அனைவரும் வந்திட.. இன்முகத்தோடு வரவேற்றார் அம்பிகா. சிறு பதட்டத்தோடிருந்த நாகராஜ் .. ‘வாங்க..” என கை கூப்பி வரவேற்க.. வருங்கால மச்சானை.. ‘வாங்க கலை..” என கைகுலுக்கி வரவேற்றான் கதிரவன்.
இரு அக்காவையும் மாமாவையும் கதிரவனுக்கு அறிமுகம் செய்தவாறு உள்ளே நுழைந்த கலையரசன்… ‘என்ன கதிர் வேஷ்டிலாம் போட்டிருக்கிங்க.. நல்லாயிருக்கு..” என்றான் சிரிப்போடு.
‘இதுதான் மங்களகரமா இருக்கும்ன்னு அம்மா அட்டகாசம்..” என்றான் கதிரவன்.. ஆனந்தன் கதிரவனின் வேலைப் பற்றி விசாரிக்க.. ‘ஐ.டி கம்பெனியில ஒர்க் பண்றேன்..” என அவர்களுள் பேச்சுகள் இலகுவாக சென்றது.
அனைவருக்கும் அம்பிகா தண்ணீர் கொடுக்க.. ‘நல்லாயிருக்கிங்களா ஆன்ட்டி..?” என்ற விசாரிப்போடு வாங்கி அருந்தியவன்.. ‘நல்லாயிருக்கிங்களா அங்கிள்..?” என நாகராஜனையும் விசாரிக்க.. ‘நல்லா இருக்கேன்ப்பா..” என்றார் அமைதியான குரலில்.
ம்.. கிச்சனருகே உள்ள அவளறையில்தான் நிலவழகி இருக்கிறாள் என்பதை.. ‘நிலா அழகா இருக்க..” என்ற கவிப்பிரியாவின் குரலும்.. ‘திருவிழாக்கு போகப் போறியா.?”என்ற பார்த்தியின் குரலும் உணர்த்த.. நிறைய அலங்கரித்திருப்பாளோ என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க.. அவனின் அழகியை காண மிகுந்த ஆவலோடு அமர்ந்திருந்தான் கலையரசன்.
அங்க குழந்தைகள் சத்தம்.. அங்கதான் பொண்ணு இருக்காளா.?” என செல்வி கலையிடம் கிசுகிசுக்க.. ‘எனக்கென்னக்கா தெரியும்..?” என கலை சொல்ல.. ‘ம்.. காத கழட்டி அங்கதான் வச்சிருக்க மாதிரி தெரியுது.. அதான் கேட்டேன்..” என அளவம் காட்ட.. ‘அப்போ இதுக்கு பேர் என்ன.?” என தன் காதை தொட்டு முறைப்போடு கேட்டவன்.. ‘பார்த்தி என் ஃபிரண்டு.. அவன் குரல் கேட்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரி ஒன்னுமில்ல..” என்றவன் சிரித்துவிட.. ‘ம்.. நாங்கள்லாம் யாரு..?” என கெத்தாக சொல்லி..
அம்பிகாவிடம்.. ‘நிலவழகியை கூப்பிடுங்க.. என் தம்பி பொண்டாட்டி எப்படியிருப்பான்னு பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு.. அப்படியே சுவாதி குழந்தைகளையும் கூப்பிடுங்க.. கலைக்கு நிலவழகியை விட அவங்களைதான் முக்கியமா பார்க்கனுமாம்..” என சிரிப்போடு செல்வராணி சொல்ல.. கதிரவனிற்கும் நாகராஜிற்கும் செல்வராணியை மிகவும் பிடித்துவிட்டது.
‘கவிம்மா நிலாவை கூட்டிட்டு வா..” என கதிரவன் சொல்ல.. ஜிமிக்கிகள் அசைந்தாட.. சற்றே தடித்த செயினின் டாலர் அவளின் மார்பை தொட்டிருக்க.. ஒவ்வொரு கையிலும் இரு தங்க வளையல் அலங்கரித்திருக்க.. நீண்ட பின்னலை தன் கையில் வளைத்து பிடித்தபடி பதுமையாய் வந்து நின்றாள் நிலவழகி.
சத்தியமாக இப்படியொரு கோலத்தில் எதிர்பார்க்கவேயில்லை கலையரசன்.. இரட்டை ஜடை ஒற்றையாக மாறியிருக்கும் என நினைத்திருந்தான்.. மற்றபடி சின்ன அலங்காரங்களோடு சுடிதாரில் வந்து நிற்பாளெனதான் எதிர்பார்த்திருந்தான்.
தான் நினைத்தவாறு இல்லாமல் சினிமாக்களில் வரும் பெண் பார்க்கும் படலம் போல் இருந்தது கலையரசனிற்கு. தழைய பின்னிய கூந்தலில் இருபுறமும் மல்லிகை சரம் குடிகொண்டிருக்க.. மஞ்சள் நிறத்தழகியிடம் சொக்கிப்போனான் கலையரசன்.
நிலவழகியின் நாகரீக தோற்றத்தில் திருப்தியடைந்தவளாய்.. ‘சரியான கேடிடா நீ..” என தம்பிக்கு புகழாரம் சூடினாள் செல்வராணி.
நிலவழகியின் முகம் பார்த்த கலாவிற்கும் முகத்தில் திருப்தி வந்தமர.. அதை கண்ட கீதாவின் உள்ளம் பத்தி எரிந்தது. ம்.. என் பொண்ணு கலர்ல பாதிதான் இருக்கா.. சரியான நாட்டுபுறம் மாதிரி மஞ்சளை அப்பிட்டு வந்து நிக்கிறா.. இவளைப் பார்த்து மயங்கிருக்கான் என கலையையும் மனதில் வறுத்தெடுக்க.. அந்த நேரம்.. மயில்சாமி.. ‘நிலாம்மா.. அந்த தண்ணிய எடுத்து கொடு..” என்ற தகப்பனை தீப்பார்வை பார்த்தாள் கீதா.
இத்தனை நேரம் யோசனையோடு பார்த்திருந்த பார்த்திபன்.. ‘டிஸ்யூம் அண்ணா..” என ஓடி வந்தான் கலையருகே. ‘ம்.. இப்போதான் தெரிஞ்சதாடா..?” என சிறுவனின் கன்னம் தட்ட.. ‘முன்ன ஒல்லியா உயரமா மீசையில்லாம இருந்திங்க.. இப்போ உயரத்துக்கேத்த பாடியோட மீசையை வேற பெருசா வச்சிருக்கிங்க.. அப்போ எப்படி அடையாளம் தெரியும்.?” என்றான் கதிரவன்.
கலையின் மீசையை தடவி.. ‘நல்லாயிருக்குண்ணா..” என்றான். ‘ஹ..ஹா.. அப்படியாடா..? அப்போ இன்னும் பெருசா வளர்த்துடலாம்..” என்றான். பிறகு ஆனந்தனிடமும் இரு அக்காள்களிடமும் .. ‘இவன் கதிரோட அக்கா பையன்.. அந்த மேடம் இவனோட அக்கா..” என கவிப்பிரியாவையும் அறிமுகப்படுத்த.. ஆனந்தனும் செல்வராணியும் குழந்தைகளிடம் சகஜமாய் பேசினர்.
நிலவழகி அன்னை முகம் பார்க்க.. ‘போய் எடுத்து வா..” என அம்பிகா பணிக்க.. கிச்சன் சென்று தயாராய் இருந்த தேநீரை டம்ளர்களில் ஊற்றி எடுத்து வர.. எங்கிருந்து ஆரம்பிக்க என புரியாமல் நின்றாள். பிறகு அம்பிகா மயில்சாமிக்கு கொடுக்க சொல்ல.. அன்னை சொல்படி கேட்டவள் கடைசியாய் கலையரசனிடம் வந்தாள்.
டீயை எடுக்காமல்.. ‘கங்ராட்ஸ்..” என்றான் அவளின் முகம் பார்த்து. எதற்கென புரியாமல் இவனின் முகம் பார்க்க.. ம்.. முன்பை விட கலையின் மிடுக்கு கூடியிருக்க.. சிறு படபடப்போடு மீண்டும் தலைகுனிந்து.. ‘டீ எடுத்துக்கோங்க..” என்றாள்.
‘நாலு மாசம் முன்ன நடந்த ஸ்டேட் லெவல் டோர்னமண்ட்ல ஃபர்ஸ்ட் ப்ளேஸ் வாங்கினதுக்கு கங்ராட்ஸ்..” என்றபடி டீயை எடுக்க.. ‘ம்..” என அவ்விடம் விட்டு நகர்ந்தாள் நிலவழகி.
‘ஓ.. நிலாவும ப்ளேயரா.? என்ன ப்ளேயர்.?” என்றான் ஆனந்தன்.
‘சிலம்பு மாமா.. அதுவும் இரண்டு வருசமாத்தான் கத்துக்கிறா.. அதுக்குள்ள சோனல்.. டிஸ்டிரிக்.. தாண்டி ஸ்டேட் மீட் அட்டன் செய்து ஃபர்ஸ்ட் ப்ளேசையும் பிடிச்சிருக்காங்க மேடம்..” என்றான் பெருமையாக.
ம்.. லோகேசும் கீதாவும் வந்ததிலிருந்து அமைதியாய் இருக்க.. அவர்களின் முகபாவனையே இதில் விருப்பமில்லை என நன்றாக காட்டிக்கொடுக்க.. அனைத்தும் நல்லவிதமாக நடக்க இதில் சிறு நெருடல் ஏற்பட்டது நாகராஜிற்கு.
ம்.. என்னதான் குழந்தைகள் மீது பாசம் வந்திருந்தாலும்.. மகளை நன்றாக பார்த்துக்கொண்டாலும் இன்னும் குமாரை ஏற்றுக்கொள்ள இயலவில்லை நாகராஜால்.. தங்கையின் பெண்பார்க்கும் வைபவத்திற்கு கணவனை அழைக்க அன்னையிடம் வேண்டினாள் சுவாதி.. மகளின் விருப்பத்தை அம்பிகா கணவனிடம் சொல்ல.. அன்று சுவாதி தன்னோடு வர மறுத்தபோது வெற்றிப் புன்னகை சிந்தியது நினைவில் வர, குமாரை அழைக்க விருப்பமில்லை என திடமாய் சொல்லிவிட்டார் நாகராஜன்.
தன் நிலையை நினைத்து வருந்தினாலும்.. கணவன் இல்லாமல் தான் போய் நின்றால் தேவையில்லாத கேள்விகள் எழும்.. என்னால் நிலாவின் வாழ்வு கேள்வியாக வேணாம்.. முதலில் எல்லாம் நல்லபடியாக முடிவாகட்டும்.. அடுத்தடுத்த விசேசங்களில் கலந்து கொள்கிறேன் என அன்னைக்கு சொல்லியிருந்தாள் சுவாதி. அனைத்தும் நினைத்தவர் ம்.. அவரவர் வீட்டில் ஆயிரமிருக்கும்.. தேவையில்லாமல் நாம் யோசிக்க கூடாதென அமைதிகாத்தார் நாகராஜன்.
கவிப்பிரியாவை அழைத்த கீதா.. ‘உங்கம்மாப்பா எங்க.?” எனகேட்டு தன் வேலையை ஆரம்பிக்கலானாள்.
நாளைக்கு என் தம்பி எதுனா தப்பு செய்தாலும் மகள் குழந்தைகளை மட்டும் போதும்.. மருமகன் வேணாம்னு விட்டுடுவிங்களா.? அப்படி மதிப்பில்லாத இடத்துல..” எனும்போதே.. ‘கீதா..” என மயில்சாமி அதட்டல் விட.. இங்கே நிலவழகியின் கண்கள் கண்ணீரை வெளியனுப்பிக்கொண்டிருந்தது.
‘அப்பா.. மனசுல உள்ளதை பேசுறதுல என்ன தப்பிருக்கு.? நம்ம சொந்தங்களாகப் போறவங்க.. இவங்கள்ட்ட எதுக்கு மறைச்சி பேசனும்.? ஒரு கல்யாணத்துல பிரிஞ்சவங்க.. நம்ம கலை கல்யாணத்துல சேரட்டுமே..” என்றாள் நல்லவள்போல்.
மயில்சாமி..‘அவங்க ஃபேமலி விசயம் அவங்க பார்த்துப்பாங்க.. நீ அமைதியா இரு..” என்றார் உள்ளடக்கிய கோபத்தோடு.
கீதா.. ‘நிலா நம்ம வீட்டு மருமகளானதுக்கப்புறம் இவங்க நமக்கு சம்பந்திப்பா.. அப்புறம் எப்படி இது அவங்க ஃபேமலி விசயமாகும்.?” என்றாள் இலகுவாகவே.
பொறுக்க முடியாத கலையசன்.. ‘அப்பாம்மாக்குதான்க்கா சம்பந்தி.. உனக்கு இவங்க என் மாமனார் வீட்டு சொந்தம்.. அவ்ளோதான்.. அந்த லிமிட்டோட இரு.. பெரியவங்க விசயம் அப்பாம்மா பேசிப்பாங்க..” என்றான் அடக்கும் குரலில்.
‘இந்த அசிங்கம் உனக்கு தேவையா.?” என லோகேஷ் மனைவியை முறைத்தான்.
லோகேஷ் ஏத்திவிட்டது சரியாய் வேலைசெய்ய..‘என்னடா லிமிட்.? நான் உன்கூட பிறந்தவ.. எனக்கு லிமிட் வைக்கிறியா.? ஒரு பொண்ணு கூட்டிட்டு போய் கல்யாணம் செய்து அப்பாம்மாவையே அசிங்கப்படுத்தியிருக்கா.. அப்படிபட்ட வீட்ல பொண்ணெடுக்கிறதே பெரிய விசயம்.. நம்ம ரேன்ஜ்சுக்கு இல்லன்னாலும் எதோ நீ ஆசைப்ட்டுட்டன்றதால உனக்காக சகிச்சிட்டு வந்திருக்கேன்.. நீ என்னையே அசிங்கப்படுத்திறியா.?” என்றாள் கோபமாக.
கதிரவன் எதோ சொல்ல வர.. அதற்கு முன்.. ‘அப்பா.. வாங்கப்பா..” என கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த நாகராஜனை இழுத்துக் கொண்டு தனதறைக்குள் போனவள் அறைந்து சாத்தினாள் கதவை.
‘நாம எல்லாரும் பேசிட்டிருக்கும்போது.. எப்படி இவள் உள்ளே போகலாம்.. அதுவும் அவங்கப்பாவை இழுத்துட்டு போனதுமில்லாம இப்படி கதவை சாத்தினா என்ன அர்த்தம்.? எல்லாரும் வெளிய போங்கன்னா..?” என அதற்கும் கீதா ஆரம்பிக்க.. ‘ஸ்ஸ்..” என அக்காவை அதட்டி உள்ளே என்ன நடக்கிறது என கலை கவனிக்க.. கீதாவும் கவனிக்கலானாள்.
ஆனா அவங்கக்காக்கு எப்படியும் நாற்பது வயதாவது இருக்கும்.. அக்கா செய்ததுக்கு நீங்க என்ன செய்விங்கன்னு கூட யோசிக்காம பேசுறாங்க..” என மீண்டும் நிலாவின் கேவல் சத்தம்..
‘அம்மாடி..” என்ற நாகராஜின் தழுதழுத்த குரலுக்கு.. ‘உங்களை அழ வச்சிட்டாங்கள்ல.? உங்க கண்ணீரை விட எதுவுமே எனக்கு உசத்தியில்ல.. எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.. நீங்க அழாதிங்கப்பா..” என்ற நிலாவின் திடமான குரலுக்கு கோபமாய் உள்ளே நுழைந்தான் கலையரசன்.
நிலவழகி அமைதியாய் இருக்க.. ‘சொல்லு.. நான் வேணாமா.?” என்றான் இன்னும் அழுத்தமாக.
கலையரசனின் அழுத்தமான குரலுக்கு பதறி செல்வராணியும் உள்ளே வர.. ‘நீங்க நல்லவர்.. எங்கக்காக்காக நிறைய செய்துருக்கிங்க.. பார்த்தியை காப்பாத்தியிருக்கிங்க.. அதுக்காக எங்க குடும்பம் நிறைய நன்றிகடன் பட்டிருக்கோம்.. நீங்க செய்த நன்றிக்காக வேணும்னா என் உயிரைத் தரேன்.. ஆனா உங்களை கல்யாணம் செய்துக்க மாட்டேன்..” என வெடித்தாள் நிலவழகி.
தீர்மனத்தோடும் திடத்தோடும் பேசுபவளின் முகபாவனையை எதிரிலிருந்த கண்ணாடி வழியே பார்த்திருந்தவனுக்கு கோபம் தலைக்கேற.. இருவரையும் கவனித்திருந்த செல்வராணி.. கலையரசனின் கையைப் பிடித்து அமைதிப்படுத்தி.. ‘இப்போதான பதினெட்டு வயசு, அவ வயசுக்கேத்த பக்குவத்துக்கு அவ பேசுறா.. அவங்கப்பாவை அவமானப்படுத்தினா கோபம் வராதா பின்ன.? நீ வா..” என வெளியே அழைத்து வந்தவள்..
‘நல்லகாலம் வேற ஒருத்தனை கல்யாணம் செய்துப்பேன்னு சொல்லாம.. உனக்காக உயிரை கொடுக்கறன்னு சொன்னா.. இந்த விசயத்தை கொஞ்சநாள் தள்ளி போடலாம்.. இப்போதைக்கு நிலா படிக்கட்டும்.. அவ படிப்பு முடிஞ்சதும் பேசிக்கலாம்..” என தம்பிக்கு ஆறுதலளித்து.. கதிரவனை தனியே அழைக்க.. செல்வியிடம்.. ‘எல்லாம் நான் பேசியிருக்கேன்.. கிளம்பலாம் வா..” என்றான் ஆனந்தன்.