Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 14.1

“நூத்தி ஏழு… நூத்தி எட்டு” அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி… அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்… “மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு” அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலும் தன்னை வெறுப்பேற்றும் விதமாக வேறு சேனலை மாற்றாமல் அந்த மினிஸ்டரின் இறப்பு செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்… “இப்ப நீ அத மாத்தாம இருந்தன்னு வை, கத்திய எடுத்துக் கழுத்துலச் சொருகிடுவேன்” […]

Readmore

அத்தியாயம் – 13.2

‘மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்…’ “என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?” நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்… “ஆமா மா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு […]

Readmore

அத்தியாயம் – 13.1

வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான்… அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்… ஆதவனை பார்த்த ஜெயன், “மார்னிங் சார்” அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது… “உதய்?” “ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு” தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்… ஐ.சி.யூ […]

Readmore

அத்தியாயம் – 12.2

“என்னடா ஆதி… மாப்பிள்ளை மாதிரி வேஷ்டி சட்டைல ஜம்முன்னு வந்துருக்க” சிகப்பு முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு அவனை போலவே அடங்காத அவனதுக் கேசத்தை ஒரு கையில் அடக்கியபடி மற்றொரு கையால் அந்த வெள்ளை வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைத்தவனை பார்த்த ஷீலாவிற்கு இப்பொழுதே அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கும் ஆசை மேலோங்கியது… “ஒரு கல்யாண வீட்டுக்கு போனேன் ஷீலா எங்க அந்த வெளங்காதவன் வர்றேன்னு நேத்து தான் சொன்னான் ஆள […]

Readmore

அத்தியாயம் – 11.2

“ஆதி என்ன சொன்னான்?” “வழக்கம் போல அவரை மதிக்காம அனுப்பி விட்டுட்டான்” உதய்யின் உதடுகளில் மெலிய புன்னகை அரும்பியது… “ம்ம்ம்ம்ம்” “என்னடா கதையா சொல்லிட்டு இருக்கேன் அவன் ஒரு லூசுடா இப்ப இப்புடி இருப்பான் நாளைக்கு உனக்கு எதிரா எதாவது காட்டுன ஒடனே மாறிடுவான் எத்தனை நாள் தான் அவரை அவன் முன்னாடி வராம தடுக்க முடியும்னு நினைக்கிற?” – ஆதவன் “டேய் அவன் லூசு தான் அதுக்காக அவன் முட்டாள் இல்லை போகட்டும் எவ்வளவு தூரம் போக […]

Readmore

அத்தியாயம் – 11.1

தலையை அழுத்தி கண்களை இருக்க மூடி நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்திருந்த உதய் என்ன நினைக்கின்றான் என்று தெரியாமல் அடுத்த என்ன வேலை செய்ய என்று தெரியாமல் அவனுக்கு சற்று தள்ளி நின்று கடந்த அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி… நேரம் செல்ல செல்ல தன்னை அறியாமல் தூக்கம் வர அதை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தாள்… ‘காலைல வந்த ஒடனே தூங்குறவன் கொஞ்சம் வீட்டுல தூங்கி எந்திரிச்சிட்டு தான் வர்றது… இவனை பாத்து […]

Readmore

அத்தியாயம் – 10.2

“நைட் நேரத்துல யாராச்சும் ஒர்க் அவுட் பண்ணுவாங்களா” “காலைல எழுந்திரிக்க முடியல அது தான் இப்ப பண்றேன்… ஏன் டா இப்டி எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்குட்டே இருக்க போர் அடிக்கலயா உனக்கு…” ஆதவன் உதய்யின் கெஸ்ட் ஹவுசில் போடப்பட்டிருந்த டம் பெல்ஸ்ஸை (dumbbells) எடுத்து வேலை பார்த்துக்கொண்டே கேட்டான்… இயந்திரமாய் வாழ்ந்த பின்பும் இயற்கை நிரம்பாத செயற்கை வாழ்வின் வெறுமையை நொடி பொழுதும் அனுபவித்த வண்ணம் இருந்தது அவன் இதயம் அதன் பிரதிபலிப்பே இந்த வேலையை […]

Readmore

அத்தியாயம் – 10.1

அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு… நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது… மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற சாயம் தரையில் பதித்திருந்த இளம் சாம்பல் நிற ஓடுகளுடன் போட்டி போட்டு அழகாய் மின்னியது… தளத்தின் மேற்கூரைகள் அலங்கார விளக்குகள் பளிச்சிடும் ஆதவனுக்குப் போட்டியாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது… குளுமை அள்ளித்தரும் விதமாக ஆங்காங்கே பொறுத்தப்பட்டிருந்த செடிகள் […]

Readmore

அத்தியாயம் – 9.2

உணவை ஆர்டர் செய்து காத்திருக்க யாழினி மட்டுமே பேசினாள் உதய் கேட்க மட்டுமே செய்தான் ஏனோ அந்த பேச்சு அவனுடைய மனதிற்கு அமைதியை வரி வரி கொடுத்தது… அவன் கண்களுக்கு அவள் ஒரு அழகிய பதுமையாய் தெரிந்தாள் அதற்கு அழகு சேர்க்கும் விதமாக பேசும் பொழுது சிரிக்கும் அந்த சிவந்த இதழ்கள், வசீகரிக்கும் கண்கள் என்று அவனின் மனதை பெரிதும் சலனப்படுத்தியது… சாதாரண பெண் தான் ஆனால் அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு அவனுக்கு அந்த வெள்ளந்தியான […]

Readmore

அத்தியாயம் – 9.1

ம்ம்ம் அதே மாதிரி கடந்த பதிவுல மணிமேகலை-கு ஆதி ரோலக்ஸ்-னு வச்ச பேரு, போன வருஷம் நான் கதை எழுதுனப்ப வச்சது… (ஆமா இந்த கதை நான் எழுத ஆரமிச்சது ஒரு வருஷம் முன்னாடியே… ஆனா இப்ப தான் வெளிய விடுறேன்) விக்ரம் படத்தை பாத்து வச்சேன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ்… ?? வெகு நாள் பிரிவிரிக்குப் பின் வேகத்தாலும் க்ரோததாலும் நிகழ்ந்த சந்திப்பில் கோவம் கண்களை மறைந்திருந்தாலும் உயிரினும் மேலாய் நினைத்த நண்பனை இத்தனை வருடங்கள் கழிந்து […]

Readmore