அத்தியாயம் – 32
“தி பெஸ்ட் சினிமாட்டோகிராபர் ஆவார்ட் கோஸ் டூ…. ஹே என்னோட ஸ்டூடன்ட், மாயசித்ரா!” ரவீந்திரன் கூறியதை கேட்டு, அரங்கம் முழுவதும் கரவோஷம் எழும்ப, சிறிய புன்னகையுடன் தன் அருகில் அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்த்து கண்களால் பேசி, எழுந்து மேடை சென்றாள் மாயா.
வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து பல நிறங்களை பொழிந்த இடத்தில், வெள்ளை கருப்பு நிறத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த சுடிதாரை அணிந்துக் கொண்டு மாயா தன் குருவிடம் விரைய, அதை தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். தேசிய விருதுகளை அடுத்து, பல வருடங்களாய் கொடுக்குப்படும் அவ்விருது விழாவில், தனக்கும் விருது கிடைத்திருப்பதை கண்டு அவள் நெஞ்சம் பூரித்தது.
நேராக ரவீந்திரனிடம் சென்றவள் அவரிடம் “தாங்க்ஸ் சார்” என கூறி விருதை வாங்கிக் கொண்டு, கண்களில் கண்ணீர் குளம் கட்ட பேச்செழாமல் அந்த மிகப்பெரும் அவையில் நின்றாள். அவ்விருது விழாவின் தொகுப்பாளரோ, “மேடம் இந்த விருது கிட்டதட்ட ஹாப்ஃ சென்சுரியும் கிராஸ் பண்ணி கொடுத்துட்டு இருக்கோம். பெண் ஒளிப்பதிவாளர்கள் நாமினேட் ஆகுறதே பெரிய விஷயம். இதுல, நீங்க அவார்ட் வின் பண்ணிருக்கீங்க. பொதுவா, ‘கேமராமேன்’ அப்படி தான் சொல்லுவாங்க. பட், நீங்க அதை மாத்தி ஒரு ‘கேமராவுமன்’னு கூப்பிட வைச்சுருக்கீங்க. எப்படி இது சாத்தியமாச்சு?” என்று கேட்க மாயா பேச வேண்டியதை நினைவுக் கூர்ந்தாள்.
குரலை செருமிக் கொண்டு அவள் முதலில் அவ்விருதை வாங்க காரணமாக இருந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், படக் குழுவினருக்கும் பொதுவாக விருது பெற்றவர்கள் சொல்வது போல நன்றியுரைத்து விட்டு, தன் மனதை திறந்து பேசினாள், முதல் முறையாக அனைவரின் முன்பும்.
“நீங்க சொன்ன மாதிரி எதையோ மாத்தனும்னு எல்லாம் நான் வரலை. எனக்கு கேமரா மேல இருந்த லவ், அதனால் தான் இப்போ ஒளிப்பதிவாளரா இங்க இருக்கேன். ஃபிரஸ்ட் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம், சாரோட கையால என்னோட முதல் அவார்ட் கிடைச்சிருக்கு! வெரி வெரி எக்சைடட்…. இப்போ எனக்கு தெரிஞ்சதுல, ஒரு அஞ்சு பெர்ஸன்ட் தான், சார்கிட்ட போறதுக்கு முன்னாடி எனக்கு தெரியும். எல்லாமே அவர்கிட்ட கத்துக்கிட்டது தான்.”
மாயா பேசும் போதே அவளிடம் மைக்கை வாங்கி, ரவீந்திரன் பேசத் துவங்கினார். “சும்மா சொல்றா…. எல்லாமே அவளோட டேலன்ட், அவளோட சாதிக்கனும்னு ஒரு உத்வேகம், எவ்வளவு படம் பண்ணாலும் கத்துக்கிட்டே இருக்கிற அந்த பேஷன் தான்! போன வாரம் கூட புதுசா வந்த ஒரு லென்ஸ் பத்தி, மெயில் பண்ணியிருந்தா, சார் இதை பாருங்கன்னு சொல்லி. அது தான், தேவை இல்லையா? இப்போ நான் மாயாக்கு இந்த அவார்ட் குடுக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!! பட், நீங்க நானு எல்லாம் சந்தோஷம்ப்படுறதை விட அங்க ஒருத்தர் ஒண்ணுமே தெரியாத மாதிரி வீடியோ எடுக்கறாரே அவரு இப்போ பறந்துட்டு இருப்பாரு. வாங்க கார்த்திக், உங்க கண்ணம்மாக்கு நீங்களே அவார்ட் குடுங்க….”
மாயாவும் சரி கார்த்திக்கும் சரி இதை எதிர்பார்க்கவில்லை. கேமராவின் வெளிச்சம் முழுவதும் தன் மேல் விழ, வேறு வழியில்லாமல் மேடை ஏறி, ரவீந்திரனிடம் கை குலுக்கி தன்னவளின் அருகில் சென்று நின்றான் கார்த்திக். “சார் வேற யாரும் இல்ல, மாயாவோட ஹஸ்பென்ட். இனிமேல், அவளே சொல்லுவா.”
மைக்கை மாயாவிடம் கொடுத்துவிட்டு ரவீந்திரன் ஒதுங்கிக் கொள்ள, மாயா விருதை கார்த்திக்கிடம் வற்புறுத்தி கொடுத்துவிட்டு, காதல் ஒவ்வொரு வார்த்தையிலும் பொங்கி வழிய, அவனை பற்றிக் கூறினாள். “சார் சொன்ன மாதிரி என்னை விட, என்னோட குடும்பத்தை விட கார்த்திக் தான் சந்தோஷமா இருப்பான். அது எல்லாருக்குமே தெரியும். அவனோட கனவு என்னனு கேட்டா, என்னை பெரிய ஒளிப்பதிவாளரா பார்க்கனும்னு சொல்வான். அந்த அளவுக்கு லவ், அன்பு, பையித்தாமா இருப்பான், இருக்கான் இப்போவும் என்மேல… தாங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது. அதையும் தாண்டி, நான் இந்த அளவுக்கு வர எல்லாமே கார்த்திக் மட்டும் தான் காரணம். சார் கிட்ட அஸிஸ்டென்டா ஜாயின் பண்றதுலந்து இன்னிக்கு நான் இங்க வர வரைக்கும், எல்லாத்துக்குமே என் பின்னால, ஒரு பெரிய பில்லர் ஆப் சப்போர்ட்டா இருக்கறது இவன் தான். இந்த அவார்ட் மட்டுமில்ல, இன்னும் எத்தனை புகழ் வந்தாலும் எல்லாமே ஒரே ஒருத்தருக்கு மட்டும் தான் டெடிகேட் பண்ணுவேன். என்னோட கார்த்திக்கு!”
மேலே பேச முடியாமல் மாயா கண்ணீரை துடைக்க, கார்த்திக் அவளின் கைகளை பற்றி, காதோரமாக “ஹே லூசு, அழாத” என சொல்லி தெம்புட்டினான். கைத் தட்டல்கள் அதிர, மூவரும் மேடையில் இருந்து கீழே இறங்கினர். விழா முடிந்து வீடு செல்ல இரவு வெகு நேரம் ஆனாலும், அவர்களின் வீட்டில் அனைவரும் விழித்திருந்தனர், இவர்களுக்காக! இடையில் கடந்து சென்ற ஐந்து வருடங்களில் நடந்தன பல நிகழ்வுகள்….
முதலாவதாக, விநாயகத்திற்கு மாயாவும் மைதிலியும் இறங்கிய தீவிர பெண் தேடும் வேட்டையில் தாமரை அவர்களுக்கு புதையலாக கிடைக்க, விநாயகத்தின் வாழ்வு அவளோடு இணைந்தது! அவர்களுக்கு ஒரே புதல்வன் ஆரவ். ரித்தியா தன் முதுகலை பட்டப்படிப்பு முடிந்தவுடன், கார்த்திக்கின் தூரத்து சொந்தத்திலேயே ஒரு திருமணத்தில் அவளை பார்த்து லோகேஷின் குடும்பம் பெண் கேட்டு வர, அவர்களின் திருமணமும் இரண்டு வருடங்கள் முன் நடந்தது. தற்போது அவள் ஆறு மாதம்!
[the_ad id=”6605″]
அடுத்து மாயாவும் திரைப்படத்துறையில் பெயர்சொல்லும் அளவிற்கு வந்திருந்தாள். இந்த ஐந்து வருடங்களில், நிறைய கற்றுக் கொண்டாள். வெற்றியும் தோல்வியும் ஒருங்கே சமாளிப்பது தான் இப்போதும் அவளுக்கு கஷ்டமாக இருக்கும் ஒன்று! மெதுவாக அப்பாடத்தையும் கற்கிறாள்…. கார்த்திக் இந்த ஐந்து வருடங்களில், அவன் வாகன உற்பத்தி செய்யும் அலுவகத்தில் மென்மேலும் வளர்ந்து ஒரு சென்னை தலைமை அலுவகத்தில் முக்கிய பொறுப்பில் அமர்ந்திருந்தான்!
கார்த்திக்கும் மாயாவும் சேர்ந்து சென்னையில் தங்களுக்கேன ஒரு கூடு கட்டி, அதில் தங்களுடனே அபிராமியை தங்க வைத்துக் கொண்டனர். அந்த வீட்டில் தான் அனைவரும் தற்போது விருதை மாற்றி மாற்றி பார்த்து, பூரித்துக் போயினர். சுப்பிரமணியம் தான் அனைவரையும் விரட்டினார். “நாளைக்கு காலையில கிளம்பி ரிஸார்ட்டுக்கு போகனும்ல? தூங்குங்க எல்லாரும். நேரமாச்சு!” ஆம், மாயா தன் முதல் விருதுயை வாங்கியதற்காக கார்த்திக் எல்லோரையும் இரண்டு நாட்களுக்கு ரிஸாட்டில் தங்கலாம் என ஏற்பாடு செய்திருந்தான்.
தங்களின் அறையில் நுழைந்தவுடன் மாயாவை கட்டிக் கொண்டு, “ஐ ஆம் சோ ஹாப்பி கண்ணம்மா” என கார்த்திக் கூற, அவனுக்கு பதில் அளிக்க வார்த்தையால் முடியாமல், தன் முத்தங்களால், தன் அன்பை பரைசாற்றினாள் அவள். சமர்த்தாக உறங்கிய தன் செல்வங்களை அணைத்துக் கொண்டு, மாயாவும் உறங்கத் தயாராக கார்த்திக்கும் கண் மூடி தூங்க துவங்கினான். சிறிது நேரம் கண் மூடி இருந்தவள், தன் கணவன் பேசாமல் தூங்குவதை பார்த்து அவன் கைகளிலேயே கிள்ளினாள் பலமாக!
“ஹா எதுக்குடி கிள்ளுன?”
“எதுக்குனு கூட தெரியலையா பாவி??”
கள்ளச் சிரிப்பு சிரித்து தனக்கு தெரியும் என்பதை காட்டிக் கொண்டு, அவன் வழக்கமாக பாடும் ‘சுட்டும் விழிச் சுடர்’ பாடலை மனையாளுக்காக பாடி இறுதியில் அவளுக்கு கன்னத்தில் முத்தமொன்றை வைத்து, தன் குழந்தைகளுக்கு இதழ்பதித்து நிமிர, மாயாவும் அனைத்தையும் மறந்து தன் குடும்பத்தை அணைத்துக் கொண்டு நித்திரா தேவியை சரணடைந்தாள்.
[the_ad id=”6605″]
மறுநாள் மஹாபலிபுரத்தின் எல்லையில் இருந்த ஓர் ரிஸாட்டில் கலகலப்பாக பொழுதை கழித்தனர் எல்லோரும், முக்கியமாக சிறுவர்கள்! விநாயகத்தின் ஒரு வயதான பிள்ளை ஆரவ்வுடன் விளையாட, போட்டி போட்டனர் அகிலனும் அகிராவும்!
மாலையில் ரிஸாட்டில் ஓரமாக இருந்த பைக்கை பார்த்த சிறுவர்கள் அதில் ஒரு சுற்று செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்க, கார்த்திக்கும் சம்மதித்தான் வேறு வழியின்றி! அங்கே இருந்த உரிமையாளர்களிடம் கேட்டு கடலோரமாக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என கேட்டறிந்தான் பாசமிகு தந்தையாய்.
வண்டியை கடலோரமாக ஊழியர்கள் எடுத்துச் செல்ல, மற்றவர்கள் பின் தொடரந்தனர். “மாமா நாங்க போயிட்டு வந்ததும் நீயும் ரவுன்டு போறியா?” அகிரா விநாயகத்தை பார்த்துக் கேட்ட, அதற்கு பதிலாய், “ஆமாடா செல்லம் நீங்க போயிட்டு வாங்க.” என்று விளக்கமளித்தான்.
பேசிக் கொண்ட வந்த அகிலனும், அவன் தந்தையிடம் “அப்பா ஏதாவது பாட்டு பாடிட்டே ஓட்டலாம்பா…” என்று கோரிக்கையை முன் வைக்க, அவன் சகோதரியோ கைகளால் காதை அடைத்துக் கொண்டு கண்களை மூடி, அவள் அன்னையை வெறுப்பேற்றும் உன்னத பணியை மேற்கொண்டாள்.
“ஐயோ பாட்டு பாடலாம். ஆனா ‘சுட்டும் விளி’ பாட்டு நோபா. ப்ளீஸ்… அம்மா நீ வேணும்னா நைட் அப்பா கிட்ட கேட்டுக்கோ.”
“ஏன் செல்லம் வேணாம்னு சொல்ற?” விநாயகம் மேலும் துருவ, ரித்தியாவின் பின் ஒளிந்துக் கொண்டு தன் முகத்தை மட்டும் வெளியே நீட்டி, “அத தான் அப்பா டெய்லி பாடுவாரு நைட் அம்மாக்காக. நாங்க வேற பாட்டு சொன்னா அத பாடிட்டு, திரும்ப இதையே பாடி கொல்லுவாரு!” என்று கூறி மாயாவின் முறைப்பை வாங்கிக் கொண்டாள், சமர்த்தாக.
“அடப்பாவிங்களா, எங்கள தான் இந்த பாட்டை திரும்பத் திரும்ப பாடி கொல்றீங்கனா, பசங்களையுமாடா??”
விநாயகம் கேட்டதை மாயாவும் கார்த்திக்கும் கண்டுக் கொள்ளவில்லை…. குழந்தைகளை பைக்கில் அமர வைத்துக் கொண்டே, “குட்டீஸ் நம்ம ‘மென்டல் மனதில்’ சாங் பாடலாமா, உங்களுக்கு பிடிக்குமே?!” என்று பேச்சை திசை மாற்ற குழந்தைகளும் குதூகளித்தனர்!
[the_ad id=”6605″]
விசையுந்தில் அமர்ந்து, அதை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டே கார்த்திக் பாட, அவனுக்கு எசப்பாட்டு பாடினர் அவன் பிள்ளைகள். “லைலான்ற வார்த்தையே ஒழுங்க வரல, இது எல்லாம் பாட்டு பாடுது…” அகிராவின் தலையில் இடித்துக் கொண்டே, மாயா பொருமியது மூவரின் ஒன்றினைந்த பாட்டுக் குரலில் மட்டுப்பட்டது!
கடல் அலைகள் அப்பாட்டிற்கு தாளமும் ராகமும் போட, வானம் தன் வெயிலை சுறிட்டிக் கொண்டு இவர்களுக்கு ஒத்துழைக்க, கடல் காற்று சாமரசம் வீச, மிதமான வேகத்தில் நெஞ்சமேல்லாம் உவகை பொங்க நால்வரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு செல்ல, இவர்களின் வாழ்வும் அதே போல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் விடைப்பெறுவோம்!
****************************************************************************************************