கீழே விழுந்து சுருண்டுப்படுத்து மூச்சுக்கு தவித்து இருமிக்கொண்டிருந்தவனை கண்டதும் ஓடிசென்று அவனோடு சேர்த்து இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் சம்யுக்தா.
“ரொம்ப பயந்துட்டேன் ப்ரஷூ… எங்க போன நீ?” என்றவள், “வீட்டை சுத்திப்பார்க்க கூடாதுன்னு ரூல்ஸ் போட்டுட்டு இப்போ நீ மட்டும் என்னை விட்டுட்டு மாடி வரை வந்து சுத்தி பார்த்துட்டு இருந்துருக்க!?” என்றாள் தாங்கலாய்.
இன்னமும் அவன் இருமல் அடங்கியபாடில்லை. அதைக்கூட உணராது இவள் தன்போக்கில் பேசிக்கொண்டிருக்க, வித்தகன் தான் இடையில் புகுந்து அவளை பற்றி இழுத்தான்.
“ஜி… பாருங்க ஜி அவனை” அவள் ஆரம்பிக்கையில், “ஹி இஸ் சிக்!” என்றவன், “கொஞ்சம் சும்மா இரு!” என்று அதட்டினான். அதன் அதட்டிய பிறகு தான் பிரஷாந்தை ஒழுங்காக கவனித்தே பார்த்தாள் சம்யுக்தா.
அதற்குள் அவனை நெருங்கியிருந்த பவித்ரா, அவன் கைகளை பரபரவென தேய்த்துவிட்டு, “ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல” என்று சொல்லிக்கொண்டிருக்க, “நீ அவன் உள்ளங்காலை தேய்ச்சு விடு! நான் போய் தண்ணி கொண்டு வரேன்!” என்ற வித்தகன் வேகமாய் கீழிறங்கி விட்டான். பவித்ராவை போலவே, அவளும் அவன் கால்களை தேய்த்து விட, சில நிமிடங்களில் அவன் போராட்டம் குறைய ஆரம்பித்தது.
தைரியமாய் கீழே இறங்கிவிட்டாலும், வித்தகனுக்கு திக் திக்கென்று தான் இருந்தது. எதையும் நிமிர்ந்து பாராமல், கிடுகிடுவென தங்கள் நால்வரின் தோள்பைகளையும் அள்ளிக்கொண்டு மாடியேறி வந்துவிட்டான்.
அதிலிருந்து தண்ணீர் எடுத்தவன், பிரஷாந்தை தன் மேல் சரித்து சிறிது சிறிதாக நீரை புகட்ட, பவித்ரா அவன் நெஞ்சை அழுத்தி நீவிவிட்டாள். சில நிமிடங்கள் பிடித்தது, பிரஷாந்த் சுயத்திற்கு வர!
தொடர் இருமலில் அவன் தொண்டை எல்லாம் புண்ணாகி வலிக்க ஆரம்பித்திருந்தது. உடலின் தெம்பே வடிந்ததை போன்றிருந்தது. அவனை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கொடுத்த வித்தகன், “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
“தெரியலன்னா என்ன அர்த்தம்? உன்னை யாராவது தூக்கிட்டு வந்து இங்க போட்டாங்களா என்ன?” சம்யுக்தா சற்று கடுப்பாய் கேட்க, அவனோ, “அப்படி தான் இருந்துச்சு!” என்றான் குழறலாய்.
“என்ன?” அதிர்ந்து தான் கேட்டனர் மூவரும்.
“கண்ணாடி முன்ன போய் நின்னது தான் நினைவு இருக்கு! அப்பறம் என்ன ஆச்சுன்னு நியாபகமே வர மாட்டேங்குது!” என்றான் தலையை பிடித்துக்கொண்டு.
“உள்ள என்ன நடந்துச்சு?” அவன் வெளிவந்த அறையை காட்டி வித்தகன் கேட்டதும், “கண்ணு முழிச்சப்போ ஒரே இருட்டு! எங்க இருக்கேன்னே புரியல! அப்பறம் கதவை கண்டுப்பிடிச்சு பலமா தட்டுனேன்! அப்போ என் கழுத்தை யாரோ பின்னால இருந்து நெரிச்ச மாறி இருந்துச்சு! மூச்சே விட முடியல! நீங்க மட்டும் கதவை திறக்கலன்னா மூச்சு முட்டியே செத்துருப்பேன்!” என்றான் பிரஷாந்த்.
நால்வரும் அங்கேயே அவ்விடத்திலேயே அமர்ந்துக்கொண்டனர். இங்கே வந்து ஒரு நாளே முடியப்போகிறது! வந்ததில் இருந்து வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்த பசி, இப்போது குடலையே கடித்து தின்ன ஆரம்பித்திருந்தது.
இந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே ‘பசி’ என்று வாயை திறந்தது சம்யுக்தா தானே! பயத்தில் பசி பஸ் ஏறி சென்றிருந்தாலும், எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிக்க முடியும்!? அடிவயிற்றை பற்றிக்கொண்டு அமர்ந்தவாக்கிலேயே முன்னால் கவிழ்ந்து படுத்தாள் அவள்.
அவனுக்கும் நல்ல பசி! பிரஷாந்துக்கும் பசித்தாலும், “பேய் கிட்ட சொல்லு, கால விறகாக்கி, கையை சட்டியாக்கி, சுட சுட ரத்த பொறியல் செஞ்சு தரும்!” என்றான், எங்கே இந்த நேரம் உணவு கிடைக்க போகிறது என்ற கடுப்பில்!
“ப்ச்” என சிலிர்த்து எழுந்தவள், அவனுடன் மல்லுக்கட்ட வாய் திறக்க, வித்தகனோ தான் கொண்டு வந்த பெரிய பையை திறந்து அதிலிருந்து பெட்டி போன்ற ஒன்றை எடுத்தான்.
“என்னஜி இது? மேக் அப் பாக்ஸா?” கவனம் வித்தகனிடம் போக, ஆர்வமாய் கேட்டாள் சம்யுக்தா.
“உன் புத்தி அங்க தான் போகும்!?” என்று நக்கலாய் சொன்ன பிரஷாந்த், “இதுல ஸ்க்ரூ டிரைவர், திருப்புளி, கட்டிங்ப்லேயர் எல்லாம் வச்சுருப்பாரா இருக்கும்! கதவை டெக்குனிக்கலா திறக்கப்போறாரு உன் ஆளு!” என்றான்.
ஆனால், எதற்கும் பதில் சொல்லாத வித்தகனோ, தன் போக்கில் அந்த பெட்டியை திறந்து, அதில் நெருப்பை காட்ட, பத்திக்கொண்டது.
“டே… இது அடுப்புடே!” சம்மு வாய் பிளந்து சொல்ல, அதற்குள் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறிது நீர் சேர்த்த வித்தகன், ஏதோ ஒரு பாக்கெட்டை பல்க்கொண்டு பிய்க்க ஆரம்பித்தான்.
“அட, நம்ம சாப்பிட போறோமா இப்போ!?” என்ற பிரஷாந்த், “ஐயோ சாமி சோறு போடுது! சோறு… சோறு!!!” என்று குதிக்க, அவனோடு சேர்ந்து சம்முவும் சத்தமில்லாமல் கைதட்டி சிரிக்க, பவித்ரா சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.
பிரித்த பாக்கெட்டில் இருந்து குத்து மதிப்பாய் கொஞ்சம் எடுத்து போட்டவன், அடுத்து சர்க்கரை எடுத்து அளவாய் போட, கையேந்தாத குறையாய் ‘மச்சான் எப்போ தரப்போற… மச்சான் எப்போ தரப்போற?’ என்று ஆவலுடன் காத்திருந்தனர் இருவரும்.
பேப்பர் கப்’கள் நான்கை எடுத்தவன், அதில் தயாரித்ததை ஊற்ற, “எனக்கு வேண்டாம்!” என்றாள் பவித்ரா. ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் வைத்துவிட்டான்.
அவசரஅவசரமாய் கப்பை கையில் எடுத்த இருவரும், முகர்ந்து பார்க்க, “பால் பவுடர்…! இந்த ‘பன்’னை அதுல தொட்டு சாப்பிடுங்க!” என்று ஆளுக்கொன்றாய் நீட்டினான். அவன் கையில் இருந்து பறித்தவர்கள், நிமிடத்துள் வயிற்றுக்குள் தள்ள, பவித்ரா எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஹேவ் திஸ்!” என்று ஒரு பன்’னை வித்தகன் நீட்ட, “இல்ல, பசிக்கல… வேண்டாம்!” என்றாள் அவள்.
கபகபவென இருந்த பசி கால்வாசி குறைய, ‘வேண்டாம்’ என்றவளை இருவரும் திகைத்துப்பார்த்து, “அதெப்படி பசிக்காம இருக்கும்?” என்று வினவ, அதே கேள்வியை தான் தன் பார்வையால் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான் வித்தகன்.
அவளுக்கு உண்மையில் நல்ல பசி! ஆனாலும், இந்த உணவு வகைகளை உண்ணுமளவு பசி இல்லை! மீண்டும் மீண்டும் சம்யுக்தா கேட்டதும், “நான் ‘வேகன்’, இதெல்லாம் சாப்பிட மாட்டேன்!” என்றாள் தயக்கமாய்.
இது வேண்டும், வேண்டாம் என்று விருப்பம் தெரிவிக்கும் நிலையிலா அவர்கள் இருக்கிறார்கள்!? அது பவித்ராவுக்குமே தெரியும் என்பதால், இப்படி சொல்ல, அவளுக்கு வெகு தயக்கமாக இருந்தது.
“ஓ… வெஜிடேரியனா நீங்க?” சம்மு கேட்க, “அதுக்கும் மேல!” என்றான் வித்தகன், தன் பையில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட் எடுத்தபடி.
“இது வேகன் பிஸ்கட்ஸ் தான்! சாப்பிடுங்க” என்று கொடுத்ததும், அதை வாங்கிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டவள், விறுவிறுவென உண்ண ஆரம்பித்தாள். சாப்பிட சாப்பிட தான் பசியில் அளவே தெரிந்தது.
சம்மு அவளுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுக்க, அதை தடுத்து வாங்கிய வித்தகன், அதற்குள் சிறிது உப்பும் சக்கரையும் போட்டு குலுக்கினான்.
“நம்மக்கிட்ட தண்ணி கம்மியா தான் இருக்கு… கொஞ்சமாவும் குடிக்கணும், அதே நேரம் நம்ம டிஹைடிரெட் ஆகிடவும் கூடாது! சோ, ‘ஓ.ஆர்.எஸ்’ டைப்’ல தான் நம்ம குடிக்கணும்!” என்று சொல்லி, நால்வரின் பொத்தல்களிலும் உப்பு சக்கரை இட்டு கொடுத்தான் வித்தகன்.
“ஜி, வேகன்’னா என்ன?” சம்மு கேட்டதும், “வெஜிடேரியன் மாறி தான் சம்மு, ஆனா, இவங்க மில்க் ப்ரொடக்ட்ஸ் கூட சாப்பிட மாட்டாங்க, ஏன்னா அது மாட்டோட ரத்தம் தானே! அதனால!” என்று சொல்ல, சம்முவுக்கும் ப்ரஷுக்கும் புருவம் உயர்ந்தது.
அன்று தான் கோழி குடும்பத்தை கூட்டி வைத்து ருசி பார்த்தபோது, இவள் முகத்தை சுளித்துக்கொண்டு தேங்காய்ப்பால் கேட்டது, நினைவு வந்தது.
‘அம்மாடி… காலம் முழுக்க எப்படி இப்படி ஒரு ஆளோட இருக்க முடியும்!?’ முதல்முறையாய் பிரஷாந்துக்கு இந்த ஐயம் உண்டானது.
“எனக்கெல்லாம் டீ இல்லாம இருக்கவே முடியாது! இங்க வந்து தான் நாக்கை அடக்கிக்கிட்டு இருக்கேன்!” என்று சம்மு சலிப்பாய் சொல்ல, “நானும் டீ குடிப்பேன்! சோயா பால், இல்லன்னா தேங்காய்ப்பால்’ல!” என்று பவி சொன்னதும், அவள் முகம் அஷ்டகோணலாகியது.
“வாட்? தேங்காப்பால்ல டீ’யா!?”
“ம்ம்… நல்லா இருக்கும்!” என்ற பவித்ரா, “அதென்னவோ, பால், நெய், வெண்ணெய் எல்லாம் பார்த்தா, மாட்டோட ரத்தம் மாறியே தோணும் எனக்கு, ஒரே குற்றவுணர்வாகிடும்! பாவமா தோணும்! அதனால குடிக்கமாட்டேன்!” என்று சொல்ல,
“ஹிஹி, எங்களுக்கெல்லாம் அப்படி ஒன்னும் தோணாதே!” என்று ஒரே நேரத்தில் கோரஸாக சம்முவும் பிரஷாந்தும் சொல்லி, தங்களை நினைத்தே சிரித்து, ‘ஹைபை’ அடித்துக்கொண்டனர். அதை வித்தகனும் பவித்ராவும் ஒரு சிரிப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
இங்கே இவர்கள் சிரிக்க, அங்கோ அவர்களை பெற்றவர்கள் இவர்களை காணாது பதைத்துப்போயிருந்தனர்.
மகளையும் வருங்கால மருமகனையும் தேட சொல்லி ராஜசேகர் ஆட்களை அனுப்பியிருக்க, அது பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதி என்பதால், அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. வேறு வழியின்றி தானே கமிஷ்னர் அலுவலகம் கிளம்பி சென்றார் ராஜசேகர்.
தயாரிப்பாளர்களை பெரிதாக யாருக்கும் அடையாளம் தெரியாது என்பதால், எந்தவொரு தொந்தரவும் இன்றி நேராக சென்றவர், “கமிஷ்னர் வரதராஜனை பாக்கணும்! ரொம்ப அர்ஜன்ட்! என்னோட கார்ட் கொடுங்க, அவரே கூப்பிடுவார்!” என்று தன் கார்டை அந்த கான்ஸ்டபிளிடம் நீட்டினார் ராஜசேகர்.
அவனோ அதை வாங்காமல், “வரதராஜன் சார் ட்ரான்ஸ்பர் ஆகி ரெண்டு வாரம் ஆச்சு, இப்போ புது கமிஷ்னர் தான் இருக்காரு!” என்றான் அசட்டையாய்.
ராஜசேகருக்கு ஆச்சர்யம்! வரதராஜன் அவருக்கு நன்கு பழக்கம்! இடையில் சில மாதங்கள் தொடர்புக்கொள்ள முடியாமல் வெளிநாட்டு படபிடிப்பில் இவர் பிசியாகிருக்க, அவர் ட்ரான்ஸ்பர் ஆகி சென்றது கூட தெரியாமல் போய்விட்டது! அவர் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று தாங்கலாகி போனது.
அதைக்கேட்டதும், “நேரா போய் லெப்ட்’ல இருக்க ரூம்’ல வெயிட் பண்ணுங்க! சார் வெளில போயிருக்காரு, வருவாரு!” என்றான் அவன்.
“எப்போ வருவாரு!?” அவர் கேட்க, “போறப்போவே என்கிட்டே சொல்லிட்டு போகல, இப்ப வரப்ப மட்டும் என்கிட்ட சொல்லிட்டா வருவாரு!? போங்க சார், வரப்போ வருவாரு!” என்றான் அவன் அலுத்துக்கொண்டு.
அவன் பேசிய விதத்தில் எரிச்சல் வந்தாலும், எப்போதும் தனது பணத்தை, அந்தஸ்த்தை அவர் பெரிதாக காட்டிக்கொள்ள விரும்பாதவர் என்பதால், சாதாரண மனிதனாய் அவனை கடக்க முயன்றார்.
அப்போது சட்டென நினைவு வர, “ஷைலஜா மேடம் இருக்காங்களா? எனக்கு அவங்களை பார்த்தா கூட போதும்!” என்று பெரும் எதிர்ப்பார்ப்போடு கேட்க, அவனோ, தலையை நிமிர்த்தி,
“சார் எவ்விடமோ மேடம் அவ்விடம்! மேடம் எவ்விடமோ சார் அவ்விடம்!” என்றான்.
‘இவன் என்ன போலிஸ் போலவா பேசுகிறான்!?’ என்று ஒரு நிமிடம் கடுப்பாக தோன்றியது ராஜசேகருக்கு. சில நாட்களாக… குறிப்பாக, அந்த புது கமிஷ்னர் வந்த பிறகு மொத்த அலுவலகமுமே ஒரு மார்க்கமாகத்தான் இயங்குகிறது என்பது அவருக்கெங்கே தெரியும்!?
அவன் உடன் இருந்தவனோ, “இன்னைக்கு என்ன ஒரே சினிமா ஆளுங்களா கிளம்பி வராங்க!” என்று முனுமுனுக்க, அது காதில் விழுந்தாலும், கண்டுக்கொள்ளாமல் அவன் சொன்ன இடம் நோக்கி சென்றார் அவர்.
அறையின் வெளியே பெயர் பலகை இல்லை! கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றால், அவருக்கு முன்னே ஒருவர் அங்கே இருந்தார். கதவு திறந்த சத்தத்தில் திரும்பிய அந்த மனிதர் ராஜசேகரை கண்டதும் எழுந்து, “சா..ர்…!?” என்று வியக்க, அதே வியப்பில், “நீ எங்க சுதர்சன் இங்க?” என்றார் ராஜசேகர்.
அவரோ கசங்கிய முகத்துடன், “பொண்ணை காணோம் சார்!” என்று சின்ன குரலில் சொல்ல, அப்படியே நின்றார் ராஜசேகர்.
“நீங்க என்ன சார் இங்க!?” அவரும் கேட்க, “என் பொண்ணையும் காணோம்!” என்றார் அவர். இருவரும் ஒருவரைவொருவர் பார்த்துக்கொண்டனர். என்ன சொல்வது என்று புரியாத, யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத சூழ்நிலை.
அப்போது சட்டென கதவு திறக்கப்பட, கலர் சட்டையும் காக்கி பேண்டும் அணிந்த ஒருவர் விறுவிறுவென நடந்து வந்து கமிஷ்னர் இருக்கையில் அமர்ந்தான். அவன் பின்னோடு ராஜசேகர் விசாரித்த ஷைலஜாவும் அவளுடன் மற்றுமொரு ஆண் போலிசும் வர, இவர்கள் இருவரும் அந்த கமிஷனருக்கு ‘வணக்கம்’ வைத்தார்.
“ம்ம்ம்!” என்றவன், “வாட் மேட்டர்?” என்றான் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தபடி.
மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவனின் விரல்கள் நின்றன. விழிகள் நிமிர்ந்தன. எதிரே நின்ற இரு சால்ட் அண்ட் பெப்பர் தலைகளை இப்போது அவன் சுவாரஸ்யமாக பார்த்தான்.
“உங்க பொண்ணுங்களா!?” என்றவன் கேட்க, இருவரும் ‘ஆம்’ என்றிட, மொபைலை டேபிளில் தூக்கி போட்டுவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்தவன், “வாவ்…!!!” என்றான்.
இருவரும் என்னவென்று புரியாமல் அவனை பார்க்க, எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், கடுப்புடன் நின்றிருந்தாள், அவனை பற்றி அறிந்த ஷைலஜா.
“இட்ஸ் மெடிக்கல் மிராக்கில்!” என்றான் அவன் மீண்டும் ஆச்சர்யமாய்.
இன்னும் புரியாமல், “என்ன சார்!?” என்று ராஜசேகர் கேட்க, “இந்த வயசுல ஒரு ஆம்பளையும் ஆம்பளையும் ஒண்ணா இருக்குறதே ஆச்சர்யம்’ன்னா, உங்க ரெண்டு பேருக்கும் குழந்தையே இருக்குங்குறது இன்னும் ஆச்சர்யம் இல்லையா?!” என்று கேட்டவன், அருகே இருந்தவளிடம் திரும்பி,
“ஆனா சைலுமா, ஹவ் இட் இஸ் பாசிபிள்!?” என்றான் கேள்வியாய்.
துக்கப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு பெற்ற மக்களை காணவில்லை என்ற பதைப்பில் நிற்கும் பெற்றவர்களுக்கு புரியவில்லை அவன் பேச்சு!
ஊரில் வேறு ஆளே இல்லாமல், இவனிடமா இவர்கள் வந்து நிற்க வேண்டும் என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள் சைலஜா.
அவர்களுக்கு எங்கே தெரியும்!? இவன் முறையிட வந்தவர்களையே சுவரில் முட்டிக்கொள்ள வைக்கும் ரகம் என்று!!! அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வர, ஸ்டைலாக கால் மேல் கால் இட்டு அமர்ந்து, மொபைலை காதில் வைத்தவன்,