ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் — 26
ஒருவாரம் கழித்து.. இன்றுதான் நல்லநாள் என்று பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ராஜன் தேவியைப் பார்த்ததும் ஒருகனம் அமுதாவின் உடல் விறைப்பானது.. பிறகு மாறன் அன்று சொன்னதை நினைவில் கொண்டுவந்த அமுதா.. யாரையும் கண்டுகொள்ளாமல் தனியே போய் அமர்ந்துகொண்டார்.
சுமதியும் ராமனும் பூஜையில் மாறனையும் நந்தினியையும்தான் அமரச்சொன்னார்கள்.. மாறன் அதற்கு ஒத்துக்கொள்ளாமல்.. தன் தந்தையும் தாயும்தான் உக்காரவேண்டும் என்று முடிவாக சொல்லிவிட்டான்.
இதில் ராமனைவிட ராஜன்தான் மிகுந்த பெருமைகொண்டார் மாறன்மீது.. தேவி சுமதியோடு பேசிக்கொண்டிருந்தார்.. ராஜன் தன்மகளோடு பேசிக்கொண்டிருக்க.. நிவியும் சோபியும் அவர்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
அமுதா தனியே அமர்ந்து தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தார். அமுதாவிடம் வந்த சோபனா.. ‘ஏங்கத்தை தனியா உக்கார்ந்திட்டிருக்கிங்க..?” என்றாள்.
‘அப்படியே பழகிடுச்சி சோபி.. நீ எப்படியிருக்க..? என்ன சொல்லுது உன் வயித்தில இருக்க குட்டி..?” என நலம் விசாரிக்கவும்..
‘எதையும் சாப்பிட விடமாட்டுது அத்தை..” என்றாள் வெக்கசிரிப்போடு..
‘பின்ன..? அம்மாவாகறதுன்னா சும்மாவா..?” என்று சிரிப்போடு கேட்டு.. ‘இன்னும் கொஞ்சநாள்ல சரியாகிடும்..” என்றார் தன்மையாக.
அமுதாவிடம் வந்த மாறன் சிறு தயக்கத்தோடே.. ‘அத்தை..” என்றழைக்க.. என்ன என்பதுபோல் அமுதா பார்க்க.. ‘எல்லாரும் நிறைய நகை போட்டுட்டிருக்காங்க.. நீங்க மட்டும் இப்படி இருக்கிறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. உங்க தம்பிக்காகன்னு நினைச்சி இந்த கம்மலை மட்டும் போட்டுக்கிறிங்களா..?” என கேட்டு.. தன் பாக்கட்டில் இருந்த கம்மலை நீட்ட.. அமுதா தயங்க..
‘உங்க பொண்ணுக்காக கொலுசு போட்டுகிட்டிங்க.. அப்போ எனக்காக ஒன்னும் இல்லையா..?” என உரிமையாய் கேட்க..
மறுப்பின்றி வாங்கிக்கொண்டவர்.. ‘இன்னைக்கு வேணாம்.. இன்னொரு நாளைக்கு போட்டுக்கிறேன்..” என்று சொல்ல.. ராஜன் பெருமையாய் மாறனை பார்த்திருக்க.. தேவி மெச்சுதலாக பார்த்திருந்தார் மாறனை.
குமாரோடு சரவணனும் வரவும்.. ‘வா குமார்..” என்று வரவேற்ற மாறன்..
‘அத்தை.. இவன் சரவணன்.. குமாரோட தம்பி..” என மாறன் அறிமுகப்படுத்த..
சரவணன் இருகைகூப்பி ‘வணக்கம்மா..” என சொல்லி அமுதாவின் காலில் விழப்போகவும்.. ‘ப்ச்..“ என பதறி.. ‘முதல்ல எழுந்திரி..” என்றார் கோபமாக.
சரவணன் எழவும்.. ‘இங்க செய்யிற வேலைக்கு உனக்கு சம்பளம் தரப்போறாங்க.. அதுக்கு எதுக்கு கால்ல விழற..? தேவையில்லாம யார் கால்லயும் விழுந்து.. உன்னை நீயே கீழ்படுத்திக்கக்கூடாது புரியுதா..?” என மிரட்டினார் அமுதா.
சரவணன் தலையாட.. ‘அம்மா சொல்லக்கூடாது.. மேடம்னு சொல்லனும்..” என்றார்.
‘சரிங்க மேம்..” என்ற சரவணின் முகம் சட்டென வாட..
‘நான் உன்னை இங்க வேலைக்காக மட்டும் வரசொல்லல.. இங்கிலிஷ்தான உன் பிரச்சனை..? அதோட சேர்த்து.. கம்ப்யூட்டர்.. டைப்ரைட்டிங்ன்னு எனக்கு தெரிஞ்சதெல்லாம் உனக்கும் கத்துக்கொடுக்கலாம்னு இருக்கேன்..
நீ என்னை அம்மான்னு சொன்னினா உன்னை மகனா நினைச்சி.. செல்லம் கொடுக்க ஆரம்பிச்சிடுவேன்.. மேடம்னு சொன்னினாதான் எல்லாம் சீக்கிரம் கத்துக்க முடியும்..” என்றார் தன்மையாக.
‘சரிங்க மேம்..” என்றான் தெளிந்த சிரிப்போடு. மாறனோடு சேர்த்து அனைவருமே பெருமையாய் பார்த்தனர் அமுதாவை.
[the_ad id=”6605″]
நேரம் எட்டு மணியை கடந்திருக்க.. அனைவரையும் வீட்டிற்க்கு அழைத்தார் தேவி. ராஜன் வீட்டில் இன்று காலை உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தன் அன்னையை ஏற்றுக்கொள்ளாத தண்டபானியின் வீட்டிற்க்கு செல்வதில்.. நந்தினிக்கு பெருத்த சங்கடம்தான்..
ஆனால்.. தாம் கேட்டுக் கொண்டதற்க்காக மனைவி மக்கள் இருக்க எத்தனை மனஉளைச்சலை தாண்டி தன் அன்னையை திருமணம் செய்ய முடிவெத்திருப்பார்.? தன் அன்பிற்க்காகவும்.. நான் அவரை தந்தையாக ஏற்றுக்கொள்வதற்க்காகவும் தானே இத்தனையும்..? என யோசித்து..
என் உயிர் இருக்கும்வரை காத்திருக்கிறேன் என்று தவிப்போடு சொன்ன தந்தையையும்.. எந்த பெண்ணும் செய்யத்துணியாத செயலை தன் அன்னைக்காக செய்யத் துணிந்த தேவியின் அன்பையும் நந்தினியால் மறுக்கமுடியவில்லை.
இனிவரும் காலங்களிலாவது அனைவரும் நிம்மதியோடு வாழவேண்டும் என்பதற்க்காகவும்.. அதற்க்காக தாம் சில சங்கடங்களை சந்தித்துதான் ஆகவேண்டும் என்ற முடிவோடும்தான் தன் தகப்பன் வீட்டிற்க்கு செல்லவிருக்கிறாள்.
தேவி அழைத்ததும் நந்தினி தன் அன்னையை சங்கடத்தோடு பார்க்க.. புன்சிரிப்போடு போய்வா என்பதுபோல் தலையசைத்தார் அமுதா.
தனக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் தன் அன்னையை ஆழ்ந்து பார்த்திருந்தாள். ‘இங்க வா நந்து..” என அமுதா அழைக்க.. அருகில் சென்றாள்.
‘உங்களை வேணாம்னு நிராகரிச்ச.. அந்த தண்டபானி வீட்டுக்கு நான் போறேன்லமா..?” என தவிப்போடு முனுமுனுத்து கண்ணீர் வீட்டாள் தன் அன்னையின் தோள்சாய்ந்து..
‘நந்து.. தண்டபானி காலமெல்லாம் என்னோட முடிஞ்சிபோச்சி.. அது உன் அப்பா வீடுடா.. என்காலத்துக்கு அப்புறம் நீயும் என்னை மாதிரியே தனியாளா ஆகிடுவியோன்னு நினைச்சி நான் தவிக்காத நாளில்ல.. இப்போ உனக்கு எல்லாரும் இருக்காங்க.. நீ அங்க போனா என்னைவிட நூறுமடங்கு தேவி உன்னை அன்பா பார்த்துக்குவாங்க.. நீ அங்க போறதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேசம்.. இப்படி அழக்கூடாது..” என நந்தினியின் கண்ணீர் துடைத்து வழக்கம்போல் கன்னம் நீவி திருஷ்டி கழித்தார்.
எத்தனை மெதுவாக இவர்கள் பேசிக்கொண்டாலும்.. ராஜன் தேவியின் கவனம்.. இவர்கள் மீதேயிருக்க.. தாய்சேய் பேசிக்கொள்வது நன்றாகவே புரிந்தது இருவருக்கும்.
அமுதா தன்னை புரிந்துகொண்டார் என்ற நிம்மதியில் தேவியிருக்க.. தன்னை பிரிந்த வேதனை பத்தாமல்.. தன் மகளுக்காக எப்படியெல்லாம் யோசித்து கலங்கித் தவித்திருக்கிறாள் என நினைத்த ராஜன் முகத்தில் அத்தனை வேதனை வந்திருந்தது.
யாரையும் கண்டுகொள்ளாத அமுதா.. ‘கொலுசெல்லாம் வாங்கிட்டு வந்துட்டு இப்போ என்னவோ சீன் போட்டுட்டிருக்க..?” என செல்லமாக முறைத்தார் நந்தினியை.
‘அம்மும்மா.. இன்னைக்கு ஒருநாளைக்கு மட்டுமாவது.. டிபன் சாப்டுறிங்களா..? நான் கடையில வாங்கி வரசொல்றேன்..” என்றாள் ஆசையோடு.
‘புதுசு புதுசா என்னால எதையும் ஏத்துக்கமுடியல நந்து.. என்னை புரிஞ்சிக்கோ..” என்று அமுதா தன்மையாக சொல்ல.. நந்தினியின் முகம் சட்டென வாடியது.
நந்தினியை விட்டு சரவணனிடம் வந்த அமுதா.. ‘சரவணா.. இங்க கொஞ்சம் பார்த்துக்கோ.. நான் அரைமணிநேரத்தில வந்திடறேன்..” என சொல்லி தனது ஆக்டிவாவில் கிளம்பினார்.
——————————————————————–
[the_ad id=”6605″]
காரிலிருந்து இறங்கிய நந்தினி.. தோட்டத்தினுள் வீடா..? இல்லை வீட்டைசுற்றிலும் தோட்டமா.. என வீட்டின் வெளிப்புறத் தோற்றத்திலேயே அசந்துபோனாள்.
‘மாறா.. நீயும் நந்தினியும் சேர்ந்து நில்லுங்க..” என சொல்லி.. ‘சரசு..” என தேவி குரல் கொடுக்க.. அங்கே ஆரத்தி தட்டோடு வந்த சரசிடம்.. அதனை வாங்கி.. மாறனுக்கும் நந்தினிக்கும் ஆரத்தி எடுக்க..
‘தேவிம்மா.. எதுக்கு இதெல்லாம்…?” என மாறன் சங்கடப்பட..
‘சும்மா கூச்சப்படாம நில்லுங்க மாப்ள…” என தேவி ஆரத்தி எடுக்க..
‘தேவிம்மா..” என அழகாய் வெக்கப்பட்டான் மாறன்.
‘எல்லாரும் உள்ள வாங்க..” என அழைத்துப்போனார். ஹாலிலேயே தண்டபானி அமர்ந்திருந்தார். இராமன் சென்று தண்டபானியிடம் நலம் விசாரித்தார். தண்டபானி இராமனிடம் பேசிக்கொண்டே.. தன் பேத்தியையேதான் ஏக்கத்தோடு பார்த்திருந்தார். நந்தினியும் கவனித்திருந்தாள்தான்..
ஆனால்.. என்னமுயன்றும் நந்தினியால் தண்டபானியிடம் பேசமுடியவில்லை. அமைதியாய் தலைகுனிந்திருந்தாள்.
சுமதி.. சோபனா.. நிவேதாவிற்கெல்லாம் இன்னமும் இது மாறனின் மாமனார்வீடு என்ற எண்ணமே வரவில்லை. முதலாளியின்வீடு என்ற எண்ணமே மனதில் பதிந்திருக்க.. அந்த பரந்த ஹாலில் சுற்றிலும் சோபாக்கள் வீற்றிருந்தாலும்.. அதில் அமர தயங்கி நின்றிருந்தனர்.
வேலையாள் அனைவருக்கும் தண்ணீர்கொடுக்க.. ராஜன்… ‘சுமதி.. உக்காரும்மா.. சோபி நிவிம்மா உக்காருங்க..” என்றார் அன்போடு. அவர்கள் தயங்க..
‘மாறன்தான் எப்பவும் என்பேச்சே கேக்கமாட்டான்.. நீங்களும் இந்த மாமா பேச்சை கேக்கமாட்டிங்களா…?” என ராஜன் சிரிக்க..
‘என்னது..? மாமாவா..?” என அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர் இருவரும்..
‘நிவேதா.. சோபனா.. மாறா..” என மூவரையும் தண்டபானி அழைக்க.. அவர்களிடம் சென்ற நிவியும் சோபியும் அமைதியாய் நின்றிருந்தனர்.
மாறன்தான்.. ‘சாப்டிங்களாய்யா..?” என்றான்.
‘ஒன்பது மணிக்குமேலதான் மாறா..” என்றவர்.. ‘எப்படியம்மா இருக்கிங்க..? புருசன்மார்ங்க உங்களை நல்லா பார்த்துக்கிறாங்களா..?” என்றார் நிவி சோபியிடம்.
‘நல்லாயிருக்கோம் பெரியய்யா..” என்று இருவரும் சொல்ல.. மயிலுவைப்பார்த்தவர்..
‘இந்த குட்டிதான் உன் பொண்ணா..? மாறனை மாய்யான்னு பேர்சொல்லிதான் கூப்பிடறாளாமே..?” என்று பெருமையாய் சொல்லி அக்குழந்தையின் கன்னம்தடவி.. ‘சரிம்மா எல்லாரும் சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்..” என்றார் தண்டபானி.
‘அக்கா வாங்க.. இங்க உக்காருங்க..” என மனோஜ் நந்தினியின் கையைப்பிடித்து அங்கிருந்த ஊஞ்சலில் அமரவைக்க.. அனைவரும் அதிசயித்தனர். காரணம்.. இதுவரை மனோஜ் வேற்று ஆட்களிம் பேசி இராமன்கூட பார்த்ததில்லை.
மனோஜிடம் வந்த மாறன்.. ‘அம்மா சொல்லிக்கொடுத்தாங்களா…? இப்படி பேசனும்னு..?” என்று சிரிக்க..
‘இல்ல மாமா.. லாவிக்கா சொல்லி கொடுத்தாங்க..” என்றான் அச்சிறுவன்.
[the_ad id=”6605″]
லாவன்யாவை நினைத்து பெருமையடந்த நந்தினி.. ‘எத்தனாவது படிக்கிற..?”
‘ஐஞ்சாவதுக்கா..” என்றான்.
‘என்ன ரேங்க் எடுப்ப..?” என கேக்க.. மனோஜ் முகத்தை சுருக்கினான்.
‘ஏய் டீச்சரம்மா.. உன் டீச்சர் வேலையை இங்க ஆரம்பிக்காத..” என இடைமறித்து..
‘ராஜய்யா.. நான் எவ்ளோ நேரம்தான் நிக்கிறது..? நீங்க உக்காருங்க.. நான் உக்காரனும்..” என்று சொல்ல..
‘என் சம்மந்தி.. என் தங்கச்சி பொண்ணுங்க.. எல்லாரும் உக்கார்ந்ததும் நான் உக்கார்ந்துடுவேன் மாறா..” என்று ராஜன் சொல்ல..
‘சின்னய்யா.. நான் எப்பவும் உங்க ராமுதான்..” என ராமன் பதற..
‘அதெல்லாம் முடியாது.. இனி என்னை சம்மந்தின்னுதான் நீங்க கூப்பிடனும்.. சோபியும் நிவியும் மாமான்னு கூப்பிடனும்.. சுமதி அண்ணான்னு கூப்பிடனும்.. இனி சின்னைய்யான்ற பேச்சே இருக்கக்கூடாது..” என ராஜன் அன்பு கட்டளையிட.. சிலையாய் நின்றனர் அனைவரும்.
‘பிள்ளைத்தாச்சி பொண்ணு எவ்ளோ நேரம் நிப்ப..? உக்காரும்மா..” என தேவி சோபனாவின் கையைப்பிடித்து சோபாவில் அமரவைத்தார். பிறகு நிவேதாவை பார்க்க.. ராஜன் நின்றுகொண்டிருப்பதால் நிவேதாவும் சோபியருகே அமர்ந்தாள்.
தன் வீட்டில் அப்பா முன்னாடி மாமா உக்காந்திருக்கிறாரே என யோசித்த நந்தினி.. எனில் அவர்களின் தவிப்பு தண்டபானியை நினைத்துதான் என புரிய..
‘அப்போ நானும் நிக்கிறேன்.. என் மாமாவும் அத்தையும் நின்னுட்டிருக்கும்போது நான் உக்கார்ந்திருந்தா அது மரியாதையாகுமா..?” என கோபமாக நந்தினியும் நிற்க..
‘ப்பா.. உக்காருங்கப்பா..” என சத்தமாய் சொல்லி.. ‘வேற எதையாவது ஆரம்பிச்சிடப்போறா உங்க மருமக..” என தண்டபானியை காண்பித்து முனுமுனுத்தான்.