22
“போன் செய்து அரைமணி நேரமாச்சேன்னு உங்களைத் தேடினா, தனியா இங்க என்ன பண்றீங்க மச்சான்?”
“சும்மாதான்மா. ஃப்ரண்ட்கிட்ட பேசிட்டிருந்தேன் நீ வர்றதுக்குக் கொஞ்சம் முன்னதான் கிளம்பினாங்க. அப்படியே குழந்தைங்க விளையாடுறதைப் பார்த்துட்டிருக்கேன். பாப்பா எங்க?”
ப்ரித்வி உடன்பிறப்புகளோட பிள்ளைங்க அவளைப் பிடிச்சி வச்சிக்கிட்டாங்க. இப்போதைக்கு நம்மை அனுப்புறதா ஐடியா இருக்கிற மாதிரித் தெரியலை.”
“அப்ப இங்க வந்து உட்கார்” என்று மடியைக் காண்பித்தான்.
“பொது இடத்துல மடியிலயா? சேட்டையா உங்களுக்கு” என்று அருகிலிருந்து சேரை கணவனருகில் எடுத்துப்போட, அதைத் தன்புறம் நெருக்கிப் போட்டு உட்கார வைக்க… கணவன் கையுடன் தன் கை கோர்த்தபடி தோள் சாய்ந்தமர்ந்தாள்.
“உதயா!”
“ம்…”
“ஹனிமூன் போகலாமா?”
சட்டென்று அவன் முகம் பார்த்து, “என்ன திடீர்னு?” என்க…
“அத்தை கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்னு திடீர்னுதான் ஆசை வந்திச்சி.”
“ஓ… அப்ப வாக்குக்காக வாழ்க்கையைத் தொடங்கப் போறீங்க?”
“அப்கோர்ஸ்யா” என்று தலையை வேகமாக அசைக்க…
“உங்களை…” என்ன செல்லமாக கிள்ளிவிட்டு, “உண்மையைச் சொல்லுங்க மச்சான்?” என்றாள் சிணுங்கலாக.
“இந்தப் பிரம்மச்சாரி வாழ்க்கையிலிருந்து உன்னுடன் சம்சாரி வாழ்க்கை வாழணும்னு ஆசை வந்திருச்சி வெள்ளச்சி.
“மச்சான்! அ..அது” என்று தன்னை விட்டு விலகியவளை விலகாமல் பிடித்து, “மனசுல தோணினதை உன்கிட்ட மறைக்காமல் சொல்லிட்டேன். கட்டாயம் கிடையாது உதயா. என்னோட முதல் கல்யாணம் பற்றித் தெரியுமா?”
“இதுவரை தெரியாது. தெரிஞ்சிக்கவும் தோணலை மச்சான்.”
“தெரிஞ்சிக்க உதயா.”
“இப்ப எதுக்குங்க? அதெல்லாம் வேண்டாத குப்பைன்னு ஒதுக்கிரலாமே.”
“வேண்டாத குப்பைதான். குப்பையில கிடைச்ச ஒரு பொக்கிஷத்தைப் பற்றித் தெரிய வேண்டாமா?”
“பாப்பா!”
‘ம்…’ என தலையசைத்து, “ஆண்கள் செய்யுற தப்பைப் பெருசா பேசுறவங்க, சில பெண்கள் செய்யுற தப்பைக் கண்டுக்கிறதில்லை உதயா. தான் செய்தது துரோகம்னு தெரிஞ்சே செய்தவள் மதுமிதா.”
“ஸ்கூல் படிப்பு மட்டும்தான் இராமேஸ்வரத்துல. காலேஜ் எங்க படிக்கலாம்னு யோசனையில் இருந்தப்ப இசக்கி அத்தை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. ஸ்கூல் லீவுக்கே இங்க வந்திருந்ததால அழகர் மாமா வச்சிருந்த ஜவுளிக்கடையில்தான் என் பொழுதுபோக்கே. இன்ஜினியரிங் படிக்கவா, கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்கவான்னு ஆடிட்டிருந்த மனம், ஏன் டிசைனரிங் படிக்கக்கூடாதுன்னு யோசிச்சி முடிவும் பண்ணிருச்சி.”
“எனக்கு ஜுனியரா ரவியும் அதையே படிச்சான். படிப்பு முடிச்ச கொஞ்ச நாள் பிரைவேட்டா ஒரு இடத்தில் வேலை பார்த்தேன். ரவி படிப்பு முடிஞ்ச கொஞ்ச நாள்ல அப்பா, மாமா உதவியோட ரவியை பார்ட்னரா சேர்த்து சபரி கலக்ஷன் ஆரம்பிச்சேன். ரவி எதுக்கு நீ மட்டும் பாருன்னு அத்தை மாமா சொல்லியும் கேட்டுக்கலை. அப்பாவை விட அதிகம் பணம் போட்டது அழகர் மாமாதான். ஏன் செய்யணும்னு அவங்க யோசிக்கவேயில்லை. பொதுவா தாய்மாமன்தான் கேட்காமலே செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்க ஆப்போசிட்டா அத்தை கணவர்! என்னோட காட் பாதர் மாதிரி.”
“சபரி கலக்ஷன் ஆரம்பிச்சி ஒரு வருஷம்கூட ஆகலை. அப்ப ஒருநாள் அம்மா போன் செய்து சீக்கிரமே வந்தால்தான் முடியும்னு பிடிவாதமா சொல்ல, ரவியை ஆபீஸைப் பார்க்கச் சொல்லிட்டு நானும் அத்தையும் ட்ரெய்ன்ல இராமேஸ்வரம் வந்தா, இன்னைக்கு நிச்சயதார்த்தம்! இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம்னு சொல்றாங்க. அதிர்ச்சின்னா அப்படி ஒரு அதிர்ச்சி.”
“தொழில் டெவலப்பாகிட்டு வர்ற நேரத்துல எதுக்குக் கல்யாணம்? முதல்ல எல்லாத்தையும் நிறுத்துங்க. என்னப்பா நீங்களாவது சொல்லக்கூடாதா? எதுக்கு இவ்வளவு அவசரம்?”
“பொண்ணுக்கு இப்ப முடிச்சாதான் நல்லாயிருக்கும்னு சொல்றாங்க சபரி” என்று சரளா இடையிட…
“அவ்வளவு அவசரம்னா வேற இடத்துல பார்த்துக்கச் சொல்லுங்கம்மா.”
“நான் சொல்லிட்டேன்டா. உன் அம்மாதான் கேட்கலை. அவங்க ஜாதகம் அது இதுன்னு சொல்றாங்க. இவளும் இங்க வந்து ஆட்டமா ஆடுறா. வயசு இருக்கு மெதுவா பார்க்கலாம்னா… எங்க… இவளோட நொண்ணன் அழுது கண்ணீர் விட்டாராம்.”
“தாய்மாமா தாய்க்கு சமம்டா சபரி. நான் அழுதா உன்னால் தாங்க முடியுமா? அப்படித்தான் உன் மாமாவும்.”
“தாய்மாமான்னா தாயா தாங்கணுமாம். உங்க அண்ணன் எந்த வகையில்மா என்னைத் தாங்கினார்? படிப்பிலிருந்து தொழில் ஆரம்பிக்கிறது வரை என் அத்தையும் மாமாவும்தான் செய்திருக்காங்க. உங்க அண்ணன் எங்க வந்தார்?”
“அப்ப அண்ணன்கிட்டப் பணம் இல்லையாம் சபரி.”
[the_ad id=”6605″]
“ம்மா… சும்மா சும்மா உங்க அண்ணனுக்காக சப்போர்ட் செய்து பேசாதீங்க. அவர் பொண்ணு இன்ஜினியரிங் படிக்க எவ்வளவு ஃபீஸ் தெரியுமா? இவர் கோடிக்கணக்கா சம்பாதிக்க, பொண்ணு லட்சக்கணக்கா செலவு பண்றா. சென்னையில் இருக்கிற உங்க பொண்ணுகிட்டக் கேளுங்க. நான் கடனா கேட்டதுக்கு ஒண்ணமில்லையாம்… பொண்ணு சும்மா சுத்த லட்சக்கணக்கில் பணம் கொடுப்பாராம். அதுவுமில்லாம அவளுக்கு இது மூணாவது வருஷம்தான? படிப்பை விட்டுட்டுக் கல்யாணம் எதுக்கு? எதாவது லவ் மேட்டரா?”
“என் அண்ணன் பொண்ணு தங்கம்டா.”
“ஆமாம்மா. அந்தத் தங்கத்தை சென்னையில் போயி உரசிப் பார்த்தால்தான் தெரியும். படிக்கணும்னு நினைக்கிறவ இங்க இல்லைன்னா மதுரையில் படிச்சிருக்கலாம். ஏன் சென்னை போகணும்?”
“உன் கேள்வியை அவளைப் பார்த்து கேட்டுக்கோ. அங்க எல்லாரும் காத்திருப்பாங்க. சீக்கிரம் கிளம்பு.”
“என்னண்ணா இதெல்லாம்? அவனுக்கு இன்னும் வயசிருக்கு. தொழில்லயும் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டாமா?”
“நான் பேசிப் பார்த்துட்டேன்மா. எப்படியும் அவள் மாறப்போறதில்லை. நாம ஏத்துக்கிறதைத் தவிர வேற வழியில்லை.”
வேறு வழியில்லாமல் சரளாவின் கெடுபிடியில் நிச்சயம் செய்து, மறுநாளே பத்திரிக்கை அடிக்கக் கொடுத்து அதற்கடுத்த நாளே ரெடியாகி வந்திருந்தது.
இசக்கியின் அண்ணன் ராஜாங்கம் திருமணத்திற்குப் பின் ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்ததும் தனி வீடுகட்டி வந்துவிட, அவரின் தம்பி வீட்டில்தான் இசக்கியின் தாய் இருப்பது. அதுதான் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடும்.
தாயைப் பார்க்க சென்ற இசக்கி கையில் சூர்யோதயா சடங்குப் பத்திரிக்கை கிடைத்தது. கண்டிப்பாக போக வேண்டுமென்ற ஆசை அவர் மனதில். கணவரிடம் போன் தூது விட, சடங்கு முடிந்த மறுநாளே ஊருக்கு கிளம்பிவிட வேண்டுமென்ற கண்டிஷனுடன், துணையாக பத்திரிக்கை கொடுக்கும் சாக்கில் சபரியையும் உடன் போகச் சொன்னார்.
“உன்னைப் பார்த்தப்ப எந்தவித ஆர்வமும் இல்லாத பார்வையிலும், பொய் கலக்காத பேச்சின் யதார்த்தம் பிடிச்சிருந்தது. அப்புறம் இந்தச் செயின்?” என்றான் அதைப்பற்றித் தெரியுமென்பதாய் காண்பிக்காது.
‘ஆர்வம் வந்தது மச்சான் இது உங்க செயின்தான்னு தெரிஞ்சப்ப. ஹீரோ மாதிரி இருப்பாங்கன்னு உங்க போட்டோவை காண்பிச்சி சைட்டடிச்சப்ப. உங்களை மறக்காதிருக்கச் செய்ததுக்கு இந்த செயின்தான் காரணம். இன்னும் வெளிய சொல்ல முடியா உங்கள் மீதான நினைவுகள் நிறைய இருக்கு மச்சான். எல்லாவற்றிற்கும் இந்தச் செயின் மட்டுமே சாட்சி’ என்று மனம் சொல்ல… செயின் அவனுடையது என்று தெரியுமென்பதைச் சொல்லி அதை இதுவரை கழட்டியதில்லை என்பதைச் சொன்னாள்.
“அதனால்தான் மேடம் அதுக்கு ஐ லவ் யூ சொல்றீங்களா?”
“நான்லாம் சொல்லலை. முதல்ல உங்கள் கதைக்கு வாங்க. சடங்குக்குப் பிறகு என்னாச்சி?”
“பேச்சை மாத்துற. உன் வாயால சொல்ல வைக்கலை நான் மிஸ்டர்.சூர்யோதயா கிடையாது.”
“ஹா..ஹா வைக்கலைன்னா?”
“இருக்கவே இருக்கு சபரிநாதன். உன்னோட ஸ்வீட் மச்சான் பெயர்” என்றான் காலர் தூக்கி.
“ஆமாமா ஸ்வீட்தான். அதனால்தான் நான் உங்களை மொய்க்கிறேன்.”
“வாய்க்கு வாய் பேசுற” என சிரித்தபடி தலையைக் கலைக்கப் போக சட்டென்று விலகி விரல் நீட்டி, “தலையைக் கலைச்சிராதீங்க. அப்புறம் அர்ச்சனா கஷ்டப்பட்டு பண்ணிவிட்ட ஹேர்ஸ்டைல் வேஸ்டாகிரும். அதோட…” என்று சுற்றிலும் பார்க்க…
“என்ன அதோட?” என்று சுவாரசியமாகப் பார்த்தான்.
“நீங்க கதை சொல்லுங்க. அதை அப்புறமா சொல்றேன்” என்று நழுவினாள்.
[the_ad id=”6605″]
“ம்… கல்யாணத்துக்கு முன்ன அவளை மீட் பண்ணினேன். நார்மலா பேசினா. எந்தவித பந்தாவுமில்லாம நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஜாதகத்தைக் காண்பிச்சி சீக்கிரம் முடிக்கணும் சொன்னாங்க. நீங்கன்னதும் சம்மதிச்சிட்டேன். உங்களுக்கு இஷ்டமில்லைன்னா நானே பேசி நிறுத்திருறேன். மனசுக்குப் பிடித்து செய்தால் கல்யாணம். பிடிக்காமல் செய்தா நரகம் மச்சான்னு சொன்னா. எனக்கு நீ மச்சான்னு சொன்னதுதான் நினைவு வந்தது. நீ மச்சான்னு கூப்பிடுறதுல ஒரு வித்தியாசமிருக்கும். திரும்பத் திரும்ப கேட்டுட்டேயிருக்கணும் தோணுற டோன் அது.”
“நிஜமாவா?”
“நிஜமாதான். வார்த்தைக்கு வார்த்தை நீ மச்சான்றதை ரசிச்சிருக்கேன். மது எப்பவும் என்னைப் பெயர் சொல்லிதான் கூப்பிடுவா. மச்சான்னு சொன்ன அந்த நிமிஷம் எதையும் யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன்.”
“அங்கேயும் நான்தான் வில்லியா?”
“ப்ச்… குறுக்கப் பேசக்கூடாது. கல்யாணம் முடிச்சி இராமேஸ்வரத்துலதான் இருந்தோம். ஒரு பதினைந்து நாளிருக்கும் வயிறு வலிக்குதுன்னு அவள் அம்மாவை வரவழைச்சி ஹாஸ்பிடல் போயிருந்தா. அம்மா மட்டும் வந்தா போதும்னு சொன்னதால நான் கூடப்போகல. இருந்தும் மனசு கேட்காம கிளம்பினேன். ஹாஸ்பிடல்ல விசாரிச்சிட்டு உள்ள போனா, டாக்டர்கிட்ட அவள் சொன்ன வார்த்தைகள்…”
“என்னமா பிரச்சனை?”
“நாள் தள்ளிப்போயிருக்கு டாக்டர். சந்தேகத்துல வந்தோம்.”
“முதல் குழந்தையா?”
“ஆமாம் டாக்டர். கல்யாணம் முடிஞ்சி மூணு மாதம்தான் ஆகுது” என்ற வார்த்தை சபரியின் காதில் விழ அதிர்ந்து நின்றுவிட்டான்.
“தலைக்கு ஊத்தின கடைசி டேட் சொல்லுமா?”
“எழுபத்தைந்து நாள் டாக்டர்” என்று தேதியைச் சொல்ல…
“இரண்டரை மாதம் கழித்து இப்பதான் ட்ரிட்மெண்ட்கே வந்திருக்கீங்க?”
“சாரி டாக்டர். வாந்தி மயக்கம்னு எந்த சிம்டம்ஸ{ம் இல்லை. மாதாமாதம் சரியா வராததால கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்” எனவும் அவளை அழைத்துச் சென்று பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவர் “பேபி கன்பார்ம். விட்டமின் டேப்லட் தர்றேன். இந்த மாசம் ஸ்கேன் பண்ணிரலாம்” என்றார்.
“டாக்டர் ஒரு ரெக்வஸ்ட்?”
“சொல்லுமா?”
“இ..இந்தக் குழந்தை வேண்டாம் டாக்டர். இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கு. அம்மா ஜாதகம்னு சொன்னதாலதான் சீக்கிரம் கல்யாணம் முடிச்சிக்கிட்டேன். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு இதை யோசிக்கலை” என்று தன் வயிற்றைத் தொட்டு வெட்கப்பட்டாள்.
அவளைப் பார்க்க ஆத்திரம்தான் வந்தது சபரிநாதனுக்கு.
அதைச் சொல்கையில் தெரிந்த கோபம் சூர்யாவின் கையை இறுக்குகையில் தெரிய, “மச்சான் அமைதி” என்று ஆதரவாகத் தட்டிக்கொடுத்து, அவன் தலையைத் தன் மீது சாய்த்துக் கொண்டாள். ‘இப்படியும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்களா?’ என்ற அதிர்ச்சிதான் சூர்யாவிற்கும். “அப்புறம் என்னாச்சி மச்சான்?” குப்பை என்று சொன்ன அனைத்தையும் கொட்டவைக்கும் நோக்குடன் கேட்டாள்.
சில நிமிடத்திற்குப் பின், “இந்தக் குழந்தை வேண்டாம் டாக்டர். படிப்பு முடிஞ்சதும் பெத்துக்கறோம்” என்றாள் மதுமிதா.
“உன் நிலை புரியுதுமா? இதையெல்லாம் நீங்க அப்பவே யோசிச்சிருக்கணும். உன் ஹஸ்பண்ட் என்ன சொல்றார்?”
“அவருமே இப்பதான் டாக்டர் தொழில் ஆரம்பிச்சிருக்கார். அதுக்குள்ள இதை அவரும் விரும்பல. அர்ஜென்ட் வேலையா ஊருக்குப் போறதால தனக்கு சம்மதம்னு சொல்லி கையெழுத்தும் போட்டிருக்கார். அதான் அம்மாவோட வந்திருக்கேன்” என்று ஒரு பேப்பரை டாக்டரிடம் காண்பித்தாள்.
“ஆமாம் டாக்டர். மருமகன் என் கணவரோட தங்கச்சி பையன்தான்.”
[the_ad id=”6605″]
“ஓகே. நாளைக்கு இதே நேரம் அழைச்சிட்டு வாங்க. முடிஞ்சா இவங்க ஹஸ்பண்டையும் அழைச்சிட்டு வாங்க” என்றார் டாக்டர்.
“அவர் கேரளா போயிருக்கார் டாக்டர். போன் பண்ணி உங்ககிட்ட பேசச் சொல்லவா?”
“கேரளா போன அவங்க ஹஸ்பண்டான எனக்கு இதுல விருப்பமில்லை டாக்டர். அதுவும் கல்யாணமாகி பதினைந்தாவது நாளிலேயே இரண்டரை மாதக்குழந்தை வர்றளவு நான் சித்தாயுத்தி பெற்றவன்னு எனக்கே இப்பதான் டாக்டர் தெரியுது. எவ்வளவு பவர்ல எனக்கு?” தன் மொத்தக் கோபத்தையும் அடக்கி சத்தம் வராமல் சிரித்தபடி அவர்களின் பேச்சினூடே இடையிட்டான் சபரிநாதன்.
“என்ன சார் சொல்றீங்க?”
“ஆமாம் டாக்டர்” என்றவன் செல்லிலுள்ள பத்திரிக்கையுடனான போட்டோவைக் காண்பித்து, “தேதி பாருங்க டாக்டர். அதோட மணமக்கள் போட்டோவும் பெயரும்” என்றவன் மதுவிடம் திரும்பி, “இதுக்குதான் இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டியா?”
“சபரி வா வீட்டுக்குப் போய்ப் பேசலாம்…”
“யார் வீட்டுக்கு அத்தை? என்னடா கோடிங்க லட்சத்தைத் தேடி வருதே பார்த்தேன். நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டீங்கள்ல?”
“அப்ப கோடீஸ்வரின்னா சும்மாவா?”
“ஏய் வேண்டாம். முதல்ல உன் அப்பாவைக் கூப்பிடு. இன்னும் பத்து நிமிஷத்துல அவர் இங்க வரணும்?”
“அவர் எதுக்கு? எதுவாயிருந்தாலும் என்கிட்டப் பேசு.”
“பேசிரவா? டாக்டர் நீங்கதான் சாட்சி” என்றதுமே சற்று உஷாரானார் டாக்டர்.