Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – அத்தியாயம் -1

மாணிக்க விநாயகரும், உச்சி பிள்ளையாரும் அருள் புரியும் மலைக்கோட்டை மாநகர் திருச்சி! மேல்தட்டு மக்கள் வசிக்கும் தில்லை நகரில் அமைந்திருந்த, விசாலமான கார்டனுடன் கூடிய வீடு! “காக்க காக்க கனகவேல் காக்க “ என்று முணுமுணுத்துக் கொண்டே, பால்கனியின் மேல் சாய்த்து வைக்கப் பட்டிருந்த அந்த அலுமினிய ஏணியில் ஏறிக் கொண்டு இருந்தாள் அபி! அபி அமிர்தா! ஏணியில் எல்லாம் ஏறி பழக்கமில்லாத காரணத்தால், கால்கள் தடதட என்று நடுங்கின! பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ்மென்ட் வீக் […]

Readmore

Kamali Maduraiveeran’s கடைவிழியின் காதலில் 3

அத்தியாயம் 3 பாண்டியன் அலரியை விட ஒரு வயது மூத்தவன். நூறு கண்மை டப்பாக்களை ஒன்றாக வைத்து பூசியது போல் ஒரு நிறம், அதற்கு முடி சூடும் வண்ணம் முட்டைக் கண்கள், இளம் வயதிலேயே இளநரை கொண்ட தலைமுடிகள், வாயில் முன்னே உள்ள பற்கள் நான்கும் “என் முன்னாடி யாராவது வந்தீங்கன்னா, என் பல்ல வச்சு கண்டிப்பா இடுச்சுப்போடுவேன்” என்று பறைசாற்றும் அளவு முன்னே எத்திய பற்கள்,   ஆள் சற்று பருத்த உடம்பு தான். ஒரு […]

Readmore

Kamali Maduraiveeran’s கடைவிழியின் காதலில் 2

அத்தியாயம் 2   காலைக் கதிரவன், கிழக்கிலிருந்து சற்றே மேலெழும்பி தன் பொன் கிரகணங்களை பூமிக்கு பாய்ச்சிவிட்டு சற்றே இளைப்பாறிய நேரம். வெய்யோனின் ஒளிக்கீற்றால் பச்சைப் பட்டாடை உடுத்திய வயல்கள் இருமருங்கிலும் இளங்காற்றின் உதவியால் சரசரக்க, இருபுறங்களிலும் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கருப்பு நிற தார்ச்சாலை அழகாக காட்சியளித்தது.   அந்தத் தார்ச்சாலையில், கருப்பு நிற ராயல் என்பீல்டில், தன் வாகனத்தை ஒரு குதிரையாக நினைத்து, குதிரையின் வேகத்திற்கு இணையாக அதில் பயணித்துக் கொண்டிருந்தான் பரிதீரன்.   […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 34

அத்தியாயம்-34 ஏக்கர் கணக்கில் விரிந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஓட்டலின் புல்வெளி மைதானத்தில், விழா ஏற்பாடு செய்திருந்தனர். அருகே வண்ண விளக்குகளால் ஆன ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்க, ஆங்காங்கு வண்ண வண்ண நிறத்தில் பொடிகளும் தண்ணீரும் நிரப்பி வைக்கப் பட்டிருந்தன.    நேத்ரா, வனிதா மட்டுமல்லாது அனைவரும் நளன், வினோத் உட்பட அனைவரும் வெள்ளை வண்ண உடையில் காட்சிதர, வினோத் மேடை ஏறினான்.   அவனிடம் மைக் கொடுக்கப்படவும் “ஹாய் கைஸ், நீங்க கேட்ட மாதிரியே இந்த […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 33

அத்தியாயம்-33 கட்டிடத்தின் வேலைப்பாடுகளை ஆராய்ந்தவர்கள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பும் போது,   நளன் “ஓகே கைஸ், நான் ஒரு முக்கியமான கிளையின்ட மீட் பண்ணப் போறேன். சோ என் கூட யாராவது வாங்க” என்று விட்டு நேத்ராவை ஒரக் கண்களால் நோட்டமிட்டான்.   நேத்ராவோ நளனைக் கண்டு கொண்டவள் “ஏன் வாயைத் துறந்து நீ வா ஹனின்னு கூப்பிட மாட்டாரோ, நான் போக மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டு நின்றாள் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 32

அத்தியாயம்-32 பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் ஒரு நாள் மாலை நேரம் கடந்து ஆபீசில் இருந்தாள் நேத்ரா, ப்ராஜெக்ட் சம்மந்தமான சிறு வேலையை முடித்துவிட்டுப் போக எண்ணி அருணுடன் அமர்ந்திருந்தவள், வெளியில் இருட்டியதை உணரவில்லை.   திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருக்க கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள்.   பார்த்தவள் மணி எட்டு என்று காட்டவும் “ஓ ஷிட், இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? ஐ ஹவ் டு கோ” என்றவள் வேகமாக கணினியை […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 31

அத்தியாயம்-31   வனிதாவுடன் முதல் நாள் அலுவலகத்திற்கு வந்த நேத்ரா மனதினுள் பலவிதமான எதிர் பார்ப்புகளை நிரப்பி வந்தாள்.   அலுவலகத்தினுள் நுழைந்த உடன் வனிதாவோ “நேத்ரா நீ அங்க எச்.ஆர போயி மொதல்ல பாரு, அவங்க பார்மாலிட்டீஸ் எல்லாம் சொல்லுவாங்க, நான் என்னோட கேபினுக்கு போறேன் சரியா, என்ன ப்ரோப்ளம்னாலும் எனக்கு கால் பண்ணு” என்ற வனிதா அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள்.   எச்.ஆர் ரேகாவைச் சென்று பார்த்தவள் அவர் “வாங்க நேத்ரா, இப்போ […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 30

அத்தியாயம்-30      வனிதா சென்றவுடன் மலர்ந்த முகத்துடன், அவள் கொடுத்த பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் செல்பேசி ஒலியெழுப்பவும், அதில் ஒளிர்ந்த கார்த்திகேயனின் பெயரைக் கண்டவன்,   அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தவன், “அங்கிள், சொல்லுங்க அங்கிள்” என்றான்.   “என்னப்பா வினோத் ஆபீஸ்ல வேலையா இருக்கியா?” என்றவரிடம்,   “ம்ம் ஆமா அங்கிள், நீங்க சொல்லுங்க” என்றான்.   “அது… என்றவர் பின் நளன்… நளனை எங்கப்பா?” என்றார். “என்ன அங்கிள் அவன் வீட்டுக்கு வரலையா? […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 28

அத்தியாயம்-28 கண்களில் கண்ணீர் பெறுக, அழுகையில் மூக்கு விடைக்க உதட்டைக் கடித்தவள், அவள் காஃபியை சிங்கிள் ஊற்றிவிட்டு, கப்பைக் கிச்சனில் வைத்துவிட்டு நளன் உடைத்த பீங்கான் துண்டுகளை துடைக்க மாப் எடுத்துக் கொண்டு வந்து சுத்தம் செய்தாள்.    நேத்ரா செய்யும் வேலையை அதீத கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர வேறு எதுவும் கூறவில்லை நளன்.   சுத்தம் செய்தவள் அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.   நேராக அவள் வீடு வந்தவள் அவலறையினுள் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 27

அத்தியாயம்-27 சக்கரவர்த்தி என்ற பொன்னிறத்திலான பெயர் பலகையைத் தாங்கிய, கண்ணாடியால் ஆன கதவைத் திறந்தவள், “குட் மோர்னிங் சார்” என்றாள்.   அவளின் குட் மானிங்கை ஏற்றுக் கொண்டவர், “வாம்மா, நான் தான் வரச் சொன்னேன், ஒரு முக்கியமான விஷயம், ஆக்ட்சுவலா நான் இந்த விஷயத்தை மீட்டிங் அரேஞ்சு பண்ணி தான் சொல்லியிருக்கணும், இப்போ உனக்கு தான் முதல்ல சொல்றேன், ஈவினிங் மீட்டிங் அரேஞ் பண்ணிக்கலாம் என்றவர்    இனிமே இந்த கம்பெனியை எடுத்து நடத்தப் போறது […]

Readmore