தேடியுணைச் சரணடைந்தேன்
அறிமுகம்
அறிமுகம்
இரக்கமற்ற உறவுகளும் ......
உறக்கமற்ற இரவுகளும் ....
என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய்
கரைத்து கொண்டே போகிறது .........
கல் எறிந்த தேன் கூடாய் .....
கலவரமாய் கிடக்கின்றது என் மனம் .....
யாரைத்தான் நம்புவதோ என அறியாமல்
இனி எந்த வழி போவதோ என தெரியாமல் .....
பாதியிலே நிற்கின்றது என் பயணம் .....
![334 334](http://www.tamilnovelwriters.com/community/data/attachments/0/334-abeeb98e28fcb347bf0821a26fb2bf88.jpg)
அறியாத வயதில் தனது இரட்டைக்கு கிடைக்கும் தாயன்போ, பாசமோ கிடைக்காது, ஏனென்றுத் தெரியாத நிராகரிப்பு கொடுக்கும் வலியோடு பெற்றோரை விட்டுத் தன் பாட்டியுடன் தனிமையில் வாழும் ஒருவனுக்கு, சூழ்நிலைக் காரணமாக நடக்கும் விருப்பமில்லாத் திருமணம்.
நிச்சயித்தவனை விடுத்துச் சூழ்நிலைக் காரணமாக, அவனின் இரட்டையை மணக்கும் அவளின் நிலை என்னவாகும். பாலைவன மணலாய் வறண்டு, இறுகி இருப்பவனின் மனதை வலி போக்கி, மலர்வனமாய் மாற்றுவாளா..?
தன் வலி மறந்து, கரம் பிடித்த நங்கையின் மனம் அறிந்து அவளோடு இணங்குவானா..? நிச்சயித்தத் திருமணத்தை திடீரென ஏன் நிறுத்தினான் இரண்டாமவன்? மாங்கல்யம் சூட்டும் சில மணி நேரங்களில் எங்கு மாயமானான். நமது நாயகனின் வலிக்கும், வேதனைக்கும் காரணம் தான் என்ன..?
இதை அறிய இவர்களோடு, குட்டிப் புயலாய், சுட்டிச் சூறாவளியாய், இரட்டையர்களின் தங்கையாய் கலகலக்கும் மணிமொழியோடு நாமும் பயணிப்போம்..
என்னுரை:
வணக்கம் மக்களே..
கனவுப் பட்டறை கதைத் தொழிற்சாலையில் நானும் பங்கெடுத்துள்ளேன்..
வழக்கம்போல கதையைப் படித்து உங்கள் கருத்துக்களையும், வோட்டுக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்வது நான் உங்கள் வதனி..