தமயா இரவு வேலைகளை முடித்தவாறே மனதில் கேள்வியும் பதிலுமாய் போராடிக் கொண்டு இருந்தாள்.
‘அய்யோ! வீரமாக அந்த தொரை கிட்ட செயின் இருக்குனு சொல்லிட்டேன், இப்ப போனதும் என் கிட்ட எப்பக் குடுத்தனு கேக்கப் போறாரே’என புலம்பினாள்.
அப்பிடி இப்பிடி நேரத்தை ஓட்டி விட்டு, தூங்குவதற்கு மாடிக்கு சென்றாள் மெதுவாக.
அவளின் தொரையோ பாயில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டே கால்குலேட்டரைத் தட்டினான்.
தமயா வேகமாக சென்று பாத் ரூமுக்குள் புகுந்தாள்.
‘ஹப்பாட!’என பெருமூச்சு விட்டவள், பிறகு வேலைகளை முடித்து வெளியில் வந்தாள்.
அவன் குரல் கேட்பது போல் இருக்கவே அப்பப்ப திரும்பி திரும்பி அவனையே பார்த்தவாறு, பாயை எடுத்து உதறி விரித்தாள்.
அவனோ அவள் வந்ததையே கண்டுக்காமல் அவனின் வேலையில் கருத்தாக இருந்தான்.
தமயா படுத்து கண்களை மூடினாலும் திரும்பி தொரையை பார்த்த வண்ணம் இருந்தாள், ‘என்ன ஒன்னுமே கேக்கல இன்னும், மறந்துட்டார..? இல்லல அது எப்பிடி மறக்கும்’என மண்டையே வெடித்தது அவளுக்கு.
நளனுக்கு வேலை முடியவும் எழுந்து அறையின் விளக்கை அணைத்த பிறகு, இரவு விளக்கைப் போட்டவாறு படுக்கைக்கு வந்தான்.
பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும்.
“நீங்க என்ன எதுமே கேக்கல இன்னும்..?”என்றாள் பல ஒத்திகைகள் பார்த்த பின்.
“என்ன கேக்க..?”என்றான் மேலோக்கிப் பார்த்தவாறு.
“தெரியாதது போல கேக்காதீங்க, அதான் என் கிட்ட எப்ப செயின் குடுத்தனு தான்”என்றாள் அவன் பக்கம் திரும்பி.
கட்டிலின் அந்த பக்கம், இந்த பக்கம் என படுத்திருக்க இருவரும், இடையில் பார்க்கும் தொலைவு தான்.
“நானாவ என் கிட்ட குடுத்தனு அம்மாட்ட சொன்னேன். நீ தானே சொன்ன அப்ப நீயா தான் சொல்லனும் எப்ப குடுத்தனு”
என்றான் கழுத்தை மட்டும் திருப்பி அவளை பார்த்தவாறு.
“ஓ! நானா சொல்லலைனா நீங்க கேக்க மாட்டீங்களா…?”என்றாள் குரல் உள்ளே சென்றவாறு.
அவளின் மனமோ’அடியேய்! இப்ப அவன் கேக்கனுமா..? வேணாம..?’என்று கேட்டது அவளை கடுப்பாக.
“சரி சொல்லு இப்ப, என்ன ஆச்சு..? மறுபடியும் காணாம போயிட்டா…?” என்றான்.
“இல்ல!”என அமைதியானவள் வேறு வழியில்லாமல், “காலையில் அம்மா வந்துச்சுல….”என நடந்ததைக் கூறினாள்.
“ஓ! அது ரொம்ப பொக்கிஷமான செயினு சொன்ன, கழட்டிக் குடுத்துட்ட.?”
“ம்ம்ம்! ஆனா என்ன செய்றது அம்மா நெலமையும் பாவமா இருந்துச்சு, அது என்ன யாருக்கோ செய்யவா கேட்டுச்சு, எனக்கு அத காசா மாத்தி தானே தரேனு சொன்னதால கழட்டிக் குடுத்துட்டேன்”
“ம்ம்ம்! நீயும் என்ன மாதிரி தான் போல..”
“புரியல”
“குடும்பத்துக்காக யோசிப்பதை சொன்னேன். அம்மா சொன்னாங்கனு யோசிக்காம குடுத்துட்டீயே..? இப்ப என் வீட்டில் கேக்குறாங்களே என்ன செய்றது..”
“அதான் என்ன சொல்றதுனு தெரியாம உங்களை மாட்டி விட்டேன், மன்னிச்சுடுங்க நான் வேணுனே சொல்லல”என்றாள் சிறிய குரலில்.
“சரி தூங்கு, பாப்போம்”
திரும்பியவள், சட்டென்று அவன் பக்கம் திரும்பி”உங்களுக்கு கோபமே வரலையா..?”
சரசு”அடியேய்! சங்கிலி அறுந்துப் போயிட்டா பத்த வச்சுப் போட சொல்லு, அது என்ன புதுசா தான் மாத்தனுமா..?”
“ஏம்மா! இந்த சங்கிலி அவ சடங்குக்கு இவன் போட்டது தான். ரொம்ப நாளா போட்டு இருக்கா, ஏற்கனவே நாலு தடவை பத்த வச்சாச்சும்மா”
“அதுக்கு என்ன அக்கா மாத்தி தரேன் ஆனா அந்த டிசைன் கெடச்சா பாக்குறேன் இல்லனா வேற வாங்கிட்டு வரேன்”என்றான் நளன் பேச்சோடு பேச்சாக.
“மாமா! மாமி செயின் உங்க கிட்ட தானே இருக்கு, அத கொண்டுப் போய் பாத்து வாங்குங்க, எனக்கு அது தான் புடிச்சு இருக்கு, ப்ளீஸ் மாமா”என்றாள் கனிகா.
நளன்”ம்ம்ம்! சரி சரி பாக்குறேன்” என்றான் பொதுவாக.
“என்னங்கடி! புதுசா வாங்குனா கிராம் கூடப் போகும், அதுக்கு இவன் நாலுக் காசுப் போட்டு தானே வாங்கனும். ஏப்பா நளனா! இத்தன நாள் தான் அக்கா, தங்கச்சி, தம்பினு கணக்கு பாக்காம செஞ்சுகிட்டு இருந்த, இனிமே உனக்குனு ஒருத்தி வந்துட்டா அவ கிட்ட கேட்டு செய் எதையும், சொல்லிப்புட்டேன்.” என்றார் சரசு.
“ஏம்மா! நீ தான் என்னைய பெத்தீயா..? அவனே எனக்கு மனசு நோகாம செய்றான் நீ என்னனா உம் மருமகளுக்கு சொல்லி குடுக்குறீயா..?
பாருடா தம்பி! அப்பன் தான் சரியில்ல ஏதோ நீயாச்சும் இருக்கனு நிம்மதியா இருக்கேன் அது புடிக்கல நம்ம அம்மாக்கு, இப்ப நான் என்ன கேட்டேன் பழைய சங்கிலியை மாத்திக் கேட்டேன். அது புடிக்கலனா விடு”என அந்த செயினை எடுக்கப் போனாள்.
“அக்கா! பேசாம இரு, நான் மாத்தி தரேன் போ”என அந்த செயினை கையில் எடுத்தான்.
“எனக்கு மகன் உசத்தி, மகள் உசத்தி இல்லடி எல்லாரையும் சமமா தான் பாக்குறேன். என்ன இருந்தாலும் அவன் இத்தன நாள் கஷ்டப்பட்டான் ஆள் இல்லா சொத்தா போனுச்சு ஆனா இப்ப அப்பிடியில்லல, அந்தா உள்ள இருக்காளே புதுசா வந்தவ இன்னைக்கு வாயை மூடிட்டு இருக்கா நாளைக்கும் இப்பிடியே இருக்க மாட்டா, அவ அவ புத்திசாலியா ஒதுங்கிப் போங்க சொல்லிப்புட்டேன். ஏதோ நல்லது கெட்டதுக்கு வாங்கனுமா, குடுத்தமானு அளவா இருந்துகிட்டு”என பொதுவாக சொல்லி விட்டு எழுந்து சென்றார்.
லலிதா தமயாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
‘இவ சாதரண ஆளில்லை தான் நாளைக்கு என்ன இன்னைக்கே பேசுவா தான்..’என மனதில் எண்ணியதை நேரம் கழித்து மரகத்திடமும் சொல்ல மறக்க வில்லை.
***
அறையில் தமயா கிளம்பிக் கொண்டு இருந்தாள்.
நளனுக்கு கேக்கலாம..? வேணாம..? என மாறி மாறி சிந்தனை வர இறுதியில்,
“இங்கரே!”என்றழைத்தான்.
கைப்பையை தேடிட்டி இருந்தவள்,
“ம்ம்ம்! என்னங்க தொரை..?”என்றாள் மனதில் இத்தனை நாள் அழைத்ததை அவளை மறந்து.
நளன் புருவத்தை சுருக்கி இங்குட்டும் அங்குட்டும் போனவளை கண்டு’தொரையா..?’ என யோசித்தான்.
அவளின் மனமோ அவளை ஓரிடத்தில் நிற்க செய்தது அவள் பேசியதை நினைவுக் கூர்ந்தவாறு.
அவனும் அதை கெப்பில் போட்டவாறு, “ஆமா! அம்மா சொன்ன மாதிரி, உனக்கு எதும் சங்கடம் இருக்கா, நான் கனிகாக்கு செயின் வாங்கி கொடுப்பதில்.?”என கேட்டான்.
“அச்சசோ! எனக்கு அது எல்லாம் ஒரு சங்கடமும் இல்ல, நீங்க சம்பாரிக்குறீங்க உங்க அக்காப் பொண்ணுக்கு வாங்கி தரீங்க அத போய் நான் என்ன கேட்பது.” என்றாள் உடனே.
“ம்ம்ம்! இல்ல, எனக்கு எதுவும் தோணல, அம்மா சொன்னதால உனக்கு எதுவும் மனசுல இருக்கானு கேக்காலமேனு கேட்டேன். அப்பிடி எதாச்சுனா என் கிட்ட நேரா கேளு, தப்பில்ல. நானும் விளக்கமா சொல்லிடுறேன். அக்கா வீட்டுக்காரு சும்மா வாய் பேச்சு தான். அவரால பெரிய உபயோகம் இல்ல அதுக்கு. பிஸ்னெஸ் பண்றேனு சொல்றார் ஆனா ஒன்னையும் காணும் அதுக்காக ரெண்டுப் பொம்பளப் பிள்ளைகளை எப்பிடியோ போனு விட முடியுமா..? எனக்கு வருமானம் இருக்கு சமாளிக்க அதனால செய்றேன் அவ்ளோதான்.” என்றான், ஏன் அவளுக்கு விளக்கி சொல்ல வேண்டும் என யோசிக்காமல்.
“ம்ம்ம்! இல்ல இல்ல நான் எதுவும் நினைக்கல. நாளைக்கே என் தம்பி நல்லா சம்பாரிச்சா எனக்காக இப்பிடி தானே செய்வான்”என்றாள் அவளுடைய ஏக்கத்தை வெளிப்படையாக.
நளன் தன் பைக் சாவியை எடுத்தவன், அவளிடம் திரும்பி”கவலைப்படாத, என் அக்கா புருசன் மாதிரி நான் பொறந்த வீட்டில் எதிர்ப்பார்க்க வச்சுட மாட்டேன் உன்னை”என கூறியவனை, நொடிப் பொழுது மின்சாரம் தாக்கியதுப் போல் பார்த்தாள்.
அதில் எத்தனை அர்த்தங்கள், எத்தனை இறுமார்ப்பு, புருசனுக்கே உரிய திமிர் அல்லவா..? ஒரு பெண்ணிற்கு முக்கியமான ஒன்று இது. பிறந்த வீட்டில் எதிர்ப்பார்ப்பின்றி குடும்பம் நடத்தும் புருசன் அமைந்தால் அது கொடுப்பினை தானே!
“மதிய நேரம் முடிஞ்சா வரீயா நான் சொல்ற நகை கடைக்கு, உன் ஹாஸ்பெட்டல் பக்கம் தான். ஏனா உன் செயின் எனக்கு நினைவு இல்ல, அது மாதிரி கனிகா ஆசப்படுது நீ வந்தா பாத்து எடுக்கலாம்”
“ம்ம்ம்! வரேன், எந்த கடை..?”
அவன் கூறவும் தலையை ஆட்டினாள்.
நளன் இறங்கி செல்லவும், தமயந்தியும் கிளம்பினாள்..
அந்த நோட் கண்ணில் பட, அதை திருப்பி பார்த்தாள்.
“நான் அறிந்தவரை என் குடும்பத்துக்கு செய்வதில் உனக்கு சங்கடமில்லைனு நம்புறேன்,
நன்றி”
……மணவாளன்…..
என எழுதி இருந்தான் அவளிடம் கேட்கும் முன்னே.
தமயாக்கு ஆச்சிரியமும், அதிசயமாக இருந்தது, எப்பிடி என் மீது இந்த நம்பிக்கை வந்தது என.
நளனுக்கு இரவு தமயா செயினை அம்மாவோட கஷ்டத்துக்காக கழட்டிக் கொடுத்ததால் அவனுக்கு தமயா அப்பிடி நினைக்க மாட்டாள் என்ற ஒரு நம்பிக்கை.
“நம்பிக்கைக்கு மிக்க மகிழ்ச்சி..”
……….இங்கரே……..
என பதில் எழுதினாள்.
அந்த இங்கரே வில் ஏதோ ஒரு மேஜிக் இருப்பது போல் தோன்றியது தமயாக்கு.
காதல் மழலை அவள் மணவாளன் அடுத்து…
ஹாய் ப்ரண்ட்ஸ்..
இக்கதைக்கு விமர்சனங்கள் கொடுக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.
உங்கள் விமர்சனங்கள் மகிழ்ச்சியை தருகிறது.
நான் யாருனு தெரியுமானு கேக்க மாட்டேன். கண்டிப்பாக வாய்ப்பில்லை இத்தளத்தின் வாசகர்களுக்கு.