விஷாலி அலறியபடியே கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். அந்தக் கட்டாரி தன் உடலில் இறங்கக் காத்திருந்தவளின் எதிர்பார்ப்பு வீணானது. அவள் மெள்ளக் கண்களைத் திறந்து பார்த்த போது பட்டி கட்டாரியை உயர்த்திப் பிடித்தபடி அவளையே குரூரப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “நீ என்ன கத்தினாலும் இங்க யாரும் வரப் போறதில்ல ரத்னாங்கி… வரவும் முடியாது! என்னோட படை இந்த இடம் முழுக்க காவல் இருக்காங்க…” அவன் தன்னைக் கொல்லப் போவதில்லை என்ற நம்பிக்கை மீண்டும் […]
Readmoreஅமாவசை இரவு அந்தப் பாசறையைக் கவ்வியிருந்த இருளை மேலும் இருட்டாகச் செய்துகொண்டிருந்தது. அங்கு நிலவிய பயங்கர அமைதியைக் கண்டு அஞ்சியவை போல விண்மீன்களும் தலைகாட்டாமல் கருப்பு வானில் ஒளிந்துகொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரிந்துகொண்டிருந்த சிறிய அகல் விளக்குகள் அந்த அடர்ந்த இருளைத் துரத்த முயன்று பரிதாபமாய்த் தோற்றுக்கொண்டிருந்தன. தனது இருண்ட கூடாரத்திற்குள் அமர்ந்து அந்த அடர்ந்த இருளை வெறித்துக்கொண்டிருந்தான் அவன். அருகில் நின்றவர்கள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். “நான் கேள்விப்பட்டது உண்மையா மகனே?” அந்தக் குரலைக் கேட்டவுடன் […]
Readmore