Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Nice Ep
‘நான் சொல்றபடி செய் இந்திரா.. அப்போதான் என் தம்பியும் நீ சொல்றதை கேட்பான்...’

‘பொம்பள புள்ள பெத்து வச்சிருக்க, என்னிக்கா இருந்தாலும் சிவகாமி இங்க வந்தா உன்னோட மதிப்பு போயிடும்.. நீ இந்த வீட்ல இருந்தா தான் உனக்கு மரியாதை கிடைக்கும்..’

‘பாரு அந்த கமலி பொண்ண என் தம்பிதான் இங்க தூக்கிட்டு வர்றானா நீ ஏன் அதை விடுற.. ஆரம்பத்துல இருந்து இதெல்லாம் தள்ளி வைக்கணும்.. இந்த வீடு உன்னோட வீடு பமீலாவோட வீடுன்னு மட்டும் இருக்கணும்.. அப்போதான் உனக்கு பாதுகாப்பு.. கமலி வந்தா எல்லாமே போச்சு..’

என்று இப்படியான வார்த்தைகளை கேட்டு கேட்டு மனதில் ஊறி ஊறியே, சிவகாமி மீதும் கமலி மீதும் ஒரு பய உணர்வு தோன்றிட, என்றாக இருந்தாலும் இவர்களால் எனக்கும் என் மகளுக்கும் ஒரு அவமானமும் மதிப்பின்மையும் வந்துவிட கூடாது என்ற எண்ணத்திலேயே மணிராதாவின் பேச்சிற்கு கட்டுபட்டே இந்திரா இத்தனை ஆண்டு காலத்தை கடத்திவிட்டார்.

மகுடேஸ்வரன் இறந்த பின்னரோ, சரி இவர்களால் எவ்வித தொந்திரவும் இருக்காது, மகளையும் கோவர்த்தனுக்கு கட்டி கொடுத்தாயிற்று, மிச்ச காலத்தை அமைதியாய் இப்படியே செலுத்திடுவோம் என்று நினைக்கையில், கமலியின் இந்த திடீர் தலையீடு அவருக்கு மனதினுள்ள ஒரு பிரளயம் உருவாகச் செய்தது.

அதற்குமேல் பமீலா..

அவளை கட்டுக்கொள் வைப்பது என்பது யாராலும் முடியவில்லை.. கோவர்த்தனிடம் சண்டை போட்டாள். மணிராதாவிடம் கத்தினாள். வந்தனாவோடு வார்த்தையாடினாள்.. எப்போது பார்த்தாள் சண்டை அழுகை கோபம் அது இதென்று ஏதாவது ஒன்று நிகழத் தொடங்கியது. ஆக மொத்தம் வீட்டில் இருந்த அந்த சந்தோஷ சூழல் காணாது போனது..

கல்யாண வீடு என்பது மாறி, எப்போது என்ன நடக்குமோ என்ற சூழலே இருக்க, வனமாலிக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை. நியாய அநியாங்கள் எல்லாம் தாண்டி ஒரு மனிதனக்கு அவனவன் நிம்மதி, அவனவன் வீட்டு சந்தோசம் இதுவே தான் பிரதனாமாய் ஆகும் ஒரு நேரத்தில்..

இப்போது வனமாலியின் எண்ணமும் அதுவாய் ஆனது.. ‘என்ன செஞ்சா வீட்ல எல்லாம் நிம்மதியா இருப்பாங்க??’ என்று யோசிக்கையில் பேசாது சிவகாமியோடு போய் பேசிப் பார்ப்போமா என்று தோன்றியது..

ஆனால் அவரிடம் தான் என்ன சொல்வான்??

கமலி அது செய்தாள் இது செய்தாள்... இப்படி வந்து பேசினாள்.. சண்டை போட்டாள் என்று ஏதாவது ஒன்று விரல் நீட்டி சொல்ல முடியுமா?? முடியாதே.. கமலி அவள்பாட்டில் தானே இருக்கிறாள்..

இல்லை இருப்பது போல் காட்டிக்கொள்கிறாளா?? எது எப்படியோ கமலி இவர்கள் வீட்டின் நிம்மதியை கொன்றுவிட்டாள்.

பால்கனியின் கம்பியை இறுகப் பற்றி நின்றிருந்தவன் ‘ஷ்..... கமலி... நீ என்ன கொல்ற....’ என்று அவனையும் அறியாது சொல்ல, அந்த நொடி அவனின் உணர்வு அவனுக்கே புரியாது போனது.

தான் என்ன யோசிக்கின்றோம்.. எதற்காக இப்படி செய்வது அறியாது நிற்கின்றோம் என்றே தெரியாது நின்றவனுக்குத் தான், என்ன செய்தால் கமலியும் சும்மா இருப்பாள், வீட்டிலும் நிம்மதி வரும் என்று யோசனை போக,

‘பேசாம நீ கமலிய கல்யாணம் பண்ணிக்கோ வனா... எல்லாமே சரியாகும்..’ என்ற குரல் அவனுள் ஒலித்தது..

அடுத்த நொடி விதிர்த்துப் போய்விட்டான்... கல்யாணமா அதுவும் கமலியோடா.... நொடிப் பொழுதில் அவனும் அவளுமாய் நிற்கும் மனக் கோலம் கண் முன்னே வர, இதயம் நின்றே துடித்தது வனமாலிக்கு. அந்த துடிப்பிலும் கூட ஒரு இதம்.. ஒரு ரிதம்.. சின்னதாய் ஒரு சுகம் பிறக்க, அந்த சுகத்தில் மீண்டும் கண்கள் மூடி நின்றான் வனமாலி..

வந்தனா கூட அவ்வப்போது கிண்டல் செய்வாள் தான்.. அப்போதெல்லாம் சிரிப்போடு கடந்துவிடுவான்.. அது தங்கைக்காக.. ஆனால் இன்று.. இந்த நொடி அவன் மனதில் தோன்றிய இவ்வுணர்வு?? இதன் பெயர் என்ன?

ஒருவேளை இந்த உணர்வு தான் நடக்கும், நடக்கப் போகும் அனைத்து சங்கதிகளுக்கும் வடிகாலா?? விடையறியா கேள்வி அவனுள்..

மறுநாள் மதுரை போகும் வேலை இருக்க, உறங்காது எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தானோ அவனுக்குத் தெரியாது.. ஆனாலும் கடமை என்று வந்துவிட்டால் தன் சுகமெல்லாம் அவனுக்கு அப்புறம் தான்.. அதிகாலையே எழுந்து மதுரை கிளம்பிவிட்டான்.

மனதிற்குள் நிறைய நிறைய எண்ணவோட்டங்கள்.. அதனோடு சேர்த்தே அவனின் காரும் ஓடியது..

வனமாலிக்கு மதுரையில் அடிக்கடி வேலைகள் இருக்கும் தான். அங்கே அவனின் அப்பா வழி சொத்துக்களில் இவர்களுக்கு சொந்தமான தனி வீடுகள், லைன் வீடுகள் எல்லாம் வாடைக்கு விட்டிருந்தனர்.. ஐந்தாறு கடைகள் வேறு இருந்தது எல்லாமே வாடகைக்கு தான்.. அதனின் வசூலுக்கு ஒன்று கோவர்த்தன் வருவான் இல்லையோ வனமாலி வருவான்.. ஆனால் இம்முறை இந்த மதுரை பயணமானது வனமாலிக்கு ஒரு புது அனுபவமாய் இருந்தது. வழக்கத்திற்கு மாறாய் ஒரு உற்சாகம், அதுவே அவனின் முகத்தை வசீகரமாய் காட்டியது..

அவன் சென்ற வேலையும் நல்லமுறையிலேயே முடிய, அவனின் காகித ஆலை விசயமாய் ஒருவரை சந்திக்க வேண்டி இருக்க, சிம்மக்கல் சென்றிருந்தான்.. மகுடேஸ்வரனின் நண்பரும் கூடத்தான் அவர்..

“அடடே வா ப்பா வனா.. இப்போதான் வழி தெரிஞ்சதா??” என்று சந்தோசமாகவே நரசிம்மன் வரவேற்றார் இவனை..

“எப்பவும் இந்த டைம்ல தானே மாமா வருவேன்..” என்றவன் “என்ன இளைச்சு போயிட்டீங்க??” என்று சிரிப்போடு கேட்க,

“அட ஆமாப்பா... உன்னை பார்க்கலைன்னு ஒரு சுத்து இளைச்சிட்டேன்..” என்று தன் பெருத்த உடலைக் காட்டி சிரித்தவர் “தங்கச்சி கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது வனா?” என்று விசாரிக்க,

“எல்லாம் நல்லபடியா போகுது மாமா..” என்றான் இவனும் சந்தோசமாகவே..

“சந்தோசம் வனா.. அப்படியே நீயும் ஒரு கல்யாணம் பண்ணிடு.. சீக்கிரம்.. சம்பாரிக்கிறது எல்லாம் அப்புறம் பார்ப்போம்..”

“ஹா ஹா நேரம் வந்தா அதையும் பண்ணிடலாம் மாமா..” என்றவன் “மாமா அந்த பேப்பர் மில் விலைக்கே வாங்கிடலாம்னு இருக்கேன்.. நீங்கதான் பேசி முடிக்கணும்..” என்று நேராய் விசயத்திற்கு வந்துவிட்டான்..

ஆனால் நரசிம்மனோ அடுத்த நொடி யோசனையாய் முகத்தினை வைத்து “ம்ம்ம் அப்படியா வனா???” என்று கேட்க,

“என்ன மாமா நீங்கதானே போன மாசம் சொன்னீங்க நீயே வாங்கேன்னு..” என்றான் இவனும்..

“அட ஆமா வனா... நம்ம கமலி பொண்ணு வேற அந்த மில் வாங்கனும்னு இருக்கும் போல, நேத்து வந்து சங்கிலி அய்யாவும் கமலி பொண்ணும் பேசிட்டு போனாங்க.. இப்போ நீயும் இப்படி சொல்ற.. அதான் யாருக்கு என்ன செய்யன்னு பாக்குறேன்...” என்று அவர் சூழ்நிலையை விளக்க,

‘கமலி....’ என்று அவனின் இதழ்கள் அவளின் பெயரை உச்சரிக்கத் தொடங்கியது.. கூடவே இத்தனை நாள் இல்லாது இப்போது நான் வாங்கவேண்டும் என்று நினைக்கையில் இவள் ஏன் இப்போது இதில் வருகிறாள் என்றும் இருந்தது..



தொடரும்......................
 
Top