அத்தியாயம் 3 அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க செல்வம் திரும்பினான். பூக்களுக்கிடையே தோன்றிய தேவதை என தெரிந்தாள் அகல்யா. செல்வத்திற்க்கு மெய் சிலர்த்தது அவளின் அழகு. அருகில் வந்த அகல்யா “அம்மா உங்க கால்ல விழ சொன்னாங்க என காலில் விழுந்தாள்”. “அச்சோ பார்மாலிட்டிஸ்லா வேணாங்க நீங்க போய் படுத்துக்கோங்க, நம்ம தூங்கலாம்”. இருவரும் ஆளுக்கொரு புறம் திரும்பி படுத்துக்கொண்டனர். செல்வத்திற்க்கு துளி கூட தூக்கமில்லை. “என்ன பண்ணிட்டோம் நம்மளே போய் தூங்குன்னு சொல்லிட்டோமே இப்ப […]
Readmoreஅத்தியாயம்-15 மனதிற்கு சந்தோசம் என்றாலும் கஷ்டம் என்றாலும் நம் மனம் தேடும் இடங்களில் ஒன்று கோவில், கோவிலுக்கு செல்லும் முன் ஆயிரம் எண்ணங்கள் மனதினில் ஓடினாலும் இறைவன் சன்னிதானத்தின் முன் கைகூப்பி நிற்கையில் மனம் வெற்றுக் காகிதம் போல் இறைவன் ஒருவனையே மனதினுள் நினைக்கும். அது போல் நேத்ராவின் தாய், தந்தை, அண்ணனுடன் விநாயகர் சன்னிதியில் கைகூப்பி சிப்பி இமைகளை மூடி நின்றிருந்தாள் நேத்ரா. கத்தரிப்பூ வண்ணத்தில் மெல்லிய தங்கச் சரிகை வைத்த பட்டுப்புடவையில் எளிமையான அலங்காரத்தில் […]
Readmoreஅத்தியாயம்-11 நளன் அவன் மடிக்கணிணியுடன் அவன் பால்கணியில் அமர்ந்து நேத்ராவைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தான் சமூக வலைத்தளங்களில்… “ஹே… வனிதா போன எடுக்க இவ்வளவு நேரமா, என்ன டி பண்ற” என்ற நேத்ராவிற்கு, “பேசுவ ம்மா பேசுவ… உனக்கென்ன, உங்க அம்மா நீ சாப்பிட்ட பிளேட்டை கூட உன்னைய கழுவ விட மாட்டாங்க, எனக்கு என்ன அப்படியா அம்மா கூட இருந்து அடுப்படிய ஒதுங்க வைக்க வேண்டாமா” என்ற வனிதாவிடம், “ஓஒ சரி சரி, சும்மா தான் […]
Readmoreஅத்தியாயம்-9 வெளிநாட்டில் பெண்களிடம் ‘யூ லுக் சோ பியூடிபுள்’ என்றால் ‘ஓ ரியலி? தேங்க்ஸ் சோ மச்’ என்பார்கள். அதே இந்தியப் பெண்களிடம் ‘யூ லுக் சோ பியூடிபுள்’ என்றால் ‘செருப்பு பிஞ்சிடும்’ என்பார்கள் நம் பெண்கள். ‘அழகைப் பாராட்டுவது தவறா?’ அடர் பச்சை வண்ண பரதநாட்டிய உடையில், பழங்காலத்து நடிகைகள் போல் மையிட்டிருந்த கண்ணும், திரும்பியிருந்த நெற்றி சுட்டியை ஒதுக்கி விட்ட தாழம்பூ விரல்களும், அதில் வைத்திருந்த சிவப்பு வண்ண மெகந்தியும், அளவான மூக்கில் மாட்டியிருந்த […]
Readmoreஅத்தியாயம்-8(2) மேக்கப் முடிந்தவுடன் “ஹ்ம் அழகா தான் இருக்க, சரி ஒழுங்கா ஆடுவியா” என்ற வனிதாவிடம் “என்ன டி இப்படி கேக்குற, நான் தான் முறையா பரதநாட்டியம் கத்துக்கிட்டேனே” என்றாள் நேத்ரா. “கத்துகிட்ட… இருந்தாலும்…. சரி ஆல் தி பெஸ்ட், நான் போயி பைக்கை எடுக்குறேன், நீ… என்று சுற்றிலும் தேடியவள், ஆஹ் இந்தா இந்த ஷாலை தலை மேல போட்டுக்கோ அப்புறம் பைக்ல போகும்போது மேக்கப் கலைஞ்சிரும்” என்ற வனிதா பைக்கை எடுக்கச் சென்றாள். […]
Readmoreஅத்தியாயம்-8(1) நான்கு வருடங்களுக்கு முன்பு… இடம்: டொராண்டோ அந்த டிசம்பர் மாதக் குளிரில் வெள்ளை வண்ணப் பனிப் பாறைகள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்க, கொட்டும் பனியில் இரு ஜெர்கின்கள் அணிந்தாலும், உடலை குளிர் தாக்கும் -40 டிகிரி குளிரில், கனடாவின் தேசிய விளையாட்டான ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர் நம் நளனும் வினோத்தும். அவர்கள் குழுவில் உள்ள வெளிநாட்டு நண்பர்களுடன் விளையாண்டு முடித்தவர்கள் அங்கிருந்த படிகளில் அமர்ந்து இளைப்பாறினர். தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டிருந்த […]
Readmoreஅத்தியாயம்-7(2) உள்ளே நான்கைந்து பேர் அழைக்கப்பட அடுத்த ஆளாக “நேத்ரா ஈஸ்வரமூர்த்தி” என்ற பெயர் அழைக்கப்பட்டது. நிதானமாக எழுந்தவள் ஆழ மூச்செடுத்து விட்டு, கிரே நிற பெயர் பலகையில் கருப்பு நிற வண்ண எழுத்துக்கள் மின்ன வினோத் சக்கரவர்த்தி என்ற பெயர் பலகையைத் தாங்கிய அறைக் கதவை திறந்தாள். அந்த கனமான கதவை தள்ளியவள் எதிரே கண்டது, அமர்ந்திருந்த இருவரை அதில் ஒருவன் வினோத், மற்றொருவன் நளன். இந்தியா கிளம்புவதற்கு முன்பே நளனுக்கு உதவுவதற்காக வினோத்தின் கம்பெனி […]
Readmoreஅத்தியாயம்-7(1) முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க, சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன் விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள் குளிர் காற்றினால், கைகளை மடக்கி மார்பின் […]
Readmoreஅத்தியாயம்-6 சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தங்கள் உடைமைகளுடன் கனடாவிலிருந்து இந்தியா வந்து இறங்கினர், நளன் மற்றும் வினோத் இருவரும். மனதில் ஏதேதோ எண்ணங்கள் பேரலையாய்த் தோன்ற, ஒருவித படபடப்புடன் நின்றிருந்தான் நளன். லக்கேஜ் பெல்ட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜை எடுத்து இரு ட்ரொலிகளில் அடுக்கிக் கொண்டிருந்த வினோத் நளன் அருகில் வந்தான். நளன் நின்றிருந்த விதத்திலேயே அவன் மனநிலையை புரிந்து கொண்டவன், அவன் தோள் தொட்டு கண்களை மூடி திறந்தான் ஆறுதலாக. “டேய் நளா, […]
Readmoreஅத்தியாயம்-6 சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்து பொட்டேடொ சிப்ஸை கொரித்துக் கொண்டே டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, ஒரு சீரியலின் பெயரைச் சொல்லி “அம்மா அம்மா ஓடி வா ***** சீரியல் போட்டுட்டான்”என்று கிச்சனில் இருந்த ரேணுகாவை அழைத்தாள். “இதோ வந்துட்டேன், அதுக்குள்ளே போட்டுட்டானா, ச்ச கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டான், இந்த தேங்கா சட்னியை தாளிக்க விடுறானா, படுபாவி” என்று சலித்தவர், “சரி இடைவேளை போடவும் வந்து தாளிப்போம்” என்று அடுப்பில் வைத்த தாளிப்பு […]
Readmore