அத்தியாயம் – 28
சந்தோஷத்தில் கணவனின் தோள்களில் ஊஞ்சலாடிய மாயாவை, கார்த்திக்கும் சற்று நேரம் கழித்தே கீழேயிறக்கினான். இருவரும் ஒவரை ஒருவர் பார்த்து வாயெல்லாம் முத்துப் பற்கள் தெரிய இளித்துக் கொண்டே இருக்க, மாயா தான் செல்லமாக அவன் மார்பில் அடித்து அந்த மௌன பரிபாஷயை கலைத்தாள். “வர மாட்டேன், வேலை இருக்குன்னு பொய் சொல்லிட்டு கரக்டா வந்திருக்க??”
அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டே தன் மனக் குமுறலைக் கொட்டினான், கார்த்திக். “யாரு நான் பொய் சொன்னேனா?? இன்னும் ஒரு வாரத்துல செய்ய வேண்டிய வேலைய நாலே நாள்ல சரியா தூங்காம கொள்ளாம செஞ்சு முடிச்சிட்டு இங்க பறந்து வந்தா, நீ அசால்டா பொய் சொன்னேன்னு சொல்ற….”
மாயா இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தின் பாவனையிலேயே தெரிந்தது. தனக்கு எதிர்பாராத விருந்தை கொடுக்க அவன் இவ்வாரு செய்தான் என நினைத்தவளுக்கு இது புதிய தகவலே! “ரொம்ப நேரம் வேலை பார்த்தியா??”
“ஹ்ம்ம்ம்…. நீயும் இல்ல, வீட்டுல தனியா இருக்கறதுக்கு ஆபீஸ்ல இருந்தாவது வேலை சீக்கிரமா முடிக்கலாம்னு இருந்து முடிச்சுட்டு, இங்க கிளம்பி வந்துட்டேன்.”
மனையாளின் புதிய ஸ்பரிஸத்தை தன்னுள் உள்வாங்கிக் கொண்டு, அவளுக்கும் தன் ஸ்பரிஸத்தை உணர்த்த முயன்ற கார்த்திக்கின் வேலையில் ஒரு பூஜை வேளை கரடி, கதவை தட்டியது. அதுவரை இருந்த மோனநிலை போய் மாயா திடுக்கிட்டு, மாயவலைலியிருந்து விடுப்பட்டு கதவை திறக்கப் போனாள்.
வெளியே கணேஷ் தான் நின்றிருந்தார். “கார்த்திக் இங்க வரேன்னு சொல்லிட்டு இருந்தாரு. ஹோ வந்துட்டாரா?? எப்படி இருக்கீங்க கார்த்தி??”
[the_ad id=”6605″]
நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன் அவர் செல்ல, கார்த்திக் அவரின் வருகையை விளக்கினான். “அவர்கிட்ட தான் எந்த ஹோட்டல், எந்த ரூம்முன்னு எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். சரி நீ ஷூட்டிங் கிளம்பு. நான் என்னோட ரூம் போயிட்டு குளிச்சிட்டு தூங்கறேன். ஈவ்னிங் போல வரேன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு.”
மாயா பேச இடமே கொடுக்காமல் கார்த்திக் சொல்லிக் கொண்டே போக, தன் கேள்விகளை அவளும் அடுக்கினாள். “என்னது உன்னோட ரூம்மா?? நீ இங்க தங்கலையா??”
“ஹே என்னோட ரூம்மும் இதே ஃபிளோர்ல, கடைசியில இருக்கு. இது பிரோடக்ஷன்ல உனக்காக குடுத்தது. நான் என்ன தான் ஹஸ்பென்டா இருந்தாலும், நானும் வெளி ஆள் தான். சோ, நான் அங்கயே தங்கிக்கறேன். அது மட்டுமில்லாம ஷூட்டிங் முடிஞ்சதும், மூணு நாள் நாம இங்க தான் இருக்கப் போறோம்.
உனக்கும் அப்போ ஃபீரி தான், கணேஷ் சார்கிட்ட கேட்டுட்டேன். அதனால, தான் வேற ரூம்! அம்மனிக்கு புரியுதோ??”
“ஹ்ம்ம்ம் புரியுது… நீ தான இங்க இருக்க முடியாது?? நான் உன்னோட ரூம்முக்கு வரேன், இப்போவே!” சொல்லிவிட்டு அவள் தன் உடைமைகளை எடுத்து வைக்க தொடங்கினாள்.
“ஹே ஷூட்டிங் முடிஞ்சு வந்து பார்த்துக்கலாம்டி. உனக்கு டைம் ஆகலை??”
“இங்க எட்டரைக்கு தான் ஷூட் ஸ்பாட்டுக்கு கிளம்புவோம். இன்னும் நிறைய டைம் இருக்கு…” அடுத்த அரை மணி நேரத்தில், மாயாவின் பொருட்கள் கார்த்திக்கின் அறையில் அடுக்கப்பட்டது. கார்த்திக் குளித்து வந்ததும், அறைக்கே காலை உணவை வரவைத்து பேசிய படியே உண்டனர். உணவும் முடிந்த பின்னர், மாயா ஷூட்டிங்கிற்கு கிளம்ப, கார்த்திக் தூங்கச் சென்றான். “நாலு அஞ்சு நாளா சரியா தூக்கமே இல்ல, நல்லா தூங்கப் போறேன். மத்தியானம் எழுந்தேனா ஷூட்டிங் பார்க்க வரேன்.”
“ஹ்ம்ம்ம் டோர் லாக் பண்ணிக்கோ.” ஷூட்டிங் நடைப்பெறும் இடத்திற்கு எப்படி வர வேண்டும் என அவனுக்கு விளக்கி விட்டு, மாயா கிளம்பினாள். அறையிலிருந்து வெளியேறிய அடுத்த நொடி கைப்பேசியை எடுத்து, ஊரில் இருந்த பெற்றவளையும், மாமனாரையும் அழைத்து தன் மகிழ்ச்சியை பங்குப் போட்டுக் கொள்ளவும் மறக்கவில்லை அவள்! விநாயகம் இவளை அவனாகவே அழைத்து கலாய்த்தான். விஷயம் அறிந்தவன் போல என நினைத்துக் கொண்டாள். அது தான் உண்மையும் கூட. இவள் சென்றவுடன் கலைப்பில் கார்த்திக்கும் உறங்கிவிட்டான். மீண்டும் அவன் எழும் போது மணி ஒன்றரை ஆகியிருந்தது. உடையை சரி செய்து, ஜெர்க்கின்னை மாட்டி, கைப்பேசியை எடுத்து, கதவை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினான்.
சாலையில் சுமாராக இருந்த ஒரு ஹோட்டலில் மதிய சாப்பாட்டை முடித்தவன், நேராக சென்று இறங்கியது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு தான். பனியை உடையாக போர்த்திக் கொண்டு, மலை முகடுகள் வெள்ளியை போல் அந்த இதமான சூரியன் வெளிச்சத்தில் தகதகவென மின்னியது! உடையையும் தாண்டி ஊடுறுவிய குளிரில் கைகளை தேய்த்துக் கொண்டு, மாயாவின் அருகில் சென்றான் கார்த்திக். மாயா அவனை கண்டு ஆச்சரியமாகி, “என்ன தூங்கலையா?? நீ சாய்திரமா தான் வருவேன்னு நினைச்சேன்.” என்று வினவினாள்.
“முழிச்சிட்டேன். திரும்ப தூங்க பிடிக்கலை. நீ போய் வேலையை பாரு.” கார்த்திக் கூறியதை கேட்டு தலையசைத்து, மாயாவும் ரவீந்திரனிடம் விரைந்தாள். அவளின் உவகை பொங்கிய முகத்தைக் கண்டு அவர் புருவம் தூக்க, மாயா கார்த்திக்கை கை காட்டினாள். “ஹோ இங்கயும் வந்துட்டாரா? ரொம்ப ஹாப்பி போல மேடம்…” கிண்டலாக ரவீந்திரன் சொல்ல, மாயாவின் பட்டுக் கன்னங்கள் அந்த பனி மலைகளுக்கு எதிர்விதமாக சூடாகி சிவந்தது.
அந்த சூட்டையும் சிவப்பையும் மேலும் கூட்டும் வண்ணம் இருந்தது அங்கே நடைப்பெற்ற நிகழ்வுகள். கதாநாயகனும், கதாநாயகியும் நெருக்கமாக இழைந்தாட படம் பிடிக்கப்பட்ட பாடல் காட்சிகள் ஒருப்புறம் கிறங்க வைக்க, அவர்களையே குழுவில் எல்லோரும் கண்ணிசைக்காமல் காணும் பொழுது, அவளையும் அறியாமல் கார்த்திக்கின் புறம் சென்றது மாயாவின் விழிகள்.
கார்த்திக்கும் ஓரக்கண்ணால் தன்னவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், மாயா தன்னை பார்க்கிறாள் என தெரிந்தவுடன், அவர்கள் முன் நடனமாடும் நிழல் ஜோடியை பார்ப்பது போல காட்டிக் கொண்டான். ‘லூசு லூசு, இங்க ஒருத்தி அவனையே பார்த்துட்டு இருக்கேன். அங்கயே பார்த்துட்டு இருக்கான் பாரு….’ மனதிற்குள் கணவனை திட்டியபடி இருந்த மாயா, சட்டென உணர்ந்த ஓர் விஷயம் – அவர்களுக்குள் இருந்த மாயத்திரை விலகியதே.
அப்படியென்றால், என்ன அர்த்தம்?? தான் கார்த்திக்கை முழு மனதாக, கணவனாக ஏற்றுக் கொள்ளத் தயாரா?? அவன் நெருங்கும் போது தனக்கு பழைய நினைவுகள் வராமல் இருக்குமா??அப்படி வந்தால் என்ன செய்வது?? பல கேள்விகளுடன் அன்று வேலையை முடித்தாள். படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பியவுடன் மாயாவும் கார்த்திக்குடன் விடுதிக்கு திரும்பினாள். வந்ததும் மாயா சிறிது ஓய்வெடுக்க, மீண்டும் சாப்பிட வெளியே சென்றனர் இருவரும்.
[the_ad id=”6605″]
திரும்பும் வழியில் எதிர்பட்டவர்களை எல்லாம் கார்த்திக் தமிழில் கிண்டலடித்துக் கொண்டே வர, மாயாவிற்கு வெறும் சிரிக்கும் வேலை மட்டுமே. அவர்களின் தளத்திற்கு வந்தும், அதையே தொடர திடீரென கேட்ட குரலில் இருவரும் பிரேக் போடாத குறையாக நின்றனர். “என்ன கண்ணம்மாவா?? யாரை மாயாவையா சொல்றீங்க??”
ரவீந்திரன் கையில் அலைபேசியுடன் நின்றிருந்தார். தான் மாயாவுடன் பேசியதை இவர் கேட்டிருக்க வேண்டும் என புரிந்துக் கொண்ட கார்த்திக், “ஆமா சார், அது இவளோட செல்லப் பேரு. நான் அப்படி தான் கூப்பிடுவேன்.” என்று பெருமையும் காதலும் வழிந்தோடிய குரலில் கூறினான். மாயா எதற்கு இதையெல்லாம் இவன் இப்போது சொல்கிறான் என்பது போல், தான் பிடித்திருந்த அவன் கைகளில் அழுத்தம் கொடுத்தாள்.
அதற்கு முக்கிய காரணம் ரவீந்திரன் நேரம் காலம் பார்க்காமல், தன் உதவியாளர்களை கிண்டல் செய்வார். தங்களின் காதல் கதை தெரிந்தால், அவ்வளவு தான்!! ஆனால், இதை எல்லாம் மற்ற இருவரும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை…. “ஹோ செல்லப் பேரா!? எல்லோரும் ஸ்டைலா பேபி, ஹனி இப்படி எல்லாம் கூப்பிடுவாங்க. நீங்க என்ன கண்ணம்மான்னு கூப்பிடுறீங்க??”
“அதுக்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கு சார். எங்களோட காலேஜ் கல்சுரல்ஸுல நான் ‘சுட்டும் விழிச் சுடர்’ பாரதியார் பாட்டு பாடி தான் இவளை காதல்ல தொபுக்கடீர்னு விழ வைச்சேன்! அதனால, எனக்கு இவ எப்போவுமே கண்ணம்மா தான்….” தன்னவளின் தோளில் கைப்போட்டு இறுக்கியபடி, அவளின் கேமரா மூலம் அவளை கண்டு பாடியதை எல்லாம் அவன் விளக்கத் தள்ளினான் மாயாவின் குருவிடம்.
“ஹோ பாரதியார் பாட்டு பாடி கரக்ட் பண்ணீங்களா?? என்ன மாயா ஒரே லவ்ஸ் தான் போல காலேஜ்ல??”
ரவீந்திரன் கூறியதை கேட்ட மாயா நெலிந்துக் கொண்டே, கார்த்திக்கின் கைகளை பற்றி இழுத்தபடி, ‘கார்த்தி, கார்த்திக் போதும்’ என சன்னக் குரலில் கூறி, கணவனை அங்கிருந்து கிளப்ப முயன்றாள். இப்போது ரவீந்திரனும் கார்த்திக்கும் சிரிக்கத் துவங்க, மாயாவும் வெக்கமும் காதலும் சம அளவில் கலந்து புன்னகைத்தாள். “சரி போங்க. குட் நைட்.” ரவீந்திரன் அவரின் அறையின் உள் நுழைய, அதற்காகவே காத்திருந்தது போல் மாயா சரமாரியாக தர்ம சாத்து சாத்தினாள் கார்த்திக்கை.
பக்கத்திலேயே இருந்த அவர்களின் அறையை கடினப்பட்டு அந்த அடி மழையிலும் திறந்தவன், உள்ளே நுழைந்ததும் அவளின் கைகளை பிடித்து மேலும் அவளை வெறுப்பேத்தினான். “இதுக்கு ஏன் டென்ஷன் ஆகற கண்ணம்மா? நீ ஷூட்டிங் அப்போ ஃபுல்லா என்னையே சைட் அடிச்சியே, அதை எல்லாம் நான் அவர்கிட்ட சொல்லவே இல்லை பாரு! நான் ரொம்ப குட் பாய்….”
“அடப்பாவி. அப்போ நான் பார்க்கறதை பார்த்துட்டே தான், தெரியாத மாதிரி இருந்தியா??”
அறை முழுக்க அவனை துரத்திக் கொண்டு ஓடியவள், இறுதியில் அவன் கட்டிலில் விழுந்ததும் இவளும் விழுந்தாள். மூச்சு வாங்கியவாரு இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் கைது செய்ய, மாயா ஒரு படி மேலே சென்று அவனை வாய் சொற்களாலும் முழுமையாக விழுங்கினாள். மாலையில் சிறிதாக முளைத்த பயம் இப்போது எங்கே ஓடியது என அவளே அறியவில்லை! கார்த்திக்கின் முகத்தையே ஆசையாக தடவிக் கொடுத்து, “ஐ லவ் யூ கார்த்தி… லவ் யூ சோ மச்!” என வினவவும் கார்த்திக்காலும், மேலே பொறுக்க முடியவில்லை.
அவளின் காதலை கேட்ட தருணத்தில் இருந்து, அவன் நெஞ்சம் அவனிடம் இல்லை. மாயாவின் இடுப்பை வளைத்து, அருகே இழுத்துக் கொண்டு அவனின் மூச்சு காற்றும் அவள் மேல் படும் வண்ணம் நெருக்கினான். மனையாளின் முகமேல்லாம் தன் உதட்டை பதித்து, அவளின் காதோரம் தேங்கி நின்று, அவளின் ஒத்துழைப்பையும் உறுதி செய்தான். “மாயு உனக்கு ஓகே தான??” கிறங்கிய குரலில் கார்த்திக் உருகிக் கேட்க, மாயா அழுத்தமாக அவனுள் புதைந்தாள், வெட்கத்தில்.
அவளின் வெட்கத்தை சம்மதமாக கொண்டு, கார்த்திக் மேலும் முன்னேற மாயாவிற்கு எங்கேயோ பறப்பது போன்ற உணர்வு ஆட்கொண்டது. தங்கள் வாழ்க்கையின் துயர பக்கங்களை புறட்டி வந்து, தற்போது வெற்றி பக்கங்களை வாசிப்பவர்கள் ஒரு சேர தங்களின் ஆழமான காதல் அத்தியாத்தை, வாழ்க்கை எனும் புத்தகத்தில் அன்பேனும் எழுதுக்கோலால் எழுதினர்!
மறுநாளில் இருந்து வேறோரு கார்த்திக்கை மாயா கண்டாள். எந்நேரமும் அவளின் பின் முயல் குட்டியாய் சுற்றுபவனை என்ன செய்வது என அவளுக்கே தெரியவில்லை…. “டேய் ரொம்ப பண்ற சொல்லிட்டேன்…. இப்படியே பண்ணு ஷூட்டிங் முடிஞ்ச கையோட நானும் கிளம்பப் போறேன் பாரு!” செல்லமாக சிணுங்கும் மனைவியை அணைத்துக் கொண்டு, “காமேடி பண்றடி நல்லா… நீ என்னை விட்டுட்டு போகப் போறியா??” என்று நகைப்பான் கார்த்திக்.
இப்படியே அவர்கள் இருந்த ஒவ்வொரு நாளும், உடலும் கூடலுமாக பற்பல நினைவுகளை உருவாக்கிக் கொண்டு, சென்னை திரும்பினர் கார்த்திக் தம்பதியர். மைதிலி இவர்களை பார்த்ததும் புரிந்துக் கொண்டாள், இருவரும் சேர்ந்து விட்டனர் என்று. அவள் மூலமாக விநாயகத்துக்கு விஷயம் போக, உடனே அவன் அழைத்தான் கார்த்திக்கை.
“மச்சா ஸ்கைப்புக்கு வாயேன். உங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு…”
“சரிடா ரெண்டு நிமிஷம்…” கார்த்திக்கும் அதில் இருக்கும் சூட்ஷமம் அறியாமல் மடிகணினியை இயக்கி, காணோளி கலந்துரையாடலுக்கு வழிவகுத்தான். இவனை மட்டும் பார்த்ததும் விநாயகம், “மாயா எங்கடா??” என ஆராய, கார்த்திக்கும் அவளை அழைத்தான். “மாயா” என கார்த்திக்கின் குரலுக்கு, படுக்கை அறையிலிருந்து எட்டி பார்த்தவள், விநாயகத்துடன் உரையாடல் என்றவுடன் ஓடி வந்து கார்த்திக்கை தள்ளிக் கொண்டு அமர்ந்தாள்.
“தள்ளிப் போ, தள்ளிப் போ. நான் தெரியவே மாட்றேன் பாரு அண்ணாக்கு….” மாயாவின் உரிமையுடன் கூடிய அதட்டலிலும், கார்த்திக்கின் கைகளை கட்டிக் கொண்டு பேசிய விதத்திலும், கார்த்திக்கின் வெளிப்படையான ‘கண்ணம்மா’ என்ற உருகலிலும் விநாயகத்துக்கு விஷயம் விளங்கிற்று.
தன் சந்தோஷத்தை அவர்களை கிண்டல் செய்து காட்டியவனுக்கு, மாயாவும் சந்தோஷமான விஷயத்தை கூறினாள். “அண்ணா ஒரு ஹாப்பி நியூஸ் தெரியுமா?? மாமாவும் இந்த வாரம் சென்னைக்கு வந்துடப் போறாரு. நாங்க அங்க வந்து கூட்டிட்டு வருவோம். சனிக்கிழமை மார்னிங் அங்க இருப்போம்.”
“ஹே எனக்கு சுப்பு அப்பா எப்பவோ சொல்லிட்டாரு இதை. நீ குட் நியூஸ்ன்னு சொன்னவுடனே என்னை மாமா ஆக்கிட்டியோன்னு நினைச்சுட்டேன். நீ உன்னோட மாமா பத்தி பேசற!”
[the_ad id=”6605″]
இதை கேட்டதும் கார்த்திக், “டேய் தகரடப்பா போதும்டா, அடங்கு!!” எனக் கூறி மனைவியை நோக்கினான். அவளோ முதலில் திகைத்து பின் தானாக கார்த்திக்கை பார்த்து, கன்னம் சிவந்தாள் அழகாக.
“ஹலோ நான் இங்க தான் இருக்கேன். போதும் ரோமான்ஸ் ஓவரா போயிட்டு இருக்கு…”
விநாயகத்தின் கேலியான சலுப்புற்ற குரலுக்கு பதிலாய், “தெரியுதுல கிளம்பு சீக்கிரம். இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க??” என்று நக்கலாக கேட்டான் அவன் நண்பன். “நேரம்டா… சரி டாடா பை.” விநாயகம் இணைப்பை துண்டிக்க, கார்த்திக் சிரிப்புடனே மடிக்கணினியை மூடினான்.
“இவனுக்கு எப்படி தெரிஞ்சுது மேட்டர்??”
கார்த்திக் மாயாவின் தோள்களில் சாய்ந்தபடி கேட்க, “ஹ்ம்ம்ம் அதை அவருகிட்டயே கேளு.” என பதிலுரைத்தாள். ஆனால், கார்த்திக்கும் மாயாவும் சேர்ந்து எடுத்த முடிவை பற்றி அடுத்து வந்த வாரத்தில் அனைவரையும் தெரிந்துக் கொண்டனர். மாயா அவளின் கலையில் சிறிது கால் ஊன்றியதும், பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என இருவரும் ஒரு மனதாக முடிவெடுத்திருந்தனர்.
கார்த்திக் தான் இதை தொடங்கியே வைத்தான், அவர்களின் வயதை முன் வைத்து. “என்னடி வயசாச்சு நமக்கு? உனக்கு இருபத்தி ரெண்டு, எனக்கு இருபத்தி ஆறு தான் ஆகுது. கொஞ்ச நாள் போகட்டும். இப்போலாம் இந்த வயசுல தான் கல்யாணம் பார்க்கவே செய்யறாங்க.” மாயாவும் சரியென ஒத்துக் கொண்டாள். ஊரிலும் சுப்பிரமணியமும், அபிராமியும் இதை கேட்டு, “உங்க இஷ்டம்பா. நாங்க என்ன சொல்ல?” என முடித்துக் கொண்டனர். அந்த வாரமே சென்னைக்கு சுப்பிரமணியமுடன் வீடு திரும்பினர் மாயாவும் கார்த்திக்கும்.
அதன் பின் மகிழ்ச்சிக்கு தடை ஏது?? நாளுக்கு நாள் பெருகும் சந்தோஷத்துடன் வீட்டை அன்பால் நிறைத்தனர் மூவரும். ஆனால், இவர்கள் ஒரு கணக்கு போட, எல்லாம் வள்ளவன் வேறொரு கணக்குப் போட்டு இவர்களை திகைக்க வைத்தான்.