Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaali - (Kavithai)

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
65வாலி!!
------------
அரு வரங்கனை
நடுக்கொண்ட
திரு வரங்கம் - இன்னும்
இரு வரங்கனை
ஈன்றெடுத்தது- அதி
லொரு வரங்கன்-
வாலியானான்!!
தமிழென்னுந்
தடாக நீர்யாவுந்-தன்னுள்
ஈர்த்துக்கொண்ட
ஆழியானான்!!

இலக்கணத் தமிழ்-
இலக்கியத் தமிழ்-
தத்துவத் தமிழென-
முழுதுக்கும்
முற்றுப்புள்ளி
வைத்ததிவன் வருகை-
காரணம்-
அத்தனையையும்
மாற்றி எழுதியதிவன்- ஒருகை!!

எழுத்துத்திறனில்-இவன்
கண்ணதாசனின்
நேரு முகம்-
அவ்விருவர் போல்-
அன்றெவர்க்குமில்லை
ஏறு முகம்!!

வசீகரத் தமிழ்
வேண்டுவார்க்கு-
அவதார புருஷனில்
மாதவனை எழுதுவான்-
வாலிபத் தமிழ்
வேண்டுவார்க்கு-
அலை பாயுதே
மாதவனுக் கெழுதுவான்!!

இறுதியாய்-
என்போ
லிள மெழுத்துக்கெலாம்-
இவனே-குரு!
இனி
எந்நூறாண்டு காணுமோ?
இவன்போ - லுரு!!
------------------------------
Can you Identify the Other Rangarajan?
1f642.png
 
சரித்ரா அழகான பெயர்
வெறும் சரித்ராதானாப்பா?
சரித்ராதேவி?
Or சரித்ராராணி?
 
Top