“நான் சொல்றதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியலை ஆனாலும் சொல்லிதானே ஆகணும்” என்றவன் தலையை அழுந்த கோதி,
“அமுலு நீ என்னென்னமோ சொல்ற ஆனா நான்… எனக்கு என்று நெற்றியை விரல்கள் கொண்டு அழுத்தி கொடுத்தவன், எனக்கு உன்னை மாதிரி பாயின்ட் பாயின்ட்டா பேச தெரியாது ஆனா, ஆனா நான் இன்னொரு சஞ்சீவ் ஆக விரும்பலை” என்றான் உறுதியான குரலில்..
‘மாமா…’
“அன்னைக்கு அப்பு பிறந்தப்போ நீ பட்ட… என்று மென்று விழுங்கியவனுக்கு மீண்டும் அன்றைய நினைவு துரத்த வேண்டாம் என்பதாக தலையை இருமருங்கிலும் வேகமாக அசைத்தவன் அலரை இழுத்து எலும்புகள் நொறுங்கும் அளவு இறுக கட்டிகொண்டு அவள் தோளில் முகம் புதைத்தான்.
“இன்னொருமுறை நீ பிரசவவலியில செத்து பிழைக்குறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லை, எனக்கு அப்பவும் இப்பவும் எப்பவும் நீ மட்டும் போதும்..!! நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை பண்ணிகூட பார்க்க முடியாதுடி, என்னோட நீ இல்லாட்டி நான் செத்துடுவேன்” என்றவனின் விழிகளில் வழிந்த கண்ணீர் அவள் கழுத்தில் இருந்து வழிந்து அவள் மார்பை சுட்டது.
“அம்மு, அ..மு..லு…, உனக்கு தெரியாது நீ மயங்கி இருந்த உன்கிட்ட ஒரு சின்ன அசைவுகூட இல்லைஆனா ஆனா.. அங்க ரத்… ரத்…” என்றவனின்உடல் வெளிப்படையாக உதறலெடுக்க எங்கே தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற பதைபதைப்புடன் எழில்அவளை இன்னும் இறுக்கமாக அணைக்க அலரோ அவனணைப்பில் மூச்சு காற்றுக்கு தவித்து போனாள்.
அதை அறியாதவனோ, “அன்னைக்கு நீ கண் முழிக்கிற வரைஎன் உயிர் என் கையில இல்லை.. உனக்கு தெரியாதுடி, நான் உன்கிட்ட இதுவரை சொன்னது இல்லை இப்போ சொல்றேன்” என்று விழிநீரை புறங்கையால் துடைத்து கொண்டுஅவள் மதிமுகத்தை கரங்களில் ஏந்தியவன்,
“நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்லை..!! உன்னை வச்சு மட்டும் தான் என்னோட உலகமே இயங்குது நீ இல்லாத ஒரு வாழ்க்கையை ஹும்ஹும் என்னால கற்பனை பண்ணிகூட பார்க்க முடியாது” என்றவனின் முகம் இறுகி போக அவளிடமிருந்து பார்வையை திருப்பி கமறிய குரலில்,
“நீ என்ன சொன்னாலும் என்.. என்னோட முடிவுல மாற்றம் இருக்க போ…”என்று அவன் முடிக்கும் முன் அறைந்திருந்தாள் அலர்.
அதிர்வுடன் எழில் பார்க்க கண்ணீர் வழிந்தோட, “நினைச்சேன்அன்னைக்கு லேபர் வார்ட்ல உன்னை பார்த்தப்பவே எனக்குஏதோ சரி இல்லைன்னு தோணுச்சு ஆனா அது அந்த நேர உணர்வுன்னு சாதாரணமா நெனச்சிட்டேன் இப்போ இந்தளவு விஸ்வரூபம் எடுத்து வந்து நிற்கும்னு கனவுலகூட நினைக்கலை மாமா” என்றவள் அவனது வெறுமையான பார்வையில் சோர்ந்துபோனவளாக அவன் கன்னத்தை வருடி,
“சத்தியமா என்னால உன்கூட போராட முடியலைடா”என்றவள் எழுந்து நின்று ஒரு சுற்று சுற்றி காட்டி,
“இங்கபாரு எனக்கு ஒன்னும் இல்லை, அது நடந்து ரெண்டு மாசமாச்சு காயமெல்லாம் ஆறிப்போச்சு இப்போ எனக்கு எந்த பெயினும் இல்லை, நான் நல்லா இருக்கேன் மாமா அதுவும் உனக்கு பிடிச்ச புடவை கட்டி உனக்கு பிடிச்ச மாதிரி பொட்டு வச்சு பூ வச்சு உனக்காகவே ரெடியாகி இருக்கேன் அதுகூட உனக்கு தெரியலையா..?? கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரி என்னை பார்க்கிற, நான் கட்டிபிடிச்சா என்னை விலக்கி விட்டுட்டு போற உனக்கு என்ன தான்டா ஆச்சு”
“அமுலு நீ என் பக்கத்துல இருந்தாமட்டும் போதும்..!! வேற எதுவும் எனக்கு வேண்டாம், உன்னைவிட யாருமே, இவ்வளவு ஏன் நானுமே எனக்கு முக்கியமில்லை” என்றவனின் பார்வை அவளை தலை முதல் பாதம் வரை வருடிட,
“யாருக்காகவும் உன்னை இழக்க நான்தயாரா இல்லைடி” என்று உறுதியாக கூறிய கணவனது காதலின் உச்சம் வாயடைக்க செய்ய விழிகள் தெறிக்கஸ்தம்பித்து நின்றிருந்தாள்அலர்விழி.
நிமிடங்கள் பல கடந்தும் இருவரிடமும் மௌனமே நீடிக்க இதழ்களை அழுந்த கடித்து கண்ணீரை கட்டுபடுத்த போராடியவள் ஒருகட்டத்தில் முடியாமல் போக தன் எதிரே என்றுமில்லா உறுதியுடன் அமர்ந்திருந்த எழில் முன்மண்டியிட்டவள் அவன் கைகளை பிடித்து கொண்டு,
“ப்ளீஸ் மாமா இப்படி எல்லாம் பேசாத என.. எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு.., நிஜமாவே உன்னோட அன்பு என்னை மூச்சடைக்க வைக்குது, திரும்ப திரும்ப நான் உனக்கு தகுதி இல்லாதவளோன்னு யோசிக்க வைக்குதுடா” என்று அவன் கரங்களில் முகம் புதைத்து கதறியவள்,
“இல்ல மாமா நான் முடிவு பண்ணிட்டேன் கண்டிப்பா என்னோட உயிரை கொடுத்தாவது உன்.. உன்னோட ஆசையை நிறைவேத்துவேன்” என்றவாறே மயங்கி சரிந்திருந்தாள்.
********************************************
தன் கரங்களில் முகம் பொத்தி அலர் கதற தொடங்கையிலே உள்ளுக்குள் நொறுங்கி போன அகனெழிலன் அவளின் இறுதி வாக்கியத்தில் முற்றிலுமாக உருக்குலைந்து போனான்,
அச்சத்தில் வெளிறிய முகத்துடன் ‘அமுலு‘ என்று பதறியவன் சுதாரிப்பதற்குள் அலர் அவன் பாதங்களில் மயங்கி சரிய அதேநேரம் நாதன் மகளை தன் கரங்களில் தாங்கி இருந்தார்.
எழில் நாதனை பார்க்க அவரோ ருத்ரமூர்த்தியாக விழிகளாலே எழிலை எரித்து கொண்டிருந்தார்.
பின்னே பேரனை பார்பதற்காக அவர்களறையினுள் நுழைந்த நாதனுக்கு மகளின் அழுகுரலும் மயங்கிய நிலையும் காணும் போது அதற்கு காரணமானவன் மீது கோபம் வருவதுதானே முறை..!!
செய்வதறியாமல் எழில் ஸ்தம்பித்து நிற்க இங்கு நாதன் தான் மகளை எழுப்ப முயற்சித்து கொண்டிருந்தார்.
தண்ணீர் தெளித்த பின்பும் அவர் முயற்சிகள் பயனற்று போக உடனே வெளியேறியவர்மருத்துவருடன் திரும்பி இருந்தார்.
நாதன், வளர்மதி, நீலா என்று அனைவரும் கண்விழித்தவளிடம் விசாரித்து விட்டு கிளம்ப வெளியில் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த எழில் உள்ளே செல்ல அவனை பார்த்தவாறு எழுந்து சென்று கதவை அடைத்தவள் அதன் மீதே சாய்ந்து நின்று கைகளை கோர்த்துக்கொண்டு அவனை கூர்மையாக பார்த்திருந்தாள்.
மருத்துவரின் அறிவுரைகளே அவன் செவியில் ரீங்காரமிட இப்போது அவளின் நலன் மட்டுமே பிரதானமாகி போயிருக்க நகர மறுத்த கால்களை பிரம்மப்ராயத்தனம் செய்து இழுத்து சென்று அவளை அடைந்தவன் தன் மனதின் நடுக்கத்தை மறைத்தவாறு அவளை அணைக்க அலரும் பாந்தமாக அவன் அணைப்பில் அடங்கியவள் மெளனமாக அவன் முகம் பார்த்தாள்.
மனதினுள் ஆர்பரிக்கும் உணர்வுகளை கட்டுபடுத்தியவாறு அவளுச்சியில் இதழ் பதித்தவன் மெல்லிய குரலில், “இனிமேல் உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் போதுமா..!!” என்றுஉறுதி அளித்திருந்தான்.
அதில் அலரின் முகம் பிரகாசமானாலும் எழிலின் நெஞ்சம் வெகுவாக கசங்கி போனது பின்னே பிடிக்காததை செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தவனுக்கு அல்லவா நன்கு தெரியும் இனி நிச்சயம் அவளுக்கு பிடித்ததையும் தன்னால்செய்ய முடியாது என்று…!!
எழிலின் வார்த்தைகளில் அவனை இன்னும் இறுக கட்டிகொண்டவள் கணவனின் நெஞ்சில் முத்தமிட்டு “லவ் யூ மாமா” என்றிட எழிலோ புன்னகைக்கவும்மறந்தவனாகஉயிர்பற்று மனைவியை பார்த்திருந்தான்.
அதன்பின் குழந்தையின் பெயர் சூட்டு விழா முடித்து சென்ற அலர் மீண்டும் சென்னை வந்து சேர பகலில் உறங்கி இரவில் விழித்திருக்கும் குழந்தையை சுற்றியே அவர்களின் உலகம் இயங்க தொடங்க அதன் அங்கமாக சுடரும் அவர் பிள்ளைகளும் வந்து சேர அலருக்கும் குழந்தை வளர்ப்பு, இறுதி வருட படிப்பு, பரீட்சை என்று நாட்கள் வேகமாக நகர அவிரனுக்காக சுடர் அலருடன் அவளறையில் தங்க, தமக்கை பிள்ளைகளுடன் உறங்கும் எழிலின் விலகல் பெரிதாக யார் கருத்தையும் கவராது போனது.
சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின்…
“அமுலு இறங்கு” என்று எழில் கூறவும் பதிலளிக்காமல் அழுத்தமாய் அவனையே பார்த்துகொண்டிருந்தாள் அலர்விழி.
அவனோ வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் புறம் வந்து அவள் மடியில் இருந்த அவிரனை தூக்கி கொண்டு, “அமுலு உன்னை தான் சொல்றேன் இறங்கு” என்று மீண்டும் கூற..,
அவளோ துளிக்கூட அசையாமல் கூர்மையாக அவன் விழிகளை ஊடுருவியவாறே, “இங்க எதுக்கு மாமா வந்திருக்கோம்” என்று எதிரில் தெரிந்த அநாதை ஆசிரமத்தை விழிகளால் சுட்டி காட்டினாள்.
மெளனமாக அமர்ந்திருந்த கணவன் தன்னுணர்வுகளுடன் போராடிக் கொண்டிருப்பது அவளுக்கும் புரிபட படபடத்த நெஞ்சுடன் அவன் முகத்திலேயே விழிகளை நிலைக்க விட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
நொடிகள் பலநிமிடங்களை விழுங்கியும் அவிரனை தட்டி கொடுத்தவாறே அங்கிருந்த பலகையை வெறித்திருந்தான் அகனெழிலன்.
அவன் பார்வை மாற்றம் பெறாது வாய் திறவாதுஇருப்பதை கண்டவள்.., “சொல்லு மாமா எனக்கு பதில் வேணும் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க” என்று இம்முறை வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி அலர் கேட்கவும்..,
பதிலின்றி அவள் இறங்க மாட்டாள் என்பது புரிபட தூங்கி கொண்டிருந்த அவிரனை பின்புறம் படுக்க வைத்தவன் அவன் பாதுகாப்பை உறுதி படுத்திவிட்டு மீண்டும் முன்புறம் வந்து அமர்ந்தான்.
அலரின் பார்வை இன்னும் அவன் மீதே படிந்திருக்க, அவள் முகம் பார்க்காது பின்புறம் படுத்திருந்த அவிரனை பார்த்தவாறு குரலை செருமியவன் “அவிரனுக்கு ஒரு துணை வேணும்னு கேட்டியே அதுக்குதான்” என்று கனத்த மனதோடு வார்த்தைகளை அவன் கோர்த்து முடிக்கும் முன் அவனை அறைந்திருந்தாள் அலர்விழி.
இதை எதிர்பார்த்தவனாக எழில் உயிர்பற்ற விழிகளுடன் அவளை பார்க்க, “யாரை கேட்டு முடிவு பண்ணின..” என்று தகிக்கும் விழிகளுடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் அலர்..
எழிலிடமோ மீண்டும் கனத்த மௌனம்..!!
ஆனால் அவனுள் பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்டவளின் மனம் நொறுங்கி போக.., தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவள் தன் அவசர செயலுக்காகதன்னையே நிந்தித்து கொண்டுகலங்கிய விழிகளுடன் “ஸாரி மாமா” என்று கன்னத்தை வருட, அசைவில்லை அவனிடம்.
அவன் முகத்தை இருக்கரங்களிலும் அள்ளிக்கொண்டு நெஞ்சம் கனக்க பார்த்திருந்தவள் மெல்லிய குரலில்.., “நான் யாருன்னு உனக்கு நியாபகம் இருக்கா மாமா..??” என்று விழிகளில் வலியுடன் அலர் கேட்க..,
அலர் கேட்க தொடங்கியதும் அவளிடம் இருந்து தலையை திருப்பிநேரே தெரிந்த பலகையை வெறிக்க தொடங்கியவனின் கரம் கார் ஸ்டேரிங்கை பலமாக பற்றியிருந்தாலும் அதில் நடுக்கம் அப்பட்டமாக வழிய கரங்களுக்கு அழுத்தம் கொடுத்து உணர்வுகளை கட்டுபடுத்தியவாறே, ‘ஆம்‘ என்று தலையசைக்கவும் அவன் சட்டையை பிடித்தவள்,
“இல்லை நீ பொய் சொல்ற… உனக்கு நான் யாருன்னு தெரிஞ்சிருந்தா..? என்று பொங்கிய அழுகையை இதழ் மடித்து உள்ளிழுத்தவாறே..,
“என்.. என்னை இத்..தனை நாள்..” என்றவளுக்கு குரல் உடைபட கண்ணீர் பெருகியது..
“நாள் இல்லை வருஷ கணக்காச்சு மாமா..!! உனக்கு சுத்தமா என் நியாபகமே இல்லையா..?” என்று கேட்க எழிலிடம் அசைவில்லை..
“இல்லை, நீ என்னோட மாமாவே இல்லை உனக்கு நான் முக்கியமில்ல எனக்கு தெரியும், அப்படி நான் முக்கியமா இருந்திருந்தா எப்படி உன்னால இத்தனை நாள் இப்படி இருக்கமுடியுது” என்றவள் முற்றிலுமாக உடைந்து போயிருந்தாள்.
“எப்பவும் எனக்கு என்ன வேணும்னு நான் கேட்காமையே செய்ய தெரிஞ்ச உனக்கு இப்போ நான் வாய்விட்டு கேட்டும் அதை செய்ய மனசில்லாம என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்க..” என்று கணவனை கட்டிக்கொண்டவளின் அழுகை ஒருகட்டத்தில் கதறலாக வெடிக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்து,
“எப்படி, எப்படிஉன்..னா..ல என்னை இத்தனை நாளா தள்ளி நிறுத்த முடிஞ்சது..? இத்தனை வருஷத்துல ஒரு நாள்கூட கொஞ்சமும் என் நியாபகம் வரலையா..?” என்று கேட்க அவள் தலையில் கரம் பதித்து வருடியஎழிலுக்குமே அவள் கண்ணீர்மனதை தைத்தாலும் இறுகிய முகத்தோடு கண்களில் தேங்கி நின்ற நீரோடு மெளனமாக அமர்ந்திருந்தான்.
தன்மீது பித்தாகி இருப்பவளை அவனும் எத்தனை நாளைக்குதான் விலக்கி நிறுத்தமுடியும்..?? சொல்லபோனால் தன்னுயிரை பணயம் வைத்து மற்றொரு உயிரை படைத்த அவளைகடவுளுக்கு நிகராக பார்ப்பவனுக்கு எவ்வாறு அவளை நெருங்க தோன்றும்…!!
“சரியா சொல்லனும்னா ரெண்டு வருஷமாச்சு மாமா நீ என்னை பொண்டாட்டியா பார்த்து..!! அது உனக்கு நியாபகம் இருக்கா..?? எப்பவும் என்னை விட்டு இருக்கமாட்டியே மாமா இப்போ என்னடா ஆச்சு..??” என்று அவன் மடி சாய்ந்தவள்,
“உனக்கு குழந்தைதானே மாமா வேண்டாம்..!! நான் கூடவா வேண்டாம், நான் என்ன தப்பு பண்ணேன் ஏன் என்னை ஒதுக்குற உனக்கு என்னை பிடிக்கலையா..?? ” என்று கேட்டு மீண்டும் தன் அறிவீனத்தை நிருபித்திருந்தாள் அலர்விழி.
எந்த பதிலும் கூறாமல் இறுகிய முகத்துடன் வாகனத்தை எடுத்திருந்தான் அகனெழிலன்.
அலர் அவனையே பார்த்திருக்க அடுத்த அரை மணி நேரத்தில் எழில் சென்று நிறுத்தியது நகரில் பிரசித்தி பெற்றமனநல மருத்துவமனையின் முன்பு.
‘மாமா‘ என்று அதிர்வுடன் பார்க்க, வாகனத்தில் இருந்து இறங்கியவன் அவளிடமிருந்து அவிரனை வாங்கி கொண்டு முன்னே நடக்க அலரோ எதற்காக தன்னை இங்கு அழைத்து வந்துள்ளான் என்று புரியாமல் விழித்தவள் தன்முன்னே வேகமாக சென்றவனின் கரத்தை பிடித்து நிறுத்தி,
“எதுக்கு மாமா இங்க வந்திருக்கோம், உனக்கு தெரிஞ்சவங்க யாரையாவது பார்க்க போறோமா..??” என்று கேட்க தன் தோளில் சினுங்கிய அவிரனை தட்டி கொடுத்து கொண்டே “சொல்றேன் வா” என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூற,
அலரோ சற்றும் ஒட்டாத அச்சூழலை உள்வாங்கியவளின் மனதில் ஏனோ சட்டென சஞ்சலம் குடிகொள்ள எழில் மீதே பார்வை பதித்தவண்ணம் அவனுடன் இணைந்து நடந்தாள்.
அனுமதி பெற்றுக்கொண்டு மருத்துவரின் அறையினுள் நுழைந்த எழில் “குட் மார்னிங் டாக்டர்” என்றிட அவனை புன்னகை முகமாய் ஏறிட்ட மருத்துவரும்,
“வாங்க மிஸ்டர் எழிலன்” என்று வரவேற்று “ஹவ் ஆர் யூ..??” என்றவர் அப்போதுதான் அவன் கையில் குழந்தையையும் அவன் பின்னே வந்து நின்ற அலரையும் கண்டவர் அர்த்தத்துடன் அவனை பார்க்க எழிலும் அவர் கேள்விக்கான பதிலை சிறு தலையசைப்பின் மூலம் உணர்த்தினான்.
இங்கு அலர் தான் மருத்துவரின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தவளுக்கு ஏனோ மனம் நெருட, கலக்கத்துடன் எழில் புறம் திரும்பியவள், “யார் மாமா இவங்க..?? இவங்களை உனக்கு முன்னமே தெரியுமா…?? நான் உன்கிட்ட இன்னொரு குழந்தை கேட்டேன் ஆனா நீ சம்பந்தமே இல்லாம எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்த..? என்று அவன் செயலில் முகிழ்த்த கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு கேட்க,
“அதைபற்றி நான் உங்களுக்கு டீடைல்ட்டா சொல்றேன் மிசர்ஸ் எழிலன், ப்ளீஸ் பீ சீட்டட்” என்று அப்பெண் மனநல மருத்துவர் கூற,
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்தவள் மறுகணமே எழிலிடம், “டேய் நம்ம பர்சனல் பத்தி அவங்க என்னடா சொல்றது” என்று கேட்டவளின் இதயத்துடிப்பு இரட்டிப்பாகி இருக்க விழிகளோ அவளனுமதியின்றி கண்ணீரை சுரக்க தொடங்கிட,
“மாமா ப்ளீஸ் என்னாச்சு..?? எதுக்கு சை.. சை.. சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு வந்திருக்க, அவங்களுக்கு என்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு” என்று படபடத்த நெஞ்சை ஒருகரம் கொண்டு அழுத்தி பிடித்து கொண்டு கேட்டிருந்தாள்.
‘ஒன் செக் டாக்டர்‘ என்று எழில் அவரனுமதி வேண்ட,
“ஐ அண்டர்ஸ்டாண்ட் பேசிட்டு அவங்களை உள்ள அனுப்புங்க நான் வைட் பண்றேன்‘ என்று எழுந்து உள்ளறைக்குள் நுழைந்தார்.