மனதிலோர் மோகன ராகம் அத்தியாயம் – 1 அழகிய பச்சையும் நீலமும் சேர்ந்தாற் போல் அப்பழுக்கின்றித் தென்பட்ட அந்தக் கடல் தன் வெண்கரங்களை அடிக்கடி கரை பக்கமாக நீட்டி, அங்கே நடக்கும் நிகழ்வுகளை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. பின்னே பச்சையும், நீலமும் அளவாய் கலந்து டார்குவிஸ் வண்ணத்தில் காண்பவர் மதிகளை மயக்கி தன்வசப்படுத்தும் வல்லமை தனக்கு மட்டுமே உள்ளதென இறுமாப்புடன் ஆர்ப்பரித்த கடலுக்கு, அங்கே கரையில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. தன் அழகுடன் போட்டி போடும் விதமாக அந்த வெண்மணலில் திடீரென முளைத்திருந்த திருமணச் சடங்கு நடைபெறும் மேடையைக் காணக் கடலுக்குமே பெரு வியப்பு. மெல்லிய […]
Readmore