‘ஆன்..” என இவள் விழிவிரிக்க.. ‘சரியா சாப்பிடலயாமே.. முதல்ல வந்து சாப்பிடு..” என கைப்பிடித்து எழுப்ப.. ‘இன்னைக்கு என்னவோ பசிக்கல..” என கையை உருவியவள்.. ‘நீங்க ஏன் குழந்தைக்கு மனசு வைக்கில.?” ஏன கேட்டவள்.. ‘ம்கூம் என்னை சமாதனப்படுத்த பொய் சொல்றிங்க.. நாமதான் அப்படி..” என முகம் சிவந்து.. ‘சந்தோசமாத்தான இருக்கோம்..?” என்றாள்.
‘ப்ச்.. இப்போ உன் பிரச்சனை குழந்தை வேணும்.. அதான.?”என்றான்.
‘ஆ.. ஆமாம்..” என தலைகுனியவும்.. ‘இப்படி தலைய தலைய குனிஞ்சிட்டா குழந்தை வந்திடுமா.?” என சிரிப்போடு நிமிர்த்தியவன்.. ‘சாப்டினா ஏன் குழந்தை வரலன்னு சொல்வேன்..” என்றான்.
‘ஆமாம்ல..?” என்றவன்.. ‘ஒரு நிமிசம் இரு.. அம்மாப்பா உனக்கு உடம்பேது சரியில்லயோனு ரொம்ப வருத்தப்பட்டாங்க.. நான் போய் நீ நல்லாயிருக்கன்னு சொல்லி தூங்க அனுப்பிட்டு கதவை லாக் பண்ணிட்டு வரேன்..” என வெளியே வரவும்..
அங்கு பாலோடு வந்த கலா..‘உன் சிரிப்பு சத்தம் வெளில கேட்டதுமே எனக்கு நிம்மதியாகிடுச்சி.. எதுவாயிருந்தாலும் காலைல பேசிக்கலாம்.. ரெண்டு பேரும் பால் குடிச்சிட்டு தூங்குங்க..” என கலையின் கையில் பாலை திணித்து மகன் பேச வாய்ப்பளிக்காமல் சந்தோசத்தோடு தனதறை சென்றார்.
கலை உள்ளே வரவும்.. ‘ம்.. சொல்லுங்க.. எனக்கு ஏன் குழந்தை வரல.?” என்றாள் மீண்டும்.
‘அதுக்கு முன்ன எனக்கொரு விசயம் கிளியர் ஆகனும்.. உன்னோட அடுத்த ப்ளான் என்ன.? பி.ஜி படிக்க போறியா.? இல்ல வேலைக்கு ட்ரை பண்ண போறியா.?” என்றான்.
‘என்னோட அடுத்த ப்ளான் குழந்தை பெத்துக்கிறதுதான்.” என பட்டென சொல்லி.. பின்னே தடுமாறி நிலைக்கு வந்தவள்.. ‘அது.. இன்னும் லாக்டவுன் முடியாததால படிப்பு, வேலை பத்திலாம் யோசிக்கல..” என சமாளித்து.. ‘படிப்பு வேலைன்னு எதாவது செய்தேதான் ஆகனுமா.? நீங்க பார்த்துக்க மாட்டிங்களா.?” என்றாள் சிறு கோபத்தோடு.
கலை சிரிக்கவும்.. ‘சிரிக்காதிங்க..” என கடுப்போடு சொல்லி.. ‘எப்ப பாரு படி படின்னுட்டு..” என முனுமுனுத்தாள் எரிச்சலாக.
‘நீதானடி திருச்சில நான் படிச்ச காலேஜ்லயே பி.ஜி ஜாயின் பண்றன்ன.? இப்போ குழந்தை கேப்பன்னு எனக்கென்ன தெரியும்.?” என்றான் சிரிப்போடே.
உண்மையில் நிலா அப்படித்தான் சொல்லியிருந்தாள். சுவாதி குழந்தையைப் பற்றி கேட்டதும் எல்லாம் பின்னுக்கு போய் குழந்தை ஆசை வரவும்.. முதலில் தனக்கெதுவும் குறையிருக்குமா என நினைத்திருந்தவளுக்கு தற்போது அது கணவனால்தான் தடைபட்டிருக்கிறதென அவனின் பேச்சில் புரியவும்.. சந்தோசமாய் இருந்தபோதும் எப்படி அதை தடுக்க முடியும் என புரியாமல் இருக்கவும் எல்லாம் சேர்ந்து எரிச்சலாக மாறியது.
சிரிப்பவனை முறைக்க.. ‘கன்ஃபார்மா குழந்தைதான் உன் சாய்சா.?” என ஆழ்ந்து பார்த்தான்.
ஆமாம் என்பதாய் தலையாட்டியவள்..‘அதெப்படி உங்களால தடுக்க முடியும்.? என்னை சமாதனப்படுத்த ஏதேதோ சொல்றிங்களா.?” என்றாள்.
நிலவழகி முகத்தில் சிறு கலவரம் தெரியவும்.. ‘ஏய் லூசு.. நமக்கு எந்த குறையும் இருக்காது..” என சமாதனமாய் அணைத்து.. ‘இப்போ திடீர்ன்னு என்ன குழந்தை மேல அவ்வளோ ஆசை.?” என்றான் காதலாக.
‘ம்ஹ_ம்..” என உதறியவள்.. ‘குழந்தை ஏன் வரலன்னு எனக்கு தெரிஞ்சாகனும்..” என்றாள் பிடிவாதமாய்.
‘நமக்கு கல்யாணமாகி ஒரு மாசம் வரைக்கும் நானும் இதைப்பத்தி யோசிக்காமதான் இருந்தேன்.. பொண்டாட்டிக்கு இப்போதான் இரண்டாவது வருசம் போய்ட்டிருக்கு.. குழந்தை வந்துட்டா உன் படிப்பு கெட்டுடும்னு அப்புறம்தான் தோணுச்சி.. அதனால படிப்பு முடிக்கும் வரை குழந்தை வேணாம்னு..” என அதன்பின் கலை சொன்ன விபரங்களை கேட்க முடியாமல் சிவந்த முகத்தோடு நிலா காதை அடைத்துக்கொள்ள..
அவளின் செயலை தடுத்தவன்.. ‘இனி குழந்தை வரவச்சிடலாமா.?” என இதுவரை பேசியிராத விசயங்களை பேச.. முகம் சிவந்த நிலா அவனின் வாயை பொத்தி.. ‘இன்னைக்கென்ன இப்படிலாம்.. ச்சி ச்சி ரொம்ப கெட்ட பையனாகிட்டிங்க.. வாய மூடுங்க..” என மிரட்டினாள்.
‘நீ என்னவோ நமக்கு குறையிருக்குன்னு நினைச்சிட்டிருக்க.. அது அப்படியில்லன்னு கிளியர் பண்ண வேணாமா.?” என்றான் சிரிப்போடு.
வழக்கம்போல் முறைக்க முடியாமல் போகவே.. ‘போங்க..” என வெக்கி கவிழ்ந்தாள் பெட்டில்.
‘நிலாக்கா..” என மது கதவை தட்ட.. ‘அத்த..” என தரணும் வினோவும் கத்த.. கலைதான் எழுந்து கதவை திறந்தான். ‘மாமா..” நீங்க எப்போ வந்திங்க.?” என சிறுவர்கள் சந்தோசிக்க.. ‘நேத்து அக்கா மிரட்டினதும் பதறியடிச்சி ஓடிவந்துட்டிங்களா.?” என மது நக்கலாய் சிரித்தாள்.
‘ஆமாம்.. உங்கக்கா பெரிய சூரப்புலி.. நாங்க பயந்தோம்..” என மதுவை முறைத்தவன்.. ‘இரு குளிச்சிட்டு வரேன்..” என கதவை தாழிட்டு டைம் பார்க்க ஏழாகியிருந்தது. நிலாவை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நேற்றிரவை நினைத்து மென்னகையோடு குளிக்க சென்றான்.
குளித்து வெளியே வர.. ‘அக்கா ஏன் இன்னும் எழல.? நேத்தே ரொம்ப டல்லாகிட்டாங்க..” என மது கவலையாய் கேட்க.. ‘எல்லாம் இந்த மாமனை பார்க்காம ஏக்கமாகி நைட் ரொம்ப நேரம் தூங்காம இருந்திருப்பா.. அதான் இப்போ தூங்கிட்டிருக்கா..” என்றான் கெத்தாக.
‘அய்ய..” என மது அளவம் காட்ட.. வினோ.. ‘நீங்க எக்ஸைஸ் பண்ணலயா மாமா.?” என்றான். ம்.. இங்கு வந்தாலும் பயிற்சியில்லாமல் இருக்கமாட்டான்தான். ஆனால் நேற்றிரவு உறங்கவே இரண்டு மணிக்கு மேலானதால்.. ‘இல்லடா.. நைட் இரண்டு மணிக்குதான் வந்தேன்.. ரொம்ப டையர்டா இருக்கு.. சாய்ங்காலம் பார்த்துக்கலாம்..” என சிறுவர்களோடு அரட்டையில் ஆழ்ந்தான்.
மணி எட்டரை ஆகவே.. ‘மாமா அக்காவை எழுப்புங்க.. கேக் வெட்டனும்..” என்றான் தரணிதரண்.
ஆமாம்ல.? நேத்து எதோ பார்ட்டின்னாளே என யோசித்தவன்.. ‘பார்ட்டி வைக்கிற அளவுக்கு என்னத்தடா சாதிச்சிட்டிங்க.?” என்றான்.
மது.. ‘அக்கா டிகிரி கம்ப்ளீட் பண்ணிட்டாங்க.. நான் காலேஜ் செகன்ட் இயர் போகப்போறேன்.. தரண் பத்தாவது பாசாகிட்டான்.. வினோ பத்தாவது போகப்போறான்..” என்றாள் கெத்தாக.
மது தலையில் செல்லமாய் குட்டியவன்.. ‘பரிட்சையே எழுதாம பாசானதுக்கு உங்களுக்கெல்லாம் பார்ட்டி ஒரு கேடா..?” என சிரிப்போடு கேட்டு.. ‘உங்கக்கா பசியோட தூங்கிட்டிருப்பா.. நான் போய் எழுப்புறேன்..” என உள்ளே வர.. நிலா குளிக்கும் அரவம் கேட்கவே வெளியே வந்தவனிடம்.. ‘எங்களுக்கும் பசிக்குது.. எப்பவும் இந்த நேரத்துக்கெல்லாம் அக்கா சமைச்சிடுவாங்க..” என்றாள் மது.
கிச்சனிலிருந்து வெளியே வந்த கலா..‘சாம்பாரும் சட்னியும் செய்துட்டேன்.. தோசை ஊத்துறேன் மது..” என்றார். ம்.. ஒருநாளும் நிலா இத்தனை நேரம் கழித்து எழுந்ததில்லையென்பதாலும்.. நேற்றிரவு மகனின் சந்தோச சிரிப்பும் யோசித்து தானே சமைக்கலானார்.
குளித்து வந்தவள்.. அத்தையின் முகம் காணாமல்.. ‘நான் ஊத்தறேன்த்த..” என கலா கையிலிருந்து கரண்டியை வாங்கவும்.. ‘முதல்ல போய் டீ குடி.. அப்புறம் ஊத்துவியாம்..” என பிளாஸ்கிலிருந்த டீயை காண்பித்தார்.
இவளிற்கும் டீ தேவையாய் இருக்க.. ‘தோசைதானத்த..? டீ குடிச்சிட்டே ஊத்திடறேன்.. நீங்க போய் உக்காருங்க..” என கலாவை அனுப்பி வைத்தவள்.. பின்னே அனைவரும் சாப்பிட்டு.. கேக் வெட்டி கொண்டாடி முடிந்தபின்னும் கலையின் முகம் பார்க்கவில்லை நிலவழகி.
தன்னை பார்க்க மறுக்கும் நிலாவை பார்க்க பார்க்க சிரிப்பாக வந்தது கலைக்கு.. ‘எப்படியோ ஒரு வழியா என் பெரியக்காவை வீட்டு பக்கம் வரவிடாம செய்துட்ட..” என வம்பிளுத்தான் மனைவியை.
மயில்சாமியும்.. ‘நிலாம்மா.. என்ன முகமெல்லாம் வாடிகிடக்கு.? கலை எதாவது சொன்னானா.?” என்றார் பதட்டமாக.
‘அதெல்லாம் இல்ல மாமா..” என்றாள் அவசரமாக.
‘கலை.. உங்கக்கா இப்போதான் கொஞ்சம் திருந்த ஆரம்பிச்சிருக்கா.. நிலாகிட்டதான் தரண் நல்லா படிச்சிக்கிறான்னு மனசாற ஒத்துகிட்டா.. நிலாவால ஒரு பிரச்சனையும் இல்ல..” என்றார் கலா.
நிலாவும் ஆச்சர்யமாய் பார்க்க.. ‘ஆமாம் நிலா.. நீ உங்கம்மா வீட்டுக்கு போகும் போது இங்க வருவால்ல..? அப்போ சொன்னா.. மது தானாவே படிச்சிப்பா.. இந்த தரண் என்னை ரொம்ப படுத்துவான்.. இப்போதான் அவன் டென்சன் குறைஞ்சிருக்குன்னு சொன்னா..
நிலாதான் நல்ல புள்ளன்னு உணர்ந்திட்டல்ல.? அவகிட்ட பேசலாமில்லன்னு கேட்டா.. எதோ பசங்களை பார்த்துகிட்டதால அவ நல்லவளாகிடுவாளா.? என்னையே அடிப்பேன்னு சொன்னவதான.? நானால்லாம் போய் அவகிட்ட பேசமாட்டேன்னு.. அந்த கெத்தை மட்டும் விடமாட்றா..” என்றார் கலா.
எது பேசினாலும் நிலா பதில் கொடுப்பாள் என்பதாலும் தன்மீதுள்ள பயத்தாலும்தான் தன் அக்கா அமைதியாகியிருக்கிறார்கள் என கலைக்கு தெரியும்.. அக்கா அமைதியாகவும் அதை உண்மையென நம்பி தன் மனைவிக்கும் மகளிற்கும் இடையே நல்லுறவு வளர்க்க அம்மா இப்படி பேசுகிறார்கள் எனப்புரிந்தவன்.. ‘கெத்துதான.? அதையே பிடிச்சிட்டு தொங்கட்டும்..” என்றான்.
‘மாமா சொல்றது சரிதான்க்கா.. அம்மாக்கும் அப்பாக்கும் நான் மாமாவை கல்யாணம் செய்துக்கலன்ற கோபம் இன்னும் போகல.. நீங்க ஊருக்கு போனப்ப எங்கப்பாம்மா இங்க வந்தாங்க.. தாத்தா எங்கப்பாகிட்ட பேசாம வெளில கிளம்பிட்டார்.. ஆயாதான் தப்பா நினைக்காதிங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க..
நீங்களும் மாமாவும் எதாவது திட்டிருவிங்கன்ற பயத்துலதான் அம்மா அமைதியாகியிருக்காங்க.. தாத்தா எங்கப்பாகிட்ட பேசாம இருந்ததும் நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்டு பங்சன்க்கேது நீங்கள்லாம் வராம இருந்துட்டா எங்கத்தை பாட்டிகிட்டல்லாம் ரொம்ப அசிங்கமாகிடும்ன்ற பயத்துலதான் எங்களையும் இங்க விட்டு வச்சிருக்காங்க..” என உண்மையை உரைத்தவள்..
கலையின் கோபம் குறைக்க.. ‘என் அழகென்ன.? திறமையென்ன.?” என ராகமிழுத்து.. ‘போயும் போயும் இந்த மூஞ்சியை எனக்கு கட்டி வைக்க பார்த்தாங்க.. ஆனா பாருக்கா.. நான் வேண்டிகிட்ட முருகப்பன் எனக்கு நல்லதை செய்துட்டு உங்களை கைவிட்டுட்டாங்க..” என்றாள் சிரிப்போடு.
இத்தனை நடந்தும் எதையும் இலகுவாக எடுக்கும் பாங்குள்ள மதுவை கலைக்கு மிகவும் பிடித்திட.. ‘ம்.. காலேஜ் போகவும் ரொம்ப தேறிட்ட.. அதுவும் ஆன்லைன் கிளாஸ்க்கே.. இன்னும் நீலாம் ரெகுலர் போனா உன் ஃபிரண்ட்ஸ் ஒருத்தர் கூட உருப்படமாட்டாங்க..” என்றான் சிரித்த முகமாக.
‘என்ன மது செய்யிறது.? எல்லாம் காலம் செய்த கோலம்..” என பிறகுதான் இயல்புக்கு வந்தாள் நிலவழகி.
அன்று மாலை திருச்சி சென்றவன் ஒரு வாரம் நிலா அங்க இருக்கட்டும் என அன்னையிடம் சொல்லி அவனின் அழகியையும் அழைத்துச்சென்றிருந்தான்.
— —— ——- —–
இரண்டு மாதம் கடந்திருந்தது.. ‘மூனு பேரும் அங்க கொஞ்ச நாள் இருக்கட்டும் என ஒரு வாரம் முன்பு மது தரணி வினோவை ஆனந்தன் அழைத்து சென்றிருந்தான்.
கொரோனா காரணமாக வேறு வழியில்லாமல் போட்டிகளை ரத்து செய்திருக்கிறார்கள் எனப்புரிந்தாலும் மனம் வெகுவாய் சோர்ந்திட தஞ்சை வந்தான் கலையரசன். ‘ம்.. ஆமாம் கதிர்.. ரொம்ப கஷ்டமாதான் இருக்கு..” என்றான் கலையரசன்.
கதிரோடு பேசி முடித்ததும்.. ‘எல்லாருக்கும் ஆனதுதான உனக்காகிருக்கு.? என்னவோ ஒலிம்பிக் நடந்து நீ அதுல மெடல் வாங்காத மாதிரி எதுக்கு இத்தனை சோகம்..? திரும்ப மேட்ச் வரும்போது வாங்கிட்டா போகுது..” என்றார் மயில்சாமி.
கணவனின் வருத்தம் நிலாவிற்கும் வருத்தம் தர.. ‘விடுங்க.. ஒலிம்பிக் மெடல் வாங்கலன்னாலும் நீங்க இந்தியாவின் தங்கமகன்தான்..” என்றாள் பெருமையாக.
அனைவருக்கும் தனது வருத்தம் வேதனையளிக்கிறது என உணர்ந்தவனாய்.. ‘அப்படியா.? இந்தியாக்குதானா.? உனக்கில்லையா..?” என்றான் மைய்யலாக.