கனவெல்லாம் நீ தானே
எபிசொட் -12
அவன் அவளருகே போனான் . அவள் புடவை எடுப்பதில் ஒரே குழப்பத்தில் இருந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தான் . அவளிடம் , ” அனன்யா , நீங்க இவ்ளோ நேரமா இருக்கீங்க இன்னும் ஒரு புடவை கூட தேர்ந்து எடுக்கவில்லை , என்ன இப்படி இருக்கீங்க” என்று சிரித்தான் . அவள் முகம் வாடியது அவனிடம் , ” விக்ரம் , அப்படி பார்த்து சிரிக்காதிங்க , இங்க எல்லாமே நல்ல இருக்கு என்ன எடுக்க என்று தெரிய வில்லை என்றாள்” . அவன் கடைக்காரனிடம் , ” அவங்க இதெல்லாம் பார்த்தங்களோ அது எல்லாமே எடுத்து வைங்க ” என்றான் . அவள் அவனை பார்த்து , ” என்ன விக்ரம் நீங்க இப்படி பண்ணிட்டீங்க, இவ்ளோ எடுத்த எவ்ளோ பணம் ஆகும் இப்படி வீணாக செலவழித்தால் எப்படி குடும்பம் நடத்த ” என்று படபட வென பேசினாள். அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை . முடிந்த அளவு சிரிப்பை அடக்கி கொண்டு , ” அனன்யா இங்க பாருங்க , இந்த நாட்டிலே மிக பெரிய செல்வந்தர்களும் நானும் ஒருவன் , இதெல்லாம் ஒரு விசயமா , நீங்க என்னோட மனைவி உங்களுக்கு வாங்காம யாருக்கு நான் வாங்க போகிறேன் சொல்லுங்க இந்த மாதிரி கவலை எல்லாம் நீங்க படாதீங்க ” என்றான் . அவளுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை அவனை பார்த்து புன்னகைப்பதை தவிர வேறு வழி இல்லை அவனை பார்த்து புன்னகைத்தாள் .
அவன் அவளிடம், ” அனன்யா புடவை போதுமா இல்லை இன்னும் தேவையா? “என்றான். அவள் அவனிடம் , ” போதும் இதுவே ரொம்ப அதிகம் ” என்றாள் . அவன் அவளிடம் , ” புடவை முடிந்து சுடிதார் , இரவு உடுக்க உடை எல்லாம் வாங்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டான் . அவள் அவனிடம் , ” அதெல்லாம் வேண்டாம் நான் புடவை உடுத்தியே தூங்கிருவேன் ” என்றாள் .
அவன் அவளிடம் , ” இல்லை அது சிரமமாக இருக்கும் , நல்ல பருத்தி ஆடை இருந்தால் வாங்கிக்கோங்க” என்றான் . அவளும் அவளுக்கு விருப்பமான ஆடைகளை எடுத்தாள். அவனிடம் வந்து சொன்னாள் எல்லாம் எடுத்து முடிந்தது என்று . அவனும் பணம் கேட்ட பொய் பணம் கட்டி கொண்டு வெளியே வந்தான் . அவளிடம் , ” அனன்யா , ஹோட்டல் பொய் சாப்பிட்டு வீட்டுக்கு போலாமா ?” என்றான் . அவளும் சரி என்று கூற ஒரு 5 நட்சத்திர உணவகத்தில் வண்டியை நிறுத்தினான் . அவள் உணவகத்தின் நுழைவாயிலை பர்தே வாயை பொலந்தாள். அவன் அவளிடம் , ” அனன்யா என்னாச்சி ஏன் இப்படி பாக்குறீங்க ?” என்றான் . அவள் அவனிடம் , ” நான் முன்பு இப்படி உள்ள உணவகம் வந்தது மாதிரி நியாபகம் இல்லை ” என்றாள் மேலும் அவனிடம் தன்னை இங்கு எப்போவாதது அழைத்து வந்து இருக்கிறானா என்று கேட்டாள். அவன் அவளிடம் , ” இல்லை இது தான் முதல் முறை” என்று கூறி புன்னகைத்தான். அவள் அவனிடம் , ” இங்கு வேண்டாம் பாணிபூரி கடையில் பொய் சாப்பிடலாம் ” என்றாள் . அவன் அவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் . அவளிடம் , ” அனன்யா , பாணி பூரி கடையா? , இங்கே முதல் சாப்பிடுவோம் அதன் பின் அங்கு செல்லலாம்” என்றான் . அவளும் சரி என்று அவனோடு உள்ளெ போனாள். அவன் அவளது கையை புடித்து உள்ளெ கூட்டி சென்றான் . அவனை எல்லாரும் வரவேற்றார்கள் . அவனிடம் அவனது இருக்கையை காண்பித்தார்கள் . அது அவனது ஒரு உணவகம் தான் அதனால் அவனுக்கு எப்போதும் தனி அறைகொண்ட டேபிள் எப்போதும் பதிவாகி இருக்கும் . எப்போதும் மீட்டிங் நண்பர்களோடு வருவது என்ன எல்லாமே அங்கு தான் . அங்கு உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம் . விக்ரம் இது வரை எந்த பெண்ணையும் இங்கு கூட்டிட்டு வர வில்லை ,இவள் தான் முதல் பெண் . யாரு என்று அவர்கள் தலை பிச்சி கொண்டார்கள் . அவள் தலையில் குங்குமம் உள்ளது ஆனால் கழுத்தில் மாங்கல்யம் இல்லை காலில் மெட்டியும் இல்லை . அவனுக்கு கல்யாணம் என்று அவர்கள் கேள்வி படவும் இல்லை . அவனை பார்த்து குழம்பினார்கள் . யார் இந்த பெண் ? என்று எல்லாரும் பேசிகொன்டே போனார்கள் .
அவளிடம் அவன் , ” அனன்யா உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும் ” என்று கேட்டான் . அவள் அவனிடம் , ” விக்ரம் மெனு கார்டு தாங்க ” என்றாள் . அவன் அவளிடம் கொடுத்தான் . அவள் ,” சர்வர் அண்ணா , ஒரு மட்டன் பிரியாணி , சிக்கன் தந்தூரி , பேப்பர் சிக்கன் , பட்டர் சிக்கன் ” என்றாள் . அவன் அவளை பார்த்து சிரித்தான் . அவன் சர்வர் இடம் , ” சர்வர் , Garlic non panner butter masala ” என்றான் . சர்வர் சிரித்து கொன்டே உள்ளெ போனார். அவள் அவனிடம் ,” விக்ரம் இவ்ளோ தான் சாப்பிடுவீங்களா ” என்றாள் . அவன் சிரித்து கொண்டு , ” மனிதர்கள் இவ்ளோ தான் சாப்பிடுவாங்க ” என்றான் கேலியாக . அவள் அவனிடம் ,” விக்ரம் ! அப்போ நான் யார் ? நான் பொண்ணு தான ” என்று கேட்டாள் . அவன் சிரித்து கொன்டே ,” உங்களை ஒன்றும் சொல்ல வில்லை நான் பொதுவாக சொன்னேன்” என்று சமாளித்தான் . அவளிடம் , ” அனன்யா உங்களுக்கு சாப்பிட ரொம்ப புடிக்குமா” என்று கேட்டான் . அவள் அவனிடம் ,” சாப்பிட யாருக்கு புடிக்காம எனக்கு ரொம்ப புடிக்கும் , ஆனா எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் இவ்ளோ தான் , நான் நல்ல சமைப்பான்” என்றாள் . அவன் அவளிடம் , ” அப்போ நாளைக்கு நீங்க எனக்கு ஏதாச்சும் இனிப்பு பண்ணுங்க ” என்றான். அவளும் சரி என்றாள் . உணவு வந்தது . அவள் சாப்பிட ஆரம்பித்தாள் . அவள் சாப்பிடுவதையே பார்த்து கொண்டிருந்தான் அவன் சாப்பிடவே இல்லை . அவள் அவனிடம் , ” நீங்க ஏன் என்னையே பாக்குறீங்க சாப்பிடுங்க ” என்றாள் . அவன் அவளிடம் , ” நீங்க சாப்பிடறது பார்க்க ரொம்ப அழகாக இருக்கு” என்றான் . அவள் அவனுக்கு நன்றி கூறினாள். அவன் அவளிடம் ,” நீங்க என்ன சொன்னாலும் அப்படியே நம்புவீங்களோ ” என்றான் . அவள் அதற்கு , ” ஏன் இப்படி கேட்குறீங்க ” என்றாள் . அவன் அவளிடம் ஒன்றும் இல்லை என்று கூறினான் . அவன் மனதுள் ( இந்த பொண்ணு இவ்ளோ வெகுளிய இருக்காளே இவளை அவள் வீட்டில் எப்படி தேடி கொண்டிருக்கிறார்கள் இந்த கல்யாணத்தை எல்லாம் எப்படி புரிந்து கொள்ள போகிறார்கள் இவளை அவ வீட்ல எவ்ளோ தேடுவாங்க ) என்று மனதுள் நினைத்து கொண்டான் .
அவர்கள் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தார்கள் . அவளிடம் அவன் , ” உங்களுக்கு பாணி பூரி வேண்டுமா ? அவள் வேண்டாம் என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவள் , ” விக்ரம் ! கண்டிப்பா அதனால் தான் கொஞ்சம் குறைவாக சாப்பிட்டேன் ” என்றாள் . அவன் அவளை பார்த்து சிரித்தான் . அவன் மனதுள் ( இவளுக்கு சோறு வாங்கி கொடுதே ஹோட்டல் எல்லாம் இழுத்து மூட வேண்டி தான் ) என்று நினைத்து சிரித்து கொண்டான் .
அவன் பானிபூரி கடையில் வண்டியை நிறுத்தினான் . இதற்கு முன் அவன் பாணி பூரி ஏ சாப்பிட்டது இல்லை . அவள் சாப்பிடும் அழகை பார்த்து அவனும் வாங்கி சாப்பிட்டான் . அவனுக்கு புடித்திருந்தது. பக்கத்தில் ஒரு kulfi கடை பார்த்ததும் அவள் அவரிடம் கேட்டாள் . அவனும் சரி என்று வாங்கி கொடுத்தான் . அதையும் அவள் சாப்பிட்டு வண்டியில் ஏறினாள் .
அவள் ஏறி உட்காந்ததும் தூங்கி விட்டாள். அவன் அவளை பார்த்து புன்னகைத்து கொன்டே வீட்டுக்கு வந்தான் . அவள் தூங்கும் அழகை பார்த்து அவனுக்கு அவளை எழுப்ப மனம் இல்லை . அவளை கையில் ஏந்தி கொண்டு வீட்டுக்குளே வந்தான் . அவள் அவன் கையில் ஒரு குழந்தை போல் இருந்தாள். அவளை அவன் மார்போடு சாய்த்து கொண்டு உள்ளெ வந்து அவனது படுக்கையில் படுக்க வைத்தான் . அவளுக்கு போன்றவையை போற்றி விட்டுவிட்டு சென்றான் . அவன் சோபாவில் உட்காந்து அவனது கணினியை பார்த்து கொண்டிருந்தான் .
தொடரும் …………………