‘என்னவோ ஒரு மாதிரியிருக்குக்கா..” என்றாள் பயத்தோடு.
‘லூசு.. நம்ம கலைகிட்ட என்ன பயம்.? எல்லாம் போக போக சரியாகிடும்.. போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்து சாப்பிடு.. கொஞ்சம் பிரஸ்சா ஃபீல் ஆகும்..” என விரட்டினாள்.
குளித்து வந்தவளுக்கு தானே ஊட்டிவிட்டு அலங்காரம் செய்ய ஆரம்பிக்க.. இவ்வளோ நகை பூ வேணாம்க்கா என சொல்ல நினைத்தாலும் அவன் சொன்னது போல எளிமையாக சென்றால் அதற்கும் கிண்டல் செய்வான் என அமைதியானாள்.
அலங்காரம் முடித்து தங்கையின் முகம் பார்த்தவளுக்கு கண்ணீர் தானாய் பெருக்கெடுத்தது.. சுவாதி எதற்கு அழுகிறாள் என தெரியாதபோதும்.. ‘அக்கா..” என நிலவழகியும் கலங்க.. தங்கையை கட்டியணைத்து.. ‘என் வீட்டுக்கு வந்துட்டு போற ஒரே ஜீவன் நீ மட்டும்தான்.. இனி நீயில்லாம..” என கண்ணீர் வடித்தாள்.
‘அக்கா..” என நிலவழகியும் கண்ணீர் விட.. தன் அழுகையை கட்டுப்படுத்தி.. ‘ச்சு.. இப்பபோய் இதெல்லாம் பேசிட்டு.. நான் ஒரு மடச்சி..” என தன்னைத்தானே கடிந்து..
‘ம்.. நான்தான் தனியாளா போய்ட்டேன்.. ஆனா உனக்கப்படியில்ல.. உன் பெரிய நாத்தனார் கொஞ்சம் முசுடுதான்.. ஆனாலும் என்னைக்கும் உறவை வெட்டிவிட நினைச்சிடாத நிலா.. உன் அன்பால அவங்களை வளைச்சிடனும்..” என தங்கையின் கன்னம் தடவி நெட்டி முறித்து..
‘இவ்வளோ பெரிய குடும்பத்துல வாக்கப்படுறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும்.. எல்லாரோடவும் சந்தோசமா இருக்னும் நிலா.. உறவுகளோட அருமை தனியா வாழ்றவங்களுக்குத்தான் தெரியும்..” என மீண்டும் குரல் கமறினாள்.
‘ஏய்.. சுவாதி..” என உள்ளே வந்த செல்வராணி.. ‘நேரமாச்சேன்னு நிலாவை அழைச்சிட்டு போக வந்தேன்.. எங்கக்கா கொஞ்சம் இல்ல.. ரொம்பவே கௌரவம் பார்ப்பா.. அது தெரிஞ்சும் நீ இப்படி பேசினது உண்மையா ரொம்ப சந்தோசமா இருக்கு..” என சந்தோசித்து..
‘அதுக்காக உன்னை ஏன் தனிமையா நினைச்சிக்கிற.? இனி நாங்க இல்லாம உங்க வீட்ல எதுவும் நடக்காது.. சின்ன விசேசம்ன்னாலும் கும்பலா வந்து திணறடிச்சிடமாட்டோம்..?” என சிரித்து.. ‘ஆமாதான நிலா..?” என்றாள்.
‘ம்..” என்றாள் வரவழைத்த சிரிப்போடு.
‘அப்போ எனக்காக இப்பவே ஒரு உதவி செய்யிறிங்களா.?” என்றாள் சுவாதி.
என்ன என்பதுபோல் செல்வி பார்க்க.. ‘எங்கப்பா எத்தனை திட்டினாலும் அவருக்கு தெரியாமலாவது நிலா எங்களை பார்க்காம இருக்கமாட்டா.. என் குழந்தைகளோடன நிலா பாசம்தான் எங்கப்பாம்மாவோட என்னை சேர்த்திருக்கு.. இப்போ என் குழந்தைங்க மேல பாசம் காட்டினாலும் என்கிட்டயும் என்புருசன்கிட்டயும் எங்கப்பா இன்னும் பேசறதில்ல..” என வருந்தி..
‘எனக்காவது அம்மா கதிர் நிலான்னு எல்லாரும் இருக்காங்க.. ஆனா அவருக்கு என்னைத்தவிர சொந்தம்னு சொல்லிக்க நிலா மட்டும்தான் இருக்கா.. அப்பாக்கு பயந்து நிலா அவர்கிட்ட பேசலன்னாலும் நிலாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும்..“ என கைப்பை போல ஒரு பையை எடுத்தவள்..
‘இது நிலாக்காக அவர் கொடுக்க நினைக்கிறார்.. ஆனா கொடுத்தா அப்பா எதுனா சொல்வாரோன்னு பயம்.. வீட்டுக்கு தேவையான சாமான்லாம் இந்த பணத்துல வாங்கிக்க நிலாகிட்டயும் கலைகிட்டயும் சொல்லுங்க..” என பையை திணிக்க.. அதில் ஐந்து கட்டு பணம் இருந்தது.. ‘வேணாம்க்கா.. அப்பா..” என நிலவழகி பதற..
தந்தைக்கு மீறி எதையும் செய்யமாட்டாள் என நிலாவைப் புரிந்து.. ’மாமாக்கு தெரியாம கொடுத்தாதான நிலா பயந்துக்குவா.. மாமா மனசு கஷ்டபடாத மாதிரி நாளைக்கு நான் பேசுறேன்.. எல்லார் முன்னவும் குமார் கையாலயே நிலாக்கு கொடுக்கலாம்..” என சுவாதிக்கு தைரியமளித்து.. ‘மணி எட்டைகால் ஆகிடுச்சி.. வா நிலா..” என கைப்பிடிக்க.. அத்தனை சில்லிப்பாய் இருந்தது நிலாவின் கை.
‘அவன்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு பயப்படுறியா.?” என கிண்டல் பேசியபடி நிலாவை அழைத்து வந்தவள்.. பால் எடுக்க கிச்சன் செல்ல.. ‘இதுல ஊத்தி எடுத்து வாம்மா..” என தயாராய் வைத்திருந்த வெள்ளி சொம்பையும் டம்ளரையும் கொடுத்த அம்பிகா அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல்.. கலாவிடம் சொல்லி மேலே படுக்க போனார்.
ம்.. ஒத்த சொம்பு டம்ளர்ல கல்யாண சீரை முடிச்சிட்டாங்க என இளப்பமாய் நினைத்தாலும் கலையை நினைத்து அமைதியான கீதா.. நாளைக்கு இவன் கிளம்பட்டும் அப்புறம் இருக்கு என நினைத்திருந்தாள்.
நிலா உள்ளே சென்றதும் மாட்டுக் கொட்டகையில் பேசிக்கொண்டிருந்த மயில்சாமி.. ‘நீங்களும் போய் படுங்க சம்பந்தி..” என்று நாகராஜனையும் குமாரையும் மேலனுப்பி தானும் படுக்க உள்ளே வந்தவருக்கு மகளின் எண்ணம் முகத்தில் தெரிய.. ‘ரொம்ப யோசிச்சி தூக்கத்தை கெடுத்துக்காத கீதா.. போய் உங்கம்மாவோட படு..” என கடுப்போடு தனதறையை காண்பித்தவர் அங்கிருந்த சோபாவில் படுத்தார்.
—- —— ——-
‘அழகி.. ஏன் இங்கயே நின்னுட்ட..?” என கதவருகே நின்றிருந்த நிலாவிடம் வந்தான். நிலவழகி தலைகுனிய.. ‘சாரி.. ரொம்ப முக்கியமான விசயமா பேசிட்டிருந்தனா.. அதான் நீ வந்ததை கவனிக்கல.. ஆனாலும் பத்து நிமிசத்துல பேசி முடிச்சிட்டேன் பார்த்தியா..?” என தன்னைத்தானே மெச்சி கதவை தாழிட்டவன்..
‘ப்பா.. பால் ரொம்ப சூடா இருக்கும் போல..” என அவளின் கையிலிருந்த பாலை வாங்கி டேபிளில் வைத்து.. நிலாவை தூக்க.. ‘அச்சோ..” என இவள் கீழிறங்க முயல.. பிடியை இறுக்கியவன்.. ‘இப்படி தூக்கிட்டேவா இருக்க போறேன்.? சும்மா கட்டில் வரைக்கும்தான்..” என கண்ணிமைத்து கட்டிலில் விட்டு தானும் அருகமர்ந்தான்.
நிலாவின் கண்கள் சிவந்திருக்க.. ‘அழுதியா.?” என்றான்.
ஆமாம் என தலையசைக்க.. ‘எதுக்கு அழுத.?” என்றான் சற்று உயர்ந்த குரலில். சுவாதி பேசியதை சொன்னவள்.. ‘அக்காக்கு மட்டும் இல்ல.. அப்பாக்கும் அண்ணாக்கும் நான் இல்லன்னா ரொம்ப கஷ்டம்..” என கண்கலங்கினாள்.
‘ஓஹ்.. நான் கூட பயந்தே போய்ட்டேன்..” என்று ஆசுவாசமடைந்தவன்.. ‘கைக்குள்ளயே வளர்ந்தவ.. இருக்காதா பின்ன.? எனக்கு தெரியும்டி.. மதியம் சாப்பிடும்போதே கதிருக்கு கண் கலங்கிடுச்சி.. என்னால இங்க இருக்க முடியலன்னு கிளம்பறன்னாப்பில.. செல்விக்காதான் என் வீடு பக்கம்தான்.. அங்க போய் இருங்கன்னு அனுப்பி வச்சாங்க..” என்றான் அனுசரனையாக.
‘ம்கூம்.. நான் இங்கதான் இருக்கனும்னு எங்கப்பா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.. இனி இதுதான் உன்வீடு.. படிப்புகிடிப்புன்னு அங்க கிளம்பிடக் கூடாது.. இங்கயிருந்து என்ன படிக்க முடியுமோ அது படிச்சிக்கோ.. இத்தனை வயசுலயும் உன் மாமனார் மாடு கன்னுகுட்டின்னு உழைச்சிட்டிருக்காராம்.. அவரை கவனிக்கிறதுதான் உன்னோட முதல் வேலைன்னு நேத்து கிளம்பும்போதே சொல்லிதான் கூட்டிட்டு வந்தார்.” என்றாள்.
தன் மாமனாரை மனதில் மெச்சியவன்.. ‘அப்போ என்னை யாரு கவனிப்பா.?” என நெருங்கி அமர்ந்தான்.
‘உங்களுக்கு தனியா இருந்து பழக்கம் தான.?” என சிறிதும் தாமதமின்றி வெகு சாதாரணமாக சொல்லவும்..
‘அடிப்பாவி.. கல்யாணத்துக்கு முன்ன இருந்த மாதிரியே இனியும் இருக்க நான் என்ன உணர்வில்லாத ஜடமா.?” என அவளின் இதழை ஒற்றை விரலால் வருட.. நிலாவின் முகம் பதட்டத்திற்க்குள்ளாக..
பெட்டில் சரிந்து மனைவியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டவன். `உயிரை வேணும்னாலும் தருவேன் ஆனா கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு, உன் மனசுல நான் இல்லாதப்போ சொன்னதுக்கே அவ்வளவு கோபம் வந்தது.. அன்னைக்கு தப்பு என் அக்காமேலன்றதால அமைதியா இருந்துட்டேன்..
ஆனா நீ என்னை விரும்பவும்தான உன்னால வேறொரு பொண்ணோட என்னை யோசிக்க முடியல.. அப்போவும் கல்யாணத்துக்கு யோசிக்கமா முன்ன சொன்ன மாதிரியே உயிரை விடத் துணிஞ்சதும்.. கண்டவகிட்டயும் பல்லையிளிப்பன்னு என்னை நினைச்சிட்டன்னு உன் மேல கண்மண் தெரியாத கோபம் வந்துச்சி.. கதிருக்காகவும் ஆன்ட்டி அங்கிள்க்காகவும் அமைதியாகி கல்யாணத்துக்கு பேசினேன்..
இப்பவும் என்னைப் பத்தி யோசிக்காம உன் மாமனார் மாமியரைப் பத்தி மட்டும் யோசிப்பியா.?” என சிறு கோபத்தோடு அருகிருந்தவளை தன்மீது போட்டுக்கொள்ள.. மொத்த உடலும் அவன் மேல் படர்ந்திருக்க.. ‘வி.. விடுங்க..” என்றாள் கலக்கமாக.
சூடியிருந்த மல்லிகை கலையின் முகத்தில் படர்ந்திருக்க.. பெண்மையின் பாகங்கள் மென்மையாய் அவன்மீது பதிந்திருக்க.. இதுவரை அறிந்திராத சுகத்தை அனுபவித்தவன்.. ‘ஏன் விடனும்.?” என கிறக்கத்தோடு கேட்டு அணைப்பை இறுக்கியவன்..’எவ்வளோ அணைச்சாலும் பூமாதிரிதான் இருக்கு..” என கிசுகிசுத்து அவளின் இதழை தனதால் பூட்ட.. ‘ம்..” என திமிறினாள்.
திமிறுகிறாள் என உணராது சிலநொடி அவளுள் மூழ்கியவனுக்கு பின்னே தெரிய வரவும்.. ‘ப்ச்..” என அவளின் கண்பார்க்க அது கலங்கியிருக்கவும் சட்டென விலகினான். கலை விலகியும் நிலாவின் முகம் கலக்கத்தில் இருக்கவும்..
‘உன்ன எவ்வளவு பிடிச்ச போதும் சின்ன பொண்ணாச்சேன்னு இரண்டு வருசமா என் காதலை கூட சொல்லாம தவிச்சிருக்கேன்.. அன்னைக்கு பொண்ணு கேட்டு வந்தப்போ உன்ன சாரியில பார்த்ததிலிருந்து தினமும் நைட்ல எத்தனை இம்சை செய்திருக்க தெரியுமா.? அப்பவும் படிக்கிற புள்ளைய டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு உன்கிட்ட பேசுற நினைப்பை ரொம்ப கஷ்டப்பட்டு கட்டுபடுத்தியிருந்தேன்..
‘ஏற்கனவே படிக்கிற புள்ளன்னு ரொம்ப கில்டியா இருக்கு.. அதை போக்கத்தான் காலைலயிருந்து உன்கிட்ட கொஞ்சம் இந்த மாதிரி பேசினேன்.. என் பேச்சுக்கு நீ கோபப்படலன்னதும் கொஞ்சம் இல்ல.. ரொம்பவே எதிர்பார்த்துட்டேன்..” என ஆழ மூச்செடுத்தவன்..
‘ம்.. உனக்கும் நேஷனல் அட்டன் செய்யனும்.. நல்லா படிக்கனும் அப்படியிப்படின்னு நிறைய லட்சியம் இருக்கும்.. அது தப்பும் இல்ல.. வேணாம்னு தோணினா எவ்வளோ நாளைக்கு.. இல்ல மாசக் கணக்கா.. இல்ல வருசத்துக்கான்னு இப்பவே சொல்லிடு..” என்றான் கறாராக.
திடமாய் பேசினாலும் அவனின் முகத்திலிருந்த ஏமாற்றம் வெகுவாய் பாதிக்க.. படுத்திருந்த நிலையிலேயே வா என்பதுபோல் சின்னதாய் கையை விரித்தவள் சிவந்து கண்ணை மூடினாள்.
‘நான் ஏமார்ந்துடுவேன்னு ஒன்னும் வேணாம்..” என பொய்யாய் முறைக்க.. கண் மூடியிருந்தவளுக்கு அவனின் முறைப்பு தெரியவில்லையென்றாலும்.. குரலில் உரிமையும் தவிப்பும் புரிய கைகளை பெரிதாய் விரித்தாள்.
‘நிஜமாவாடி..” என அவள் மீது படர..’ம்..” என சிறு சத்தம் கொடுக்கவும்.. கண்ணை திறக்கமாட்டியா என நினைத்தவன்.. எழுந்து அவள் கொண்டு வந்த பாலை டம்ளரில் ஊற்றி.. ‘எழுந்து பால் குடி..” என்றான்.
கலையின் குரல் வெகு இயல்பாய் இருக்கவும் கண்திறந்தவள்.. ‘நீங்க குடிங்க..” என்றாள்.
எதுவும் பேசாமல் வாங்கி குடிக்கவும் கலையின் முகம் ஜொலிக்க.. ‘ம்.. ஸ்டார்ட் செய்யிறதுல எனக்கொன்னும் பிரச்சனையில்ல.. ஆனா அதுக்கு எத்தனை நாளாகுமோ.. இல்ல மாசமாகுமோ.. இல்ல வருசமே ஆனாலும்.. எனக்கு எப்போ தோணுதோ அப்போ நானே ஸ்டார்ட் செய்யிறேன்.. இப்போ தூங்குங்க..” என கள்ள சிரிப்போடு சொல்லி தூங்கப்போகும் பாவனை காட்ட..
‘அடிங்க..” என அவள்மீது படர்ந்தவன்.. ‘எவ்வளோ வாயடிக்கிற..?” என சின்ன சின்ன இம்சைகளோடு.. ‘நைட் வரும்போது சிம்பிளாதான் வரனும்னு சொன்னேன்தான.? எதுக்கு இவ்வளோ நகை.?” என அவளின் நகைகளை கழற்றியவன்.. ‘இத்தனை பெரிய பட்டு புடவை..?” என சாரியையும் மொத்தமாய் அகற்றிட.. கண்களை இறுக மூடினாள்.
விலகி விளக்கணைத்து நெருங்கியவன்.. ‘கண்ணு வலிக்கப் போகுது.. கண்ணை திற.. லைட் ஆஃப் செய்துட்டேன்..” என கிசுகிசுக்க.. தாள முடியாத வெக்கத்தோடு நிலவழகி திரும்பி படுக்கவும்.. ‘இந்த பூ மட்டும் டபுள் ஓ.கே..” என நிலாவை தன்புறம் திருப்பியவன் இதழோடு இதழ் கலக்க.. இம்முறை திமிறாமல் ஒப்புகொடுக்கவும்.. அடுத்த நிலைக்கு சென்றான்.
காலையிலிருந்து இந்த இரவிற்கான கற்பனைகள் வயதுக்கு எட்டியவரை இருந்தபோதும்.. அதற்கெல்லாம் அப்பாற்பட்டதாய் கலையரசனின் செயல்கள் இருக்க.. நிலாவின் முகம் ரத்த நிறம்கொள்ள.. கைகள் பிடிப்பின்றி தடுமாற.. தன் கைக்குள் அடக்கிக் கொண்டவன்.. ‘கொஞ்சம் பொருத்துக்கடி..” என்ற கெஞ்சலோடும் மிஞ்சலோடும் தன்னுள் புதைத்து அவளுள் நிறைந்தான்.