“என்னடா அஸ்வின் அதுக்குள்ள நீ வந்துட்டியா இல்ல நான் ரெண்டு நாளா தூங்குறேனா?” புரியாமல் சித்தார்த் விழித்தான்.
“தூக்கம் இல்லாம நீ நீயா இல்ல. கெளம்பு நான் பாத்துக்குறேன்” என்றான் சகோதரன்.
“அப்டிலாம் இல்ல அஸ்வின். கொஞ்சம் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. அது என்னனு கேட்டுட்டு படுக்க லேட்டாகிடுச்சு”
தனக்காக பொய் கூறுகிறான் என அஸ்வினுக்கு புரிந்தது. தினமும் இவன் இங்கே தான் தவமிருக்கிறான். அருகில் எந்த விடுதியும் இல்லை, ஐந்து நிமிடம் தொலைவில் தான் உள்ளது.
அந்த ஐந்து நிமிடம் கூட நரகமாக தோன்ற, அவசர தேவை என்றால் உடனே ஓடி முன்னே நிற்பதற்கு தான் காரில் இரவு உறக்கம்.
“அப்றம் கப் ஜெயிச்சாச்சு. நீ வேணா பாரேன், பேட்ல ஸ்ப்ரிங் வச்சிருக்கியானு உனக்கு சோதனை தான் வரும். இப்டியாடா அடிப்ப நீ? காட்டுத்தனமா என்ன ஒரு வெறியான ஆட்டம் எல்லா மேட்ச்லயும், பெருமையா இருக்குடா” என்றான் சித்தார்த் தெம்பு பெற்றது போல். “தேங்க்ஸ்டா. நீ கெளம்பு.
நான் பாத்துக்குறேன். ஒரு நாள் அப்பாகிட்ட ஆபீஸ் போக சொல்லி நீ ஒரு நாள் ரெஸ்ட் எடு”
“நான் கூட கொஞ்ச நேரம் தூங்கிட்டேன், நீ பொய் சாயந்தரம் வா” என்றான் சித்தார்த் அஸ்வினின் மங்கிய முகத்தை பார்த்து.
“டேய் படுத்தாதீங்கடா. அவளை பாத்து ரெண்டு வார்த்தை பேசுனா தான் எனக்கு நிம்மதியே. நீ கெளம்பு”
தானும் அதிகம் சோர்வாய் இருக்க சரி என்றவன் வாகனத்தை எடுக்க அவனை தடுத்து நிறுத்தினான் அஸ்வின்.
“கல்யாணம் நிப்பாட்டிட்டேனு சொன்ன. இப்போ அந்த பொண்ணு எங்க?”
“அட இது தெறிஞ்சிருந்தா முன்னாடியே சொல்லிருப்பேனே. அவ இல்லாம வீடே வீடு மாதிரி இல்லடா” என்றான் சித்தார்த் சோர்வாக.
“வேகமா வந்துடுவா. நீ போ. ம்ம்ம் அப்றம் எந்த ரூம் வேணாலும் எடுத்துக்கோங்க, ஆனா பர்ஸ்ட் ப்ளோர் ஹால் மட்டும் யூஸ் பண்ணிடாதீங்க சொல்லிட்டேன்” கட்டளையாய் கூறினான் மூத்தவன்.
“அட அல்பமே. கீழ நான் எப்பவும் யூஸ் பண்ற ரூம் தான் குடுத்துருக்கேன்”
சகோதரன் தோல் தட்டி அஸ்வின் இல்லம் சென்ற சித்த்தார்த் ஜனனி படுத்திருந்த அறையை எட்டி பார்க்க, அப்பொழுது தான் மெல்ல உறக்கம் களைந்து எழுந்து அமர பார்க்க, வேகமாக சென்றவன் அவளை எழ விடாமல் அவளது மடியில் தலை சாய்த்து படுத்துவிட பயந்தாள் பெண்.
“என்ன பண்றீங்க?”
“தூங்க போறேன் ஜனனி”
“நான் எந்திரிச்சுக்குறேன்” என்றாள் அவள்.
இவன் விடும் எண்ணத்திலே இல்லை, “இல்ல நீ பக்கத்துல வேணும். ப்ளீஸ் மாட்டேன் சொல்லாத ஜனனி நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. ஒரு அரவணைப்பு தேவைப்படுது, திடீர்னு ரோஹிக்கு எதுவும் ஆகிடுமோனு பயமே மனசை குடைஞ்சிட்டே இருக்கு. அதுல இருந்து வெளிய வர ஒரு மணி நேரம் தூக்கம் வேணும், கூடவே கதகதப்பு குடுக்குற ஒரு கை”
அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. அவன் விருப்பபடி விட, அவனோ அவளை மென்மையாக இன்னும் கொஞ்சம் கீழே இழுத்து படுக்க வைத்து அவள் இடையை கட்டி படுத்துகொண்டான். படுத்த வேகத்தில் சித்தார்த் உறங்கிவிட அவஸ்தை என்னவோ ஜனனிக்கு தான்.
ஆரோஹி இருந்த அறைக்குள் நுழைந்த அஸ்வின் உறங்கும் அன்னை மனைவியின் உறக்கம் கலையாதவாறு குளித்து வர மதி விழித்திருந்தார். மகனை பார்த்ததும் மகிழ்ச்சி பொங்க கையாலே த்ரிஷ்டி கழித்தார்.
“அதெல்லாம் நேத்து வர தான் அஸ்வின். இப்போ எனக்கு மனசு நிம்மதியா இருக்கு” என்றவர் பார்வை ஆரோஹியை தொட்டு மீண்டது.
அன்னையை வற்புறுத்தி வீட்டிற்கு செல்ல கூற வேறு வழியே இல்லாமல், “சரி அஸ்வின், உன் அப்பா எட்டு மணிக்கு சாப்பாடு கொண்டு வருவார். அப்றம் நான் போறேன்” எங்க சரி என்றான்.
“ரோஹிக்கு அவ்ளோ தானே அஸ்வின் டிரீட்மென்ட்?”
“இல்ல மா ஆரூக்கு மூணாவது ஸ்டேஜ். கொஞ்சம் அதிகமா கேன்சர் பரவிடுச்சு. அதுனால சர்ஜெரி, கீமோதெரபி ரெண்டும் பண்ணனும். சர்ஜெரில கொஞ்சம் கேன்சர் செல்ஸ் தான் எடுத்துருப்பாங்க. இனி கீமோ பண்ணி மிச்சத்தை ரிமூவ் பண்ணுவாங்க”
“இருக்கும் ம்மா. ஆனா என் ஆரூ முழுசா குணமாகிடுவா. அவளை மனசாலவுல தேத்த நான் இருப்பேன்”
“இனி இந்த பிரச்சனையே வாரத்துல அஸ்வின்?” விழிகளில் பயத்தோடு கேட்டார் மதி.
“கண்டிப்பா வராது ம்மா” தனயன் உறுதி கொடுக்க நிம்மதியடைந்தார். ஆரோஹி அருகில் இருந்தே பார்த்தவருக்கு ஆரோஹி படும் வேதனை வலி எல்லாம் பார்க்கையில் அவளை விட இவர் தான் அதிகம் அழுத்திருப்பார்.
ராகவ் மனைவியை சமாதானம் செய்வது அவரது வருத்தம் மருமகளை தாக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். சித்தார்த் ஒரு சகோதரனான ஆரோஹியை தாங்கிக்கொண்டான்.
மறு பக்கம் என்ன கூறியும் குழந்தையை வந்து ஆரோஹி கையில் ஒப்படைத்துவிடுவாள் திவ்யா.
“இன்பக்ஷன் எல்லாம் ஒன்னும் ஆகாது, என்ன விட என் குழந்தை மேல அவ தான் உயிரா இருந்தது. சொல்ல போனா அவளும் என் குழந்தைக்கு அம்மா தான், அம்மா கிட்ட இருந்து குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது” என்றிடுவாள்.
திவ்யாவுக்கு தெரியும், தன்னுடைய வலியை மறந்து ஆரோஹி இயல்பாய் இருப்பது குழந்தையை பார்க்கும் பொழுது தான், அதற்காகவே வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையில் திவ்யாவின் போராட்டம் தொடர்ந்தது.
உறவுகள் இல்லை என தவித்த பெண்ணுக்கு அழகாய் அன்பாய் ஒரு குடும்பம் மதி மூலம் கிடைத்ததில் ஆரோஹிக்கு அத்தனை நிம்மதி.
நேற்று உறக்கம் வராமல் வெகு நேரம் விழித்திருந்தவள் விடியற்காலை நான்கு மணிக்கு தான் உறங்கியது. அதன் தாக்கம் ராகவ் உணவு கொண்டு வந்து கொடுத்த பொழுது கூட எழாமல் ஒன்பது மணிக்கு தான் விழிப்பே வந்தது.
கண் விழித்து அத்தையை தேடும் பொழுது வலது புறம் நாடியில் கை வைத்து தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்த அஸ்வினை கண்டவள் உதட்டை சுளித்து, “இவர் ஒருத்தர் அவஸத்தை புரியாம”
அவன் பிரமை என நினைத்தவள் மறுபக்கம் திரும்ப, அவள் பேசியதில் சத்தமில்லாமல் சிரித்தவன் சதைப்பற்றை இழந்திருந்த கன்னத்தில் முத்தம் கொடுத்து கொஞ்சம் இடைவெளி விட்டு விலகினான்.
அதிர்ந்து திரும்பியவள் விரிந்த கண்கள் பார்த்து மேலும் ஆசை பெற்றவனாய் அவள் நாசியின் நுனியில் மற்றொரு முத்தம் வைக்க, ஆரோஹியின் கைகள் வேகமாக அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டது.
தான் சென்றுவிடுவது போல் பயந்தவன் செயலில் இன்னும் வாகாக அவளுக்காக வளைந்துகொடுத்தான்.
சரசரவென விழியினில் தேங்கிய நீரானது உடைந்து வெளியேற காத்திருக்க, “நான் கை எடுத்துட்டா போக மாட்டீங்க தானே கிரிக்கெட்டரே?”
இல்லை என தலை அசைத்தவன், “உன்கிட்ட வந்துட்டேன்டா நான்” என்று.
மகிழ்ச்சி ரெட்டிப்பாகி கண்ணீரும் ரெட்டிப்பாகியது.
“நாராயணா…”
“ம்ம்”
“கிரிக்கெட்டரே…”
“சொல்லு ஆரூ”
“அஸ்வின்…”
“சொல்லுடி என் செல்ல பொண்டாட்டி” வார்த்தைகளற்று திணறுகிறாள் என தெரிந்தவனும் அவளோடு விளையாண்டான்.
காதல் நிறைந்த விழிகள் எவ்வளவு காதலை தான் சொல்லிவிடும்? அளவில்லா காதலில் முத்தங்களும் சில நேரம் உதவும். அஸ்வினை தன்னோடு நெருக்கமாய் இழுத்தவள் அவன் கன்னத்தில் அவன் கொடுத்ததை விட அழுத்தமாய் இதழ் ஒற்றி அங்கேயே தேங்கியும்விட்டாள்.
பிரிய மனமே இல்லாமல், “கை வலிக்கிது கை எடுத்துக்கவா?” அவனிடமே சோகமாக அனுமதி கேட்டவள் முகத்தை பார்த்து சிரித்தவன் தலை அசைத்து அவள் விரல்களோடு தன்னுடைய விரலை பிணைத்துக்கொண்டான்.
பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நொடி அத்தனை உணர்வுபூர்வமாய் இருந்தது.
“பாத்திங்களா நாராயணா என் முடிய எதுவுமே பண்ணல”
“நான் தான் சொன்னேன்ல நீ தான் கேக்கவே இல்ல”
“ம்ம். அப்றம் எத்தனை மெடல்?”
“நீயே கெஸ் பண்ணு பாப்போம்”
ஆரோஹி, “நாலு?”
அஸ்வின், “ஏழு, ப்ளஸ் மேன் ஆப் தி சீரிஸ்” வாயை பிளந்து அதிர்ந்தாள்,
“என்ன கிரிக்கெட்டரே நான் சொன்னேன்னு எல்லாத்தையும் ஆடையப்போட்டு வந்துட்டீங்களா?” தன்னை சந்தேகமாய் பார்த்து கேட்கும் மனைவியை பார்த்து அஸ்வின் வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.
“எங்க காட்டுங்க” என்றாள் ஆசையாக.
கைபேசியை எடுத்து தான் வாங்கிய பரிசுகள் புகைப்படத்தை காட்டினான். அனைத்தையும் மகிழ்ச்சியாக பார்த்தவள் பார்வை கேலிக்கு மாறியது, “அது என்ன நேத்து சின்ன புள்ள மாதிரி கிரௌண்ட்ல அழுதீங்க”
“அதெல்லாம் நீ பாத்தியா?”
“இல்ல, நீங்க கப் வாங்குனது அப்றம் என்ன பத்தி சொன்னதை தான் பாத்தேன். இதை சித்து தனியா காட்டுனான்” என்றவள் மீண்டும் அதே கேள்விக்கு வந்தாள்.
“உன்ன நினைச்சு தான் ஆரூ ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். தூங்காம, ஒழுங்கா சாப்பிடாம ரொம்ப எமோஷன் குள்ள உலண்டுட்டு இருந்தேன். அதான் என்னையும் மீறி அழுகை வந்துடுச்சு, சித்தார்த் போன் பண்ணி சொல்லவும் தான் உயிரே வந்துச்சு” இப்பொழுது பேசும் பொழுது கூட அழுகை தான் வந்தது.
“சரி அழுகாதீங்க குழந்தை”
“யார் நான் குழந்தையா?”
ஆரோஹி, “ஆமா. குழந்தை தான் அழுதுட்டே இருக்கும்”
அஸ்வின், “மேடம் மட்டும் என்னவாம் அன்னைக்கு வீடியோ கால்ல அழுதீங்க தானே”
திருட்டு முழி விழித்தவள், “அது… அது… ஆஹ்… எனக்கு யார் அழுதாலும் அவங்கள பாத்து தானா அழுகை வந்துடும், அந்த மாதிரி வியாதி அது” என்றாள் சமாளிக்கும் பொருட்டு.
“ஆரூம்மா… என் மனசை நோகடிச்சிட்ட. நீயே அழுகுறதை பாத்து நானும் என்ன என்னவோ நினைச்சிட்டேன், பத்தாததுக்கு மிஸ் பண்றேன், ஹக் பண்றேன், என் கைக்குள்ளயே இருக்கணும்னு…”
வெட்கம் பிடுங்கி தின்க வேகமாக அவன் கையில் அடித்தாள், “யோவ் நாராயணா போதும்”
“இல்லடா நான் பேசிக்கிறேன், மோதரத்துக்கு முத்தம் யாரோ குடுத்தாங்க அவங்கள நேர்ல பாத்தா…” அவன் வாயை வேகமாக அடைத்தாள்.
“ஏதோ கனவு கண்டுருக்கிங்க. இல்ல பேய் புடிச்சுக்குச்சு போல” சம்மந்தம் இல்லாமல் பேசியவள் முகம் உடனே வாடியது.
தன்னுடைய கையை காட்டினாள், “பாருங்களேன். ஆபரேஷன் அப்போ நகை எல்லாம் வாங்கிட்டு போய்ட்டாங்க” மோதிரத்தை வெகுவாக தேடியது அவள் மனம்.
“அப்றம் வாங்கிக்கலாம்டா”
“இல்ல எனக்கு இப்போவே வேணும் அத்தைகிட்ட கால் பண்ணி கேளுங்களேன்” அன்னை உறக்கத்தில் இருப்பார் என யூகித்தவன் தானே அந்த அறை மொத்தமும் தேடினான்.
கிடைக்காமல் போக, “நானே உன் கைக்குள்ள தானே இருக்கேன், அந்த மோதிரம் எதுக்கு?”
“இல்ல நாராயணா…”
“அம்மா தூங்கிட்டு இருப்பாங்கடா. கொஞ்ச நேரம் கழிச்சு கேக்குறேன். அவ்ளோ அவசியமா அது வேணும்னா இந்த என் கை புடிச்சுக்கோ” கண்ணடித்தான் கைகள் கொடுத்து.
சந்தோசமாய் அவன் கைகளை வாங்கியவள் கையில் சில்லென அவனது மோதிரம் பட நிறைந்த புன்னகையோடு அஸ்வினை கண் எடுக்காமல் பார்த்தாள்.
அழகான நொடி அது. பகலானால் பிரிந்து செல்லும் நிலவினை போல் அல்லாமல் கடலில் கலந்த உப்பாக அவனோடு இனி காலமும் கரைந்துகொண்டே இருக்கலாமே என்கிற நினைவே தித்தித்தது.
அமைதியே போதுமான இருவரும் உணர, அவளை பார்த்தபடியே மெத்தையில் தலை சாய்த்த அஸ்வின் தன்னையும் அறியாது உறங்கிவிட்டான்.
நிம்மதியான உறக்கம் பல நாட்களுக்கு பிறகு, அதுவும் தன்னுடையவளை அருகில் வைத்து. அவன் பக்கம் ஒருக்களித்து படுத்தவள் கணவனின் தலை கோதி வந்த உறக்கத்தையும் விரட்டி அடித்தாள்.
அவளுக்கு மாத்திரை கொடுக்க வந்த செவிலியர் இலக்கியா இருவரின் நெருக்கம் பார்த்து சங்கடத்தோடு தான் அருகே வந்தது.
“சாப்பிட்டீங்களா ஆரோஹி?”
“இல்ல க்கா. அப்றம் சாப்பிட்டுக்குறேன்” என்றாள் கணவன் கையை விட மனமில்லாமல்.
அதை புரிந்த இலக்கியா தானே உணவை எடுத்து வந்து ஆரோஹிக்கு ஊட்டிவிட, “வேணாம் க்கா உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என கேட்க உதட்டில் கை வைத்து அஸ்வினை காட்டி அமைதியாக்கிவிட்டாள்.
“இன்னைக்கு உங்களுக்கு நார்மல் புட் தரலாம்னு சொல்லிட்டாங்க. பயப்புடாம சாப்புடுங்க என்ன உப்பு காரணம் கொஞ்சம் கம்மியா இருக்கும்”
“காரம் கம்மியாவா?” சோகமாக கேட்டவளை பார்த்து இலக்கியாவிற்கு சிரிப்பு தான்.
“அக்கா நீங்க எப்படி அர்ஜுன் டாக்டர கல்யாணம் பண்ணீங்க?”
கேட்டவளுக்கோ எந்த வித முக மாற்றமும் இல்லை, “வருண் சார் இல்லனா தர்ஷன் சார் சொல்லிருப்பாங்களே ஆரோஹி”
ஆரோஹி, “சொன்னாங்க க்கா. நடந்ததை சொன்னாங்க. ஆனா இப்டி ஈஸியா யாரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட மாட்டாங்க. உங்க கண்ணுல ஒரு ஆழமான பாசம் தெரியாது க்கா”
சிரித்தாள் தவிர இலக்கியா எதுவும் பேசவில்லை, “நீங்க ஏன் இந்த வருண், தர்ஷன் பேர் சொல்லி கூப்பிட மாட்டிக்கிறீங்க?”
“அது பழகிருச்சு ம்மா”
“மாத்திக்கோங்க க்கா. நம்ம ஹஸ்பண்ட் நமக்கு நெருக்கமா வரணும்னா முதல அவங்க குடும்பம் நம்ம குடும்பமா மாறனும். அர்ஜுன் சார் குடும்பத்துல எல்லாருமே நல்ல குணமா தான் இருக்காங்க. தயங்காம குடும்பத்துல ஐக்கியமாகிடுங்க” என்றாள் எதார்த்த மனநிலையோடு ஆரோஹி.
“உறுதியே இல்லாத வாழ்க்கைல உறவுகளை வளர்த்து அதுனால பின்னாடி ஏமாற்றம் கிடைச்சா அதை தாங்கிக்க முடியாது ஆரோஹி” சட்டென புரிந்தது ஆரோஹிக்கு.
“டிவோர்ஸ் பண்ண போறிங்களா க்கா?” இதற்கும் அந்த பெண்ணின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை, உடல் மட்டும் மொத்தமாய் தளர்ந்தது,
“அது ஒன்னு தான் வழின்னா அதை ச்சூஸ் பண்ணி தானே ஆகணும்” பேச்சு ஸ்வாரஸ்யத்திலே ஆரோஹி சற்று அதிகமாய் உண்டிருக்க அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை குடிக்க வைத்தாள்.
“உங்க உறவுல வேணா உறுதி இல்லாம இருக்கலாம், ஆனா அர்ஜுன் சார் கண்ணுல உறுதிய பாத்தேன் க்கா. அனுபவத்துல சொல்றேன் அந்த கண்ணுல கொஞ்சமும் பொய் இல்ல” கசந்த முறுவலுடன் சென்றுவிட்டாள் இலக்கியா.
அவள் சென்றதும் மீண்டும் படுத்த ஆரோஹி உறங்கிக்கொண்டிருந்த அஸ்வினிடம், “பாருங்க நான் எல்லாம் ஒரு ஆள்னு லவ்க்கு அட்வைஸ் கொடுக்குறேன். எல்லாம் யாரால உங்களால. என் செல்ல க்யூட் கிரிக்கெட்டரே” உதடு குவித்து அருகிலே இருந்தவனுக்கு காற்றில் முத்தத்தை பறக்க விட்டாள் அந்த பேதை பெண்.