“நான் எப்பவும் இந்த வீட்லதான் இருப்பேன், என்னைக்கும் நீங்க என்னை வேலையை விட சொல்லக் கூடாது” என்று வஞ்சி முதல் நிபந்தனையை சொல்ல, சொன்ன கணமே
“ஓகே டன்!” என்றுவிட்டான் இளந்திரையன்.
“அப்புறம் இனி எப்பவுமே நான் தாலியைக் கழட்டின விஷயத்தை சொல்லி என்னைக் குத்திக் காட்டக் கூடாது, விளையாட்டா கூட சொல்லக் கூடாது” என்றாள் தீவிரமாக. அந்த செயல் வேகமாய் விவேகமின்றி செய்துவிட்டாலும் அதனின் வீரியம் அவளை மிகவும் தாக்கி இருக்கிறது என்பது அவளின் பேச்சில் புரிய, இளந்திரையனும் பொறுமையாகவே
“கண்டிப்பா!” என்றான் உறுதிபட. அத்துடன் விடாமல்
“நானும் ஒன்னு சொல்லிக்கிறேன், நீயும் என்னை இரண்டு வருஷம் நீ என்னைப் பார்க்கலன்னு எப்பவும் பழசைப் பேசக் கூடாது” என்று தனக்கு வேண்டியதையும் சொல்லிவிட
வஞ்சிக்கு அவனின் சாமர்த்தியம் கண்டு கொஞ்சமாய் சிரிப்புதான்,
“அடுத்து…” என்றவள் கொஞ்சம் நிறுத்தி அவன் முகம் பார்க்க,
“என்ன பார்க்குற சொல்லு” என்று அவன் சொல்லவும்
“அது என்னை இஞ்சின்னு கூப்பிடக் கூடாது” என்றாள் முகத்தை சுருக்கி
“அப்படி சொன்னா எனக்குப் பிடிக்கல” என்றதும் இளந்திரையனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“ஹாஹா…அய்யோ அய்யோ” என்று அவன் விடாது சிரிக்க, அவள் முறைக்க
“இஞ்சி! நான் என்னமோன்னு நினைச்சேன் டி, ஆனா இந்த கண்டிஷன் இருக்கே, அது மட்டும் முடியாதுடி” என்றவன் மீது பக்கத்தில் இருந்த பேப்பரை விட்டு அவள் அடிக்க
“ஹாஹா இஞ்சி” என்று இன்னும் அவளை வம்பிழுத்தான்.
“போடா லூசு” என்று அவள் திட்ட
“என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ இஞ்சி, மூணாவது கண்டிஷன் மட்டும் முடியாது” என்று இன்னும் அவன் சிரிக்க வஞ்சி அமைதியாகிவிட்டாள்.
அவள் மெத்தையின் ஓரமாய் அவன் கீழே படுத்திருக்க, இருவருக்குள்ளும் அமைதி. வஞ்சியே மௌனம் கலைத்துப் பேசினாள்.
“எப்படி எல்லா கண்டிஷனுக்கும் உடனே ஒத்துக்கிட்டீங்க” என்று கேட்க
“நான் நீ என்னோட வாழனும்னுறதையே கண்டிஷனா சொல்லும்போது நீ வாழ்றதுக்காக சில கண்டிஷன் சொன்னா தப்பில்லையே, உனக்கு என் மேல ஒன்னும் பெருசா ஃபீலிங்க்ஸ் இல்லன்னு தெரியும், இருந்தும் நீ வாழ ஒரு முயற்சி எடுக்கிற” என்றதும் முதன்முறையாய் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பெண்.
அந்த அறையில் இருந்த மெல்லிய வெளிச்சத்தின் பெண் பார்வை அவன் பார்வையில் விழ
“என்ன ரொம்ப பார்க்கிற?” என்றான் இளந்திரையன்.
“இல்ல என்னோட வீட்ல இருக்கனும்னு சொன்னேனே, ஒன்னுமே தப்பா தோணலையா என்ன?” என்றாள் இன்னும் அவன் பதிலில் நம்பிக்கையில்லாதவளாக, அவள் அறிந்து இளா இப்படி பேசுவானா என்ற ஐயம், அதனையும்விட அவள் இளாவை அறியவே இல்லையே!
“இதுல என்ன இருக்கு? நம்ம கணவன் மனைவின்றப்ப எது உன்னோடதோ அது என்னோடது, எல்லாமே இங்க நம்மளதுதான், இதே நீ மாமியார் வீட்ல வந்து இருக்கனும்னு சொல்லியிருந்தா நான் ஒத்துட்டு இருந்திருக்க மாட்டேன்தான், இது அப்படியில்ல, உன்னோட உழைப்பு, எனக்கு அதுல பெருமைதான்” என்றவனை இன்னும் வியப்போடு அவள் பார்க்க
“என்ன ஹான்னு பார்க்கிற?” என்று செல்லமாய் அவளின் கன்னம் தட்ட
“இல்ல, மாமா நான் வீடு வாங்கினது சொன்னப்போ நீங்க சந்தோஷப்படலையே?” என்று அவள் இழுக்க
“அதான் சொன்னேனே, அவர் சொல்றவிதம் வேற, என்னை உன்னோட கம்பேர் செஞ்சு பேசுவார், கடுப்பாகும். அதுமட்டுமில்லாம மனைவியா நினைச்சாலும் அந்த உணர்வு அப்போ வரல எனக்கு, இப்போ ஐ ஃபீல் இட்” என்றான் உள்ளார்ந்து உணர்ந்து.
“அதெல்லாம் கண்டிப்பா வரும், அது அவருக்கு ஏத்த மாதிரி நான் பதில் கொடுப்பேன், எனக்கும் எங்கப்பாவுக்குமானது இஞ்சி அது! அவர் என்னைக் கடுப்பேத்தினா நானும் அவரைக் கடுப்பேத்த நாலு எக்ஸ்ட்ரா பிட் போடுவேன், நீ எப்பவும் அதை மைண்ட்ல ஏத்தாத” என்றான் மிகவும் எளிதாக.
அவனின் பேச்சை, அதன் அர்த்தங்களை அவள் ஆச்சரியமாய் உள்வாங்கி அவனை கொஞ்சம் உயர்வாய்ப் பார்க்க
“என்னடி மாமன் மகன் இவ்வளவு நல்லவனான்னு பார்க்கிறியா என்ன?“ என்று கேட்க அவளோ தலையை ஆட்டியவள்
“அது டவுட் இல்லை, மாதவி அத்தை மகன் இவ்வளவு நல்லவரான்னு தான் டவுட்” என்றதும்
“அடிப்பாவி! எங்க போச்சு இந்த வாய் இவ்வளவு நாளா?” என்றான் இன்னும் அதிசயித்தவனாக.
“எங்க போச்சு இதே முகத்துலதான் இருக்கு” என்று அவள் சிரிக்காமல் சொல்ல, கையால் தன் தலையில் அடித்துக்கொண்டவன்
“முடியல! முடியல! இப்போதான் நீ சின்ன வயசுல பேசுற மாதிரி பேசுற”
“நீங்களும்தான்” என்றாள் வஞ்சியும் பட்டென்று.
“அதுசரிதான்! ஆனா இந்த ஒருவாரத்துல இப்போதான் நீ கொஞ்சம் நல்லா பேசுற”
“இத்தனை நாள் பேச யாருமில்லை இல்லையா அதான், இப்போ நீ பேசுற நானும் பேசுறேன்” என்றாள் பதிலாக.
“கமலி கிட்ட மட்டும் நல்லா பேசுறியே நீ” என்றவனின் கேள்வி பொறாமையில் பொங்கி வர,
“அவ எப்பவுமே எங்கிட்ட பேசுவா, அவ அத்தாச்சியாய் இருந்தப்பவும் சரி அண்ணியா இருந்தாலும் சரி” என்றதும் கைகளை உயர்த்திக் கும்பிடுவது போல் செய்தவன்
“கண்டிஷன் நம்பர் 2” என்றதும் வஞ்சி சிரிக்க
“கண்டிஷன் போட்டதென்னவோ நான், அதுல சந்தோஷம் உங்களுக்குத்தான் போல” என்று கிண்டலாய் சொல்ல
“டெஃபனைட்லி இஞ்சி!” என்றான் இளந்திரையன்.
“இஞ்சி சொல்லாத” என்று அவள் பல்லைக் கடிக்க
“அது என்ன வா போன்னு மரியாதை தேயுது, என் மம்மி மாதவி கேட்டா காலையில் இட்லிக்கு சட்னி நீதான் டி” என்றான் விளையாட்டாக.
“எனக்கென்ன பயம்? அதான் சம்பளம் இல்லாத வக்கீல் நீ இருக்கியே” என்றவள்
“இருக்கீங்களே..” என்று திருத்திப் பேச
“ஹே! லூசு, எப்படி வேணுமோ கூப்பிடு, எனக்கே நீ வாங்க போங்கன்னு கூப்பிட்டா டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றமாதிரி இருக்கு, ஏற்கனவே நமக்குள்ள பெரிய கேப் விழுந்துப் போச்சு” என்றதும் அவள் சிரிக்க
“இஞ்சி! கண்டிஷன்ஸ்லாம் ஓவரா?” என்று இளா கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்க
“இஞ்சி சொல்லாத, எங்க ஊர் சாமி பெயர் நீ இப்படி கிண்டலடிப்பியா? சின்ன வயசுல கிண்டல் பண்ணின சரி, எரும மாதிரி வளர்ந்துட்டு இன்னும் இப்படி பேசுற” என்று கடுப்பில் பேச
“ஒகே இஞ்சி” என்று விடாமல் வம்பிழுக்க, அவனருகே மெத்தை மீது படுத்திருந்தவள் அவனருகே நெருங்கி அப்படியே அவனின் தோளில் நெஞ்சிலும் மாறி மாறி அடிக்க
அவள் கரம்பற்றியவன் கன்னத்தை வருட, கூச்சத்தில் தவித்தவள்
“இளா, ப்ளீஸ்! க..கமலி கல்யாணத்துக்கு அப்புறம்….எல்லாமே நம்ம விஷயத்துல அவசரமா நடந்துடுச்சு” என்று அவனின் செயல்களுக்குத் தடை சொல்ல
“என்ன வேணும்னாலும் சொல்லுடி ஏத்துப்பேன், ஆனா எல்லாம் அவசரமா நடந்துச்சுன்னு மட்டும் சொல்லாத, கல்யாணமாகி மூணு வருஷம் அப்புறம் இப்போதான் உன் கையே பிடிக்கிறேன்” என்றவன் அவளை விட்டு விலகிப் படுக்க
“தப்பா நினைச்சிட்டியா?” என்ற வஞ்சுளவல்லியின் கேள்விக்கு
“அதெல்லாம் இல்லடி, தூங்கு” என்று சொல்ல
“ஏன் நீ எம்.எஸ் படிக்கல?” என்று வஞ்சி கேட்டாள்.
“படிக்கத்தான் பணம் கேட்டேன், அப்போதான் நமக்குள்ள பிரச்சனை ஆகிடுச்சு, நீ போய்ட்ட, அப்பாவும் அதுக்கு அப்புறம் அதைப் பத்திப் பேசல, என்னோட உழைப்பை கனவை அவர் மதிக்கலன்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, இவரை ஏன் கேட்கனும்னு விட்டுட்டேன், லோன் அப்ளை பண்ணாம விட்டேன். அப்புறம் புனேவுல இருக்கும்போது ஆன்சைட் சான்ஸ் யூஎஸ்க்கு, நிஜமா அவ்வளவு சந்தோஷம் எனக்கு, அப்பாவோட எந்த உதவியும் இல்லாம யூஎஸ் போகனும்ன்ற என் ஆசை நிறைவேறிடுச்சு, அங்க போனதும் புரிஞ்சது எனக்கு யூஎஸ் போகனும்னுதான் ஆசை எம்.எஸ் படிக்க இல்லன்னு”
“என்னாலதான் உன்னால எம்.எஸ் படிக்க முடியல” என்று அவள் வருந்தி சொல்ல
“அப்படியெல்லாம் சுத்தமா கிடையாது” என்று அழுத்தமாய் சொன்னவன் அவளின் வலக்கையை அழுத்தமாய்ப் பிடித்து
அப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் உறங்கிப்போக, காலையில் எழுந்தவுடன் வஞ்சியின் முகம் அப்படியே இளாவின் முகத்தின் முன்னே இருக்க, இளாவின் கைகள் தானாக வஞ்சியின் வதனம் வருடிட, அந்த வருடலில் கண்முழித்தவள்
“ச்சு” என்று கையைத் தட்டிவிட்டு மீண்டும் உறங்கப்பார்க்க
“ஏட்டி! எழுந்திருடி உன் அலாரம் சத்தம் கேட்டு நான் எழுந்திட்டேன்” என்று இளா சத்தம்போடவும் பட்டென எழுந்தவள் பாத்ரூம் போனாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவள்,
“இன்னிக்கு ஆபிஸ் போகனும் இளா” என்று அவனிடம் சொல்ல
“சரி போய்ட்டு வா” என்று அவன் உடனே சொல்ல
“அதில்ல, அத்தையும் கமலியும் நைட் ஊருக்குப் போய்டுவாங்க, அவங்க வீட்ல இருக்கும்போது நான் இல்லைனா அத்தைப் பேசுவாங்களே” என்று அவள் கொஞ்சம் கவலையுடன் சொல்ல
“நீ வீட்ல இருந்தாலும் அம்மா பேசுவாங்கதான், ஸோ நீ போய்ட்டு வா, முடிஞ்சா சீக்கிரம் வரப்பாரு”
“நெக்ஸ்ட் வீக் மொத்தமா லீவ் கேட்டிருக்கேன், நேத்தும் லீவ் போட்டேன், இன்னிக்கு ஒரு முக்கியமான வொர்க் இருக்கு” என்று வஞ்சி டென்ஷனாகப் பேச
“எனக்குத் தெரியாதா? இவ்வளவு டென்ஷன் ஆகாத வஞ்சி” என்றதும் அவளின் முகத்தினில் புன்னகை புலர, அந்த புத்துணர்வுடன் அவள் சமையலில் ஈடுபட
கமலி அவளிடம் வந்தவள்
“அத்தாச்சி!” என்று பேச, அவளின் தோளில் தட்டிய இளா
“அத்தாச்சி, மணி பத்தாச்சின்னு அண்ணின்னு கூப்பிடுடி” என்று அதட்டியவன்
“இன்னமுமா இவன் பூஸ்ட் குடிக்கிறான்” என்று அண்ணனைக் கடுப்பாய்ப் பார்த்த கமலி
“அத்..அண்ணியாரே! நான் இன்னிக்கு ஊருக்குப் போகனும், நீயும் எங்களோட வாவேன், ப்ளீஸ்” என்று அவளின் கையைப் பிடித்துக் கெஞ்சலாய் சொல்ல
“கையை விடுடி கமலி, காய் வெட்டுறேன்ல” என்று சொல்லியவள்
“அடுத்த வாரம் எப்படியும் நானும் அவரும் வந்துடுவோமே கமலி, இன்னும் நாலு நாள்தானே?”
“அவன் வந்தா அவனோடதானே இருப்ப நீ? இன்னும் பத்து நாள் அப்புறம் நான் உங்களோட இருக்க முடியாதுல, இரண்டு வருஷமா நீ வீட்டுக்கே வரல, நீ வந்தாதான் எனக்கு ஜாலியா இருக்கும், இல்லனா தனியே இருக்கனும் ”
“பார்க்கிறேன்” என்றவள் காலை உணவை தயார் செய்தவள் இளாவிடம்
“காலையில மட்டும் சாப்பாடு பண்ணிட்டேன், மதியம் செஞ்சா ஆறிடும், அத்தை சாப்பிடுவாங்களா?” என்று அவனிடம் கேட்க
“எனக்கு மட்டும் அப்படியே சமைச்சு வைச்சிட்டுப் போய்ட்ட, எங்கம்மாவை மட்டும் அப்படி கவனிக்கிற” என்று கிண்டல் பேசியவன்
“அவங்களுக்கு நான் பிரியாணி வாங்கித் தந்துடுவேன், நீ என்ன சாப்பிடுவ மதியம்?” என்று அவன் கேட்க வெகு வருடங்களுக்குப் பிறகு வேவம்(தனிமை) பொழுதுகள் நீங்கிய உணர்வு உள்ளத்தினுள், நெடுநல்வாடையாய் இருந்த பொழுதுகள் தீர்ந்து நேசம் நெஞ்சம் வீச
அதில் உணர்ச்சிகள் உயர்ந்தோங்க விழிகளில் நீர் நிறைய, பேசாமல் வஞ்சி நிற்க
“என்னாச்சு வஞ்சி?” என்று அவன் கேட்க
“ஒன்னுமில்ல” என்றவளின் குரலில் உள்ள சோகம் அவனுக்குப் புரிய
“என்னனு சொல்லு” என்றான் விடாப்பிடியாக.
“இல்ல இப்படி என்னை சாப்பிட்டியா? என்ன சாப்பிடுவன்னு எல்லாம் அம்மா நல்லா இருந்தப்போ கேட்டாங்க, அப்புறம் கேட்க யாருமில்ல” என்றாள் சாதாரணமாக. முகத்தில் கொஞ்சம் புன்னகையும் கூட!
ஆனால் விழிகளினில் மென்சோகம் இருக்க அதனையும்விட அந்த மென்முறுவல்! அதுவே உணர்ந்து பார்ப்பவருக்கு அவளின் உள்ளத்தின் வலி சொல்ல, இளந்திரையனுக்குக் குற்றவுணர்வாய்ப் போனது.
அவளை அணைத்துக்கொண்டவன்
“சாரி” என்றான்.
“லூசு இளா, நானும்தான் உங்களைக் கேட்கல” என்று அவள் அதே கொஞ்சும் புன்னகையுடன் சொல்ல, அவள் விழிகளின் வலியில் இருந்த மீளமுடியாதவனாக
“இரண்டும் ஒன்னு கிடையாது, நீ செஞ்சது தப்புன்னாலும் அதை நான் திருத்தி இருக்கனும்” என்று சொல்ல
“கண்டிஷன் 2” என்று அவள் மிரட்ட
“ஹாஹா” என்று சிரித்தவன்
“உனக்கு நைட் பிரியாணி வாங்கி வைக்கிறேன்” என்று சொல்ல
“இளா, கமலி ஒன்னு கேட்டா” என்று வஞ்சி ஆரம்பிக்க
“இவ்வளவு வாங்கினது அவளுக்குப் பத்தலையா?” என்று எரிச்சலாய் அவன் கேட்க
“ஷ்! அது இல்ல, அவ என்னையும் ஊருக்குக் கூப்பிடுறா, நானும் போகவா?” என்றதும் அவன் கண்கள் சுருக்கி அவளைக் கடுப்புடன் பார்த்து
“நீ எதுக்கு?”
“அவ கல்யாணமாகி போய்டுவா இல்ல, அவளை நான் மிஸ் பண்ணுவேன் இளா, இப்போதான் இப்படி சேர்ந்து இருக்கலாம்” என்று வஞ்சி ஆசை ஆசையாய் சொல்ல
“பாவம் அவ ஆசையா கேட்கிறா, எனக்கும் ஆசையாதான் இருக்கு” என்றதும் இன்னும் கோபம் கொண்டவன்
“உனக்கு எங்கூட இருக்கனும்ன்ற ஆசையைத் தவிர எல்லா ஆசையும் இருக்கும்” என்றவன்
“அந்த கமலியை சொல்லனும், நாளைக்கு கல்யாணமாகிப் போகப் போறா, இன்னமும் அறிவில்லாம சுத்துது” என்று கமலியைப் பேச, வஞ்சியும் கோபம் கொண்டவள்
“அவளை ஏன் பேசுறீங்க நீங்க? அவதான் எப்பவும் ஒரே மாதிரி என் மேல் அக்கறையாய் இருந்திருக்கா” என்றதும் இளாவிற்கு அவனைக் குத்திக்காட்டுவது போல் இருக்க
“நான் இல்லை அப்படித்தானே?”
“ஆமா! அப்படித்தான்!” என்று அழுத்தி சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது.
“என்னைப் பழசைப் பேசாதன்னு நீதான் அதை மறக்கல, இப்ப என்னடி உனக்கு அவ கூட போகனும்னா போய்க்கோ, என்னமோ இரண்டு பேரும் அப்படியே இணைப்பிரியாம குடும்பம் நடத்திட்டோம் பாரு நான் ஃபீல் செய்ய, ச்ச” என்று தலையில் அடித்துக் கொண்டவன் குளிக்கப் போய்விட்டான்.
வஞ்சிக்கும் இரவெல்லாம் இருந்த இதம் மறைய, இளாவின் மீது நிறைய கோபம் எழுந்தது.