அதை உணர்ந்தானோ சபரி, “பிடிச்சிக்கலாமே! ஆனாலும், உனக்கு ரொம்ப ஆசைதான் மதுமிதா. உன்னையே நினைச்சிட்டிருப்பேன் நினைச்சியா? பைக் ஓட்டும்போது வண்டி ஸ்லிப்பாகி கீழ விழுந்துட்டா, ஐயோ செத்துட்டேனேன்னு நினைச்சி அப்படியே கிடக்குறதில்லை வாழ்க்கை. அடியே பட்டிருந்தாலும் கையைக் காலை உதறி அடுத்து நடக்க வேண்டியதைப் பார்த்து கிளம்பிட்டேயிருக்கணும். உன்னோடான என் கல்யாணம் ஜஸ்ட் ஸ்லிப்தான். அதனால்தான் உன்னை உடனே உதற முடிஞ்சது. எனக்கு என் உதயா கிடைச்சா” என்றான் கர்வமாக.
“ரொம்பப் பேசுற சபரி. நான் விட்டுட்டுப் போனதாலதான் அவள் கிடைச்சா” என்றாள் கோபத்தில்.
அவர்கள் பேசுவதைக் கேட்டிருந்த சூர்யா கணவனருகில் வந்து கையைக் கோர்த்துக் கொண்டு, “நீங்க விட்டுட்டுப் போகல மதுமிதா. உங்களை விரட்டியடிச்சாங்க என் மச்சான். என்னதான் காக்கா வடையைத் தூக்கிட்டுப் போனாலும், அந்த வடையை அதுவே சாப்பிடக் கொடுத்து வைக்கலைன்றதுதான் தத்துவம்.”
“ஏய்! என்னைக் காக்கான்றியா?”
“ஏன் மச்சான் உங்களுக்கு அப்படித்தான கேட்டுச்சி?”
“ஆமா உதயாமா” என்றான் வேகமாக.
அதில் மதுமிதாவிற்கு அதுவரையிருந்த கோபம் மறைத்து சிரிப்பு வர, “நல்லா ஜால்ரா போடுற சபரி. எனிவே பாஸ்ட் இஸ் பாஸ்ட். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள்” என்றாள்.
அவளின் இலகு நிலை மற்றவர்களையும் தொற்ற, “தேங்க்ஸ்” என்றான் அனைத்தையும் மறந்து.
மதுமிதா குழந்தையுடன் நகர… சபரியிடம் வந்த வீராச்சாமி, “எனக்கு இப்பவும் சந்தேகம்தான். நீ புதுசா கொண்டு வந்த குழந்தையை ஏத்துக்க மனசு வரலை. உன் குழந்தையைப் பார்த்தா ஏத்துக்கத் தோணுது” என்றார் ரவி கையிலிருந்த குழந்தையைப் பார்த்தபடி.
[the_ad id=”6605″]
“ஐயய்யே! என்ன மாமா நீங்க குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க? நீங்களே என் குழந்தைன்னு டிக்ளேர் பண்ணிட்டீங்க. அப்புறமும் என்ன குழப்பம்? உங்க பொண்ணு கையில் இருக்கிறதுதான் உங்க வாரிசுன்னு டி.என்.ஏவே சொல்லிருச்சி. இதுக்கும் மேல என்ன எதிர்பார்க்குறீங்க? என் பொண்ணை உங்க பேத்தின்னு பிக்ஸ் பண்ணிட்டதால, அந்த எண்ணத்தை மாத்திக்க மனசு வரமாட்டேன்னுது நினைக்கிறேன். இப்பவும் உங்க தங்கை முறையில் என் பொண்ணு உங்க பேத்திதான்.”
அவரின் குழப்ப முகம் பார்த்து, “உங்க மனக்குழப்பத்தை மதுமிதாகிட்ட சொல்லி அவளையும் குழப்பி குழந்தையோட வாழ்ற சந்தோஷ வாழ்வைக் கெடுத்திராதீங்க மாமா. அங்க பாருங்க அப்பா, அம்மா, மகள்னு தனி குடும்பமாகிட்டாங்க. போய் சேர்ந்து என்ஜாய் பண்ணுங்க” என்று அவரைத் தெளிவித்து அனுப்பினான்.
மற்றவர்களுடன் காரில் ஏற, “மச்சான் என்ன செய்தீங்க?” எனக்கேட்ட மனைவியிடம், “வீட்ல போய்ப் பேசிக்கலாம்” என்றான்.
இரவு நேரத் தனிமையில், “இப்ப சொல்லுங்க மச்சான்?” என்று கட்டிலில் கணவன் மேல் சாய்ந்து அவன் கைவிரலில் தன் விரல் நுழைத்து விளையாடியபடி கேட்டாள்.
“மதுமிதாவுக்குத் தெரியாமல் அவங்க ப்ளட் எடுத்து, டி.என்.ஏக்கு நம்மகிட்ட எடுத்த ப்ளட்கு பதிலா அதை மாத்தி வச்சிட்டேன். அதே மாதிரி அந்த பாப்பா ப்ளட்கு பதிலா நம்ம பாப்பா ப்ளட்டை வச்சிட்டோம். பரிசோதனையில் ஹரிணி நம்ம பொண்ணுன்னு வந்திருச்சி.”
“ஹரிணியைத் தூக்கிட்டு வரும்போது காடாயிருந்த ஏரியாவுல துணியில சுத்திக்கிடந்தது அந்தக் குழந்தை. டிரைவர் பார்த்துட்டு என்கிட்ட சொல்ல, நானும் அத்தையும் தூக்கிட்டுப் போய் போலீஸ்ல ஒப்படைச்சோம். அதனால்தான் தைரியமா பேசினேன். அந்த குழந்தையும் ஆதரவில்லாததுதான். அவங்களுக்கு உரிமையான குழந்தையா இருக்கட்டும்னு செய்தேன். பெண் குழந்தைமா… பின்னாடி தனியா நிற்காம அப்பா அம்மாவோட பாதுகாப்புல இருந்தா நல்லாயிருப்பா. முக்கியமா தரமான கல்வி கிடைக்கும்.”
“நாம பண்ணினது தப்புதானங்க? நாமளும் சுயநலமா இருக்கோம்ல? அவங்க குழந்தையை நல்லவளா வளர்க்கமாட்டாங்கன்னு தோணிச்சி. நிஜ பாசத்தோட கேட்டிருந்தா பாப்பாவைக் கொடுத்திருப்பேன். இப்ப குழந்தையே பிறக்காது தெரிஞ்சதும்தான் கௌரவத்துக்காக தேடியிருக்காங்க. அதிலும் நீங்கதான் வச்சிருக்கீங்கன்னதும் பழிவாங்கத்தான் பார்த்தார் உங்க மாமா.”
“நாய் வால் நிமிர்த்த முடியாதாம் உதயா.”
“அப்ப அந்தக் குழந்தை நிலை?”
“மதுமிதா பார்த்துப்பாள்னுதான் தோணுது. அப்படியே ஆனாலும், எந்த ஏற்பாடும் செய்யாம அப்படியே தூக்கிக் கொடுத்திருப்பேனா! குழந்தையை பொறுப்பா பார்த்திருந்த இன்ஸ்பெக்டர் அடிக்கடி அவங்க வீட்ல போய் பார்த்துப்பார். அவங்ககிட்ட நேரடியாவே, என்னதான் நீங்க பெத்த பொண்ணுனாலும் பிறந்த உடனே தூக்கிப் போட்டுருக்கீங்க. உங்க வளர்ப்பு மேல எனக்கு நம்பிக்கையில்லை இன்னொரு குழந்தை பிறந்தா இவளைத் தூக்கிப்போட மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? எப்ப வேணும்னாலும் வந்து பார்ப்பேன். அதைத் தடுக்க நினைச்சா, உங்க வளர்ப்பில் நம்பிக்கையில்லைன்னு கேஸ் போடுவேன்னு சொல்லிட்டார்.”
“அது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும். நாமளும் பார்த்துப்போம் உதயா. தப்பு செய்த ஃபீல் வேண்டாம். இப்ப நீ அவங்ககிட்டக் கொடுத்தாலும் பாப்பா ஒட்டமாட்டா. நாம இல்லாம அவளால் இருக்க முடியாது. மெண்டலி டிஸ்டர்பாவா! எதிலும் மனம் செல்லாம நார்மலான குழந்தையா வளரமாட்டா. உன் பொண்ணு அப்படியிருந்தா உன்னால தாங்க முடியுமா?”
“அச்சோ வேண்டாம் மச்சான்.”
[the_ad id=”6605″]
“நம்ம சிலருக்குதான் இது மதுமிதா குழந்தைன்னு தெரியும். தவிர அம்மா, சியாமளான்னு நெருங்கின நம்மைத் தெரிந்த சொந்தங்களைப் பொருத்தவரை நாம குழந்தையைத் தத்தெடுத்திருக்கோம். மற்ற எல்லாருக்கும் இவள் நாம பெத்த குழந்தை. இதுதான் காலத்துக்கும் நிலைச்சிருக்கும். எதையும் போட்டுக் குழப்பிக்காத.”
“அவள் நம்ம பொண்ணு மட்டும்தான் மச்சான். நான் யாருக்கும் தரமாட்டேன்.”
“அதுக்குதான் இந்த ஏற்பாடு. நீ! நான்! பாப்பா! நாமதான் குடும்பம்.”
“ம்…” என்று அவ்வளவு நேரமிருந்த நிலை மாறி நிம்மதியாய் கண்மூட…
“சரி எப்ப அடுத்த பேபி தரப்போற?” என்று காதில் கிசுகிசுத்தான்.
“ஹ்ம்… போங்க மச்சான்.” வெட்கம் கொண்டாள் பெண்ணவள்.
“பாரு நமக்காகதான் பாப்பாவைக் கீழ கூட்டிட்டுப் போயிட்டாங்க.”
“அதுக்கு?”
என்னவோ மாற்றம் எனக்குள்
என்ன மந்திரமோ செய்கிறாய்
“என்ன ஓனர்? செம உளறல் மூடுல இருக்கீங்க போல? பாட்டெல்லாம் வருது.”
உதயா உதயா உளறுகிறேன்
உயிராய் உனையே எழுதுகிறேன்
காதல்…
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
தாயுமானவளே!
“இல்ல மச்சான் தாயுமானவனே! இதான் கரெக்ட். எனக்குத் தாயாய்! எல்லாமாகவும் இருக்கிற உங்களுக்கு இது பொருந்தும். நீங்க மட்டும் என் வாழ்க்கையில் வராமலிருந்தா…”
“சில விஷயங்கள் நினைக்காமல் இருப்பதே சிறந்தது. அப்படிப் பார்த்தா நான் உன் சடங்குக்கு வராமலே போயிருந்தா, வீட்ல சொன்ன பையனைக் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருந்திருப்ப. இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது.”
“நீங்க எனக்குக் கிடைச்சிருக்க மாட்டீங்களே மச்சான்?”
“என்னைவிட நல்லவன் உனக்குக் கிடைச்சிருக்கலாமே. ஏன் விக்னேஷ் ஜெம் கேரக்டர். நான் உன் வாழ்க்கையில் வராமலிருந்திருந்தா நீ மகாராணியா இருந்திருப்ப.”
“முடிஞ்சதை விடுங்களேன்” என்று அப்பேச்சி பிடிக்காது முகம் திருப்பிக்கொள்ள…
“யதார்த்தத்தைச் சொன்னேன்மா.”
“ஒரு பதார்த்தத்தையும் பண்ண வேண்டாம்.” கோபத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.
“ஷப்பா! இந்த வெள்ளச்சிக்கு எவ்வளவு கோபம் வருது.” அவளைத் தேடி வந்தவன் வீட்டினுள் இல்லையென்றதும் மாடிக்கு வர, அங்கிருந்த சிறிய லைட் வெளிச்சத்தில் நின்றிருந்தவளைக் கண்டு, “ஹேய் வெள்ளச்சி! இருட்டுல வந்து தனியா நிற்கிற அளவுக்குக் கோபம் வருதா?”
“பின்ன வராதா” என்றவள் குரல் கரகரத்து அழுகையுடன் வர…
“பதறி என்னமா?” என்றான்.
“அப்படிப் பேசுறீங்க? எவ்வளவு கஷ்டமாயிருந்தது தெரியுமா?”
யதார்த்தத்தை ஏற்கும் நிலையில் அவளில்லை என்பதை உணர்ந்து, “என்ன சொல்லிட்டாங்க?” என்றான் அமைதியாக.
“வி..விக்னேஷோட இருந்தா நல்லாயிருப்பேன்னு சொல்றீங்க? அப்ப உங்களோட நான் நல்லாயில்லையா? என்னால உங்களைத் தவிர…”
மனைவியின் அழுகை தாளாது அணைக்க வர, அவளோ தட்டிவிட்டு விலகி நிற்க, “நான் சொன்னது ஒரு யூகம்தான் உதயா. ஆனா, விதி நம்மை சந்திக்க வச்சது. எனக்கு நீ உனக்கு நான்றது மாற்ற முடியாத ஒண்ணு. உன்னைத் தவிர என்னை கிங்கா உணரவைக்க யாராலும் முடியாதுன்றது என் எண்ணம். அப்ப நீதான குயின்.”
“நல்லா சமாளிக்கிறீங்க மச்சான்.”
“குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமடி செல்லம். நீ கோபப்பட்டு வந்ததுக்கு உனக்குத் தண்டனை வேண்டாமா?” என்று அவளைத் தொட வர… “வேண்டாம்” என்று பின்னால் நகர, அந்த மாடியில் சில நிமிட காதல் ஓட்டங்கள் ஓடி இளைப்பாற நின்றதும், பின்னால் வந்து கட்டிக் கொண்டு கழுத்தில் முத்தமிட… ஜில்லெனத் தொட்ட தென்றலில் மனம் குளிர்ந்தவளாய் அசைவுகளின்றி அமைதியாக நிற்க… இடையில் சென்ற கை இன்னும் அவளைத் தன்னுடன் இறுக்கியது.
“மச்சான் இங்க வேண்டாம். ரூம்கு போயிடலாம்” என மெல்ல முணுமுணுத்தாள்.
‘ஹ்ம்… பேசாம இந்த மொட்டை மாடியில ஒரு தனி ஹனிமூன் ரூம் போட்டிருக்கலாம்டா சபரி.’
“என்ன மச்சான் யோசனை?”
“மா..மாடியில வீ..டு… ஹ..ஹனிமூன் போகலாமா யோசிச்சேன்மா.”
அவன் வார்த்தைகள் திக்கியதில், “புரியலை?” எனக்கேட்டாள்.
“அ..அது இதை ஹனிமூன் ஸ்பாட்டா மாத்தலாம்னு…”
“இந்த வெட்ட வெளியையா?” என்று முறைக்க…
“அச்சோ! இல்லமா. அது வேற எதோ…”
“வேறன்னா?”
[the_ad id=”6605″]
அவளின் தொடர்க் கேள்விகளில், “இனி நோ டாக்! ஒன்லி ஆக்ஷன்” என்று முத்தங்களிட… அவனைத் தள்ளியபடி, “பேசவிடா…” அதற்கும் அவளுக்கு முத்தங்கள் விழ… “பேச…” அடுத்ததொரு முத்தம். “மச்..சான்!” என்ற குரல் கரைந்து கிறங்கி வர…
“ரூம் போகலாமா?” மென்குரலில் கேட்டு கைகளில் தூக்க… சுற்றுப்புறம் உணர்ந்து இறங்கப் பார்த்து, கணவனின் இறுகிய பிடியில் அவன் முகம் பார்க்க… தன்னை இமைக்காது பார்த்திருந்தவனின் அக்காதல் தனில் மூழ்கி முகம் வருடி சம்மதமாய் “ம்…” என்றாள்.