங்க மாதிரியா இருந்திங்க ஒரு ஒரு நேரம்மும் ஒரு மாதிரி இருக்கீங்க எங்க கூட இருக்கற மாதிரி தான் அவகூடவும் பேசின அப்பறம் எப்படி எங்களுக்கு கேட்க தோணும் , அப்படியே கேட்டு இருந்தாலும் உடனே ஒரு பையனும் பொண்ணும் நண்பர்களா இருக்க கூடாதான்னு திருப்பி எங்கள கேட்டு இருக்க மாட்ட ,அப்படி சொல்லுடா மச்சான் என்னோட காதலையும் இப்படி சொல்லி தாண்ட பிரிச்சான் என்று திவ்யாவை திரும்பி பார்த்தான் ஜீவா

டே நீ வேற ஏன்டா இங்க என்ன பேசி கிட்டு இருக்கோம் நீ என்ன சொல்ற , அவன் அவன் பிரச்சனை அவன் அவனுக்குடா மச்சான் என்ற ஜீவாவை எல்லோரும் முறைத்தனர். ஹீஹீஹீ நீங்க பேசுங்கடா நான் எதுவும் இனி பேசல

உங்க கிட்ட மறைக்கணும் னு நினைக்கலடா உடனே ஜீவா சொல்லணும்னு கூட தான் நீ நினைக்கல என்றான் . உங்க கிட்ட சொல்ல கூடாதுனு இல்லடா சக்ஸஸ் ஆகி இருந்த சொல்லி இருப்பேன் ஆனா என்று சொல்லி கொண்டே இப்பொழுது பூஜாவை பார்த்தான் எல்லோரும் அவளை பார்த்தனர்.

அவளோ ஓகே பிரண்ட்ஸ் டைம் 6 .30 ஆக போகுது நாங்க கிளம்பறோம் வா திவ்யா போலாம் , உடனே அர்ஜுனும் எழுந்தான் அவனை பார்த்த பூஜா இங்க இருக்க ஹாஸ்டல் தான இப்பதான் ஸ்டுடென்ட்ஸ் உம் கிளம்பி கிட்டு இருக்காங்க சோ நாங்க போய்க்கிறோம் , ஓகே போயிட்டு எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் பண்ணிடு bye .

அவர்கள் போனதும் எல்லாரும் அர்ஜுனை பார்த்தனர் ,டே அர்ஜுன் என்னடா பிரச்சனை உங்களுக்கு இப்ப சொல்ல போறியா இல்லையா , அங்கே ஹாஸ்டல் வந்த பூஜாவையும் திவ்யா இதைத்தான் கேட்டு கொண்டு இருந்தால் இருவரும் அதை சொல்ல தொடங்கினர் .....நாங்க இதுவரைக்கும் எங்க லவ்வ சொல்லிக்கிட்டது கிடையாது ஆனா அவளுக்கும் தெரியும் எனக்கு தெரியும் .

கடைசி வருஷம் என்னோட பிறந்த நாளுக்கு நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தப்ப என்னோட ரியாக்ஷன் வச்சே எங்க வீட்டுல எல்லாரும் கண்டு பிடிச்சிட்டாங்க ( நாங்களும் அப்பத்தாண்டா கன்போர்ம் பண்ணினோம் மனதினுள் நினைத்து கொண்டனர் )

நீங்க எல்லாரும் கிளம்பின வாட்டி என்னோட அம்மாவும் அப்பாவும் என்கிட்டே வந்து ஒண்ணே ஒன்னு கேட்டாங்க இன்னைக்கு உன்னோட பிறந்த நாள் இத நாங்க இன்னைக்கு சொல்ல கூடாதுதான் ஆனாலும் எங்களால சொல்லாம இருக்க முடியில , அம்மா எதா இருந்தாலும் சொல்லுங்க எதுக்கு என்கிட்டே சொல்ல இவளோ யோசிக்கறீங்க ஹ்ம்ம்

இது உன்னோட மனசு சம்மந்தப்பட்டது அதுனால தான் உங்க அம்மா இவளோ தயங்கரா சிறிது நேரம் யாரும் பேசவில்லை, அர்ஜுன் அப்பவும் அம்மாவும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவோம்னு உனக்கு நம்பிக்கை இருக்கு தான , அப்பா என்ன அப்பா இப்படி எல்லாம் பேசறீங்க உங்கள தம்பி தங்கச்சிய தவிர வேற யாரு எனக்கு நல்லது நினைக்க போற நீங்க எல்லாரும் தான் என்னோட உலகம் டாடி.

எங்களுக்கும் தெரியும் அர்ஜுன் ஆனாலும் நாங்க இப்ப உன்கிட்ட சொல்ல போறது உனக்கு புரியுமானு தெரியல எங்களளையும் இப்போ முழுசா உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாது... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அவர்களையே தான் பார்த்தான் .

அர்ஜுன் அந்த பூஜா பொண்ணு கூட இனிமேல் எதுவும் பேச்சி வசிக்காத அவங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஆகாது சாதாரணமா பேச கூட எங்களால முடியாது அவங்களோட , அது என்ன பிரச்சனைன்னு எங்களால இப்ப உன்கிட்ட சொல்ல முடியாது கண்ணா இப்போதைக்கு நாங்க இத மட்டும் தான் சொல்ல விரும்புறோம் எங்களோட சந்தோசமே நீ தான் அர்ஜுன் இதுக்கு மேல நீ என்ன முடிவு எடுத்தாலும் நாங்க உன்கூட இருப்போம் அது எந்த முடிவை இருந்தாலும் சரி

அவ்ளோதான் அவர்கள் கிளம்பி விட்டனர் அவனால் தான் இன்னும் அந்த இடத்தை விட்டு அசைய கூட முடியவில்லை , அவன் மனசுக்குள் என்ன என்னமோ எண்ணங்கள் அவனுக்கு தெரியும் அப்பா அம்மாக்குள் ஏதோ ரகசியம் இருப்பது போல் அடிக்கடி தோன்றும் அது அவர்கள் வேலையினால் என்று கூட நினைத்து கொண்டு இருந்தான் ஆனால் இபொழுது அப்படி இல்லையோ என்று தோன்றுகிறது

இதை இருவரும் கூறி முடித்தனர் . ஆனா பூஜா உனக்கு எப்படி அவங்க சொன்னது எல்லாம் தெரியும் அர்ஜுன் சொன்னானா பூஜா உன்னைத்தான்டி கேட்கறேன் அசையாம உட்காந்து இருக்க என்று குலுக்கினாள். ஆஹான் என்ன டி கேட்ட ஹ்ம்ம் அவளை முறைத்து கொண்டே உனக்கு எப்படி தெரியும் னு கேட்டேன் , அப்போ நான் அவன் கூட போன்ல பேசிகிட்டு இருந்தேன் அவன் அப்பா அம்மா வந்ததும் என்ன மறந்துட்டான் அதனால நான் எல்லாமே கேட்டுட்டேன் என்று அவளை மறந்து பேசிக்கொண்டு இருந்தால் ..

ஆனால் இங்கு அர்ஜுன் அவன் நண்பர்களிடம் பூஜாவுக்கு இது எல்லாம் எதுவும் தெரியாதுடா காரணமே தெரியாம நானே ஒரு நாள் சொல்லுவேனு காத்துக்கிட்டு இருக்காடா என்றான் ....
 
என்ன பிரச்சினை
அர்ஜுன் அம்மா அப்பாவுக்கு
பூஜாகிட்ட
 
Top