“என்னடா என்னை அனுப்பிட்டு ஒரு மாசம் ஜாலியா இருக்கலாம்னு பார்க்கறியா? போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன் நானு….”
“பாவி ஊருக்கு போனா கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா??”
ஆம், இன்னும் மூன்று நாட்களில் படப்பிடிப்புக்காக தன் குழுவினருடன் மாயா ஒரு மாதம் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும், ரோம், இத்தாலி நாடுகளுக்கு பயணமாகிறாள். அத்துடன் இந்த இரண்டாம் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைவதால், அதன் பின் சில நாட்கள் வீட்டிலேயே இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டு பயணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் அவள்.
இப்போது அதையே கார்த்திக் கிண்டல் செய்யவும் பொறுக்காமல், வழக்கம் போல் அடிகளை பரிசாக வழிகியவளிடம்,வன் பாணியில் உலகையே மறக்கச் செய்து அவளை தூங்க செய்தான் அந்த காதல் கள்வன். அடுத்த நாள் தாமதமாக எழுந்தவள், அவசர அவசரமாக தன் வேலைகளை முடித்துக் கொண்டு படப்பிடிப்பிற்கு விரைந்தாள், கையில் மதிய உணவுடன்! காலையில் இவளை பிரித்வி தான் கூட்டிக் கொண்டு செல்வான் காரில்.
அன்றும் அவனுடன் சென்றவள், அடுத்த நாளிலிருந்து தன் உடைமைகளை அடுக்கி வைக்கவே நேரம் சரியாக இருந்தது. என்ன தான் தன்னவனை கேலி செய்தாலும், வீட்டில் இருந்து கிளம்பும் முன் கண்களை கரித்துக் கொண்டு வந்தது. “ஒழுங்கா சாப்பிடு, நேரத்துக்கு தூங்குமா…. இவன் எந்த பொண்ணையும் சைட் அடிக்காம நான் பார்த்துக்கறேன்.”
“ஹலோ தகப்பா இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!”
[the_ad id=”6605″]
அதுவரை கார்த்திக்கின் தோள்களில் சாய்ந்தபடி அழுகையில் கரைந்தவள், சுப்பிரமணியம் கூறியதை கேட்டு, கண்ணீருடன் சிரிக்கத் துவங்கினாள். ஒருவழியாக விமானம் ஏறிச் பறக்கத் துவங்க, மாயாவின் மனமோ கீழே தன் வீட்டிலேயே நின்றது. சும்மாவா சொன்னார்கள், பெண்கள் எங்கு சென்றாலும் அவர்களின் நினைவுகள் தங்களின் வீட்டிலேயே இருக்கும் என….
எல்லாம் அங்கே சென்றவுடன் வேலை ஆரம்பிக்கும் வரை தான். அதன்பின் நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. முதல் படத்தை விடவும், அவளின் இரண்டாவது படத்தில் தான் நிறைய கற்றுக் கொண்டாள். கார்த்திக்கும் சுப்பிரமணியமும் ஒருவருக்கொருவர் புலம்பி தீர்த்து, தங்களின் பொழுதுகளை ஓட்டினர். மாயாவின் வங்கியில் கார்த்திக் தாராளமாக பணம் போட, வீட்டில் அனைவருக்கும் ஞாபகச் சின்னமாக பொருட்களை வாங்கினாள்.
ஒரு மாதமும், வாட்ஸாப்பிலும் முகநூலிலும், அலைபேசி உரையாடலிலும், காணோலி கலந்துரையாடலிலும் கழிய, மாயசித்ராவும் வீடு திரும்பும் நாள் விரைவாகவே வந்தது. சென்னைக்கு செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்ததும், சந்தோஷம் கொப்பளிக்க இருந்தவளை கண்டு அவளின் குருவும் கலாய்த்தார். “இந்த ஒரு மாசமும் ஃபீரி டைம் ஃபுல்லா மாயாக்கு சாட்டிங்ல தான் போச்சு, கௌதம். இருந்தாலும், உன்னோட ஹஸ்பென்டுக்கு ரொம்ப தான் பொறுமை.”
ரவீந்திரன் கூறியதை கேட்ட அவரின் இன்னொரு உதவியாளரான கௌதமோ இன்னும் கேலியை கூட்டினான். “சார் பாதி நேரம் அவர் தான் இவளை கூப்பிட்டு பேசுவாரு. ரீசார்ஜ் பண்ணதை பேசியே தீப்பாங்கனா பார்த்துக்கோங்க.”
“ஹப்பா போதும் இன்னிக்கு நான் தான் கிடைச்சேனா, விட்றுங்க என்னை.”
மாயா கையெடுத்து கும்பிட்டு கேட்டதும், “யூ ஆர் லக்கி மாயா, கார்த்திக் மாதிரி ஒரு ஹஸ்பென்ட் கிடைக்க.” என்று ஆத்மார்த்தமாக ரவீந்திரன் கூறவும், அவளும் தலையசைத்து ஆமோதித்தாள். விமான நிலையத்தில் ஒரு மாதம் கழித்து மாயாவை பார்த்ததும், அவளை அள்ளி அணைக்க வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வீட்டில் பார்த்தால் ஊரிலிருந்து எல்லோரும் பட்டாளாமாக கூடியிருந்தனர். அனைவரிடமும் வளாவிவிட்டு, அறைக்குச் சென்று கணவனின் கைகளில் தஞ்சம் அடைந்ததும் தான் வீடு வந்து சேர்ந்த உணர்வு முழுவதுமாக மனதை நிறைத்தது மாயாவுக்கு.
எல்லோரும் ஒரு வாரம் இருப்பார்கள் என்றவுடன் கார்த்திக்கையும் விடுமுறை எடுக்க வைத்தனர். “ஹே வாரம் ஃபுல்லா லீவ் போடுறது ரொம்ப கஷ்டம். மூணு நாள் வேணும்னா லீவ் எடுக்கறேன். மீதி நாள் நீங்க சுத்திப் பார்க்க போங்க.” கார்த்திக் சொன்னதை யார் அங்கே மதித்தார்கள்? தனிமையில் அழுத்தமான முத்தத்துடன், “ஒரு மாசம் கழிச்சு வந்திருக்கேன். எனக்காக ஒரு வாரம் லீவ் எடுக்க மாட்டியா?” என்று மாயா கேட்க அது நன்றாகவே வேலை செய்தது.
வெளியே வந்து லீவ் கிடைத்ததாக சொல்லவும், “நீயேல்லாம் சொல்றவங்க சொன்னா தான் கேப்ப….” என்று விநாயகம் சரியாக புரிந்துக் கொண்டு கிண்டல் செய்தான். அதை புரம் தள்ளிவிட்டு, அடுத்த நாள் முதல் மெரினா பீச்சிலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா வரை சுற்றித் திரிந்தனர். மூன்றாம் நாள் காலையில், எழுந்ததும் தலை சுற்றலாக இருக்க அதனுடனே சமையல் அறையில் இருந்த அபிராமியிடம் சென்று, அவரின் தோள் சாய்ந்தாள் அவரின் மூத்த மகள்.
“அம்மா ஒரு மாதிரி தலை சுத்தலா இருக்குமா….”
“நைட் தூங்க சொன்னா, கதை கதையா எல்லார்கிட்டயும் பேசிட்டே இருந்த. இப்போ காலையில தூக்கம் கண்ண சொக்குதா? போய் பல் வலக்கிட்டு வா…. காபி தரேன்.”
பாலை காய்ச்சியபடி அபிராமி சொல்ல, அந்த பால் வாசனையே தாங்காமல், மாயா அவசரமாக ஒக்கரித்தபடி ஓடி வாந்தி எடுத்தாள். அவளின் பின்னே சென்று தலையை பிடித்த அபிராமியின் மனதில் மின்னல் வெட்டியது. மகளுக்கு தண்ணீர் கொடுத்து அமரச் செய்து தூங்கும் யாரையும் தொந்தரவு செய்யாமல், அவளிடம் கேள்விக் கேட்டார். “எப்போடி கடைசியா தூரமான?”
சுழலும் கண்களை நிறுத்தி, அன்னையின் கேள்வியை புருவ முடிச்சுடன் எதிர்கொண்டவள், எப்போது என யோசித்ததும் கிடைத்த பதிலே அவளுக்கு அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒருங்கே அளித்தது. “அது இங்கயிருந்து போறதுக்கு முன்னாடி ஆனேன்மா. அதுக்கப்புறம் இல்ல…. ஆனா எப்படி??” தனக்குள்ளேயே கேட்டவளை, அபிராமி கொண்டாடினார்.
“என் தங்கம்! எனக்கு எவ்வளவோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?? இரு அண்ணனையும் மாப்பிள்ளையும் எழுப்பறேன்.”
“அம்மா கொஞ்சம் இருமா. எனக்கே ஒண்ணும் புரியலை….”
தான் மாத்திரை எடுத்துக் கொண்டும் எப்படி என சில நிமிடங்கள் யோசித்தவளுக்கு விடை தெரிந்தது. வெளிநாட்டுக்கு கிளம்பும் முன், அன்று மூவரும் வெளியே சென்று வந்த இரவின் பின், மாயா எப்போதும் எடுத்துக் கொள்ளும் மாத்திரையை உட்கொள்ளவில்லை. அதுவே அவளின் வாரிசு வர காரணமாக அமைந்தது. ஆனால், இதையெல்லாம் மீறி தான் அன்னையாக போகிறோம் என்ற தகவலே அவளின் உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. அபிராமியை நிப்பாட்டிவிட்டு அவளே சென்று கார்த்திக்கை எழுப்பினாள்.
“ஹே தூக்கம் வருது கண்ணம்மா….”
“டேய் எழுந்துரு. முக்கியமான விஷயம்.” கணவனை உலுக்கி எழுப்பிவிட்டு, அவனின் முகத்தை ஆவலாக பார்த்தப்படி, “கார்த்தி, நம்ம அப்பா அம்மா ஆக போறோம்னு நினைக்கிறேன்.” என்று வெட்கத்துடன் சொன்னவளை, கார்த்திக் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“ஹே எப்படி?? நிஜமா தான் சொல்றயா??”
[the_ad id=”6605″]
மாயா அதற்கான காரணத்தை கூறவும், கார்த்திக்கும் ஒரு நிமிடம் திகைத்து பின் தன்னவளை கட்டிக் கொண்டான். “ஹே கண்ணம்மா எனக்கு ரொம்ப சந்தோஷம்டா… எவ்வளோன்னு சொல்லக் கூட முடியலை…. நம்மளே இந்த படம் முடிஞ்சதும், இதை பத்தி யோசிக்கலாம்னு இருந்தோம். அதுக்கள்ள….”
“ஆமா, நம்ம எதிர்பார்த்து கிடைச்சிருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருந்துருக்குமா தெரியலை. நான் வேணும்னு நினைச்சுட்டே இருந்தேன்! கடவுளா பார்த்து குடுத்துட்டாரு!!! எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்.”
இவர்கள் பேசிக் கொண்டே போக வெளியே இருந்தவர்கள் விடவில்லை. மைதிலியின் வீட்டிற்கும் விஷயம் போக, வீடே சிறிது நேரத்தில் சந்தோஷத்தில் முக்குளித்தது. காலை உணவின் பின், மருத்துவமனை சென்று குழந்தை தான் என்பதை உறுதி செய்துக் கொண்டு வந்ததும் கார்த்திக்கிற்கு அவ்வளவு பேரானந்தம்.
“கொஞ்ச நாள் நீ வேலைக்கு போக வேணாம்டா. நான் வேணும்னா சார்கிட்ட பேசறேன்.”
“தேவையில்லைடா…. சாரோட பொண்ணுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். அதனால, சார் அதுவரைக்கும் எந்த படத்துக்கும் கமிட் ஆகலை…. சோ, நானும் வெட்டி தான்….”
அனைவருக்கும் இதை கேட்டு நிம்மதி, முக்கியமாக அபிராமிக்கு. “அப்போ கொஞ்ச நாள் நான் கூட்டிட்டு போய் பார்த்துக்கறேன்ணா. அவளும் ரொம்ப சோர்ந்து போய் தெரியறா….”
அன்னை கூறியதை கேட்டு, மாயா திடுக்கிட்டு கார்த்திக்கின் முகத்தை பார்க்க, அவனும் அதிர்ந்து தான் இருந்தான். சுப்பிரமணியம் பேசுவதற்குள், மாயாவே அதை மறுத்தாள்.
“அம்மா இப்போ தான் ஒரு மாசம் தனியா இருந்தேன். என்னால, கார்த்திக் இல்லாம முடியாதுமா. ப்ளீஸ், என்னை இங்கயே விடுங்க! நான் அப்புறமா வரேன் ஊருக்கு….”
[the_ad id=”6605″]
கார்த்திக் பக்கத்தில் சென்று அவன் கைகளை கட்டிக் கொண்டு மாயா கூற, அனைவரும் நகைத்தனர். “அப்படி போடு அருவாள… நீங்கனா அவ சாப்பிடாம போனா திட்டுவீங்கமா…. நம்ம பையன் செல்லம் குடுத்தே கெடுத்து வைச்சுருக்கான் அவளை…. விடுங்க, கொஞ்ச நாள் கழிச்சு வரட்டும்.”
விநாயகம் கூறியதை கேட்டு, அபிராமியின் மனது சமன் அடையவில்லை. இரண்டு பிள்ளை பெற்றவர் அன்றோ. புரியாமல் பேசுகிறாளே என அவர் சிந்திக்கவும், சுப்பிரமணியம் அனைத்திற்கும் முற்று புள்ளி வைத்தார்.
“அங்க நம்ம வீட்டுல வேலை செஞ்சுட்டு இருந்தாங்கல, மீனம்மா, அவங்கள இங்கயே கூப்பிட்டுக்கலாம்னு கொஞ்ச நாளா நினைச்சுட்டு இருந்தேன். இப்போ உடனே அவங்கள வர வைக்கிறேன். அவங்க நல்லா பார்த்துப்பாங்க மாயாவை. என்னம்மா அபிராமி உனக்கு ஓகே தான??”
“ஹ்ம்ம் சரினா…. இவளை பார்த்துக்க யாராவது பொம்பள துணை இருந்தா போதும்….”
மீனம்மாவை இவர்கள் ஊருக்கு கிளம்பும் முன்னே சென்னைக்கு வரச் செய்து, திருப்தியுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான் கார்த்திக். விடைப் பெற்று செல்லும் தன் குடும்பத்தினரை அவனின் தோள்களில் ஒய்யாரமாக சாய்ந்து, கையசைத்தாள் மாயா.