அலரின் பார்வை அவனை ரசித்து பார்த்தாலும் அதில் ஒரு ஆராய்ச்சியும் கூட இருந்தது. மனது சொன்னது அவன் சிரித்தாலும் அந்த சிரிப்பு என்னவோ அவன் மனம்விட்டு சிரிக்கும் மகிழ்வான சிரிப்பு போல தோன்றவில்லை. இதற்கு அவன் அதிகம் சிரித்து அலர் பார்த்ததில்லை ஆனாலும் மனம் சொன்னது.
அவர்கள் எல்லோரும் சென்றதும், உறவுகள் சேதுபதியிடம் சொல்லிக் கொண்டு செல்ல உள்ளே வந்தனர். சேதுபதியிடம் அதிகம் யாரும் பேச மாட்டார்கள் ஆனாலும் சில சொந்தங்கள் அதெப்படி பெரியவன் இருக்கும் போது சின்னவனுக்கு பேசுவீங்க என்று கேள்வி கேட்டு விட்டனர்.
தாரகன் அங்கே தான் இருந்தான் ஆனால் சேதுபதி கவனிக்கவில்லை. வேறு கேள்வி என்றால் பதில் சொல்லியிருக்க மாட்டார். ஆனால் அவரின் பேரனுக்காக அவரிடமே சண்டையிடுகிறார்கள் அப்போது பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறார் தானே அதனா சொன்னார் டாக்டர் பொண்ணு நிறைய படிச்சா பெரிய வேலை இருக்குற பையனா எதிர்பார்த்து இருக்கலாம் அதனால சட்டுன்னு விசாகன் தோணினான் என்ஜினியருக்கு படிச்சிருக்கான் கூட பெரிய ஷோ ரூம் வெச்சிருக்கான் இளவரசி சம்மதம் சொல்லனுமேன்னு சொன்னேன்
ஜெகதா முகத்தை தூக்கி வைத்து இருந்தவர் எல்லோரும் செல்லவும், சேதுபதியிடம் சண்டைக்கு வந்து விட்டார் எப்படிப்பா நீங்க இப்படி பண்ணலாம், நேத்து வந்த பேத்தி உங்களுக்கு முக்கியமா போயிட்டா அவ சம்மதம் சொல்லணும்னு அவசரமா விசாகன் பேரை சொல்லி, இப்போ என்ன ஆச்சு பெரியவன் இருக்க சின்னவனுக்கு எதுக்குன்னு கேட்டு அதுக்கு நீங்க ஒரு பதில் சொல்லி, பெரியவன் மனசு என்ன பாடுபடும் என்று நிற்க
மா விடுங்க என்று தாரகன் தான் சமாதனப் படுத்தும்படி ஆகிற்று அவர் பேத்திக்கு அவர் மாப்பிள்ளை பார்த்தார் அதுல நான் பொருந்தலை அவ்வளவு தான் என்று சாதாரணம் போல அவன் சொல்ல
சேதுபதி அவனை தான் பார்த்தார்… வீட்டினர் முன் பேச விருப்பமில்லை தனியாய் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தார். தாரகன் புரிந்து கொள்ளுவான் என்று நினைத்தார் அவனுக்கு கோபம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை
அந்த நிமிடம் அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று தான் ஓடியது
பின் விசாகனிடம் தாத்தா சொன்னதும் நீ எதுவும் மனசுல இளவரசியை நினைசுக்களையே என்று கேட்க வேறு செய்ய
போடா டேய் யார் சொல்லியிருந்தாலும் உன் கல்யாணம் முடியாம நான் செஞ்சிருக்கவே மாட்டேன் , இங்க வந்து முடியாதுன்னு தான் சொல்ல இருந்தேன் அதுக்குள்ள என்ன என்னவோ நடந்துடுச்சு
என்னோட எண்ணமெல்லாம் நீதான் இருந்த இளவரசி கல்யாணம் எல்லாம் எனக்கு தோணவேயில்லை என்றான் விசாகன்
அதன் பின் தான் மனது சற்று ஆசுவாசமானது , கல்யாணம் அவனுக்கு ஒரு விஷயமில்லை, இப்போது இதோ உறவுகள் கேட்கின்றனரே பெரியவன் இருக்க சின்னவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று
இந்த விஷயம் தான் குறைத்து மதிப்பிடப் விஷயம் உறவுகள் முன் கீழிறங்கி விட்ட விஷயம் மனதில் சொல்லொணா வலியை கொடுத்து இருந்தது.
இப்போது இன்னொரு விஷயம் அவனுக்கு தெரிந்தாக வேண்டியிருந்தது. அந்த கண்ணாடி ஜாடியை யாராவது தள்ளி விட்டனரா இல்லை தானாய் விழுந்ததா என்று
அகிலன் அலரை விட ஒரு வயது பெரியவன், நான் உடைக்கலை அலர் தான் உடைச்சா ஆனா நான் யார்கிட்டயும் சொல்லிக்கலை, யாரும் கவனிக்கலை நான் தான் கவனிச்சேன்
அவ பேசிடக் கூடாது பேசினா பிரச்சனை வேற மாதிரி ஆகும்னு தான் நான் பேசிட்டேன் இவ பேசி நீயேன் பேசறன்னு அப்புறம் அந்த கஜேந்திரன் இவளை வம்பு செய்வான்னு நான் பேசிட்டேன் என்றான்.
அப்போ என்னகாக பேசலை உன் தங்கச்சி பேசக் கூடாதுன்னு பேசியிருக்க என்று தாரகன் பேச்சை மாற்ற முற்பட
மாமா உங்களுக்கு தெரியாததில்லை ஊம் ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அந்த கஜேந்திரன் மண்டையை உடைச்சிட்டு வர்றேன் என்று ரோஷமாய் பேச
ப்ச் எனக்கு தெரியாதாடா உன்னை என்றவன், பரவாயில்லை வளர்ந்துட்ட, சரியா ஹேண்டில் பண்ணிட்ட, அவ வேற ஒரு அதிகப் பிரசங்கி அன்னைக்கு கிரௌண்ட் லயே அவளை கண்ட்ரோல் பண்ண முடியலை, இல்லை தேவையில்லாத பேச்சாகியிருக்கும் என்று தாரகன் சொன்னவன்
வேற யார்கிட்டயும் சொல்லாதடா அப்புறமா அவளை தட்டி வைப்போம் எல்லா இடத்துலயும் பேசிடக் கூடாது. அவளுக்கு இன்னும் நம்ம ஆளுங்களை புரியலை என