Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

“இவ்வளோ நேரம் பமீலா காட்டு கத்தல்.. இந்திரா அத்தை வம்படியா உள்ள இழுத்துட்டு போயிருக்காங்க...” என,

“ம்ம்..” என்றுமட்டும் சொல்லிக்கொண்டான் வனமாலி.

ராணி வந்து “அண்ணி.. பத்து மணிக்கு தான் நல்ல நேரம்..” என, “ஓ..சரி..” என்ற மணிராதா, முரளியின் அம்மாவிடம் “நீங்க இருந்து பாருங்க...” என்றுவிட்டு கிளம்பிவிட்டார்..

வனமாலி கோவர்த்தனிடம் பேச அமர்ந்துவிட, வந்தனா இருந்த கொஞ்ச நஞ்ச வேலைகள் செய்துகொண்டு இருக்க, கமலிக்கு அப்போதுதான் இந்த வீட்டினை முழுதாய் சுற்றிப் பார்க்கும் நேரம் வந்தது..

அங்கே ஒரு பக்கத்து சுவரில் மகுடேஸ்வரனின் புகைப்படம் பெரிதாய் இருக்க, மறு பக்கத்தில் முழுக்க முழுக்க, மகுடேஸ்வரன், இந்திரா பமீலா மூவரும் இணைந்து, தனி தனியாய் இப்படி மாறி மாறி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இவைகளை எல்லாம் பார்க்கையில் கமலிக்கு அடி மனதில் மெதுவாய் ஒரு ஏக்கம் எட்டிப் பார்த்தது. பமீலா அத்தனை உரிமையோடும், புன்னகையோடும் மகுடேஸ்வரன் அருகே நின்றிருந்தாள்.. மூவரின் முகத்திலும் அப்படியொரு சந்தோசம்.. கமலிக்கு தன்னையும் அறியாது அவள் வீட்டினில் மாட்டியிருந்த புகைப்படங்கள் நினைவு வந்தது..

வெகு சில புகைப்படங்களே.. அதிலும் இவள் அப்பா அம்மாவோடு எடுத்துக்கொண்டது என்பது கடைசியாய் எப்போது என்றுகூட நினைவில் இல்லை.. சிறிய பெண் அப்போது.. அதன் பின் கமலியின் மறுப்பு அதிகாமகவும் சிவகாமியும் புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டார்.. ஆனால் இப்போது நினைக்க மனதில் ஏக்கமாய் இருந்தது..

‘மகுடேஸ்வரன்...’ விபரம் தெரிந்து அவரை அப்பா என்று அழைத்ததில்லை. ஆனால் அப்பாவை ரசிக்காத மகளில்லை கமலி.. ஒருவித கோபம் அவரின்மேல்.. தனக்கும் தன் அம்மாவிற்கும் இவர் துரோகம் செய்துவிட்டார் என்று.

அந்த கோபத்தையே இப்போது வரைக்கும் கெட்டியாய் பிடித்துக்கொண்டும் இருக்கிறாள்.. ஆனால் யார் அவளிடம் உன் அப்பா யார் என்று கேட்டால் வேகமாய் சொல்வாள் ‘மகுடேஸ்வரன்...’ என்று.. அதன்பின் அம்மா யார் என்ற கேள்வி வரும்போது, அப்பா பெயரை சொல்லும் அந்த உணர்வு அப்படியே மாறிப் போகும்..

ஆனால் இப்போதோ கண்களில் நீர் கோடுகள் எட்டிப் பார்க்க, ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்துக்கொண்டே அப்படியே நின்றிருந்தாள்.

‘என்னடா இவளின் சத்தமே இல்லையே...’ என்று வனமாலி பார்க்க, அவளோ இப்படி நிற்பது கண்டு அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..

கோவர்த்தன் கூட “என்னண்ணா??!!” என்று கேட்க,

“விடு.. அவ இப்போதானே இதெல்லாம் பாக்குறா..” என்றவன், “அவளே ப்ரீ ஆகட்டும்..” என்றுவிட்டான்..

ராணி கூட வந்து “அவளை கூப்பிடுங்க..” என்றுசொல்ல,

“கமலிக்குன்னு ஒரு பர்சனல் ஸ்பேஸ் இருக்குமில்லையா..” என்றுவிட்டான்.

கமலிக்கு இதெல்லாம் தெரியாது, அதை கவனிக்கும் நிலையிலும் இல்லை. மெதுவாய் நகன்று ஒவ்வொரு அறையாய் பார்த்தவள், மாடிக்கு ஏறி சென்றுவிட்டாள்.

“அண்ணா நான் போய் பேசட்டுமா...” என்று வந்தனா கேட்க,

“இல்ல வேணாம்.. மேல ரூம் தானே ரெடி பண்ணிருக்காங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்று அவளையும் மறுத்துவிட்டான் வனமாலி.

நேரம் சென்றது, கமலிக்கோ, ‘ச்சே இங்க வந்தே இருக்கக் கூடாதோ...’ என்று தோன்றியது.. தனக்கே இப்படியென்றால், இங்கே சில ஆண்டுகள் வாழ்ந்த சிவகாமிக்கு எப்படி இருக்கும் என்று தோன்ற,

‘அம்மா சொன்னதும் சரியோ...’ என்று எண்ணினாள்.

அப்படியொரு அழுகை வந்தது கமலிக்கு.. இத்தனை வருடங்களாய் வைராக்கியத்தின் பேரிலும், கோபம் மற்றும் பிடிவாதத்தின் பேரிலும் இழுத்து இழுத்து வைத்திருந்த தன் உணர்வுகளை எல்லாம் இந்த சில நேர பொழுதில் கமலி தளர்த்த நேரிடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

அவளின் திடம் உறுகி கண்ணீராய் வழிய, வனமாலி கொஞ்ச நேரத்தில் மேலேறி வந்தான்.. எங்கேடா இவள் என்று பார்க்க, அவளோ மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் கீழே அமர்ந்திருக்க, ‘இங்க என்ன பண்றா??’ என்ற யோசனையோடு அவளின் அருகே செல்ல,

அவளோ “நான் அழுதுட்டு இருக்கேன் வரவேணாம்..” என்றாள் வேகமாய்..

“ஹா...”

“நான் இப்போ உங்களை பார்க்கல...”

“சரி நான் பார்க்கணும்.. எந்திரிச்சு வா...”

“கொஞ்ச நேரம் போகட்டும்...”

“ரொம்ப நேரமாச்சு கமலி... நீ அழுது வடிஞ்சு.. நாளைக்கு அப்புரோ உன்னை பார்க்கிறவங்க எல்லாம் என்னை தப்பா நினைப்பாங்க...” என்று வனமாலி சிரிக்க,

“இப்படிதான் பேசுவாங்களா...” என்றபடி முகத்தை துடைத்து எழுந்து வந்தாள்.

“ஹா ஹா...” என்று சிரித்தவன் “இன்னிக்கு போய் அழுவாங்களா???” என்றான் கொஞ்சம் தன்மையாய்..

“இன்னிக்குதான் இங்கே வந்தேன்.. அதான்..”

“ம்ம் இதுக்குதான் இப்போதைக்கு இங்க எதுவும் வேணாம் நினைச்சேன்..” என்றான் அவனும்..

“அப்.. அப்போ நீங்க நினைச்சீங்களா...??”

“ஹ்ம்ம் உன்னை கல்யாணம் செய்யணும்னே நினைச்சேன் இதை நினைச்சிருக்க மாட்டேனா??” என்று அவன் கேட்க,

இருவரும் பேசியபடியே அறைக்குள் வந்திருந்தனர்.. இவளோடு ‘இத்தனை இலகுவாய் நானா..? என்று அவனும்,

‘நானா இப்படி...’ என்று அவளும் மாறி மாறி நினைக்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டானர்.

Nice Ep
 
Top