ஃப்ரீ ஷோ பார்க்கும் ஆவலில் வீட்டின் இளையவர்களும் வந்துவிட, “ஒன் டூ த்ரீ” என்று கௌண்ட் ஆரம்பித்து, “சூர்யா சபரிக்கு கிஸ் பண்ணுவாங்க” என்று ஒரு க்ரூப்பும்… “இல்ல பல்ப் கொடுத்திருவாங்க” என்று ஒரு க்ரூப்பும் பெட் கட்டினார்கள். மெஜாரிட்டி பல்பிடமே இருக்க…
‘அவளின் மச்சானை விட்டுக் கொடுத்திருவாளா என்ன?’
சபரிநாதன்-சூர்யோதயா இருவருக்குமிடையே அரை அடி இடைவெளியில் நின்றவள், கணவனின் கையுடன் கைகோர்த்து விரல்களில் பின்னலிட்டு, அவன் முகம் பார்த்து கண்சிமிட்டிப் புன்னகைத்து தோள் சாய்ந்து கொண்டாள்.
‘என் உதயா! எப்பவும் அடுத்தவர் முன் விட்டுக்கொடுக்க மாட்டாள்’ என்ற கர்வம் அவன் முகத்தினில்.
பல்ப் அனைவர் முகத்திலும் பிரகாசமாகவே எரிந்தது. அவள் முத்தமிடாதது ஒரு க்ரூப்பிற்கு ஏமாற்றமென்றால், அவளின் அத்து மீறாத கொஞ்சல் மற்றவர்களை ஏமாற்றியது.
ஹோவென்ற கைதட்டல் சத்தத்தில் சபரி சூர்யா நிஜம் வர, அவர்களைக் கலாய்த்து ஒரு வழியாக்கினார்கள்.
“நாங்களும் உங்களோட ஜாய்ண்ட் பண்ணிக்கலாமா?” என்று ப்ரித்விராஜ் மனைவியுடன் வர, அவர்களைத் தொடர்ந்து டாக்டர்.ருத்ரன்- பிரம்மசக்தி வர எல்லையில்லா மகிழ்ச்சி மட்டுமே அவ்விடத்தில்.
விருந்தினர் அனைவரும் கிளம்பியிருக்க… வீட்டினரும், நெருங்கிய நட்புகள் மட்டுமே அங்கிருக்க… “என்னை மட்டும் கூப்பிடலையே?” என்ற குரலில் அனைவரும் திரும்ப, “மாமா” என்று சபரியும், “அண்ணா” என்று சரளாவும் தங்கள் முன் நின்ற வீராச்சாமியைப் பார்த்து எழுந்து அவரை நோக்கி வர..
“ஏன்மா இந்த அண்ணனை மறந்துட்டியா?” என்றார்.
“இல்லண்ணா. வாங்க” என வரவேற்க… “வாங்க மாமா” என்றான் சபரி.
[the_ad id=”6605″]
“குழந்தை கிடைச்ச நேரம் தொழில்ல நல்ல முன்னேற்றம் போலிருக்கு?”
வீராச்சாமியின் கேலிக்குரலில் ஏதோ வம்பு வரப்போவதை உணர்ந்து, “சுத்திக் காண்பிக்கிறேன் வாங்க மாமா” என்றழைத்துச் சென்றவன், “சொல்லுங்க மாமா? சும்மா வந்துட்டுப் போற ஆளில்லையே நீங்க? அதுவும் கூப்பிடாமல் வந்திருக்கீங்கன்னா காரணமில்லாமல் இருக்குமா?”
“அதான் சொன்னேனே சபரி குழந்தை கிடைச்ச நேரம் தொழில்ல நல்ல முன்னேற்றம்னு.”
“என்ன சொல்ல வர்றீங்க?”
“புரியாத மாதிரியே பேசுறியே மருமகனே! எங்க வீட்டு லட்சுமியை நீ வச்சிக்கிட்டா எப்படி? தப்பில்லையா?” என்றார் மர்மப்புன்னகையுடன்.
“என்ன மாமா? எதாவது கனவு கண்டுட்டு வர்றீங்களா? என் பொண்ணை உங்க பேத்தின்னு சொல்றீங்க? என் ஒய்ஃப்கு தெரிஞ்சது அவ்வளவுதான். சூதானமா இருந்துக்கோங்க மாமா” என்றான் சின்னதான குரலில்.
“புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா? நீ குழந்தையைத் தூக்கிட்டு வந்ததுக்கான ஆதாரம் என்கிட்டயிருக்கு.”
“தூக்கிட்டு வந்தேனா? அவள் நான் பெத்த பொண்ணு மாமா. அதற்கான ஆதாரம் என்கிட்ட நிறையவே இருக்கு.”
“இங்க பார் சபரி… மதுவுக்கு இனிமேல் குழந்தை பிறக்காதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. முதல் குழந்தையை வேண்டாம் சொன்னதாலதான் பிறக்கலைன்னு வருத்தப்படுறா. குழந்தையை போட்ட ஆசிரமத்துல விசாரிச்சதில் நீதான் கொண்டு போனதா தெரிஞ்சது.”
“ம்… உண்மைதான் மாமா. அங்கிருந்த குழந்தையை நான்தான் எடுத்துட்டு வந்தேன். அதுக்காக குழந்தையை உங்ககிட்டத் தரமுடியாது. என்ன செய்யணுமோ செய்துக்கோங்க” என்று அவரின் பிபியை ஏற்றிவிட்டான் சற்று அழுத்தமாகவே.
[the_ad id=”6605″]
“அப்ப தரமாட்ட? ஓகே எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும். சீக்கிரமே மீட் பண்ணலாம்” என மிரட்டிச் செல்ல…
“காத்திருக்கேன் மாமா” என்றான் சத்தமாக.
பங்க்ஷன் முடிந்து வீடு வந்ததும் மற்றவர்களை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி ஒரு சிலருக்கு போன் செய்து மொட்டைமாடி வரச் செய்தவன், “நான் சொல்றதை என்ன ஏதுன்னு கேட்டு அப்படியே செய்ய உங்களால் முடியுமா?” அங்கிருந்த ராமன், லட்சுமணன், பரத், ரவியைப் பார்த்து கேட்டான்.
“முயன்றால் முடியாதது எதுவுமில்லை மச்சான்” என்ற பரத்திடம் வந்த சபரி, “மச்சான் மலையேற மச்சினன் கயிறைப் பிடிப்பானாம்! உன் மச்சானுக்காக கயிறெல்லாம் இழுக்க வேண்டாம்டா. ஒரு வீட்டுல போய் ஒரு பொண்ணோட தலைமுடியும், கொஞ்சம் இரத்தமும் எடுத்துட்டு வரமாட்டியா?”
“யோவ் மச்சான்! அது எடுத்துட்டு இல்ல திருடிட்டு” என கடுப்பாகச் சொல்ல…
“பரத்! மச்சானை மரியாதையில்லாம… என்ன பேச்சி இதெல்லாம்” என்று ராமனும் லட்சுமணனும் அதட்ட…
“விடுங்க ராம். அவன் உரிமையா பேசுறது பிடிச்சிருக்கு” என்று பரத்திடம் திரும்பியவன், “மரியாதை பறந்திருச்சி மச்சினனே” என்றான் கேலியாகவே.
“பறந்தா பிடிங்க மச்சான். கயிறு வேணும்னா தரட்டுமா?” என்றான் ‘என் மச்சான் நான் எதுவேணும்னா பேசுவேன்’ என்பதாய் சகோதரர்களை ஒரு பார்வை பார்த்து.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நான் சொல்றதை கவனமா கவனி. நான் சொல்ற அட்ரஸ்கு போய் நான் கேட்டதைக் கொண்டு வரணும். உன்னால் முடியுமான்னு மட்டும் சொல்லு?”
“எனக்கு ப்ளட் எடுக்கத் தெரியாது மச்சான். படிக்கிறது பிசினஸ் மேனேஜ்மெண்ட்தானே தவிர எம்பிபிஎஸ் கிடையாது” என்றான் தன்மையாகவே.
“என் மனைவிக்குத் தெரியும் மச்சான்” என்று லட்சுமணன் முன்னே வந்தான். இதுவரை எதற்காகவும் முன்னே நின்றதில்லை. இதுவரை தங்கைக்கென்று எதுவும் செய்யவுமில்லை. தங்கை கணவன் மேல் ஒரு மதிப்பு அவனுக்கு. விக்னேஷை அந்தளவு பெரிதாக எடுத்திராதவனுக்கு, சபரியைக் கண்டு ஒருவித மயக்கம்தான். சபரியிடம் சகஜமாகப் பழக இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான்.
“நிஜமாவா?”
“ஹாஸ்பிடல்ல சின்னச்சின்ன வேலை பார்த்திட்டிருக்கும் போதுதான் பார்த்தேன் மச்சான்” என்று அசடு வழிய…
“சின்னச்சின்ன வேலையைப் பார்க்கிறது வேற மாப்ள. இது நரம்பு பார்த்து ப்ளட் எடுக்கணும். தெரியாம இறங்கி உயிருக்கு எதுவும் ஆபத்தாகிரக்கூடாது?”
“அவள் அதுக்குன்னு படிக்கலைன்னாலும் நாலு வருஷ அனுபவம் வச்சி சில நேரம் இவளும் செய்றா. அந்தக் காலத்துல யாரும் படிச்சிட்டு பிரசவம் பார்க்கலையே மச்சான். அனுபவம் அதைவிட சிறந்த ஆசான்.”
“அவங்களைக் கூப்பிடுங்க பேசிப் பார்க்கலாம்” என்றதும் லட்சுமணன் சென்று அவன் மனைவி சீலியை அழைத்து வர… அவளிடம் பேசி உறுதிப்படுத்தி, பின் அதற்குத் தேவையான பொருட்கள் வாங்கி வந்த சபரி, தனக்கு ப்ளட் எடுக்கச் சொல்லி டெமோ பார்த்து, “உங்களுக்கு மாடி ஏறத் தெரியுமா?” என்று அவளிடம் கேட்டான்.
“மரம் ஏறத் தெரிஞ்சவளுக்கு மாடி ஒண்ணும் பெருசில்ல மச்சான்” என்ற கணவனை முறைத்து, “நான் பண்றேன் அண்ணா” என்றாள் சீலி.
மதுமிதா இருக்கும் தெருவில் சிசிடிவி எங்கெங்கு உள்ளதென்று ஆராய்ந்து, அதில் தெரியாதவாறு எப்படிச் செல்வதென்று வியூகம் அமைத்து, இரவு ஒரு மணியளவில் அவ்வீட்டின் பின்புறம் காரை நிறுத்தி, “அதான் மதுமிதா ரூம். பார்த்து ஜாக்கிரதை” என்று இருவரையும் அனுப்பினான்.
பைப் வழியே பால்கனியில் குதித்து, கணவன் மனைவி இருவருக்கும் மயக்க மருந்தை மூக்கில் வைத்து, மயங்கியதை உறுதி செய்து, தேவையான அளவு ப்ளட் எடுத்து கையில் சிறிது நேரம் பஞ்சை வைத்து அழுத்தி, ப்ளட் நிற்கவும் பஞ்சை எடுத்து மடக்கினாற்போல் வைத்தாள் சீலி.
பரத் ஐந்தாறு முடிகளை ஒன்றாக சேர்த்து இழுக்க… “ஏய்! என்ன பண்ற?” என்றாள் பயத்தில்.
[the_ad id=”6605″]
“அட இருங்க நர்ஸம்மா. இந்த ரெண்டு பேரால எங்க மச்சான் எவ்வளவு கஷ்டபட்டிருக்காங்க. அப்படியே விடச் சொல்றீங்களா? வந்ததுக்கு அடையாளம் இருக்கக்கூடாது சொன்னதால இந்த குட்டி வலி” எனும்போதே காதிலிருந்த ஹெட்செட் வைப்ரேட் ஆக வேகமாக அங்கிருந்து கிளம்பினார்கள்.
இரவோடிரவாக பல வேலைகள் முடித்து வீடு வர நான்கு மணியானது சபரி அன்ட் கோவிற்கு.
அனைத்தையும் சாதித்த சந்தோஷத்தில் மனமிருக்க, அதீத அலைச்சலால் அந்த அதிகாலையிலும் குளித்து வந்து படுத்தவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான். அவளின் சிணுங்களில் முத்தங்கள் இடம் மாற, அதில் தூக்கம் கலைந்த சூர்யா கணவனைக் காண… “இன்னும் விடியலை” என்றான் கண்ணடித்து.
“இதுக்கும் விடியலுக்கும் என்ன சம்பந்தம்?” என்றவள் குரல் மெல்லிசையாக வர…
“விடிஞ்சிட்டா உன்னை எதுவும் செய்யக்கூடாது சொல்லியிருக்க. இப்ப மணி நாலுதான் ஆகுது.”
“இப்பதான் வந்தீங்களா மச்சான்? நைட்லாம் எங்க போனீங்க?”
“கொஞ்சம் வேலை இருந்ததுமா. எல்லாம் முடிஞ்சதும் சொல்றேனே” என்றதும் அவள் சம்மதமாய் தலையசைக்க… “உயயா இன்னும் இருட்டாதான் இருக்கு. சோ…” என்று நிறத்தினான்.
“அதனால?”
“அட்ஜஸ்ட் பண்ணிக்கடி வெள்ளச்சி” என்று அவளை அணைத்துத் தன்வசமாக்கினான்.
“கேடி மச்சான். நேரங்காலம் இல்லாமல் போச்சி உங்களுக்கு.”
“ஏய்! நாலு மணின்னு சொல்லிதான் வேலை பார்த்தேன். நீ கூட எதுவும் சொல்லலை. வேணும்னா இன்னொ…”
சட்டென அவன் வாய்மூடி, “அச்சோ! பேச்சுக்கு சென்சார் போடுங்க மச்சான். வரவர வாயைத் திறந்தா எடக்கு முடக்கான வசனம்தான் வருது. ரொம்பக் கெட்டுப் போயிட்டீங்க” என்றாள் வெட்கத்துடன்.
கையை விலக்கி தன்னுள் அடக்கியவன், “அது காதல் பிதற்றல்கள் வெள்ளச்சி. வேணும்னா இன்னு… ம்… ம்…”
திரும்பவும் அவன் வாய் மூடப்பட்டது சூர்யாவின் இதழ்களால். இதழ் பிரித்து, “சென்சார் தாண்டிப் பேசினா கொன்னுருவேன்” என்ற வார்த்தை குழைந்து கிறங்கி வர… அவளின் இதழ்க் கொலைகளில் இன்பமாய் தொலைந்து கரைந்து போனானோ சபரிநாதன்!