‘உக்காரு ராமா..” என தண்டபானியும் குரல்கொடுக்க.. பிறகுதான் இராமனும் சுமதியும் அமர்ந்தனர். நந்தினியின் பார்வை முழுதும் வீட்டை நோட்டமிட.. எங்குபார்த்தாலும் முகம்தெரியும் அளவிற்கு பளிச்சென பிரம்மாண்டமாக சர்வ அலங்காரங்களுடன் ஏதோ மன்னர் காலத்து அரண்மணையில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்க.. தன் அம்மா எத்தனை பெரிய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள் என நினைத்த நந்தினிக்கு கண்ணை கரித்தது.
நந்தினியை கவனித்திருந்த ராஜன்.. தன் மகளருகே வந்து ஊஞ்சலை ஆட்டிவிட்டபடி.. ‘உன் அம்மா இதுக்கெல்லாம் ஆசைப்படலடா.. நான் வசதியானவன்னு அமுதா என்னை ஏத்துக்கவே இல்ல.. ரொம்ப போராடிதான் அவளை சம்மதிக்கவச்சேன்..
அதுக்கப்புறமும் அவ ஆசைப்பட்டது என்னை மட்டும்தான்.. நகை பணம்னு எதுகொடுத்தாலும் வாங்கிக்கமாட்டா.. பட்டாம்பூச்சிமாதிரி எந்த கவலையும் இல்லாம அவபாட்டுக்கு படிச்சிட்டுதான் இருந்தா.. நான்தான் அவ வாழ்க்கையில எமனா நுழைஞ்சிட்டேன்..” என கண்ணீர் விட.. பதறி எழுந்தவள்..
‘அப்பா விடுங்கப்பா..” என ராஜனின் கண்ணீர் துடைத்து.. தன் தகப்பனையும் சமாதானம் செய்து.. தன்னையும் தேற்றிக்கொண்டு ராஜனை ஊஞ்சலில் அமரவைத்து..
‘தேவிம்மா.. இங்க வாங்க..” என தேவியை ராஜனருகில் அமரவைத்து.. ஹேன்பேகிலிருந்த கொலுசை எடுத்தவள்.. கீழேயே அமர்ந்து தேவிக்கு தானே கொலுசு போட்டுவிட.. ‘கொடு நந்தினி நான் போட்டுக்கிறேன்..” என தேவி கைநீட்ட..
‘இல்லல்ல அம்மும்மாக்கு நான்தான் போட்டுவிட்டேன்.. அதேமாதிரி உங்களுக்கும் நானேதான் போட்டுவிடுவேன்..” என சொல்லி கொலுசை போட்டுவிட்டு.. நைல்பாலிசும் வைத்துவிட.. பார்த்திருந்த தண்டபானி நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார்.
‘சரசு.. பெட்ரூம் கபோர்ட் மூனாவதுரேக் ல.. மெரூன்கலர் நகைபாக்ஸ் இருக்கும் எடுத்திட்டு வா..” என பணித்து.. ‘நான் கொடுக்கிறதையும் நீ போட்டுக்கனும்..” என தேவி நந்தினியிடம் சொல்ல.. நந்தினி சங்கடமாய் முழித்தாள்.
[the_ad id=”6605″]
சரசிடம் நகையை வாங்கிய தேவி.. அந்த பெரிய பெட்டியிலிருந்து ஒரு சிறிய நகைப்பெட்டியை வெளியிலெடுக்க.. அதைப் பார்த்து வெகுவாய் அதிர்ந்தார் ராஜன்.
‘தேவிம்மா.. உங்க அன்பு மட்டும் போதும்.. வேற எதுவும் வேணாம்..” என நந்தினி கண்கலங்க..
‘அழாதடா இந்த நகையை நான் வாங்கல..” என பேசிக்கொண்டே நகைப்பெட்டியை திறக்க.. ஒரு ஆரம்.. டாலர்செயின்.. சிறிய நெக்லஸ்.. பெரிய குடைஜிமிக்கி.. நான்கு வளையல்கள்.. என அனைத்தும் அத்தனை அழகாகயிருக்க..
‘உங்கப்பா உனக்காக வாங்கினதெல்லாம் மாந்தோப்பு பங்களால இருக்கு.. இதுவும் உங்கப்பா வாங்கினதுதான்.. ஆனா உனக்காக வாங்கினதில்ல..” என தேவி சொல்ல.. நந்தினி புரியாமல் விழிவிரித்தாள்.
‘நீ இங்க வரேன்னு சொன்னதும் உன்னோட நகைகள்ல இருந்து கொஞ்சம் எடுத்துட்டு வரலாம்ன்னு அங்கபோனேன்.. ஒரு கபோர்ட் மட்டும் பூட்டியிருந்தது.. அங்கயிருந்த வேலைக்காரன்கிட்ட சாவிகேட்டேன்.. அதை திறக்கக்கூடாதுன்னு ஐய்யா சொல்லியிருக்கார்ம்மா.. சுத்தம் செய்யிறதுன்னாகூட அதைமட்டும் ஐயாவேதான் செய்வாருன்னு சொன்னான்.. அவனை மிரட்டி சாவி வாங்கி திறந்து பார்த்தேன்.. அங்கயிருந்ததுதான் இந்த நகைகள்..
உங்கம்மாக்காக அப்போ வாங்கியிருப்பார் போல.. இது உனக்கு சேரவேண்டிய நகைகள்தான் போட்டுக்கோ..” என்று தேவி போட்டுவிடவும்.. மறுப்பின்றி போட்டுக்கொண்டாள் நந்தினி..
மற்றொரு பெட்டியிலிருந்து.. இரண்டு செட் வளையல்களை எடுத்த தேவி.. அதை சோபி நிவியிடம் சென்று ‘இது உங்களுக்காகத்தான்.. கைநீட்டுங்க..” என சொல்ல..
‘எனக்கெதுக்கும்மா..” என மறுத்தவர்களிடம்..
‘உங்க ரெண்டுபேர் கல்யாணத்துலயும்.. உங்களுக்காக எதையும் செய்யவிடாம எல்லாம் மாறனே பார்த்துக்கிட்டாப்ல.. மாறனோட சுயமரியாதைக்காக உங்க மாமாவும் எதையும் கொடுக்க வேணான்னுட்டார்.. எங்களோட முதல் சம்மந்தி வீட்டு பொண்ணு பிள்ளைங்களை இப்பவும் அப்படியே விடமுடியுமா…? அப்புறம் என் மாப்பிள்ளை கோபிச்சிக்குவார்..” என சிரிப்போடே சொல்லி போட்டுவிட்டார்.
சந்தோசப்பட்ட மாறன்.. ‘தேவிம்மா.. உங்க கண்ணு முன்னால வளர்ந்த பையன் நான்.. புதுசா மரியாதை கொடுத்து என்னை காமெடி பீசாக்காதிங்க..” என வெக்கப்பட..
‘அச்சோ.. இளமாறன் சார்க்கு மரியாதை கொடுக்கலன்னா.. அப்புறம் மினிஸ்டர்.. எம்.எல்.எ கிட்டன்னு எனக்கு கொலைமிரட்டல் வந்தாலும் வரும்..” என்று பயந்த பாவனையோடு தேவி சிரிக்க..
மாறன் ராஜனை செல்லமாய் முறைக்க.. ‘பின்ன.. ஒரு மாப்பிள்ளை பெருமையை மாமியார்கிட்ட சொல்றதில்லையா…? அதான்.. லைசன்ஸ் வாங்குற ஆபீஸ்ல.. அதிகாரம் செய்து ஒரேமணிநேரத்தில வேலையை முடிச்சது.. அமுதா ஹாஸ்பிட்டல் ஓனரை மிரட்டினது.. அவன் பதறியடிச்சி பத்தே நிமிசத்தில அமுதாக்கு கிடைக்கவேண்டிய ஏழு லட்சத்துக்கு பதிலா.. பத்துலட்சத்தை அமுதா அக்கௌன்ட்ல போட்டதுமில்லாம.. உன்கிட்டயும் அமுதாகிட்டயும் மன்றாடி மன்னிப்பு கேட்டதெல்லாம் சொல்லிவச்சேன்..” என சிரிப்போடு சொல்ல..
ராமனும் சுமதியும் அதிர்ச்சியில் விழிவிரிக்க.. ‘சோபி.. நிஜமாவே மாறன் பெரிய ரௌடியாகிட்டான்போல..” என நிவேதா பதற..
‘நிவிம்மா நீ பயந்துக்காதடா.. மாறன் நல்லவழிலதான் போய்ட்டிருக்கான்..“ என பெருமையோடு ராஜன் சொல்ல.. பிறகுதான் ஆசுவாசமடைந்தனர் அனைவரும்.
‘சரி.. சாப்பிடலாம் வாங்க..” என அனைவரையும் அருகில் இருந்த டைனிங்ஹாலுக்கு அழைத்துப்போனார் தேவி. இம்முறை நந்தினி ரசனையோடு பார்த்திருந்தாள் வீட்டின் அழகை. நீண்டிருந்த அலங்காரடேபிளில் அனைத்தும் தயாராய் இருக்க.. மாறன் நந்தினி சோபி நிவிக்கு தேவி பரிமாற.. சுமதிக்கும் இராமுவிற்கும் ராஜன் பரிமாறினார்.
‘சின்னைய்யா நீங்களும் சாப்பிடுங்க..” என இராமன் சொல்ல..
‘இன்னைக்கு யாரையும் விடறதா இல்ல.. என்னை யார் யாரு எப்படி கூப்பிடனும்னு சொல்லியிருக்கேனோ.. அப்படி சொன்னாத்தான் இன்னைக்கு ராஜனுக்கு சாப்பாடு.. இல்லன்னா கொலை பட்டினிதான்..” என ராஜன் சொல்ல..
[the_ad id=”6605″]
‘அண்ணா.. எங்களோடவே உக்கார்ந்து சாப்பிடுங்கண்ணா..” என சுமதிதான் முதலில் ஆரம்பித்தார்.. இராமன் சுமதியை ஆச்சர்யமாய் பார்க்க.. ‘சின்னைய்யான்னு கூப்பிட்டாலும்.. அப்போயிருந்தே நான் என் அண்ணாவாத்தான் அவரை நினைச்சிருந்தேன்.. அதனால எனக்கொன்னும் கஷ்டமில்ல..” என்றார் கபடமின்றி..
‘ம்ம் சரிதங்கச்சி.. அப்படியே என் மச்சானுக்கும் சொல்லிகொடு..” என ராஜன் சிரிக்க.. சுமதி.. ‘உங்க நிலைமை கஷ்டம்தான்..” என்றார் கணவனிடத்தில்.
தயங்கினாலும்.. ‘மாறன் மட்டும் உங்கபேரை சொல்றான்..” என்றாள் சோபனா..
‘ஏய் வில்லி.. என்னை எதுக்கு இழுக்குற..?” என சோபியை மாறன் அதட்ட.. எதாவது ஹெல்ப்பண்ணுடா என்பதுபோல் சோபனா மாறனைப் பார்க்க..
‘சரி.. அப்போ நீங்களும் ராஜாமாமான்னு கூப்பிடுங்க..” என சிரிப்போடு மாறன் சொல்ல..
‘அச்சோ அதுக்கு மாமாவே மேல்.. நீங்களும் சாப்பிடுங்க மாமா..” என்றாள் சோபனா.. ‘ம்ம்.. ஆமாம் மாமா..” என நிவேதாவும் வெக்கத்தோடே சொன்னாள்.
ராஜன் இராமுவைப் பார்க்க.. இராமு தர்மசங்கடமாய் விழிக்க.. ‘நீங்க எப்படின்னாலும் கூப்பிடுங்க.. ஆனா இனி சின்னைய்யான்னு கூப்பிடக்கூடாது.. அது என் மருமகனுக்கு மரியாதையா இருக்காது.. இப்போ சாப்பிடுங்க ராமு..” என்றார் இலகுவாகவே.
பிறகு இராமு சாப்பிட ஆரம்பிக்க.. ‘தேவிக்கா நீங்களும் அண்ணனும் சாப்பிட உக்காருங்க..” என்றார் சுமதி.
‘நீங்க சாப்பிடுங்கண்ணி.. நாங்க அப்புறம் சாப்பிட்டுக்குறோம்..” என்று தேவிசொல்ல.. சுமதி விழிக்க..
‘இனி எல்லாம் அப்படித்தான்.. போகப்போக பழகிக்கும் சாப்பிடுங்கண்ணி..” என்றார் மீண்டும்.. அனைவரும் சந்தோசமாகவே சாப்பிட்டனர்.
‘தேவிம்மா.. சமையல் யார் செய்தா..? செம்மைய்யா இருக்கு..” என்றாள் நந்தினி.
‘எப்பவும் நான்தான் செய்வேன் நந்து.. இன்னைக்கு பூஜைக்கு வந்ததால.. சரசுவை சமைக்க சொன்னேன்.. சரசும் நல்லா சமைப்பா..” என்றார்.
நந்தினியருகில் அமர்ந்திருந்த மனோ.. தான் சாப்பிடுவதை விடுத்து நந்தினியையே பார்த்திருந்தான்.. ‘நான் சரியா சப்பிடறேனான்னு லாவி பார்க்க சொன்னாளா..?” என நந்தினி சிரிப்போடு கேக்க..
‘ம்கூம்.. நீங்க தாத்தாகிட்ட பேசுவிங்களான்னு பார்த்து வைக்க சொன்னாங்க.. நீங்க தாத்தாகிட்ட பேசினா.. அப்பா தாத்தாகிட்ட பேச வாய்ப்பிருக்காம்..” என லாவண்யா சொன்னதை அப்படியே திருப்பினான் கிளிப்பிள்ளையாக.
நந்தினி.. ‘உன் கொழுந்தியா சரியான ஆளாத்தான் இருக்கா..” என மாறனிடம் முனுமுனுத்து.. ‘பேசலாம்.. பேசலாம்.. இப்போ சாப்பிடு..” என்றாள் மனோவிடம்.
லாவண்யாவிற்க்காக நந்தினி தண்டபானியைப் பார்க்க.. அவர் தன்னையே ஏக்கத்தோடு பார்த்திருப்பது புரிய.. தாம் நம் அம்மாவிற்க்காக யோசிப்பதுபோல.. லாவி அவளின் அப்பாவிற்க்காக யோசிக்கிறாள் என நினைத்தவள்.. ஒரு முடிவிற்க்கு வந்தவளாய்..
‘தண்டபானி சாப்பிடலயா தேவிம்மா..?” என்றாள் தண்டபானிக்கும் கேக்கும் குரலில்.
[the_ad id=”6605″]
தேவியின் முகம் பேரதிர்ச்சியை காட்ட.. ‘அம்மாடி…” எனப்பதறிய ராமன் சாப்பாட்டிலிருந்து எழுந்தேவிட்டார். ‘ஏன் தேவிம்மா நீங்களும் மாமாவும் இவ்ளோ ரியாக்சன் கொடுக்கிறிங்க..? பேர் சொல்லத்தான பேரப்பிள்ளைங்க..?” என அசால்ட்டாகவும்.. சத்தமாகவும் கேட்டு..
இராமுவிடம்.. ‘மாமா.. ஊருக்கே டானா இருந்தாலும்.. எனக்கு அவர் தண்டபானிதான்.. நீங்க உக்கார்ந்து சாப்பிடுங்க.. இல்ல நான் சாப்பிடாம எழுந்துக்குவேன்..” என்றாள் இலகுவாகவே.
தண்டபானியின் முகம் மலர்ச்சியை காட்ட.. மாமனாரை கவனித்த தேவியின் அதிர்ந்த முகம்.. தற்போது ஆச்சரியத்தை காட்டியது..
இவர்களை கவனிக்காத மாறனோ.. ‘ராஜி.. நீ அவர்கிட்ட பேசலன்னாகூட பரவாயில்ல.. வயசுக்காவது மரியாதை கொடுடி..” என்றான் மன்றாடலாக.
‘பார்டா.. வாலிப வயசிலயா பேரப்பிள்ளை எடுக்கமுடியும்..? வயசானவாட்டிதான எடுக்கமுடியும்..? இதெல்லாம் பார்த்தா அப்புறம் எப்படி பேரப்பிள்ளைங்க பேர் சொல்ல முடியும்..? நான் சொல்றது சரியா தப்பான்னு… நீ போய் தண்டபானிகிட்டயே கேட்டுக்கோ..” என்றாள் உரக்கவே.
அம்மாடி.. கோபம் வந்துட்டா யாருக்கும் அடங்கமாட்டான்னு.. அமுதாக்கா சொன்னது சரியாதான் போச்சி என தேவி நினைத்திருக்க.. தனது ஊன்றுகோலின் உதவியுடன் உற்சாகத்தோடு எழுந்து நந்தினியின் அருகில் வந்த தண்டபானி..
‘ஆத்தா.. நீ என்னை எப்படின்னாலும் சொல்லுடா.. நான்தான் உன்னை கையெடுத்து கும்பிடனும்..” என்று கண்கலங்கினார்.
‘கையெடுத்தெல்லாம் கும்பிடவேணாம்..” என ராகமாக இழுத்து.. ‘கை கழுவிட்டு சாப்பிடுங்க..” என அதட்டலோடு சொல்லி.. ‘வயிறு நிறைஞ்சிடுச்சி.. எனக்கு போதும் தேவிம்மா..” என்று தேவியிடம் கண்சிமிட்டி.. சிரித்துக்கொண்டே எழுந்தாள்.
பெருமையோடு நந்தினியை பார்த்திருந்த ராஜனும்.. வெகுநாட்களுக்கு பிறகு மனம்திறந்து சிரித்தார். மகனின் சிரிப்பில் மனம் நிறைந்தார் தண்டபானி.