“டாக்டர் இவள் என்னோட தாய்மாமா மகள். ஒன்றரை மாதம் முன்ன எங்கம்மாவை ப்ரெய்ன் வாஷ் பண்ணி என்னை அவசரமா வரவச்சி நிச்சயம் பண்ணிட்டாங்க. இவளைப் பார்த்து கிட்டத்தட்ட ஏழு வருஷம் இருக்கும். நிச்சயம் முடிஞ்சதும் கேரளாவுக்குப் போயிட்டு கல்யாணத்துக்குதான் திரும்பி வந்தேன். நிச்சயத்தப்ப தப்பு நடந்ததா பார்த்தாலும் ஒன்றரை மாதம்தான டாக்டர் ஆகுது. இங்க இரண்டரை மாதம் எப்படி?” என்றான் கோபமாக.
“வேண்டாம் சபரி. நீ ரொம்பப் பேசுற?”
“ச்சீ வாயை மூடு. நான் ரொம்பப் பேசுறேனா? நீ என் வாழ்க்கையைக் கேளிக்கையாக்கி விளையாடுவ, நான் ஆமாங்க எசமான் நீங்க சொன்னா சரியாயிருக்கும்னு யார் குழந்தைக்கோ அப்பனாகணுமா?”
“நீ நல்லவன்னுதான் சபரி…”
“நிறுத்துங்க அத்தை. நான் நல்லவன்தான்! நல்லவன்னா… இளிச்சவாய்த்தனமா இருக்கணும்னு அர்த்தமிருக்கா?”
“ஏய் ரொம்பத்தான் பேசுற. வருமானமில்லாத உன்னையெல்லாம் எவ கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவா. நானே உனக்குப் பெருசு. அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதை விட்டுட்டு பேசிட்டிருக்க” என திமிராகவே சொன்னாள் மதுமிதா.
“எது நீ கெட்டுச் சீரழிஞ்சி வருவ உன்னை நாங்க வாயை மூடிட்டு வரவேற்கணுமா? நீதான் கோடீஸ்வரியாச்சே வேற யாரையாவது முடிச்சிருக்கலாமே? எதுக்காக சம்பாதிக்காத, பிடிக்காத ஒருத்தனை இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கணும்?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.
“நான்தான் குழந்தையைக் கலைக்கப் போறேனே, அப்புறம் உனக்கென்ன பிரச்சனை?”
“சாரி மதுமிதா. என்னால அபார்ட் பண்ண முடியாது. வேற இடம் பார்த்துக்கோங்க. இப்படி ஒரு பொண்ணை என் லைஃப்ல பார்த்ததேயில்லை” என்று டாக்டர் இடையிட்டார்.
“நீங்க எந்த காலத்துல டாக்டர் இருக்கீங்க? சிட்டிங்கள்ல ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்க கூட நாங்க கமிட்டட்னு தைரியமா சொல்லிட்டு சுத்துதுங்க. பாய் ஃப்ரண்டோட பப், பார்ட்டி, டேட்டிங்னு போறது ஃபேஷனாகிருச்சி. கோடீஸ்வரன் வீட்ல பிறந்துட்டு இதெல்லாம் அனுபவிக்கலைன்னா எப்படி?”
“கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணுன்னா கண்ணியமா இருக்கக்கூடாதுன்னு இருக்கா என்ன? உன்னை மிஞ்சின பணத்துல பிறந்து வளர்ந்த எத்தனை பிள்ளைங்க ஒழுக்கமா வாழ்ந்திட்டிருக்காங்கன்னு நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? உன் தப்பை மறைக்க ஒட்டுமொத்த பணக்காரனையும் இழுப்பியா?”
“அவங்கள்லாம் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவங்க டாக்டர்.”
“ஓ… நீ ரொம்ப அனுபவசாலிதான். உன் அனுபவம் எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பார்த்தியா? உன் வயித்துல உள்ள குழந்தைக்கு அப்பனாவது யாருன்னு தெரியுமா? இல்ல…”
“வாட் நான்சென்ஸ். என்னோட பாய்ஃப்ரண்ட் லவர் எல்லாமே ஒருத்தன்தான். எங்க விஷயம் தெரிஞ்சி அவனை வெளிநாடு அனுப்பிட்டாங்க. அவனை கான்டாக்ட் பண்ண முடியலை. அதுக்குள்ள இது” என்று வயிற்றைக் காண்பித்து, “அம்மாவுக்கு தெரிஞ்சி அப்பாகிட்ட சொல்லி அவசர அவசரமா இவனை முடிச்சி இல்லாத கூத்தெல்லாம் பண்ணிட்டாங்க.”
“ஓகே. அவன் ஒருத்தன்தான்னா இந்தப் பதினைந்து நாள்ல இவரோட நீ வாழலையா?” என தீர்க்கமாகப் பார்த்தார்.
“அ..அது” என்று திணற…
“என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல நான் சொல்லவா? கல்யாணமானதும் குடும்பம் நடத்திட்டா குழந்தையைக் கலைக்க முடியலைன்ற பட்சத்துல இவரோடதுன்னு காண்பிச்சி, குறைப்பிரசவத்துல குழந்தை பிறந்துட்டதா சொல்லி நம்ப வச்சிரலாம். பையன் ரொம்ப நல்லவன் உன் பாஷையில இளிச்சவாய்… அதை உண்மைன்னு நம்பிருவான். ஆமா, என்ன படம் பார்த்து இதை ட்ரை பண்ணனீங்க? ஒருநாள் இல்ல ஒருநாள் மாட்டிப்போம்ன்ற பயமில்லை உன்னை மாதிரிப் பெண்களுக்கு. பயமிருந்தா தப்புப் பண்ணத் தோணாது. நீ தப்பைத் தப்பில்லைன்னு பேசுற ரகம். உன் செயலுக்கு உன் தாய் ரொம்பப் பெருமைப்படுறாங்களே, அவங்க பெத்த பொண்ணு நீ எப்படியிருப்ப?”
“டாக்டர் நான்…” என மதுமிதாவின் தாய் இடையிட…
“என்ன நான்? பெத்த பிள்ளையை சரியா வளர்க்கலைன்னாலும், அவள் செய்யுற தப்பையாவது கண்டிச்சி, சம்பந்தப்பட்ட பையனுக்கே கல்யாணம் முடிச்சி வச்சிருக்கலாம். மகளுக்கு ஆதரவா நின்னு ஒரு பையனோட வாழ்க்கையைச் சீரழிச்சிருக்கீங்க. இதுக்கே போலீஸ் கேஸ் கொடுக்கணும்.”
[the_ad id=”6605″]
“எங்களுக்குத் தெரியாத போலீஸா?”
“மது சும்மாயிரு” என தாய் அதட்ட…
“தேங்க்யூ டாக்டர். இவங்க என்கிட்ட வந்து உண்மையைச் சொல்லி கேட்டிருந்தா ஏதோ அறியாத வயசு தப்புப் பண்ணிட்டாள்னு மனசார ஏத்துக்கிட்டிருப்பேன். கல்யாணமான பிறகாவது சொல்லியிருக்கலாம். ஏன் இப்ப இங்க எனக்குத் தெரிஞ்சதும் நிலைமையைச் சொல்லி மன்னிப்பு கேட்டிருந்தா இப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருப்பேன். ஆ…”
“என்னை மன்னிப்பியா? நான் என்ன தப்பு செய்தேன் மன்னிப்பு கேட்க? என்னை மன்னிக்க உனக்கென்ன தகுதியிருக்கு?” என்று கோபத்தில் கத்தினாள்.
“ஆமா. உன்னை மனுஷியா நினைக்குறதே தகுதி கிடையாதுதான். இந்தத் தகுதியில்லாதவன் உன் லைஃப்ல இனி கிடையாது. நாளைக்கு இதே இடத்துல டைவர்ஸ்கு சைன் பண்ணுற. அதே மாதிரி இந்தக் குழந்தையைக் கலைச்சிட்டு அடுத்த தப்புக்குத் தயாராகலாம்னு பார்க்கிறல்ல, அதை நடக்க விடாமல் பண்ணுறேன்.”
“அதைத் தடுத்தா இது உன் குழந்தையாதான் பிறக்கும் சபரி. இதுவும் எனக்கு ப்ளஸ்தான்” என்றாள் ஏளனப் புன்னகையுடன்.
“என் குழந்தைன்னு வெளியில சொன்னா டாக்டரே சாட்சி. அதையும் மீறினா என்னை நிரூபிக்க டி.என்.ஏ இருக்கு. இனி என் வீட்டு வாசல் வந்தீங்க நமக்குள்ள முடியுற பிரச்சனை நாடு முழுக்கத் தெரிஞ்சி நாறிடும். நாளைக்கு இதே டைம்கு டைவர்ஸ் பேப்பரோட வருவேன். சைலண்டா சைன் பண்ணிட்டுப் போயிரு. இல்ல…” என விரல் நீட்டி மிரட்டி, “நாளைக்கு வர்றேன் டாக்டர்” என்று கிளம்பினான்.
“மறுநாளே டைவர்ஸ் சைன் பண்ணியாச்சி. முடிந்தளவு இரண்டு மாசம் அவங்க எந்த டாக்டரைப் பார்த்தாலும் கருக்கலைப்பு செய்யவிடாம தடுத்தேன். அதுக்கு மேல அபார்ஷன் பண்ணினா தான் செத்திருவோம்ன்ற உயிர் பயத்துல குழந்தையை அழிக்க முயற்சிக்கலை. மியூச்சுவல் டைவர்ஸ் கிடைச்சது. வீட்லயும் மத்தவங்ககிட்டேயும் பழைய லவரோட போயிட்டதா சொன்னேன். அதுக்குப் பிறகு நான் இராமேஸ்வரம் போகல.”
“ஆக நம்ம ரெண்டு பேருக்குமே ஹாஸ்பிடல்லதான் விடுதலை கிடைச்சிருக்கு.”
“இந்த ஒற்றுமை போதுமே வெள்ளச்சி நீயும் நானும் சேர” என்று கையில் கிள்ளி வைத்தான்.
‘ஆ’ என்றலறியவள் வாயை மூடி, “சில மாதங்கள் கடந்தப்ப வீட்லயிருந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு போன் வந்தது. நானும் அத்தையும் உடனே கிளம்பி வந்தோம். வர்ற வழியிலதான் ஒரு இடத்துல கார் நின்னுருச்சி. அப்ப முழுசா விடியலை. டிரைவர் என்ன பால்ட்னு பார்க்க, சும்மா நடந்திட்டிருந்த எங்களுக்கு குழந்தை சத்தம் கேட்டுது. அப்பதான் அந்த காரைப் பார்த்தோம். காருக்குள்ள ஒரு லேடி வேகமா ஏறினதைப் பார்த்துட்டு அத்தை குழந்தை சத்தம் வந்த சைடு போனாங்க. நான் கார்ல யாருன்னு பார்க்கப் போனா அம்மாவோட அண்ணனும் அவர் மனைவியும்.”
“அது என்ன இடம்னு பார்த்தா ஆதரவற்றோர் இல்லம். மாசக்கணக்கை வைத்துப் பார்த்ததுல ஓரளவு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சது. காதல்ன்ற பெயர்ல பெருசுங்க பண்ற தப்புக்கு சிறுசுங்க தண்டனை அனுபவிக்கும் இடம். பாவம் செஞ்சவங்க சாதாரணமா தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க. பெத்தவங்க செய்ததை பிள்ளைங்க காலம் முழுக்க சுமக்கிற கொடுமைதான் ஆசிரம வாழ்க்கை. அந்தக் காலை நேரத்துல கூட சின்னச் சின்னப் பிள்ளைங்க தன்னோட வேலையைத் தானே செய்து, கீழே விழுந்தா எழுந்து, விவரம் தெரிந்தபின் தன்னைத்தானே செதுக்கி, க்ரேட்தான் அந்தப் பிள்ளைங்க.”
“கிட்டத்தட்ட என்னை மாதிரி மச்சான்” என்றாள்.
“இந்த மாதிரி பேசாத உதயா. ஒரு கூட்டுக்குள்ள இருந்த உனக்கே பிரச்சனைன்னா, யாருமில்லாத அந்தப் பிள்ளைங்க நிலை? அப்பதான் அத்தை கையில் குழந்தையோட வந்தாங்க. நான் கையில் வாங்கினதும் ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு, குழந்தைக்கு இணை ஏதுமில்லைன்றது உண்மைதான். அத்தைகிட்ட யாரோட குழந்தைன்னு சொல்லிட்டிருந்தப்ப, அந்த ஆசிரமத்திலிருந்து இரண்டு பேர் வந்து ஆசிரமத்துல சேர்க்க வந்தீங்களான்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க.”
“இல்லங்க இது என்னோட குழந்தை. கார் ரிப்பேராகிருச்சி. காத்து வரலைன்னதும் அழ ஆரம்பிச்சிட்டா. அதான் காத்தாட கொண்டு வந்தேன்னு சொல்லி காருக்கு வந்துட்டேன்.”
[the_ad id=”6605″]
“இந்தக் குழந்தை நமக்கு அவசியமா சபரி?”
“நாமளே குழந்தையை வச்சிக்கலாம் அத்தை.”
“என்ன சென்டிமெண்டா?”
“சேச்சே அப்படி இருந்திருந்தா ஏதோ ஒண்ணுன்னு அவளை கூடவே வச்சிருப்பேனே அத்தை. இந்தக் குழந்தையை எனக்குப் பிடிச்சிருக்கு. வேற யாரோட குழந்தையா இருந்திருந்தாலுமே எனக்குப் பிடிச்சிருக்கும்.”
“நைட்தான் பிறந்திருக்கு போலடா. ஆசிரமம் திறக்கிற நேரமா பார்த்து போட்டிருக்காங்க. என்ன மனுஷங்க இதுங்கள்லாம்?” என்றவர், “இதோட இன்னொரு கன்டிஷன்…” என்று நிறுத்த…
“கன்டிஷனா?”
“ஆமா. இந்தக் குழந்தைக்கு அம்மாவை நான்தான் செலக்ட் பண்ணுவேன்.”
“அட இதுகூட நல்லாதான் இருக்கு. சரி என்ன பெயர் வைக்கலாம் சொல்லுங்க?”
இசக்கி குழந்தையின் முகம் பார்க்க, சூர்யனின் உதயமும் சூர்யோதயாவின் முகமும் தெரிய, “உதயா! உதய ஹரிணி” என்றார்.
“உங்களுக்கு எல்லாத்திலும் உதயா வேணும்னு சொன்னதும், என் தேவதைப் பொண்ணுடா அவள்னு டயலாக் வேற. வீட்டுல குழந்தையைப் பற்றி யாருக்கும் சொல்லலை. அம்மா பயங்கர சண்டை. அப்பாவுக்கும் தங்கச்சிக்கும் எங்க அப்படியே இருந்திருவேனோன்னு பயம். கொஞ்சம் பிடிவாதமா நின்னு அப்பாவுக்கு பெருசா எதுவுமில்லைன்னதும் இங்க வந்துட்டோம்.”
“அத்தைகிட்டதான் பாப்பா வளர்ந்தது. அப்பவே உன் அம்மா பெயர் சூர்யான்னு சொல்லிதான் வளர்த்திருக்காங்க. அது நடக்குமான்னு யோசிக்கலை. நடக்கும்னு நம்பியிருக்காங்க. பூவரசி அத்தைகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா அத்தை பேசி நம்மை சேர்த்து வச்சிருப்பாங்க. நடுவுல இத்தனை பிரச்சனைகள் தேவையிருந்திருக்காது. கொஞ்ச நாள்ல மதுவுக்கு ஆறேழு மாசத்துலயே குழந்தை பிறந்தது யார் மூலமோ அம்மாவுக்குத் தெரிஞ்சி அதிர்ச்சியாகிட்டாங்க. இரண்டு பிள்ளைங்களைப் பெத்தவங்களுக்குத் தெரியாதா? புரிஞ்சிக்கிட்டாங்க. இருந்தாலும் பொண்ணுங்க போட்டோ காட்ட மறக்கிறதில்லை” என்றான் சிரித்தபடி.
“ஏன் மச்சான்? அந்த மது கன்னிப்பெண் இல்லைன்னு கண்டுபிடிக்கலையா?”
“இந்தக் கேள்வி தேவையா? நான் அவள்கிட்ட ஏமாந்த கதையை சென்சாரில்லாம சொல்லணுமா?”
“எல்லாம் ஒரு பொது அறிவுக்குதான் மச்சான்” என்றாள் கண்சிமிட்டி.
“போடீ லூசு. நானென்ன நிதமும் ஒருத்தி கூட சுத்துற பொறுக்கியா? பொண்ணுங்களைப் பற்றி ஏ டூ இசட் தெரிஞ்சி வச்சிருக்க. பையனோ பொண்ணோ நம்பிதான் கல்யாணம் பண்றோம். அந்தத் தகுதி அவங்களுக்கு இருக்கா இல்லையான்னு எப்படித் தெரியும்? ப்யூர்லி பேச்சுலர்மா. அக்மார்க் தமிழ்ப்பையன்.”
“ம்க்கும்… ரொம்பத்தான் பெருமை.”
“ஆமாடி வெள்ளச்சி. ஆனா இனிமேல் பேச்சுலரா இருக்கப் போறதில்லை” என்று தலையில் முட்டினான்.
“ஸ்… நம்பிட்டோம்” என்பதாய் கேலியாகப் புருவம் உயர்த்த…
“அதை விடு. உன் தலையைக் கலைக்க வந்தப்ப அதோடன்னு நிறுத்துனியே ஏன்?”
“தலை கலைஞ்சிருந்தா பார்க்கிறவங்க பார்வையில நாம தப்பு பண்ணினதா தோணும். அதான் வேண்டாம் சொன்னேன்.”
“தப்புப் பண்ணினதுன்னா?”
“புரியாத மாதிரி நடிக்காதீங்க மச்சான்.”
“நிஜமா புரியலைமா?”
“சினிமால்லாம் பார்க்கிறதில்லையா? அதுல வர்ற மாதிரி கணவன் மனைவி தப்புப் பண்ணிட்டதா நினைப்பாங்க.”
“ஓஹ்ஹோ! அ..அதுவா? அப்ப கண்டிப்பா தலையைக் கலைக்கிறேன்” என்று வம்பு செய்து கொண்டிருந்தான்.
[the_ad id=”6605″]
அதற்குள் ப்ரித்வியின் அம்மா அவர்களிடம் வந்து, “சாப்பிட வாங்க. இந்த சாரல் மழையில் எப்படி உட்கார்ந்திருக்கீங்க? அப்புறம் இலவசமா சளியும் காய்ச்சலும் வரும்” என்று உள்ளே அழைத்தார்.
“ஐயோ! வேண்டாம்மா. இவங்களுக்கு வந்தா எல்லாமே ஹை லெவல்தான். நான் ரிஸ்க் எடுக்கலை” என்று மண்டபம் செல்ல மணமக்களும் சாப்பிடக் கிளம்ப… தன்னிடம் வரச்சொல்லி ஹரிணியிடம் ப்ரித்வி கைநீட்டினான். குழந்தையோ தாயைக் காண, சூர்யா சம்மதமாகத் தலையசைத்தாள்.
“மாமாகிட்ட என்ன தயக்கம் பாப்பா? தாய்மாமான்றவன் தாய்க்கு சமமாம். சோ, மாமாகிட்ட வர்றதுக்கு அம்மா முகத்தைப் பார்க்காதே. சரியா?” என… அதற்கும் அவள் தாயைப் பார்க்க… சரியென்று தலையசைத்தாள்.
ப்ரித்வியின் தாய்மாமனில் தாயின் நினைவு வந்ததோ!
டின்னர் முடித்து காலையில் திருமணத்திற்கும் வரச்சொல்லி கார்வரை வந்த ப்ரித்விராஜ், “இப்ப நான் கண்டுபிடிச்சதைச் சொல்லவா?” என்றான்.
“இந்தக் குதூகலத்திலும் ஒரு ரணகளம் கேட்குதா நண்பா?”
“எதிலும் ஒரு வித்தியாசமிருக்கணும் தோழி” என்றவன், “உங்க நெற்றிக் குங்குமம்தான் அது. முதல் இரண்டு மூன்று முறை பார்த்தப்ப உங்க நெத்தியில் ஸ்டிக்கர் பொட்டு மட்டும்தான் இருந்தது. பத்திரிக்கை வைக்க வந்தப்பதான் வித்தியாசம் தெரிஞ்சது. இப்படியே இருங்க தோழி. இதுதான் உங்க முகத்துக்கு நிறைவாயிருக்கு. எப்பவும் இப்படியே மங்களகரமா, மயக்கும் உங்க மணாளனிடம் மயங்கும் உங்க காதலோட மகிழ்ச்சியா இருங்க” என்று வாழ்த்த… தேவதைகளின் ததாத்சு ஒலி கேட்டதோ!
இருவர் மனதிற்குள்ளும் இனம்புரியாத காதல் மழைத்துளி!