“மாமா மாமா… ப்ளீஸ் மாமா நீங்க தான் பேசணும் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க” என்று கோப்பிலும் மடிக்கணினியிலும் பார்வை பதித்திருந்தவனின் முகத்தை தன் புறம் திருப்பியவாறே கதிர் கூற,
அவன் கையை தட்டி விட்ட எழில் “டேய் உன்மேல கொலை காண்டுல இருக்கேன்…,இன்னொரு முறை இதை பேசிட்டு வராத மரியாதையா ஓடி போயிடு…” என்றான் காட்டமாக..
“ப்ளீஸ் மாமா, சாரி”
‘என்னடா சாரி! ஏன்டா லவ் பண்றது நீ அதுக்கு பாட்டு வாங்குறது நானா..?? லவ்வை பண்ணா உங்கக்கா கிட்ட சொல்லி தொலைக்க வேண்டியது தானே எதுக்கு அன்னைக்கு எங்களை பார்த்து மூஞ்சியை மறைச்சிட்டு போன..?? என்று சீற,
“திடீர்ன்னு நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை மாமா அதுவும் இல்லாம அக்கா…” என்று கதிர்இழுக்க..,
“வாடா நல்லவனே வா…” என்றுகதிரின் கழுத்தை ஒற்றை கையால் வளைத்து பிடித்தவன், “உங்கக்காவை பார்த்ததும் நீ எஸ் ஆகிட்ட ஆனாஉன்னால…” என்று பல்லை கடித்தவன்,
“ஏண்டா உன்னால நான்உங்கக்கா கிட்டபட்டது பத்தாதா இப்போ உங்கப்பா கிட்ட வேற பேசணுமா..?? அதுக்கெல்லாம் வேற ஆளை பாரு.., உங்கப்பாக்கு லவ்ன்னாலே பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அதை பண்ணினது இல்லாம அந்த பெண்ணையே கட்டி வைக்க சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்கணும்” என்று அவன் முதுகில் ஓங்கி ஒன்று வைக்க…,
“ஸ்ஸ்ஆஆ வலிக்குது மாமா விடுங்க” என்று அவன் கரத்தில் இருந்து தன்னை விடுவித்து கொண்டவன், “ஏன் பேசினா என்ன அன்னைக்கு மட்டும் எனக்காக எங்க அப்பாகிட்ட பேசினீங்க தானே அப்போ இப்பவும் பேசுங்க” என்றிட,
கதிரின் பின்னதலையை அழுத்தி பிடித்தவன் வலக்கை முஷ்டியை இறுக்கி அவனை நோக்கி ஓங்கியவாறே, “உன்கிட்ட இருந்து ஆரம்பிச்சது தான்டா எல்லாம் உனக்காக பேச போய் தான் எனக்கும் உங்கப்பக்கும் வாய்க்கா தகராறே ஆரம்பிச்சது.., அப்போ இருந்து என்னை பார்த்தாலே வெறப்பா சுத்துற மனுஷன் இத்தனை வருஷமாகியும் மாறமா இப்போ எங்க வந்து நின்னு இருக்காரு தெரியுமா..??? என்று சினக்க,
“எனக்கு அதெல்லாம் தெரியாது மாமா ரேணு வீட்ல ப்ரெஷர் குடுக்குறாங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவ வந்து ஒரே அழுகை.., இப்போதைக்கு ஒரு ஆறுமாசம் டைம் கேளுன்னு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பினேன் அவங்க வீட்லயும் ஒத்துகிட்டாங்க…, ஆனா ரொம்ப நாளைக்கு விட மாட்டாங்க திரும்ப கல்யாண பேச்சு வரும்” என்றவனின் குரலில் இது நேரம் வரை இருந்த பணிவு மறைந்திடஇப்போது மிதப்பாக எழிலை பார்த்தவன்,
“அதனால இப்போ நீங்க என் கல்யாணத்தை பத்தி எங்கப்பா கிட்ட பேசித்தான் ஆகணும் ஒருவேளை முடியாதுன்னு சொன்னா பேசலை நான் பேச வேண்டி இருக்கும்” என்றவனின் குரலில் மிரட்டல் அப்பட்டமாக வெளிப்பட.,
அதை உணர்ந்த எழிலும் “யார்கிட்ட” என்றான் தாடையை நீவியவாறு.,
“வேற யாரு எங்க அக்கா கிட்ட தான்”
மேஜையில் தாளமிட்டவாறே “அவகிட்டயா..??” என்று யோசனையோடு கதிரை பார்த்தவன் “சரி என்ன பேசுவ..??” என்று கேட்க,
“என்ன பேசுவனா..?? என்று எள்ளலாக புன்னகைத்தவன், “பெருசா ஒண்ணுமில்லை மாமா ஜஸ்ட் ரேணுவை லவ் பண்ண சொன்னதே நீங்க தான்னு சொல்லுவேன்” என்றதில் தாளமிட்டு கொண்டிருந்தவன் விரல்கள் அந்தரத்தில் மிதக்க “அடக்கிராதகா” என்ற எழிலின் பார்வை கொலை வெறியோடு மைத்துனன் மீது விழுந்தது.
அதை அறியாத கதிரோ, “இப்போ சொல்லுங்க நீங்க எங்க அப்பாகிட்ட பேசுறீங்களா இல்ல நான் அக்காகிட்ட பேசட்டா..?? வசதி எப்படி..??” என்று புருவம் உயர்த்த,
‘என் நேரம் பிள்ளை பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைச்சு என்னையே கொத்த பார்க்குது..’ என்று எண்ணியவன்,“என்னடா வயசு உனக்கு …??? ” என்றான்.
“இன்னும் ரெண்டு மாசத்துல இருபத்தி ஐந்து ஆரம்பிக்க போகுது.., ஏன் கேட்குறீங்க..??”
ஓங்கி அவன் தலையில் கொட்டியவன், “ஏன்டா உங்கக்கா என்னை இருபத்தி ஒன்பது வயசு வரை சுத்த விட்டா…?? இன்னும் இருபத்தி நாலுகூட முடியலை அதுக்குள்ள உனக்கு கல்யாணம் கேட்குதா…?? ஒழுங்கா ஓடி போயிடு” என்று விழிகள் சிவக்க எச்சரிக்கவும்,
அவன் விரலை பிடித்து கொண்டவன், “மாமா மாமா ப்ளீஸ் மாமா.., எனக்கும் இப்போ கல்யாணம் பண்றதுல உடன்பாடு இல்லை ஆனா என்னோட நிலைமையை சொன்னாலும் அவ புரிஞ்சிக்க மாட்டேன்கிறா… எனக்கு ப்ரெஷர் கொடுக்குறா என்னால வேலையில போகஸ் பண்ண முடியலை மாமா அதான்” என்று வருத்தத்துடன் கூற,
“நிஜமா வேண்டாமா..?”
எழிலின் வலக்கரத்தில் தன் கரத்தை பதித்தவன் “சத்தியமா மாமா, நம்புங்க அவளை தவிர வேற யாரையும் என் லைப் பார்ட்னரா நெனச்சி பார்க்க முடியலை அதேசமயம் இவ்ளோ சீக்கிரமா கல்யாணத்துக்கும் நான் தயாரா இல்லை ஆனா அதை யார் அவளுக்கு புரிய வைக்க” என்றவனின் முகத்தில் வேதனையின் சாயல் படர,
அதை உணர்ந்த எழிலும் விளையாட்டை கைவிட்டு, “சரி நான் பேசுறேன், ஆனா உங்கப்பாகிட்ட இல்லை ரேணு வீட்ல, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு உனக்கு பிரச்சனை வராது அதுக்கு நான் பொறுப்பு! நீ ரிலாக்ஸா வேலையை பாரு அப்புறம் உங்க அப்பாகிட்ட பேசி கல்யாணத்தை முடிச்சி வைக்கறேன்” என்ற எழிலின் வார்த்தைகள் கொடுத்த மகிழ்வில் முகம் பிரகாசிக்க,
இறுக்கமாக தன்னை அணைத்திருந்தவனின் கரங்களை பிரித்தவாறே, ‘போதும் விட்றா‘ என்று எழில் கூறிகொண்டிருந்த அதேநேரம் கையில் இருந்த காபி கோப்பைகள் கரம் நழுவி தரையில் உருண்டோட விழிகள் கொவ்வை பழமென சிவக்க ருத்ரகாளியாக அவதரித்து உஷ்ண மூச்சுக்களோடு அவர்களெதிரே நின்றிருந்தாள் அலர்விழி.
அதை கண்ட எழில் திகைத்து விழிக்க, எழிலை அணைத்தவாறே தமக்கையை திரும்பி பார்த்த கதிர், ” பார்த்து வரமாட்டியாக்கா..?? என்று கடிந்தவன் “ப்ச் எல்லாம் வேஸ்டா போச்சு போ போய் மாமாக்கு சூடா பூஸ்ட் எடுத்துட்டு வா” என்று எழிலின் தோளை சுற்றி தன் கரத்தை போட்டு வாகாய் சாய்ந்து கொண்டு கூற,
இருகரங்களாலும் நெற்றியை பிடித்து கொண்ட எழில், “என் குடும்பத்துல கும்மி அடிக்கவே அண்ணன் தம்பின்னு ஷிப்ட் போட்டு வருவீங்களாடா..??” என்று கருவியவன், ஏற்கனவே உக்கிரமாக இருப்பவளை மேலும் உசுப்பேற்றும் விதமாக பேசிக்கொண்டிருந்த கதிரின்வாயில் ஓங்கிஒன்று வைத்து, “வாயை மூடுடா பன்னி” என்றவன்.., அலர் அங்கிருந்து வேகமாக செல்வதை கண்டு பதறிக்கொண்டு கதிரை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டு உரத்த குரலில், “ஏய் இருடி, ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு” என்றழைத்தவாறே மனைவியை நோக்கி விரைந்தான்.
அன்று வெற்றி தாமரை தம்பதியரின் மூன்றாவது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்காகவீடு முழுக்க சொந்தங்கள் சூழ்ந்திருக்க இங்கு அவர்களறையில் வெற்றி பல நாட்களுக்கு பின் சந்திக்கும் நண்பனிடம்,
“டேய் மச்சி ப்ளீஸ் சாரிடா இன்னும் எவ்ளோ நாளைக்கு முகம் திருப்பிட்டு இருக்க போற..?? என்னால உன்கிட்ட பேசாம இருக்க முடியலை நான் பண்ணினது தப்பு தான் மன்னிச்சிடு.. ஆனா பேசாம மட்டும் இருக்காத என்னால தாங்க முடியாது பேசுடா” என்று எழிலின் முகத்தை திருப்ப அவனோ தாமரையின் அருகே இருந்த அவர்களின் மகன் மீதே பார்வை பதித்திருந்தான்.
“என்ன அமுலு இப்படி இருக்கான்”
“நானும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துட்டேண்ணா ஆனா கொஞ்சமும் அசையமாட்டேன்கிறார்” என்று கையை விரிக்க,
“டேய் மச்சான் சாதாரணமாதான் பேசிட்டு இருந்தோம்…, ஆனா பேச்சு வளர்ந்து தாமரை எல்லா தப்பும் அமுலு மேலன்னு சொல்லிதிட்டி அவளை ரொம்ப கஷ்டபடுத்திட்டா அதான் கோவமா பேசிட்டேன்” என்றவனைஉன் விளக்கம் எனக்கு தேவையற்றது என்பதாக எழில் பார்க்க,
“மச்சி ப்ளீஸ்டாபுரிஞ்சிக்க என்று அவனருகே அமர்ந்தவன் “யாருமே எதிர்பார்க்கலை தாமரை அப்படி சட்டுன்னு போவான்னு அதுதான் நீ சரியான நேரத்துல காப்பாத்திட்டியே அவளுக்கு ஒன்னும் ஆகலை.., இதோபார் குழந்தையும் அவளும் நல்லா இருக்காங்க இன்னுமா உனக்கு கோவம் போகலை” என்று கேட்க நிமிர்ந்து அவனை ஒரு வெற்று பார்வை பார்த்தானே அன்றி எதுவும் பேசவில்லை,
நெற்றியை நீவிக்கொண்ட வெற்றி அருகேயிருந்த குழந்தைகளை எல்லாம் வெளியே சென்று விளையாடுமாறு அனுப்பி விட்டுகுழந்தையின் அருகே அமர்ந்திருந்த தன் மனைவியின் பாதத்தில் சாஷ்டாங்கமா விழுந்து “சாரிடி அன்னைக்கு உன்னைகஷ்டபடுத்துற மாதிரி நான் பேசி இருக்ககூடாதுபெரிய தப்பு பண்ணிட்டேன் நான் பேசினதால தானே கோவத்துல நீ எதையும் கவனிக்காம விழப்போன, என் மேல தான் தப்பு இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் மன்னிச்சிடு”
“ண்ணா என்னதிது எந்திரிங்க” என்று அலர் அவனை தூக்க முற்பட,
அவன் விழுவான் என்பதை எதிர்பாராத தாமரையும் அதிர்வில் எழுந்து நின்றவள், “டேய் என்ன இது..?? என்ன பண்ணிட்டு இருக்க, எனக்கு எந்த கோபமும் இல்லை முதல்ல எந்திரி‘ என்று சங்கடத்துடன் கூற,
“இல்லடி நீ மன்னிச்சிட்டேன்னு சொல்லு அப்பதான் அவன் என்னை மன்னிப்பான்” என்று நண்பனின் முகத்தை பார்த்தவாறு கூற,
“மாமா என்ன அமைதியா பார்த்துட்டு இருக்கீங்க, அண்ணாவை எழ சொல்லுங்க” என்று அலரின் வார்த்தைக்கும் எழில் மசிந்தானில்லை.
“சரி மன்னிச்சிட்டேன் எந்திரி” என்று எழிலை பார்த்தவாறு தாமரை கூறவும் எழிலின் முகத்தில் அதுநேரம் வரை குடிகொண்டிருந்த கடுமையும் மெல்ல அகன்றது…
“சரி செல்வி நீ குழந்தையை ரெடி பண்ணு நான் வெளியே ஏற்பாடு எந்த அளவுல இருக்குன்னு பார்க்கறேன்” என்ற எழில் அங்கிருந்து வெளியேற முற்பட,
நண்பனின் பார்வையிலும் குரலிலும் என்றுமில்லா விலகலை உணர்ந்த வெற்றி எழிலின் கரங்களை பற்றி தன் கன்னத்தில் வைத்து, “மச்சிஇப்பவும் உன் கோவம் போகலைன்னா என்னை இன்னும் நாலு அடிகூட அடி பரவால்லா ஆனா இப்படி யாரோ மாதிரி பேசாத, நீ என் பிரெண்டுடாநமக்கு பேசுறதுக்கு விஷயமா இல்லை ஆனா என்ன பேசனும்னு கேட்கிற..?? என்றவன் அதற்கு மேலும் நண்பனின் உணர்வற்ற பார்வையை தாங்க முடியாமல் பாய்ந்து கட்டிகொண்டு,
“எதுக்குடா என்னை தள்ளி நிறுத்துற, முடியாது உன்னை மாதிரி அழுத்தமா என்னால இருக்க முடியாது என்னை திட்டறதுக்காவது பேசு மச்சி” என்றவனின் குரல் உடைந்து போக, வெற்றியின் நிலை புரிந்த எழில் அவனை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தி,
என்ன..?? எதுக்கு..?? என்று அவன் கேள்வி புரியாத வெற்றி தாமரையையும் அலரையும் பார்த்தவன் “புரியலைடா..!!” என்றான்.
அலர் மற்றும் தாமரையின் பார்வையும் எழில் மீது படிந்திருக்க…,
“அமுலுகிட்ட செல்விக்கான எல்லையை நிர்ணயிக்க நீ யார்…???” என்றதில் அவர்களுக்கும் புரிந்து போனது அன்று வெற்றி தாமரையிடம் என் தங்கச்சிகிட்ட உன்னோட எல்லையில் நில் என்றதை கேட்கிறான் என்று..!!
“டேய் அப்படி இல்லைடா ஏற்கனவே நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டபட்டுட்டு இருக்கீங்க ஆனா அன்னைக்கு தாமரை அதை அதிகபடுத்துற மாதிரி உன்னையும் அமுலுவையும் குற்றம் சொல்லி திட்டிட்டு இருந்தா..??? நீங்களே எதிர்பாராத விதமா எல்லாம் உங்க கைமீறி போனதுக்கு நீங்க என்னடாபண்ணுவீங்க அதை கூட புரிஞ்சிக்காம அவளை பேசி காயபடுத்துறாளேன்னுதான் அப்படி சொன்னேன்” என்று தன்னிலை விளக்கம் அளிக்க..,
அப்போ என்ன சொல்ல வர நீ..!!உனக்குதான் எங்க மேல அக்கறை இருக்கு அவளுக்கு இல்லைன்னு சொல்றியா…?? என்று அடக்கப்பட்ட குரலில் கேட்டவன்,
“டேய் உன்னோட பார்வையில நாங்க கஷ்டப்பட்டது பெருசா தெரியுது ஆனா செல்வியோட பார்வையில இன்னும் நாங்க அதிலிருந்து மீளாம தீர்வு காணாம இருக்கிறது பெருசா தெரியுது..!! அதுல என்ன தப்புஇன்னும் சொல்ல போனா எங்க மேல இருக்கிற அக்கறையும் அவிரன் மேல அவளுக்கு இருக்க பாசமும் தான் அன்னைக்கு கோவமா வெளிபட்டிருக்கு ..?? ஒரு உண்மையான ஃபிரெண்ட்க்கு வரக்கூடிய நியாயமான கோபம் தானே மச்சான் அது..??” என்று கேட்க வெற்றியிடம் பதிலில்லை.
தன் தோழியின் ஆதங்கத்தை சரியாக புரிந்து வைத்திருக்கும் கணவனை மனநிறைவுடன் அலர் பார்த்து கொண்டிருக்க, தாமரையின் விழிகளும் ஆச்சர்யத்துடன் எழில் மீது தான் படிந்தது…
“என்னைக்கு மச்சி பிரெண்ட்ஸ்குள்ள லிமிட் இருந்திருக்கு..?? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம நம்ம மேல அக்கறை காட்டுற நட்பு எவ்ளோ பெரிய வரம் தெரியுமா…?? பிரெண்ட் செய்யற எல்லாத்தையும் சரின்னு ஒத்துகிட்டு போறதுக்கு பேருபிரெண்ட்ஷிப் இல்லை மச்சான்.., தடுமாருற இடத்துல கூட இருந்து கை கொடுத்துதூக்கி விடறதும், தப்பு பண்ற இடத்துலஉரிமையோடகை நீட்டிதட்டி கேட்கிறதும் தான் உண்மையான நட்பு..!!
“அக்கறை இருக்கிற இடத்துல தான்டா கோவம் வரும், அப்படி நம்ம மேல ஏற்படக்கூடிய கோவத்தை சரியான முறையில் புரிஞ்சிக்கிறதும் தான்டா உண்மையான நட்பு.., என்றிட பிரமிப்புடன் விழிகளை அகற்ற முடியாமல் அலர் பார்வை தன்னவன் மீதே படிந்திருக்க தொடர்ந்த எழில்,
“நான் சொல்ல வேண்டியதில்லை மச்சி உனக்கே தெரியும் உன் தங்கச்சியோட முன் கோபத்தை பத்தி…, அப்படி இருக்கிறவ செல்வி பேசின போது எதுவும் பேசாம அமைதியா இருந்தாளே அப்பகூடவாடா உனக்கு புரியலை…???” என்று கேட்க,
மச்சி..??? என்று கசங்கிய முகத்துடன் நண்பனை பார்த்த வெற்றிக்கும் அன்று தன் மனைவியின் வசவுகளை எல்லாம் அமைதியாக பொறுத்து சென்ற தன் தங்கையின் முகம் நினைவில் எழ பதிலளிக்க முடியாமல் நின்றான்.
“ஏன்னா தாமரை வேண்டாம்ன்னு சொல்லியும் அவ பண்ணின ஒரு விஷயம் யாருமே எதிர்பாராத வகையில எங்களோட வாழ்க்கையை புரட்டி போட்டு இத்தனை வருஷமாகுழந்தையையும் தவிக்க விட்டுடுச்சி அந்த ஆதங்கம், கோவம் செல்விக்குஇருக்கத்தானே செய்யும்… அப்போ கேட்க தானே செய்வா..?? அதை தடுக்க நீ யாரு..?? புருஷன்னா அவளோட எல்லையை நிர்ணயிக்கனும்ன்னு ஏதாவது கட்டாயம் இருக்கா..??? ஏன் அவ என்ன சின்ன குழந்தையா..??? என்ன பேசுறோம் என்ன பன்றோம்ன்னு புரியாம இருக்க” என்று கேட்க,
எழில் பேச தொடங்கியதில் இருந்து அதுநேரம் வரை நாசி விடைக்கதன்னை கட்டுபடுத்தி கொண்டு நின்ற தாமரைக்கு அதற்கு மேலும்முடியாமல் போக விழிகளில் இருந்து நீர் கரைபுரண்டு ஓடியது. இருக்காதா பின்னே..!! குழந்தையில் இருந்து ஒன்றாக வளர்ந்த தோழியிடம் இருந்து திடீரென கணவன் அவளுக்கு எல்லை வகுத்து அதை புரிந்து நில் என்றதில் அவள் மனம் பட்டபாட்டை அலரை அன்றி வேறு யார் அறிவார் என்றிருந்தவளுக்கு இன்று எழிலும் அதை அறிந்து வைத்திருப்பதை கண்டு வழிந்த ஆனந்த கண்ணீரே அது…!!!
“மச்சி சாரிடா” என்று வெற்றி மீண்டும் தன் தவறை உணர்ந்து கூற,
“சரி அன்னைக்கு செல்வி கீழ விழபோனதுக்காக நான் உன்னை அடிச்சேன் ஆனா ஒரு வார்த்தைகூட பேசாம நீ ஏன்டா அமைதியா வாங்கிகிட்ட..??” என்று கேட்க
“என்ன மச்சி இப்படி கேட்கிற..???” என்று அடிபட்ட பார்வையுடன் நண்பனை கண்ட வெற்றிக்கு தெரியுமே அலரின் பிரசவத்தின் போது அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் எப்பேற்பட்டது என்றும் அதை தொடர்ந்து கர்ப்பிணிகள் மீதான அவன் பார்வையும்..!! அதனால் பதலளிக்க முடியாமல் நெஞ்சில் எழுந்த வலியுடன் எழிலை பார்க்க,
“அதுதானேடா பிரெண்ட்ஷிப்..!!” நமக்குள்ள இருக்க புரிதல் அவங்களுக்கு இல்லைன்னு நினைக்கிறியா..??? நம்மைவிட அதிகமாவே இருக்கு..!!டேய் நம்ம குழந்தைகளை வளர்த்து ஆளாக்கறவங்கடாஅவங்களுக்கு தெரியாதா எது சரி எது தப்புன்னு…,
அன்னைக்கு நீ நான் அடிச்சப்ப அமைதியா வாங்கிகிட்டதும் என் பொண்டாட்டி தாமரை திட்டினப்ப அமைதியா இருந்ததும் தான் நட்புக்கான அடையாளம்…!! அதுக்கு போய் எல்லை வைக்கிறியேடா..!!! என்று கசந்த குரலில் தன் அதிருப்தியை தெரிவிக்க தாவி நண்பனை அணைத்து கொண்ட வெற்றி
“சாரி சாரிமச்சி அமுலு கண் கலங்கவும் நானும் எமோஷனல் ஆகிட்டேன்.., இனி இந்த தப்பை பண்ணவே மாட்டேன், சத்தியமா..!!”என்றதில் தானும் வெற்றியை அணைத்து கொண்டவன், “என்னோட நண்பனா இருந்து நீ இப்படி ஒரு விஷயத்தை செஞ்சது என்னால ஏத்துக்க முடியலைடா, தாமரையை பத்தி நீ புரிஞ்சி வச்சிருக்கிறது இவ்ளோதானா..?? அவளை நல்லா தெரிஞ்ச நீயே இப்படி சொன்னா அப்புறம் இத்தனை வருஷம் உங்களோட வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையேடா..!!” என்று வருந்தியவன்,
“ஒன்னு சொல்றேன் மச்சான் எப்பவும் மறக்காத எல்லா உறவுக்குமே அடிப்படை நம்பிக்கை ரொம்ப முக்கியம்.., கணவன் மனைவியாவே இருந்தாலும் இரண்டு பேருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் (பர்சனல் ஸ்பேஸ்) இருக்கணும், அதேபோல எப்பவுமேபெர்மிஷன் இல்லாமஅவங்களோட உலகத்துக்குள்ள போகாத” என்று கூறி முடிக்க,
“கண்டிப்பா மச்சி நீ இத்தனை நாளா என்னை வச்சு செஞ்சதுல இனியும் இந்த தப்பை செய்வேன்னு நினைக்கிற? நிச்சயமா இல்லை இனி என் கண்ணுமுன்னாடியே இவங்க ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு உருண்டு பொறண்டாலும்ஏன்னு கேட்கமாட்டேனே” என்று கூற அதுநேரம் வரை இருந்த இறுக்கம் விடைபெற அனைவரின் முகத்திலும் புன்னகை.
வெற்றி நேரமாச்சு சீக்கிரம் குழந்தையை எடுத்துட்டு வாங்க என்று அவன் அன்னை குரல் கொடுக்க அனைவரும் கூடத்திற்கு விரைந்தனர்.