“விட்டிருந்தேன்னா அன்னைக்கு கீர்த்தியை அடிச்சிருப்பல்ல” என்று கண்ணாடி வழியே அலரை பார்த்து எழில் கேட்கவும்.
‘கண்டிப்பா’என்றவள் எழில் உரக்க சிரிப்பதை கண்டு, ‘பின்ன என்னடாஎன்னை விட்டுட்டு கீர்த்தி கிட்ட சகஜமா பேசிட்டு இருந்தா கோவம் வர தானே செய்யும் ” என்று கேட்க,
“ஏன்டி எல்லா மாமா பொண்ணுங்க கிட்டயும் சகஜமா தானே பேசுவேன் கீர்த்தி கிட்ட பேசினா மட்டும்ஏன் உனக்கு கோவம் வருது..??”
‘எல்லாரும் சரி ஆனா நீ கீர்த்தியை பொண்ணு பார்க்க ..‘ என்று அவள் நிறுத்த,
‘இதோ பார் நம்ம குடும்பத்து பொண்ணுங்க எல்லாரும் எனக்கு ஒன்னு தான் எங்கக்கா, ரேவதி, சுகன்யா, ப்ரியா, தாமரை மாதிரி தான் எனக்கு கீர்த்தியும்‘ என்று கூறியவன் பாதை மாறி செல்வதை கண்டு.
“வீட்டுக்கு போகலையா மாமா..”
‘இல்லை’
“வேற எங்கே போறோம்..??”
“வந்து பாருடி புரியும்” என்று கூறவும் அமைதியானவள் சென்று சேர்ந்த இடத்தை கண்டு அதிர்ந்து அவனை பார்க்கவும்,
“நேரமாச்சு போ..”
அலர்விழியோ ஆச்சர்யத்தில் விழி விரித்து அவனையே பார்த்திருக்கஅவளை நெருங்கிய நித்யா, போதும்டி அண்ணாவை சைட் அடிச்சது.. நம்ம வேலையை பார்க்கலாமா..? என்று இழுத்து சென்றாள்.
அது அரசு சாரா மகளிர் மற்றும் குழந்தைகள் இல்லம். கணவனால், குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், தூக்கி எறியப்பட்ட சிசுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடம். வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலையை தீர்வாய் எண்ணி பலர் செயல்படும் காலகட்டத்தில் தங்களுக்கும் விடியல் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கும் பெண்களுக்கு கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் கணினி முதலான பலவித பயிற்சிகள் அளித்து, அடிப்படை சட்டங்களை போதித்து வாழ்வை எதிர்கொள்ளும் திடம் அளித்து அவர்களின் வாழ்வை அலர், நித்யா, காயத்ரி மூவரும் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டிருகின்றனர்.
பாதிக்கபட்டவர்களுக்கு விருப்பம் இருப்பின் இவர்களே வழக்கு தொடுக்க உதவி செய்து அவர்களுக்கு முறையான நீதி கிடைத்திடவும் வழி செய்து வருகின்றனர். இது இவர்கள் மூவரால் மட்டுமே சாத்தியம் இல்லைசரண் அவனுடன் பணிபுரிபவர்களையும் இதில் ஈடுபடுத்தியுள்ளான் அதேபோலவே நித்யா, காயூ தரப்பிலும்.சிலர் நேரமின்மை காரணமாக வழக்கிற்கான பண உதவியுடன் நிறுத்திக்கொள்வர் ஆனால் மூவரும் தினமும் தங்கள் அன்றாட பணிகளில் ஒன்றாய் இதையும் அமைத்துக்கொண்டனர்.
மாலை வழக்கமான நேரத்தில் அவளை அழைத்து செல்ல வந்தவன் நித்யா காயூவையும் விடுதியில் சேர்த்த பின்பே அவளுடன் வீடு திரும்பினான்.
வீட்டினுள் நுழைந்ததுமே “எப்படி மாமா உனக்கு தெரியும்” என்று அலர் அவன் பின்னே செல்ல..
“இருடி டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்” எனவும் அவனோடு அறைக்குள் நுழைந்தவள்
“முடியாது.. சொல்லு” என்று அவன் சட்டையை பிடித்து இழுக்கவும் கட்டிலில் அமர்ந்தவன் அவளையும் தன் மடியில் அமர்த்தி, “சரி சொல்லுஎன்ன தெரியணும்..?” என்று கேட்க,
“ உனக்கு எப்படி தெரியும்..!”
“நீ வக்கீல் தானே கண்டுபிடி” என்றான்.
அவனை முறைத்து கொண்டே யோசிக்க ஆரம்பித்தவள் சிறிது நேரம் கழித்து ‘சரண் மாமாவா..??’ என்று கேட்கவும்,
‘இல்லை‘
‘வேற யார்..?? நித்யா, காயூ’ என்று ஒவ்வொரு பெயராக சொல்லவும் அனைத்திற்கும் இல்லை என்று தலை அசைத்தவன், “எதுக்குடி சீனியரை அடிச்ச..?” என்று கேட்கவும்,
ஆச்சரியத்தில் விழி விரிய அவனை பார்த்தவள், “மா..மா.. டேய் எப்படி உனக்கு தெரியும்” என்றவளை மடியில் இருந்து விலக்கி அமர்த்தியவன், “கேட்டதுக்கு பதில்.. எதுக்கு அவனை அடிச்ச சொல்லு..” என்றான் கறார் குரலில்.
“அதுக்கு ஏன்…” என்று சிணுங்கிக்கொண்டே உதட்டை சுழித்துமீண்டும் அவன் மடியில் அமர்ந்து சலுகையாய் சாய்ந்து கொண்டு அன்றைய நாளை அவனிடம் விவரித்தாள்.
“அவனுக்கு எத்தனை முறை தான் மாமா சொல்றது அப்பவும் காயூ பின்னாடி வந்து டார்ச்சர் பண்ணிட்டே இருந்தான். ப்ரின்ஸி வரை போயும் அடங்கலைநாங்க சமாதானப்படுத்தி அவளை கூட்டிட்டு போனோம். ஆனாலும் அவன் அடங்குனானா..!” என்றவள் முகம் அன்றைய நினைவில் மீண்டும் ரௌத்திரம் கொண்டது.
‘கேன்டீன்ல இருந்தப்போ அத்தனை பேர் முன்னாடியும் வந்து ப்ரோபோஸ் பண்ணி அவனை அக்செப்ட் பண்ணனும்னு கம்பெல் பண்ணி.. அவ முடியாது சொல்லவும் கடைசியா அவளை பத்தி தப்பா பேசவும்இனி அவனுக்கு வாய் வார்த்தை உதவாதுன்னு தான் இழுத்து விட்டேன் ஒண்ணு’
அதுவரை எந்த மறுமொழியும் கூறாது பார்த்துக்கொண்டிருந்தவன் “சரி அந்த பிரச்சனை தான் அங்கேயே முடிஞ்சதே… அப்புறம் எதுக்கு அந்த பையனோட அப்பாகிட்ட போன ?“
“என்ன கேள்வி இது..!” என்பதாய் அவனை பார்த்தவள் “மாமா இந்த காலத்துல பொண்ணுங்க ஜஸ்ட் நோன்னு சொன்னாலே ஆசிட் அடிக்கிறானுங்க.. இங்க நான் அவனை அடிச்சிருக்கேன் அதுவும் கேண்டீன்ல அத்தனை பேர் பார்க்க அப்போ என்னை அட்டாக் பண்ணமாட்டானா ?அதுக்கு தான் ஒரு முன்னெச்சரிக்கையா அவன் அப்பாவை பார்த்தேன்”
“அதுமட்டுமில்லை படிக்க அனுப்பின உங்க புள்ள எப்படி தறுதலையா திரியுது பாருங்கன்னு அவன் எங்க கிட்ட கேன்டீன்ல பேசினதுநான் அவனை அடிச்ச வீடியோவை அவங்க அப்பாகிட்ட காட்டிஇனியும் உங்க பையனால பிரச்சனை வந்ததுன்னாகாம்பிளைன்ட் பண்ணி உள்ள தள்ளுறதோட சோசியல் மீடியாவுல போட்டு கிழிச்சி தோரணம் கட்டுவோம்எப்படி வசதின்னு கேட்கவும்… மனுஷன் நல்லவர் புரிஞ்சிக்கிட்டார் அதுக்கப்புறம் அவன் அவ பக்கம் திரும்பியும் பார்க்கலை“
“உனக்கு கையும் வாயும் ரொம்பவே நீளம்டி.. எத்தனை சொன்னாலும் அடங்க மாட்டேங்கிற போற வர எடத்துல எல்லாம் பிரச்சனை இழுக்காம விடமாட்டியா..? அன்னைக்கு ஜஸ்ட் மிஸ்இல்லாட்டி..” என்றவன் அவள் சுடிதார் டாப்பை உயர்த்தி அவள் இடையில் இருந்த தழும்பை வருடவும்…
‘உனக்கு எப்படி தெரியும் அப்.. அப்போ.. அன்னைக்கு என்னை காப்பாத்தினது அது நீ தானா மாமா…??’ என்று புன்னகையோடு ஆர்பரிக்கவும்,
‘ஆம்‘ என்று இமை மூடி திறந்தவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு “அசத்துறடா” என்று கன்னத்தில் இதழ் பதித்தவள்,
“அப்போ நீ என்னை வாட்ச் பண்ணி இருக்க.. ரைட்” என்றவள் தனக்குள் சில நொடிகள் கணக்கிட்டு பின் அவனிடம் ஆனா ஒரு இடம் உதைக்குதே..
‘என்னது..??’
‘நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் இங்க என் காலேஜ் பக்கத்துல வந்தோம் அப்புறம் எப்படி..?’ அதுமட்டும் இல்லாம அன்னைக்கு பிரச்சனை நடந்தப்போ எப்படி அவ்ளோ சீக்கிரம் வந்த..??’ என்று கேள்வியாய் பார்க்க,
‘கண்டுபிடிடி‘
“எவ்ளவோ யோசிச்சு பார்த்தேன் ஆனா கண்டுபிடிக்க முடியலை மாமா ப்ளீஸ் நீயே சொல்லுடா இல்லை எனக்கு இதுவே மண்டையை போட்டு நாள்பூரா குடையும்” என்றவளை கைகளில் அள்ளிக்கொண்டு தங்கள் அறையின் ஜன்னல் வழியே சுட்டி காட்டவும் ‘என்ன இது..??’ என்று எதிரே இருந்த கட்டிடத்தை புரியாமல் பார்த்தாள்.
“ஆரம்பத்துல வேற ஏரியால இருந்தேன்நீ ராகிங் விஷயத்துல ப்ரின்ஸி வரை போக அவர் உங்கப்பாக்கு பேசி கண்டிச்சி வைக்க சொல்லி இருந்தார்.. உங்கப்பாவும் பிரின்சிபல் கிட்ட இருந்து ஒரு வார்த்தை வந்துடுச்சுன்னதும் உன்னை படிக்கிற வேலையை மட்டும் பார்க்கிறதா இருந்தா இங்க இரு இல்லாட்டி ஊருக்கு கிளம்பு, கண்டவன் கிட்டயும் என்னை கைகட்டி நிற்க வைப்பியான்னு பேசினது…!! அப்புறம் சீனியரை அடிச்சது வரை கதிர் மூலமா தெரியவும்..” இதோ என்று அக்கட்டிடத்தை சுட்டி காட்டியவன் ஷிப்ட் ஆகி அங்க வந்துட்டேன்.
“நித்யா கிட்ட என் நம்பர் கொடுத்து அவசரம்னா எந்த நேரமானாலும் கூப்பிட சொல்லி இருந்தேன், அப்படி தான் அன்னைக்கு நீங்க ஹோம்க்கு போய்ட்டு வரும்போது உன்னை அட்டாக் பண்ண வந்ததை நித்யா அனுப்புன எமர்ஜென்சிமெசேஜ் பாத்துட்டு நான் உடனே வந்தேன்” என்றான்.
அனைத்தையும் பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தவள்.., “அப்படியா ஆனா இதுவரை அந்த எருமை என்கிட்ட மூச்சே விடல.. அன்னைக்கு காப்பாத்தின உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு சொன்னப்போ கூட ஒன்னும் வேண்டாம் வான்னு இழுத்துட்டு போய்ட்டா எவ்ளோ விஷயம் மறைச்சு இருக்கா இருக்கு அவளுக்கு”
‘ஏய் அந்த பெண்ணை ஏன்டி திட்டுற உன்னை தொந்தரவு பண்ணகூடாது அது இதுன்னு நிறைய கண்டிஷன் போட்டு தான் நான் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாங்க ஒன்னும் சொல்லாத’
“ஹ்ம்ம்… சரி நீ சொல்றதால அவளை விடுறேன்” என்று அகனை கட்டிக்கொள்ள அதன்பின் மௌனமே பாஷையாகி போனது பாவைக்கு.
**************************************
அடுத்தநாள் காலை தாயம்மாள் வந்து இறங்கவும் அவர் வரவிற்கான காரணம் அறிந்தவள் “ஹுஹ்ம் முடியாது மாமா.. ஒத்துக்கமாட்டேன்” என்றவள் ஓரிடத்தில் நிற்காமல் கோபத்தை கட்டுபடுத்த அங்குமிங்கும் நடந்தாள்.
“ப்ளீஸ்டி… ஒன்றரை மாசம் தான் கண்ணை மூடி திறந்தா ஓடிடும் இப்ப மாத்த முடியாது புரிஞ்சுக்கோ” என்று எழில் அவள் பின்னே சென்றான்.
பேரன் பேத்தியின் இணக்கம் மனம் கொள்ளா காட்சியாக அமையதாயம்மாள் முகத்தில் புன்னகை இழையோட இருவரின் ஊடலையும் ரசித்து கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் அவன் சட்டையை பிடித்தவள், “இங்க இல்லாத சென்டர்ஸா உன்னை யாரு அங்க அப்ளை பண்ண சொன்னாமுடியாதுஒன்னு இங்க மாத்து இல்லாட்டி ட்ரைனிங்கே போகாத” என்றாள் ஒரேபிடியாக.
இதை கண்ட தாயம்மாளோ ‘விடுடி‘ என்று அவள் கரத்தை அவன் சட்டையில் இருந்து பிரித்தவர் “என் எதிர்லயே சட்டையை பிடிக்கிறன்னாஇல்லாதப்ப என் பேரனை என்ன பண்ண தயங்க மாட்ட..??” என்று சீறவும்.
“அப்பத்தா வேண்டாம் வீணா என்னை கிளராத..!”
‘ஏன்டி சின்ன விஷயத்துக்கு இந்த குதி குதிக்கிற..??’
‘ஏதே நான் குதிக்கிறேனா அப்போ உன் பேரன் பண்ணினது சரின்னு சொல்றியா..?’ என்று இவள் உறுமவும்..,
“என்னடி பண்ணசூழல் அந்த மாதிரி புரிஞ்சிக்கோ தங்கம் .., ராசா சொல்ற மாதிரி பரீட்சை முடிச்சிட்டு எங்க கூட கிளம்பி வாமதுரையில் இருந்து வரும் போது உன்னை கூட்டிட்டு இங்க வரட்டும்” என்றார்.
மறுநாள் காலை தன் பயண பொதிகளுடன் நின்றிருந்தவனை நெருங்கி “தினமும் கால் பண்ணு மாமா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ட்ரைனிங் முடிஞ்சதும் லேட் பண்ணாம சீக்கிரம் வந்துடுடா” எனவும்அலைபேசியை எடுத்து ‘சிரிடி’ என்றான்.
அலரும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவனை ஒட்டி நிற்க அவளை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்தபடி தங்களை செல்ஃபீ எடுத்தவன் அவளிடம் நீட்டி ‘இப்போ சந்தோஷமா..?’ என்று கேட்டு இதை பார்த்துட்டே இரு சீக்கிரம் வந்துடறேன் என்று மதுரைக்கு கிளம்ப… தேர்வுகளை முடித்தவள் ஒரு வாரம் கழித்து தாயம்மாள், கதிருடன் ஆரணி சென்று சேர்ந்தாள்.
எழில் அருகே இல்லாத ஒவ்வொரு நாளும் யுகமாய் கழிய… காணும் இடங்களில் எல்லாம் தன்னவனை தேடியே நாட்களை கடத்தியவள்தடுத்தவர்களுக்கு செவி சாய்க்காதுஅவன் வரவிற்கு முன்பே சென்னை கிளம்பிவிட்டாள்.
பதவி உயர்விற்கான ஒன்றரை மாத கால பயிற்சியை முடித்து வீடு திரும்பியவனை வரவேற்றது என்னவோ உரக்க ஒலித்து கொண்டிருந்த “அடியே அடியே என் குட்டி பட்டாசே..” பாடலும் கமகமக்கும் நெய் வாசமும் தான்.
‘சமையலா..?? அதுவும் தன்னவளா..??’ என்று முகம் ஆச்சர்யத்தை தத்தெடுக்க இதழ்களில் மென்னகையுடன் அலரை தேடி சென்றான்.
அங்கு த்ரீ போர்த் பேண்டும் இடை வரையிலான டாப்பும் அணிந்து விரித்து விடப்பட்டிருந்த கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக்கொண்டே சமைத்து கொண்டிருந்தவளின் அழகில் சொக்கி நின்றவன் தலை முதல் கால் வரை அவளை அளவெடுத்தவாறே மெல்ல அலரை நெருங்கி நடனமாடி கொண்டிருந்தவளின் இடையை வளைத்து இறுக அணைத்து கார்க்கூந்தலில் முகம் புதைத்தான்.
அவள் சுகந்தத்தை ஸ்பரிசித்து “நெய் வாசத்தை மிஞ்சி உன் வாசம் ஆளையே தூக்குதுடி குள்ளச்சி ” என்று கூந்தலை விலக்கி கழுத்து வளைவில் முகம் புதைத்து காதல் தீயை மெய் கொண்டு வார்க்க தன்னவனின் நெருக்கத்தில் முகத்தில் செம்மை படர ‘எப்போ மாமா வந்த..?? என்று கேட்க,
அவளை தன் புறம் திருப்பியவன் “அடங்கவே மாட்டியாடி நீ…! நான் தான் வரேன்னு சொன்னேனேஅதுக்குள்ள ஏன் வந்த..” என்று செல்லமாக கடியவும்,
அவன் கழுத்தில் கரம் கோர்த்தவள் “நான் என்ன சின்ன குழந்தையா..?” என்று கேட்டு கண்சிமிட்டிட மலரவளின் கண்களில் ஒளிர்ந்த காதலும் தேடலும் அகனவனின் அகம் நிறைக்க அலரை காற்று புகாதவாறு இறுக்கமாக அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.
அலங்காரம் ஏதுமற்ற அவள் முகத்தில் தனக்கான அங்கீகாரத்தை நெற்றி வகிட்டில் உரக்க பறை சாற்றியிருப்பதை கண்டவனின் கரங்கள் சுதந்திரமாய் மலரவளில் ஊர்வலம் வரத்தொடங்கி அவளை கொள்ளை கொள்ள துடித்தது.
அவன் தேவை உணர்ந்தவளோ “மாமா ஒரு நிமிஷம்..” என அவனிடம் இருந்து விலக முனைந்திட,
“எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லு” என்று கிறங்கிய குரலில் அவள் விழிகளை ஊடுருவிட..,
“உனக்காகவே பார்த்து பார்த்து சமைச்சிருக்கேன் மாமா அதனால சாப்பிட்டுட்டு..” என்று ஆரம்பித்தவள் என்றும் போல் அவன் விழி வீச்சிற்கு கட்டுப்பட்டவளாய் அவனில் லயிக்க புன்னகையுடன் அவளை கரங்களில் ஏந்திக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.
உள்ளே சென்றவன் அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை கண்டு பிரமித்து நிற்கவும்,“சர்ப்ரைஸ்” என்று இறங்கி அவனை அணைத்து மார்பில் இதழ் பதித்தாள்.
‘என்..ன..டி ..??’ என்று அவளை தன் கைவளைவில் நிறுத்தியவனின் கரங்கள் இடையை அழுத்தமாய் இறுக்கியது.
“நீதானடா ரொம்ப பீல் பண்ண அப்படி ஒரு பர்ஸ்ட் நைட் யாருக்குமே அமைஞ்சிருக்காதுன்னு அதான் பர்ஸ்ட் டே..” என்று அலர் கண்சிமிட்டி சிரிக்கவும்..,
“ஏன்டி குள்ளச்சி.. உனக்கு சிரிப்பா இருக்கா..?” என்று அவள் கன்னத்தில் அழுந்த கடித்தான்.
“ஹாஆஆ.. ஹாப்பி பர்த்டே மாமா” என்றாள் வலியையும் மீறி உரத்த குரலில்.
அவன் இனிதாய் அதிர்ந்து நிற்பதை கண்டவள் எக்கி அவன் நெற்றியில் இதழ் பதித்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா செல்லம்” என்றிட காற்று புகாதவாறு இறுக அணைத்தவன் “கிப்ட் எங்கடி..?” என்றிட,
“என்னை விட பெரிய கிப்ட் என்ன இருந்திட முடியும்..??” என்று அவன் மூக்குரசி கேட்டவளை அள்ளி சென்று களவாட ஆரம்பித்தான். நெடுநாள் பிரிவிற்கு பின்பான தேடலில் அலர்விழியும் எழிலிடம் தன்னை தொலைத்து அவனை மீட்டெடுத்தாள்.
******************************************
தன் முன் பரிமாறப்பட்டிருந்த உணவுகளையும் அலரின் கரத்தில் இருந்த கேசரியையும் எழிலன் ஆராய்ச்சியோடு பார்த்திருக்க,
“என்ன பார்க்கிற சாப்பிடு மாமா” என்று அலர் கேசரியை அவனுக்கு ஊட்டிவிடவும் சுவைத்தவன் உடனே, “நீலாம்மா வந்திருந்தாங்களா..?” என்றான்.
ஏன் இந்த கேள்வி புரியாது “இல்லையே” என்றவள் பின்னர் அவன் கேலி புரிந்ததும் ‘டேய்ய்…‘ என்று கண்களை உருட்டி“என்னை பார்த்தா உனக்கு சமைக்கிற மாதிரி தெரியலையா ?” என்று முறைக்கவும்..,
“நம்ப முடியலையேடிஉனக்கும் சமையலுக்கும் தான் பூர்வ ஜென்ம பகையாச்சேஅதான் கேட்குறேன் எப்படி இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு..!” என்று அவளுக்கும் ஊட்டிவிட்டவாறு கேட்க..
“சந்தேகமே வேண்டாம் நான் சமைச்சது தான்.. இனியும் தொடரும்” என்று மெல்ல தலை தாழ்த்த.,
அவள் முகம் பற்றி நிமிர்த்தியவன் “அதுதான் எப்படிடி“
“சாப்பிடும் போது பேசக்கூடாது மாமா மொதல்ல சாப்பிட்டு முடிஅப்புறம் சொல்றேன்” எனவும், அவளுக்கும் ஊட்டி விட்டவாறு நிறைவாய் உண்டு முடித்தான்.
மனைவி மடியில் தலை சாய்த்தவன் “சொல்லுடி குள்ளச்சி எப்படி..? என்று ஆச்சர்யத்தோடு கேட்க,
“எனக்கு எல்லாம் தெரியும் மாமா..”என்றாள்.
“ஓஹ் ஊருல இருந்தப்போ மாமி உனக்கு ட்ரைன் பண்ணினாங்களா..?? இத்தனை நாள் உன்னை அங்க விட்டுட்டு போனதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு” என்று எழில் புன்னகைக்க,
‘இல்லை‘ என்ற தலையசைப்போடு “எனக்கு எல்லாமே தெரியும்..” என்ற அவள் குரல் வேறுபட்டிருக்க அதை கண்டுகொண்டவனின் புருவம் ‘என்ன..??’ என்பதாய் ஏறி இறங்கியது.
அன்று அவனை சுயநலவாதி என்று உரக்க சாடியவள் அது பொய்த்துப்போனதை உணர்ந்து அவனிடம் எவ்வாறு ஆரம்பிப்பது என்று புரியாமல் கலங்கி உதட்டை அழுத்தமாக கடித்து கொண்டு அவன் சிகையில் கரங்களை அழுத்தமாக அலைபாய விட்டு கொண்டிருந்தாள்.
அவள் உணர்வை படித்தவன் “ம்ம்ம்… சொல்லு என்ன தெரியும்..” என்றான் சற்று குரல் உயர்த்தி.
இன்றே மீதமிருக்கும் சிறு கசடையும் நீக்கி விடும் முனைப்புடன், “இத்தனை வருஷமா நீயும், மாமாவும் உ.. உங்க அம்மா சமைய..” என்று திணற அதுகாறும் இருந்த இதம் மறைந்து எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகி போனது.
அதை கண்டுகொண்டவள், “ப்ளீஸ் மாமா எனக்கு நிஜமாவே அப்போ இது எதுவும் தெரியாது.. நீங்களும் மாமாவும் அவங்க கையால சாப்பிடாம தனியா சமைச்சு சாப்பிட்டது,எங்க அம்மாக்காக அவங்க கிட்ட பேச்சுவார்த்தை இல்லாமல் ஒதுக்கி வச்சதுஅப்பவும் உன்னை நிம்மதியா இருக்க விடாம பெண் பார்க்க கூட்டிட்டு போனது…” என்று முகம் சுழிக்கவும்,
அதை கண்டவனின் இறுக்கம் தளர்ந்திடமுறுவலுடன் “ஏன்டி அதை மட்டும் நீ விடவே மாட்டியா..?” எனவும்.
அவன் தாடை பற்றியவள் “எப்படிடா விட சொல்ற… கூப்பிட்டா அதுதான் சாக்குன்னு கிளம்பிடுவியா..?” என்று வலிக்க அவன் கன்னத்தில் கடிக்கவும்
“ஸ்ஸப்பா ஏய் விடுடி விடு ராட்சசி கொஞ்சம் விட்டிருந்தா ரத்தமே வந்திருக்கும்” என்று கன்னத்தை தேய்த்தவனிடம்,
“என்னால அதை ஏத்துக்கவே முடியலைடா..” என்று கண்கள் கலங்க கூறியவளை அணைத்து கொண்டவன், “முற்றுப்புள்ளி வைக்கணும்னு தான்டி போனேன்” என்றான்.
அவன் சகஜமாகியதை உணர்ந்தவள் அவன் மடியில் அமர்ந்து கொண்டு.., “அம்மாவை பேசினத்துக்காக நீங்களும் அண்ணியும் துடிச்சு போய் எங்க வீட்டுக்கு வந்ததுஆனா எங்கப்பா யாரோ பேசினத்துக்கு உங்களை திட்டினது வீட்டுக்குள் சேர்க்காம போனது எல்லாமே தெரியும் மாமா..” என்று அவள் தந்தை அவனை அன்று அவமதித்ததற்காக இன்று கலங்கியவளாய் கண்களில் வலியுடன் அவன் நெற்றியில் மன்னிப்பாய் முத்தம் பதித்தாள்.
“விடுடி.. அன்னைக்கு நடந்த விஷயம் எதுவும் உனக்கு தெரியாது. அதுக்கப்புறம் நீதான் ஹாஸ்டல்லயே முக்கால்வாசி நேரம் இருந்தயே ஸோ உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று அவளை அணைத்துக்கொண்டான்.
இருவருக்கும் இடையே கனத்த மௌனம் நிலவ நீண்ட நிமிடங்களுக்கு பின் தலை உயர்த்தி,“எனக்கு இது ஒன்னு தான் மாமா புரியலை” என்றாள் யோசனையோடு..
‘என்னது..??’
“இல்ல அன்னைக்கு கோவில்ல அவ்ளோ வன்மத்தோட பேசினவங்க எப்படி நம்ம கல்யாணத்தை நல்லபடியா நடத்த விட்டாங்கன்னு தான் ஆச்சர்யமா இருக்கு, அப்புறம் என்ன நடந்தது சொல்லு மாமா” என்றாள் ஆர்வமுடன்.
“ஏன்டி நீ கேட்குற வேகத்தை பார்த்தா எங்கம்மா வந்து நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்தாததுக்கு ரொம்ப பீல் பண்ற மாதிரி தெரியுதே..?” என்று சிரிக்கவும்,
அவன் முதுகில் ரெண்டு வைத்தவள் “நீ கேடிடா யார் தடுக்க வந்திருந்தாலும் தாலி கட்டி தூக்கி இருப்ப எனக்கு தெரியும் ஆனா ப்ளீஸ் சொல்லு மாமா அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியனும்”
“இருந்தா தானே வரதுக்கு” என்றான் கசந்த முறுவலுடன்..
‘அப்போ..’ என்று அலர் அதிர்வோடு அவனை பார்க்க ‘இல்லை’என்று பலமாய் தலை அசைத்தவன் அன்றைய நாளை அவளுக்கு விவரிக்க தொடங்கினான்.