ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் – 27
‘மாமா.. சத்தம் போடாம வாங்க..” என்று மாறனிடம் கிசுகிசுத்தாள் லாவன்யா.
யாரோ வருவதுபோல் தோன்றி திரும்பி பார்க்கவும்.. லாவண்யா. எதிர்பார்க்காத ராஜன்.. ஆனந்தமாய்.. ‘ஹேய் லாவிகுட்டி.. வா.. வா.. எக்சாம் முடிஞ்சது.. இனி கொண்டாட்டம்தான்..” என்றார் உற்சாகமாக.
‘ஆமாம்ப்பா..” என்று தந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தவள்..
‘என்னப்பா..? சேவ்கூட பண்ணாம வந்திருக்கிங்க..? முத்தா கொடுத்தா குத்துது..” என முகம் சுழித்தாள்.
‘கொஞ்சம் டையர்டா இருந்ததுடா.. அதான் பண்ணல.. ம்ம்.. என் பட்டுக்குட்டிக்கிட்ட பேசியே ஒருவாரத்துக்கும் மேல ஆச்சு..” என்று தன் மகளை கொஞ்ச..
‘எக்சாம்னால கொஞ்சம் பிசியாகிட்டேன்.. ” என்றாள்.
பிறகுதான் யோசித்தவராய்.. ‘யாரோடடா வந்த..?” என்றார்.
‘தோ.. அந்த ஜீபும்பாவோட..” என சிரித்தபடி வெளியில் இருந்த மாறனை காண்பித்தாள். அங்கு மாறன் குமாரோடு ஏதோ பேசிக்கொண்டிருக்க..
‘மாறா..” என ராஜன் அழைக்க.. ‘அப்பாவும் பொண்ணும் கொஞ்சி குலாவிட்டு.. சவகாசமா என்னை கூப்பிடுவிங்க… நான் வரனுமா..?” என முறுக்கிக்கொண்டே உள்ளே வந்தான்.
‘வேண்ணா.. நீங்களும் கொஞ்சிக்கோங்க..” என ராஜன் மடியிலிருந்து இறங்கியவள்.. ‘ம்ம்..” என ராஜனின் கன்னத்தை காண்பித்தாள் மாறனிடம்.
‘அய்யே.. உங்கப்பாக்கெல்லாம் நான் முத்தம் கொடுக்கமாட்டேன்..” என முகம் சுழித்தவன்.. ‘என்ன லாவி இப்படி பட்டுன்னு விட்டுக்கொடுத்திட்ட..?” என்றான் ஆச்சர்யமாக.
‘கருப்பா இருந்தாலும்.. கொஞ்சம் நல்ல மாமாவா இருக்கிங்க.. அதான்..” என்றாள் பெருந்தன்மையாக.
‘ஓய்.. என்ன.. ? லந்தா..? அக்காவும் தங்கச்சியும் எப்பப்பாரு என் கலரையே குறைசொல்றிங்க..?” என முறைத்தான்.
‘குறைசொன்னாலும்.. மாமாவா ஏத்துக்கிட்டோம்ல..? விட்டுட்டு போவிங்களா.. என்னவோதான் உண்மையை சொன்னாக்கூட கோவிச்சிக்கிறிங்க..” என்றாள் சிரிப்போடே.
சிரித்த ராஜன்.. ‘என்ன மாறா இந்தபக்கம்..?” என்றார்.
[the_ad id=”6605″]
‘சோபிக்கு இன்னும் இரண்டுநாள்ல வளைகாப்பு வச்சிருக்கோம்.. தேவிம்மாகிட்ட சொல்லிட்டு.. உங்ககிட்ட சொல்லலாம்னு கிளம்பினேன்.. வீட்ல போரடிக்குது நானும் வரேன்னு லாவி சொன்னா.. அதான் இரண்டுபேரும் வந்தோம்..” என்றான்.
‘லாவிம்மா உங்க ஆயா காலைலயே போன் செய்தாங்களாம்.. நீ தூங்கிட்டிருந்ததால உன் அம்மா அப்புறம் பேசவைக்கிறேன்னு சொன்னா..” என்று தன் போனை கொடுத்தவர்..
‘இங்க டவர் இருக்காது.. வெளில போய் பேசிட்டு வா..” என்றார். போனை வாங்கிய லாவண்யா தன் பாட்டிக்கு அழைத்தபடியே வெளியேற..
‘சரி மாறா வந்திடறோம்..” என்றவர்.. நந்தினிக்கு எப்போ சம்மர் லீவ் ஆரம்பிக்குது..?” என்றார்.
‘இன்னும் ஒருமாசத்துக்கு ஸ்கூல் இருக்காம்.. ஏன் கேக்குறிங்க..?” என்றான்.
‘நந்துக்கு லீவ் விட்டதும்.. ரெண்டுபேரும் எங்கையாவது வெளில போய்ட்டுவாங்க மாறா..” என்றார்.
‘எத்தனை முறை கெஞ்சிபார்த்துட்டேன்.. இன்னும் அவ கால்ல மட்டும்தான் விழல.. எங்க கூப்ட்டாலும் வரமாட்டுக்கிறா.. நான் என்ன பண்றது..?” என்றான் வருத்தமாக..
‘ஏன்..?” என்றார் பதட்டமாக.
‘அம்மும்மா.. அப்பாவை ஏத்துக்க முடியாம தவிக்கிறாங்க.. தேவிம்மா எங்கம்மாக்காக அவங்க அம்மா வீட்ல சண்டபோட்டதுமில்லாம.. அப்பாக்கு திரும்ப நெஞ்சுவலியேது வந்திடுமோன்னு பயத்தில இருக்காங்க.. கொஞ்சநாளா எங்கப்பாவும் ரொம்ப சோர்ந்து தெரியுறார்.. இந்த சூழ்நிலையில என்னால எங்கையும் வரமுடியாது.. என்னை மன்னிச்சிடுன்னு அழறா..” என்றான் வேதனையாக.
‘நாங்க நல்லாத்தான் இருக்கோம்னு.. நீ சொல்ல வேண்டியதுதான..?” என்றார் அவசரமாக.
‘ஆமா.. உங்க பொண்ணு பச்சகுழந்தை.. நான் சொன்னதும் நம்பறதுக்கு.. அவசொல்றதுக்கு தகுந்தா மாதிரி நீங்களும் சோர்ந்துதான் தெரியுறிங்க.. ”
‘சாரி மாறா.. என்னால உன் சந்தோசமே போச்சில்ல..?” என வருந்த..
‘சாரின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதிங்க ராஜய்யா.. நாம கட்டிக்கிறபொண்ணு.. என் அக்கா தங்கைகிட்ட நல்லபடியா நடந்துக்குவாள..? அப்பாம்மாவை மதிப்பாளா..? வசதி இல்லாதப்ப இருந்த சந்தோசம்.. வசதிவாய்ப்பு வந்ததுக்கப்புறமும் நிலைக்குமான்னு ரொம்ப பயந்திட்டிருந்தேன்..
இதுவரைக்கும் பணத்தை பத்தி ராஜி என்கிட்ட பேசுனதே இல்ல.. அதில்லாம அவ சம்பளத்தையும் எங்கப்பாகிட்டதான் கொடுத்திடறா.. அவளுக்கு எல்லாரும் சந்தோசமா இருக்கனும்.. அதுமட்டும்தான் அவ ஆசை..“ என பெருமையாக சொல்லி..
‘என் ராஜய்யா எனக்காகவே இப்படி ஒரு தேவதையை பெத்து கொடுத்திருக்கிங்க.. இதுக்குமேல என்ன வேணும் எனக்கு..?” என்றான் நிறைவாக.
குமார் டீ வாங்கி வரவும்.. ‘கொடுங்க நான் கொடுக்கிறேன்..” என்று டீ யோடு உள்ளே வந்தாள் லாவண்யா.
‘யப்பா.. சாமி.. அப்படி என்னதான் பேசுவாங்களோ இரண்டுபேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்கனா உலகத்தையே மறந்திடுவாங்க..” என்றவள்…
‘ம்ம்.. டீ குடிச்சிட்டு இன்னும் தெம்பா பேசுங்க.. ஒருநாள் இல்ல ஒருநாள் உங்ளுக்கே தெரியாம.. நீங்க பேசுறதை ரெக்கார்ட் பண்ணி கேக்கப்போறேன்..” என மிரட்ட..
‘ஒரு ஆம்பிளை மனசு இன்னொரு ஆம்பிளைக்குத்தான் தெரியும்.. இதெல்லாம் நீ எதுக்கு கண்டுக்குற..?” என்றான் செல்ல முறைப்போடு.
‘அப்படியே பயப்படாத மாதிரியேஏஏஏ நடிக்கிறது..” என அளவம் காட்டி..
‘கவலைப்படாதிங்க மாமா.. அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்..” என்றாள் சிரிப்போடு.
‘ஈஈ.. என இளித்தவன்.. ‘சரி வா போலாம்..” என்றான்.
‘ஈஈஈ.. என தானும் இளித்து.. ‘டீ குடிங்க போலாம்..” என்றாள்.
—————————————-
சோபனாவின் வளைகாப்பிற்க்காக.. ராஜன் தேவி.. வந்திருக்க.. அக்கம் பக்கத்தினர் மற்றும் மாறன் குடும்பத்தினர் அனைவரும் ராஜனைத் தவிர்த்து.. ஒரே மாதத்தில் ஐந்துகிலோ வரை இளைத்திருக்கும் தேவியைத்தான் நலம் விசாரித்தனர்.
ஒருமாதத்திற்கு பிறகு.. தேவியைப் பார்த்த அமுதாவும் வெகுவாக அதிர்ந்துபோனார். அனைவரிடமும் நன்றாக பேசிய தேவி.. அமுதாவின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.
ஒருமாதம் கழித்து இன்றுதான் தேவியைப் பார்த்த நந்தினியும்.. ‘தேவிம்மா.. என்ன இப்படி இளைச்சிருக்கிங்க..?” என்றாள் பதட்டத்தோடு.
‘எனக்கொன்னும் இல்ல நந்து.. டையட்ல இருக்கேன்.. அதான் கொஞ்சம் இளைச்சிருக்கேன்.. எவ்ளோ குண்டா இருந்த நான்.. இப்போ எப்படி சிம்ரன் மாதிரி ஆகிட்டேன் பார்த்தியா..?” என்றார் சிரிப்போடு.
[the_ad id=”6605″]
‘டையட்டும் வேணாம் ஒன்னும் வேணாம் முதல்ல உடம்பைப் பாருங்க..” என்றாள் அக்கறையாக.
‘உத்தரவுங்க பெரிய மனுசி..” என்று சிரிப்போடு தேவி சொல்ல.. கலகலப்போடு அனைவரும் சோபனாவின் வீட்டிற்க்கு கிளம்பினர்.
சோபனாவின் வளையல்போடும் விழா முடிந்ததும்.. அனைவரும் சாப்பிட அமர.. ராஜனும் தேவியும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டு எழுந்ததை கவனித்திருந்த அமுதா..
இனி உனக்கு பிடிச்சதை சமைச்சி சாப்பிடனும்.. இல்ல நீ என்ன சாப்பிடறயோ.. அதேதான் நானும் சாப்பிடுவேன்.. நான் சாப்பிடாததை தேவியும் சாப்பிடமாட்டா.. என அன்று ராஜன் சொன்னது நினைவில் வர.. அதுதான் இரண்டுபேரும் இப்படி இளைச்சிருக்காங்களா..? என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்யிறாங்க.. என நினைத்து பெரும் வேதனைக்குள்ளானார்.
வளைகாப்பு முடித்து சோபனாவை அழைத்துக்கொண்டு காரில் வந்துகொண்டிருக்க.. ‘அம்மும்மா.. காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்துட்டேனா.. தூக்கம் வருது உங்க மடியில படுத்துக்கிறேன்..” என சொல்லி அமுதாவின் மடிமீது நந்தினி தலைசாய்ந்தாள்.
மாறன் வீட்டிற்க்கு வரும்முன்னே.. ராஜனின் கார் மாறன் வீட்டை அடைந்திருக்க.. ‘வீட்டுக்கு கிளம்பலாம் தேவி.. மாறன்கிட்ட நான் போன்ல சொல்லிக்கிறேன்..” என்று ராஜன் சொல்ல..
‘கொஞ்சநேரம் பொறுத்திருங்க பின்னாடியேதான் வந்திட்டிருந்தாங்க.. நான் நந்துகிட்ட ஒன்னு கேக்கனும்…” என்று தேவி சொல்ல.. சற்று நேரத்தில் அனைவரும் வந்திறங்கினர்.
‘அம்மும்மா.. எனக்கு டையர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன்..” என சொல்லி நந்தினி உள்ளே போக எத்தணிக்க..
‘ஒரு நிமிசம் நந்து..” என்றார் தேவி. நந்தினி நிற்க்கவும்.. ‘ஏங்க.. நீங்க கொஞ்சம் அந்தபக்கம் போங்க..” என ராஜனை அனுப்பிவைத்தவர்..
அமுதாவின் அருகிலிருந்த நந்தினியிடம் வந்து.. ‘இந்த மாசம் தலைக்குளிச்சிட்டியா..?” என்றார் எதிர்பார்ப்போடு.
யோசித்தவள்.. ‘இல்ல தேவிம்மா.. இருபது நாளுக்கு முன்னமே ஆகவேண்டியது..” என நந்தினி இழுக்க.. நந்தினியை கட்டியணைத்த தேவி..
‘குமார்.. போய் செல்லாயி பாட்டியை கூட்டிட்டு வாடா..” என்றார் சந்தோசமாக.
செல்லாயி என சொன்னதும் அனைவர் முகத்திலும் பிரகாசம் பிறக்க.. அங்கு வந்த செல்லாயி பாட்டியும் நந்தினியின் கர்பத்தை உறுதிசெய்ய.. சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனார்கள் அனைவரும். அமுதாவிற்கு வாழ்வில் அனைத்தும் சாதித்துவிட்ட உணர்வு.
ஒருவர் மாறி ஒருவராக நந்தினியை கொஞ்சிக்கொண்டிருக்க.. ஏக்கத்தோடு மனைவியை பார்த்திருந்த மாறனிடம்.. ‘அன்னைக்கு இப்பபடித்தான என் பொண்டாட்டிகிட்ட என்னை நெருங்கவிடாம செய்திங்க..? இப்போ நல்லா அனுபவிங்க.. எப்படியும் நைட் வரைக்கும் என் தங்கச்சி உங்க கைக்கு சிக்காது போல..” என்று கிசோர் சிரிப்போடு சொல்ல..
‘மாமா..” என வெக்கப்பட்டவன்.. ‘நான் ஒன்னும் அப்படியில்ல.. என சோபாவில் போய் தனியே அமர்ந்துகொண்டான் வீம்பாக.
‘பார்க்கலாம்.. பார்க்கலாம்.. இன்னும் எவ்ளோ நேரம் இங்கயே உக்கார்ந்திருக்கிங்கன்னு..” என்று முரளியும் வாற..
‘நீயுமா முரளி..” என அன்போடு சலித்துக்கொண்டவன்.. எழுந்து தனியே நின்றிருந்த ராஜனிடம் போய் நின்றான் வெக்கத்தோடு.
செல்லாயி விசயமெல்லாம் தெரியாத ராஜன்.. ‘என்னமாறா.. எதுக்கு அந்த பெரியம்மா வந்திட்டு போறாங்க..? நந்தினிகிட்ட எல்லாரும் என்ன கேக்குறாங்க..? தேவிவேற நந்துவை பார்த்துட்டுதான் வருவேன்னு சொல்லிட்டிருந்தா..” என கேக்க..
‘அதுவா ராஜய்யா.. உங்களுக்கு வயசாகிடுச்சி..” என்றான்.
‘ம்ம்..?” என யோசித்தவர்.. ‘ம்ம்.. அப்படியா..?” என்றார் சந்தோசத்தோடு.
‘ம்ம்..” என்று வெக்கத்தோடு ஆமாம் என்பதுபோல் மாறன் தலையசைக்க..
மருமகனை கட்டித்தழுவிய ராஜன்.. ஆவலோடு அமுதாவைப் பார்க்க.. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க முகத்தில் சந்தோசம் பூத்துக்குலுங்க.. கூட்டத்தில் இருந்து சற்று தள்ளி நின்றபடி பெருமையாய்.. கண்ணிமைக்காமல் தன் மகளையே வெறித்துப் பார்த்திருந்தார் அமுதா. அமுதாவின் இந்த சந்தோசத்தில் ராஜனுக்கு தன் சந்தோசம் தொலைந்து.. மனம்முழுதும் பயமே ஆட்கொண்டது.
மெல்ல நந்தினியருகே சென்று.. ஆர்பாட்டமில்லாமல் கட்டியணைத்து.. அழுத்தமாய் நெற்றிமுத்தம் பதித்து.. வழக்கம்போல் கன்னம் நீவி திருஷ்டி கழித்து.. ‘கொஞ்சநேரம் போய் ரெஸ்ட் எடுடா..” என்றார் நிறைந்த சந்தோசத்தோடு.
தேவியும் சுமதியும் அதையே சொல்ல.. நந்தினிக்கும் உடல் சோர்வாய் உணர.. தனதறைக்கு போனாள்.
‘தம்பி.. “என்று மாறனை அழைத்து தனியே சென்ற அமுதா..
‘ஏன் தம்பி என்னை இப்படி சித்திரவதை செய்றாங்க..?” என்றார்.
பதறிய மாறன்.. ‘யாருங்கத்தை..?” என்றான்.
‘ரா.. ராஜனும் தேவியும்..” என்றார் உள்ளே போன குரலில்.
‘அவங்க என்ன செய்தாங்க..?” என்றான் பதட்டத்தோடே.
‘அன்னைக்கு ராஜன் சொன்னாரில்ல..? நான் சரியா சாப்பிடலன்னா நான் சாப்பிடறதையேத்தான் சாப்பிடுவேன்னு.. சொன்னமாதிரியே ராஜனும் தேவியும் வெறும் தயிர்சாதம்தான் சாப்பிடறாங்கபோல.. எதுக்கு இதெல்லாம் செய்திட்டிருக்காங்க..? என்னை எதுக்கு நினைக்கிறாங்க..? இந்த அமுதாவாலதான் இப்படி ஆகிட்டாங்கன்னு அவங்க பிள்ளைங்களும் ஊராறும் நினைக்கனுமா..? என்னை அசிங்கப்படுத்துறதை இவங்க நிறுத்தவே மாட்டாங்களா..?” என்றார் வேதனையாக.
தன் வருத்தத்தை மறைத்தவன்.. ‘அவங்க எப்படியோ போகட்டும்.. இல்ல… உங்களாலதான் அவங்க அப்படி சாப்பிடறாங்கன்ற வருத்தம் உங்களுக்கிருந்தா.. ராஜய்யாகிட்ட பேசி அதை நான் சரி செய்திடறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி உங்ககிட்ட எனக்கு ஒரு விளக்கம் வேணும்..” என்றான் அமுதாவை தீர்க்கமாய் பார்த்தபடி.
[the_ad id=”6605″]
என்ன என்பதுபோல் அமுதா பார்க்க.. ‘கொஞ்சநேரம் ராஜியோட போய் ரெஸ்ட் எடுங்க.. நான் ராஜய்யாவை அனுப்பிட்டு வந்து உங்களை பார்க்கிறேன்..” என்று அமுதாவை உள்ளே அனுப்பி.. ராஜனிடம் வந்தவன்..
‘உங்களுக்கென்ன இப்போதான் இளைமை திரும்புதா..? உடம்பு இருக்கிற லட்சணத்துக்கு என்ன சாப்பாடு சாப்டுட்டிருக்கிங்க..? இவர்தான் இப்படின்னா நீங்களாவது அவருக்கு எடுத்து சொல்றதை விட்டுட்டு.. நீங்களும் ராஜய்யாவோட சேர்ந்திட்டு என்ன இது தேவிம்மா..?” என்றான் கோபமாக.
‘நான் என்ன செய்யிறது மாறா..? நல்ல சாப்பாடு சாப்பிடறதை நினைச்சா எனக்கு அசிங்கத்தை சாப்பிடறமாதிரி இருக்குன்னு சொல்றார்.. அவரை விட்டுட்டு என்னால எப்படி..?” என்று தேவி கண்ணீர் விட..
எத்தனை கோபமிருந்தாலும் அன்னைக்கு நீங்க மயக்கம்போட்டதும்..” என்று தேவி அருகிலிருக்கவும் பேச்சை நிறுத்தியவன்.. அர்த்தமாக ராஜனைப் பார்த்து.. எப்படி கதறினாங்க தெரியுங்களா..?
உங்க நிம்மதிக்காகத்தான் சொந்த ஊரைவிட்டுட்டு இத்தனை வருசம் தள்ளியிருந்திருக்காங்க.. உங்க வாழ்க்கை வீணாகிடக்கூடாதுன்னுதான் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வந்து தேவிம்மாகிட்ட பேசினாங்க..
மொத்தத்தில உங்க சந்தோசத்திலதான் அவங்க நிம்மதியைத் தேடிட்டிருக்காங்க.. அது உங்களுக்கு புரியுதா இல்லையா ராஜய்யா..?” என கோபமாக கேட்டாலும் தன் அத்தையின் மனமறிந்த மாறனின் கண்களும் கலங்கியது..