பாலன் தள்ளி அமர்ந்ததில் மீண்டும் எழுந்த புன்னகையை கை வைத்து மறைத்த எழில், ‘மாமா என் பொண்டாட்டிக்கு இடமில்ல இன்னும் கொஞ்சம் தள்ளி உட்காருங்க’ என்று கூற, அரண்டு போயிருந்த பாலனுக்கும் அவன் வார்த்தைக்கு பணிந்து தள்ளி சோபாவின் ஓரத்தில் ஒன்றிகொள்வதை தவிர வேறு வழியில்லை.
‘பெர்ஃபெக்ட்’ என்றவன் அலரை பார்க்க அவளோ அண்ணனின் வாழ்க்கை ஊசலாடி கொண்டிருப்பதில் எதையும் சரியாக உள்வாங்காமல், “அதெல்லாம் இல்லை மாமா தாமரை என்னை அடிச்சிட்டா..” என்று கலங்கிய குரலில் அவனிடம் புகாரளித்தாள்.
“அப்படியா..?? இது எப்போடி..??” என்று திகைத்தவன், “அது எப்படி என் பொண்டாட்டியை அவ அடிக்கலாம், இரு இப்போவே என்னன்னு கேட்குறேன்” என்று எழ முற்பட அவன் கையை பிடித்து தடுத்தவள்,
“ப்ச்சுவிடுங்க மாமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், அவளுக்கு இல்லாத உரிமையா..?? இப்போ அவ கோபத்தை எப்படி குறைக்கிறது அதுக்கு ஒரு வழி சொல்லுங்க” என்று ஆதங்கத்துடன் கேட்க எழிலோ இன்னும் நெருங்கி அமர்ந்து அலரின் முகத்தை ஆராய தொடங்கியவன்..,
“என்னடி இது அன்னைக்கு கடிச்ச காயம் இன்னுமா ஆறலை, அப்படியே தெரியுதே வேற ஏதாவது டார்க் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டியதுதானே நீ ஏன் இந்த மைல்ட் கலர் போட்ட..??” என்று அதிமுக்கிய கேள்வியை கேட்டுக்கொண்டே பெருவிரலால் அவள் கீழிதழை வருட அவன் கரத்தை தடுத்து பிடித்தவள்..,
“ஆமா இன்னும் ஆறலை ரொம்பவே வலிக்குது” என்று இதழ்களை சுழித்தவள் “எத்தனைமுறை சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கறீங்க இப்போ பாருங்க கடைசியில எல்லா கலரும் தீர்ந்து போச்சு… போங்க மாமா எல்லாம் உங்களால தான் !! கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.. நானும் எத்தனை கோட் போடறது அப்பவும் காயம் அப்படியேதான் தெரியுது” என்றதில் மீசை துடிக்க மனைவியை பார்த்தவன்,
“சரிடி பட்டு ஃபீல் பண்ணாத நாம வீட்டுக்கு போற வழியில டார்க் கலர்ஸ் நிறைய வாங்கிக்கலாம் இனி பிரச்சனை இருக்காது” என்று கண்சிமிட்டியவன்அவள் கன்னத்தை மிக மிக மென்மையாக வருடி “ரொம்ப வலிக்குதாடி செல்லம்” என்றிட,
‘ஆமா மாமா அண்ணன்னு நினைச்சு என்னை ஃபோர்ஸா அடிச்சுட்டா..‘
“யாரு என்னன்னு பார்த்து அடிக்கிற நிலையிலயா தாமரை இருக்கா.. பச் ஆனாலும் ரொம்ப சிவந்து போச்சு..” என்று மனைவியை மேலும் நெருங்கி அமர்ந்தவன் புறங்கையால் மீண்டும் அவள் கன்னத்தை வருடிக்கொண்டே,
“மாமா பக்கத்துல இருக்கார்னு பார்க்கிறேன்டி, சரி நீ கவலைபடாத நான் வீட்டுக்கு போய் மருந்து போடுறேன் வலி போயிடும் எங்க இப்போ சிரி பார்ப்போம்” என்று மென்மையாய் அவள் கன்னத்தில் சத்தமின்றி அழுத்தமாக முத்தமிட என்றும்போல தன் மீதான கணவனின் பாசத்தில் நெக்குருகி போன அலருக்கு வார்த்தை வரவில்லை…,
சரி என்பதாக தலையசைத்தவள் இதழ்களை இழுத்து பிடித்து சிரித்ததாக பேர் பண்ணிட, “வெரி குட்! இதுதான் இந்த சிரிச்ச முகம் தான் என் குள்ளச்சி அழகு, எதை பற்றியும் கவலை படக்கூடாது எல்லாம் மாமா பார்த்துப்பேன் புரியுதா..??” என்றதில் அவள் இதழ்கள் இன்னுமே அழகாய் விரிந்து புன்னகை சிந்தியது..
“இப்படி சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்கடி பட்டு.. அப்படியே கடிச்சு சாப்பிட தோணுது” என்றவனின் இதழ்கள் மென்மையாய் அவள் கன்னம் தீண்டி நீ இனி எப்பவும் இப்படி சிரிச்ச முகமாதான்இருக்கணும் ஓகேவா” என்று அவள் முகத்தை அகன் கைகளில் அள்ளிக்கொள்ள..,
கணவனின் பேச்சில் இதுநேரம் வரை அண்ணனை மறந்திருந்தவளுக்கு இப்போது தான் வெற்றியின் நினைவு வரவும் உள்ளிறங்கிய குரலில், “ஆனா அண்ணன் ரொம்ப பாவம் மாமா, அவர் இப்படி செய்யகூடிய ஆளே இல்லை தெரியுமா..?? இது யாரோ செஞ்ச சூழ்ச்சி மாதிரி இருக்கு”
“ஏன்டி ஊருல இருக்க பொண்ணுங்க என்னை பார்க்கிறதுக்கே ஏதோ கொலை குத்தம் பண்ணினவன் மாதிரி ராத்திரி இரண்டு மணிக்கு உட்கார வச்சு என்னை டிசைன் டிசைனா வச்சு செய்யறவளுக்கு இப்போஉங்க அண்ணனை பற்றி ஆதாரத்தோட அந்த பொண்ணு வந்து நின்னும் அவன் பாவமா..?? செல்வி கிட்ட வாங்கி கட்டியும் அடங்கமாட்டியா..??” என்று மனதினுள் கருவியவன் முகத்தில்மறுநொடியே நண்பனுக்காக இப்போது அத்தனை வேதனை இழையோடியது அது குரலிலும் பிரதிபலிக்க,
“உங்கண்ணன் குழந்தை மாதிரின்னு எனக்கும் தெரியும்டி ஆனா நீ சொல்லியே நம்பாத தாமரை நான் சொல்லி நம்புவாளா சொல்லு” என்றவனின் குரலில் இருந்த வலியை உணர்ந்த அலருக்குமே அது சந்தேகம் என்பதால், பதிலின்றி அவனை பார்த்தாள்.
அதற்கு நேர்மாறாக “அடப்பாவி நீ சொன்னா தாமரை நம்புவான்னு இப்போதானேடா சொன்ன..??” என்பதாக பாலன் மெளனமாக அவனை பார்த்தார்.
ஆம் அவரால் மெளனமாக பார்க்க மட்டுமே முடிந்தது! எங்கே அதை வாய்விட்டு கேட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்முன் பார்த்து கொண்டிருப்பவருக்கு எழிலிடம் கேட்கும்தைரியமில்லை.
“நல்ல நாள் அதுவுமா இப்படி ஆகிடுச்சேன்னு எனக்குள்ள நான்..” என்று சுட்டு விரல் கொண்டு நெஞ்சை சுட்டி காட்டியவன்குரல் தழுதழுக்க “சொல்ல முடியாத அளவுக்கு வலி, தெரியலைடி ஒருவேளை எல்லாம் விதிப்படி நடக்குதோன்னு ஒரு எண்ணம்” என்று கூறி முடிக்க பாலனோ அவன் நடிப்பில் திறந்த வாய் மூடாமல் எழிலையே பார்த்திருந்தார்.
‘இதோ..’ என்று டேபிள் மீதிருந்த மிக்சரை எடுத்து மனைவி கையில் கொடுத்தவன் ‘நீ இதை சாப்பிடு நான் அதுக்குள்ள ஏதாவது செய்து பிரச்னையை தீர்க்கமுடியுமான்னு பார்க்கிறேன்’
‘என்ன மாமா இது மிக்சர் சாப்பிட்டா எப்படி பிரச்சனை தீரும்..’ என்று அலர் புரியாமல் பார்க்க..,
‘மிக்ஸரோட மகிமை உனக்கு புரியாதுடி செல்லம்… சரி சொல்லு உங்கண்ணனை தாமரைகிட்ட இருந்து காப்பாத்தனுமா வேண்டாமா..??’
‘அண்ணா பாவம் மாமா அவருக்கு எதுவும் தெரியாது நீங்கதான் காப்பாத்தனும் ப்ளீஸ்…’ என்று திரும்பவும் பழைய பல்லவியை பாடிட..,
‘சரி மாமா’ என்றவளுக்கு எப்படியாவது தன் அண்ணனை காப்பாற்றிவிடும் வேகம்.. தன் பேச்சு தாமரையிடம் எடுபடாத நிலையில் கணவனின் வார்த்தைகளுக்கு கண் மூடி செவி சாய்த்தாள்.
‘ப்ச் நான்தான் சொல்றேன்ல எல்லா பிரச்சனையும் தீரும் அங்க பாரு ..’ என்று பாலனை சுட்டிக்காட்டி,
‘உங்க அண்ணனே தம்பி பிரச்சனை தீரனும்னு கேள்வியே கேட்காம சாப்ட்டுட்டு இருக்கார்..’ என்றதும் தான் தாமதம் அதுநேரம் வரை பிரமிப்புடன் எழிலை பார்த்திருந்த பாலன் சட்டென தட்டில் இருந்த மிக்சரை எடுத்து வாயில் கொட்டிக்கொண்டார்…
‘அண்ணா என்ன இது..??’ என்று அலர் கேட்கவும் அவரோ ‘நானில்லடா மாப்பிள்ளை..’ என்பதாக பீதியுடன் எழிலை பார்த்தவாறே மிக்சரை வேகமாக மெல்ல தொடங்கினார் அதில் சிரிப்பை மட்டுபடுத்த முடியாத எழில் மூச்சை எடுத்துவிட்டு தன்னை ஆசுவாசபடுத்தியவன்,
‘நான்தான் சொன்னேனேடி பட்டு பிரச்சனை சீக்கிரம் தீரனும்னு உங்க அண்ணன் என்ன வேகமா சாப்பிடுறார் பாரு..! எங்கே நீயும் ஆஆஅ சொல்லு பார்ப்போம்’ என்றவன் தன் கையாலேயே மிக்ஸரை எடுத்து அலரின் வாயில் திணித்த அதேவேளை பெட்டியுடன் எழிலின் முன் வந்து நின்ற தாமரை எண்ணையில் இட்ட கடுகாக பொரிய தொடங்கி இருந்தாள்.
*************************************************
“டேய் நீ எல்லாம் ஒரு அண்ணனா இதே உன் சொந்த தங்கச்சிக்கு நடந்திருந்தா இப்படிதான் அமைதியா இருந்து இருப்பியா..?? நானும் பார்த்துட்டு தான்டா இருக்கேன் தப்பு பண்ணினவனை இதுவரை நீ ஒரு கேள்விகூட கேட்கலை அப்போ உனக்கு அய்யோக்கியதனம் பண்ற உன் ஃபிரெண்ட் தான் முக்கியம், நானெல்லாம் இல்லை” என்று சிவந்த முகத்துடன் கேட்டவள் கண்களில் இருந்து தடையற்ற கண்ணீர் வெளியேறியது.
“ஏதோ முன்ன டையலாக் சொன்ன, தப்பை தட்டி கேட்கிறதும் பிரெண்ட்ஷிப்னு அப்ப இவன் பண்ணின தப்பை தட்டி கேட்டியா நீ..??? ஆனா எனக்கு ஒன்னு புரிஞ்சி போச்சு அன்னைக்கு இவன் சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் ஒன்னு என்று வெற்றி, அலர், எழிலை சுட்டி காட்டியவள் நான் யாரோ தானே என்றவளின் குரல் கமறிட, எனக்குன்னு பேச யாருமே இல்லை, என் குழந்தைகளுக்கு தாய் மாமனா இருந்து சீர் செஞ்சது எல்லாம் வெளிவேஷம் தானே..!! உனக்கும் நான் முக்கியம் இல்லை” என்றதும் பதறிக்கொண்டு எழுந்த எழில்,
“அப்படி எல்லாம் இல்லை செல்வி இது உங்களோட தனிப்பட்ட விஷயம் இதுல நான் தலையிட்டு பெருசாகிட கூடாதேன்னு ஒதுங்கி இருக்கேன் மத்தபடி எனக்கு உன்மேலயும் குழந்தைங்க மேலயும் இருக்க பாசம் நிஜம்அதை சந்தேகபடாத” என்றவனின் விழிகளிலும் இப்போது நீர் திரண்டிருந்தது…,
“தாமரை சொன்னா கேளு..” என்று மிக்ஸரை மென்றுக்கொண்டே அலர் குறுக்கே வர ஆக்ரோஷத்துடன் அவள்புறம் திரும்பியவள், “ஏன் வாங்கினது பத்தலையா போ போய் படிச்ச படிப்புக்கு ஒழுங்கா எந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எனக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸ் ரெடி பண்ற வழியை பாரு” என்றிட, அலர் ஸ்தம்பித்து போனாள்.
கலங்கிய விழிகளை புறங்கையால் துடைத்த எழில் தாமரையின் தலையை வருடியவாறே, “எனக்கு நீ ரொம்ப முக்கியம் செல்வி, உனக்காக கேள்வி கேட்க இந்த அண்ணன் எப்பவும் இருப்பேன் அதை மறக்காத” என்றவன் அவள் கையில் இருந்து பெட்டியை பார்த்து, “இதெல்லாம் என்ன வேலை செல்வி முதல்ல கொடு” என்று அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கி வைக்க எழிலின் அக்கறையான செயலில் அலரின் முகத்தில் தன்னவனுக்கான பெருமிதம் தாண்டவமாடிட அதே சமயம் பாலனின் பார்வை இப்போது பிரமிப்புடன் எழில் மீது படிந்தது.
எழில் பெட்டியை வாங்கவும், “ஏன் எதுவுமே நான் கேட்டாதான் அதை செய்வியா உனக்கா உணர்வில்லையா…?? இதே தப்பை மாமா செஞ்சிருந்தா”என்று பாலனை சுட்டி காட்டிய தாமரை, “சுடர் அக்கா கூப்பிடற வரை காத்திருப்பியா..?” என்று கேட்க பாலனுக்கு குப்பென வியர்த்துவிட்டது.
தெறித்த விழிகளுடன் மூச்சு எடுக்கவும் மறந்தவராக நெஞ்சில் கை வைத்தவாறே அமர்ந்துவிட்டவரை கண்டு பொங்கிய சிரிப்பை வெளியில் தெரியாமல் இருக்க எழில் பட்டபாடு அவனுக்கு தான் தெரியும்.இதழ்களை மடித்து புன்னகையை கட்டுபடுத்திக்கொண்டு அவர் புறம் குனிந்தவன் “என்னாச்சு மாமா” என்றுகேட்க,
அச்சத்துடன் எழிலை பார்த்தவர்வியர்வையை துடைத்துக்கொண்டு, “டே.. டேய் எனக்கு வயசுக்கு வந்து பொண்ணு இருக்குடா” என்று வெற்றியை பார்த்தவாறே எச்சில் கூட்டி விழுங்கிட.,
“தெரியும் மாமா தாய்மாமனா நான்தானே எங்கக்கா பொண்ணுக்கு சீர் பண்ணினேன்.. மறப்பேனா..?? ஆனா அதைவிட உங்க தம்பி சந்தோஷம் உங்களுக்கு ரொம்ப முக்கியம் இல்லையா..???” என்று எள்ளலாக கேட்க,
“த..த்தா… தம்பியாவது தும்பியாவது போடா எவன் எப்படி போனா எனக்கென்ன யார் எப்படியாவது அடிச்சிக்கோங்க நான் யார் விஷயத்துலயும் தலையிடலை தயவுசெய்து என்னை விட்டுடு” என்று கெஞ்சிட..,
‘இனி அவ என் தங்கச்சி இல்ல மாப்பிள்ளை..’ என்றவர் மனமோ மரணபயத்தோடு நின்றிருந்த வெற்றிக்கு பதிலாக தன்னை ஒருநொடி கற்பனை செய்து பார்க்கவும் பாலனுக்கு வியர்த்து ஊற்றியது..
“இல்லல்ல அதாவது அவ என் தங்கச்சி தான் நான் அதை மறக்கலை ஆனா எப்போ அவளை உனக்கு கட்டி கொடுத்தோமோ அப்பவே உன் பொண்டாட்டியை நீ கண்ணுக்குள்ள பொத்தி வச்சு காப்பாத்துவன்னு தெரியும் அதனால அந்த கவலையும் எனக்கு இல்லை” என்றவர் அவன் கரங்களை பிடித்துகொண்டு,
“நான் தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது தப்பா பேசி இருந்தா அதை எல்லாம் மறந்துடு மாப்பிள்ளை எதையாவது மனசுல வச்சிட்டு என் குடும்பத்துல உன் கைவரிசியை காட்டிடாதடா சத்தியமா என் வயசுக்கு இதெல்லாம் தாங்காது.., இப்பவே உங்க அக்காவை கூப்ட்டுட்டு சத்தமே இல்லாம இங்கிருந்து கிளம்பிடுறேன் போதுமா..!!” என்றிட சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் உடல் குலுங்க பாலனை அணைத்துக்கொண்ட எழில்,
“இப்போதான் மாமா என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க” என்றுஅவர் கன்னத்தில் முத்தம் வைக்க அவனிடம் இருந்து விலகியவர் விட்டால் போதும் என்றுமனைவியை தேடி கிட்டத்தட்ட தலை தெறிக்க ஓடி இருந்தார்.
“என்ன மாமா அண்ணா எதுக்கு ஓடுறார்” என்று கதிர் கேட்க, அவன் புறம் திரும்பிய எழில்இன்னுமா நீ இங்க இருக்க என்பதாகஅவனை பார்த்தவன் “உனக்கு இன்னும் கால் வரலை” என்று சம்பந்தமே இல்லாமல் கேட்க..,
“என்ன கால் மாமா” என்று கதிர் புரியாமல் எழிலை பார்க்க அதேநேரம் ரேணுவிடம் இருந்து கதிருக்கு அழைப்பு வர எடுத்து பேசியவனின் முகம் மெல்ல மெல்ல ரத்த பசை இழந்து கொண்டிருக்க அதையும் அவதானித்து கொண்டிருந்த எழிலின் முகத்தில் ஏகத்திற்கும் நக்கல் வழிந்தது…
முகத்தில் அரும்பிய வியர்வையை ஒற்றி எடுத்தகதிர் நெற்றியை நீவியவாறே, “சொன்.. சொன்னா கே… கேளு ரேணு அப்படி எதுவும் இல்…” என்று கூறி கொண்டிருக்கும்போதே மறுபுறம் அழைப்பு துண்டிக்கபட அடுத்தநொடி அவனும்புயல் வேகத்தில் கிளம்பி இருந்தான்.
பாலனும் கதிரும் திக்குக்கு ஒருவராக தெறித்து ஓட அலர் குழந்தைகளின் நிலை அறியவேண்டி மாடிக்கு செல்ல, இப்போது எழில், வெற்றி, தாமரை ஆகிய மூவர் மட்டுமே..!!
‘சரி நானும் கிளம்புறேன்‘ என்று குழந்தையை தூக்கி கொண்டு தாமரை வர அதற்குள் வெற்றியை நெருங்கி, “அப்பவே அவ்ளோ தூரம் சொன்னேன் வேண்டாம்டா விளையாட்டு வினையாகிடும்மத்தவங்க சொல்றாங்கன்னு எதுவும் செய்யாதன்னு கேட்டியா..??” என்றவாறேஅவன் கன்னத்தில் தன் கரத்தை இறக்கினான் அகனெழிலன்.
அதை கண்ட தாமரையின் நடை ஒரு கணம் நிதானிக்க, “இப்போ இத்தனை வருஷம் கழிச்சு நீ விளையாட்டாய் செஞ்சதுஉனக்கே திரும்பிடுச்சி இதெல்லாம் தேவையா..??? நீ ஜாலியா அட்ரெஸ் குடுத்துட்டு வந்துட்ட ஆனா உன்னால பாதிக்கப்பட்டது என் தங்கச்சி, கொஞ்சமாவது அவளை நெனச்சி பார்த்தியாடா..?? அவளை விடு மூணு குழந்தைங்க அவங்களை பத்தின அக்கறைகூட இல்லாம எப்படிடா” என்று ஆக்ரோஷமாக கேட்டு கொண்டிருந்தவன்அங்கு வந்த தாமரையை கண்டு,
“உனக்காக கேள்வி கேட்க இந்த அண்ணன் இருக்கேன் நீ எதைபற்றியும் கவலைபடாத செல்வி..முதல்ல குழந்தையை உள்ள படுக்க வை இவனை நான் பார்த்துக்குறேன்” என்றிட கண்களில் நன்றியை தேக்கி எழிலை பார்த்தவள் குழந்தையுடன் உள்ளே சென்றாள்.
“தேங்க்ஸ் மச்சி தாமரையை எப்படி சமாதானம் பண்றதுன்னு புரியாம இருந்தேன் நல்லவேளை நீ காப்பாத்திட்ட இல்ல ஆயுசுக்கும் என்னை திரும்பி பார்த்திருக்க மாட்டாடா” என்றவாறே தலையை இருகரங்களாலும் பிடித்து கொண்டவன் “மச்சான் நிஜமாவே என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே புரியலைடா எப்படி இந்த தமயந்தி இன்னிக்கி இங்க வந்தா..?? அதுவும் நான் எப்பவோ குடுத்த அட்ரெஸ் எடுத்துட்டு எதுக்குடா வந்தா..?? நான் ஒன்னும்..” என்றவனின் உள்ளம் மிகவும் கலங்கி போயிருக்க எதையும் யோசிக்க முடியாமல் தவித்து போனான்.
இருக்கரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிகொண்டு சுவரில் சாய்ந்து நின்று நண்பனையே பார்த்து கொண்டிருந்தவன், “அது ஒண்ணுமில்லை மச்சிஇந்த ஆப்பு இருக்கே ஆப்பு…” என்று பின்னங்கழுத்தை வருடிக்கொண்டே எழில் ஆரம்பிக்கவும் தலையை நிமிர்த்திய வெற்றி நண்பனின் முகத்தில் இருந்த உணர்வை கண்டு திகைத்துபோனான்.
“மச்சான்எப்பவுமே யார் வைக்கிறா..??, எதுக்கு வைக்கிறா..??, எப்படி வைக்கிறான்னு தெரியாம வைக்கறதுலதான் அந்த ஆப்போட அழகே அடங்கி இருக்கு…! சொல்ல போனா அதுதான்டா அந்த ஆப்புக்கு நாம செலுத்துறமரியாதை புரியுதா..?? என்று கடுமையான குரலில் சொன்னவன், ஆனா நீயும் உன் தங்கச்சியும் இன்னும் சின்ன புள்ளைங்களாவே இருக்கீங்களேடா” என்றிட வெற்றியின் முகம் பேயறைந்தது போலானது..,
‘மச்சான் என்ன சொல்ற..??’
“டேய் நீயும் உன் தங்கச்சியும் படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்கிட்டயேவா…!!” என்று ஒருகையால் வெற்றியின் கழுத்தை வளைத்தவன் “நான் எப்படி ஆப்பு வெச்சேன்னு இப்போ ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும் ஆனா எதுக்கு வச்சேன்னு இன்னும் புரியலை இல்ல உனக்கு” என்று சிறு இடைவெளி விட்டவன்,
“இதோ இப்போ புரியும்” என்று கையோடு கொண்டு வந்திருந்தஉலக்கையை அவன்முன் ஆட்டியவாறே, எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா..???” என்று அடக்கப்பட்ட சீற்றத்துடன் கேட்க வெற்றிக்கு சகலமும் புரிபட சர்வமும் ஒடுங்கி போனது.
மரண பீதியில் உறைந்திருந்த வெற்றியின் விழிகள் அசைவற்று எழிலிடமே நிலைத்து நிற்க, “மச்சி இப்போ என் தங்கச்சிக்கு என் வார்த்தைதான் வேதவாக்கு” சரியா சொல்லனும்னா“என் வார்த்தை தான்டா உன் வாழ்க்கை”என்றிட இப்போது வெற்றியின் முகத்தில் ஈயாடவில்லை.
*************************************
அவன் முன் சொடக்கிட்ட எழில் “இப்போ சொல்லுவசதி எப்படி என் கையை காலா நெனச்சிக்கிறியா இல்லை…” எனும் முன்னமே அவனிடம் கைகூப்பிய வெற்றி கலங்கிய குரலில் வேண்டாம் போதும் இதுக்கு மேல என்னால் தாங்க முடியாது என்று சுரத்தே இல்லாமல் கூற,
“இனியும் எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல வருவ..???” என்று எழில் கடுமையான குரலில் கேட்க
எழிலை பற்றி நன்கு அறிந்தவன் தான் என்றாலும் அன்று அவன் குடும்பத்தில் கலகம் விளைவித்ததற்கு இத்தகைய எதிர்வினையை ஆற்றுவான் என்று வெற்றி சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. தன்னைமீளவே முடியாத நிலையில் தள்ளி இருப்பவனின் வார்த்தைகளுக்கு அடிபணிந்து போவதை தவிர வேறு வழியில்லாததால் ‘இல்லை வரமாட்டேன்‘ என்றான்.
“அது…!! இனி இதையே மெயின்டெயின் பண்ற எனக்கு தெரியாம உன் தங்கச்சிகிட்ட எதாவது என்னை போட்டுகொடுத்த…” என்று கண்கள் இடுங்க வெற்றியை பார்த்தவன்,
‘போட்டு கொடுக்குறதுன்னு இல்லடா அப்படி நீ நெனைச்சாகூடவிளைவு இதைவிடமோசமா இருக்கும்… என்று எச்சரித்தவன் சரி சொல்லு அன்னைக்கு என் பையனுக்கு என்ன ஃப்ளேவர் வாங்கி கொடுத்த..??” என்று கேட்க வெற்றிக்கு தொண்டை வறண்டு போனது..
பின்னே அன்று நண்பனை வெளுக்க சொல்லி தங்கையிடம் உலக்கையை எடுத்து கொடுத்தவன் அவிரனுக்கு கணக்குவழக்கே இல்லாமல் வாங்கி கொடுத்து கொண்டாடினானே அதையெல்லாம் எழிலிடம் சொன்னால் அவன் கதி அதோகதி தான் அதனாலேயே வெற்றி மௌனம் சாதிக்க எழிலோ விடுவதாக இல்லை..
‘சொல்றா..?’ என்று கர்ஜிக்கவும்..,
‘அது வந்து.. ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, மேங்கோ, சாக்கோபார்…’ என்று ஒரு பெரிய பட்டியலே வாசித்தவன் ஒருகட்டத்தில் எழிலின் கோபத்தை கண்டு நிறுத்திவிட்டான்.
‘திருந்தமாட்டல நீ… வரேன் இரு’ என்றவன் தாமரையை தேடி சென்று சமாதானபடுத்த தொடங்கிட அடுத்த சில நிமிடங்களில் “இவன்மேல எனக்கு நம்பிக்கை இல்ல ஆனா நீ சொன்னா நம்புறேன்” என்று தாமரை சொல்லவும் அதுநேரம் வரை உயிரை கையில் பிடித்து கொண்டிருந்த வெற்றியின் வயிற்றில் பால் வார்த்திருந்தான் அகனெழிலன்.
அது போதும்செல்வி, எப்பவுமேஉன் நண்பன் யார்ன்னு சொல்லு நீ யார்ன்னு சொல்றேன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க கேள்வி பட்டிருக்கியா..?? என்று உரத்த குரலில் கேட்க அது வெற்றியின் செவிகளையும் சென்று சேர்ந்தது.
‘ஆமா’
“சின்ன வயசுல இருந்து என்கூடவே வளர்ந்து வருகிறவன் என்னை மாதிரிதானே இருப்பான். யாரோ ஒரு பொண்ணு வந்ததால அதுல உனக்கு எப்படி சந்தேகம் வந்தது…??, வந்திருக்க கூடாது செல்வி, ஏன்னா அது தமயந்திகிட்ட விளையாட்டா கொடுத்தது எதுவுமே சீரியஸா இல்லை அவன் காதலிச்சது உன்னை மட்டும் தான் அவன் மனசுல இப்போவரை நீ மட்டும் தான் இருக்க பக்கத்துல இருந்து பார்த்த நான் சொல்றேன் நம்பு”
“அண்ணா இப்போ எதுக்கு இந்த லெக்சர் எல்லாமே எனக்கு தெரிஞ்ச விஷயம் தானே…!! ” என்றிட எழில் சைகையில் தங்களை கவனித்து கொண்டிருந்த வெற்றியை காண்பிக்க, உடனே கதவை லேசாக சாற்றிய தாமரை வயிற்றை பிடித்து கொண்டு சத்தம் இல்லாமல் சிரிக்க, எழிலின் முகத்திலும் புன்னகை…
சிரித்து முடித்தவள் எழிலுடன் ஹைஃபை போட்டு கொண்டு “ண்ணா அவர் முகத்தை பார்க்கணுமே ஹப்பா எங்க பேசும் போது சிரிச்சிடுவேனோன்னு உள்ளுக்குள்ள பயந்துட்டே இருந்தேன் நல்லவேளை நடுவுல அலர் வந்தா அவ வரவும் கோபத்தை மெயின்டெயின் பண்ண முடிஞ்சது.., இல்லை சொதப்பி இருப்பேன்”
நானும் எங்கயாவது சொதப்பிடுவியோன்னு நெனச்சேன் ஆனா நான் எதிர்பார்த்ததை விட சூப்பர்ரா பெர்ஃபார்ம் பண்ணின என்று பாராட்ட..,
“அண்ணாஅலரை அடிக்கிறது நம்ம ப்ளான்ல இல்லை ஆனா அண்ணனுக்கு ரொம்ப தூபம் போட்டுட்டு இருந்தாளா உணர்ச்சி வேகத்துல அடிச்சிட்டேன், கன்னம் வேற செவந்துடுச்சி போல” என்று வருத்தத்துடன் கூற,
“சண்டையில் கிழியாத சட்டை ஏது செல்வி…, நானும் பார்த்தேன் லைட்டா தான் செவந்து இருந்தது நான் பார்த்துக்குறேன், அவளே அதை பெருசா எடுத்துக்கலை நீ வருத்தபடாத என்றவன் தேங்க்ஸ்” என்றிட,
‘இதுக்கெல்லாம்எதுக்குண்ணாதேங்க்ஸ்.., கவுன்சிலர் ஆன பிறகு எந்நேரமும் வார்ட்லையே குடித்தனம், குடும்பத்தை மறந்தாச்சு அதோட போற இடத்துல எல்லாம் இன்னும் பொண்ணுங்க கிட்ட தேவை இல்லாத பேச்சு வேற.., வேண்டாம் ஏதாவது பெரிய பிரச்சனையில மாட்டிப்பன்னு எடுத்து சொன்னாலும் கேட்கிறதே இல்லை அதன் நீங்க உங்க பிளான் சொல்லவும் உடனே ஒத்துக்கிட்டேன் இப்போ பாருங்க இனிமேல் எங்கயும் வெட்டி அரட்டை அடிச்சிட்டு நிற்கமாட்டார் இதுவே இன்னும் பல வருஷத்துக்கு தாங்கும் என்றவள் அடுத்து என்னண்ணா…??’ என்று ஆர்வத்துடன் கேட்க,
அவளிடம் உலக்கையை கொடுத்தவன், ” இனியும் இப்படி விளையாட்டுத்தனமாவே இருக்ககூடாது மூணு குழந்தைகளுக்கு அப்பாவா பொறுப்பா இருக்கனும்னு அவனுக்கு புரியிற மாதிரி நீயே அடிச்சு சொல்லு” என்றான்.
‘சரி‘ என்றவள் தலைமுடியை கொண்டை இட்டுக்கொண்டு உலக்கையோடு வெளியில் வந்து வெற்றியை நையப்புடையதொடங்கினாள்.
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்த அலர் பதறி வந்து தாமரையின் கையில் இருந்த உலக்கையை பிடித்துகொண்டு, “ஏன்டி எங்க அண்ணாவை அடிக்கிற, ப்ளீஸ் அடிக்காத” என்று தடுக்கவும் ‘அமுலு இருடி’ என்று மனைவியை அணைத்து பிடித்த அகனெழிலன்,
‘செல்லம் எப்பவும் புருஷன் பொண்டாட்டி பிரச்சனையில தலையிடகூடாதுடி அவங்களே பேசி தீர்த்துப்பாங்க..’
‘அதுக்கு அவ எங்கண்ணனை அடிப்பா நான் அமைதியா போகனுமா..?? முடியாது ..’ என்று சட்டம் பேசிக்கொண்டிருக்கும் போதே தாமரை உலக்கையோடு அலர் புறம் திரும்பவும்..,
மனைவியை மறைத்தவாறு நின்றுகொண்டவன், ‘குள்ளச்சி நீ அமைதியா இருந்தா அவனுக்கு அடி கம்மியா விழும் சொன்னா புரிஞ்சுக்கோடி..’
‘என்ன மாமா பேசுற எங்கண்ணனை எப்படி அடிக்கிறா இதெல்லாம் தப்பு.., டொமெஸ்டிக் வையலன்ஸ் நீ விடு..’ என்று அவனணைப்பில் இருந்து திமர..
‘ஹே நீ அமைதியா இருந்தா அடியோட போயிடும் இல்லையா டிவோர்ஸ் தான்டி !! நான் சொல்றது புரியுதா..??’ என்று அழுத்தமாக தன் கைவளைவில் நிறுத்தவும்..,
‘என்ன மாமா சொல்ற..??’ என்ற அதேநேரம் ‘நீ இன்னும் கிளம்பல..’ என்று தாமரை அலர் மீது உலக்கையை ஓங்கவும் அதை தடுத்து பிடித்த எழில்,
‘அவசரபடாத செல்வி! உன் கோபம் புரியுது அவகிட்ட நான் பேசுறேன்… அவ்ளோதான் இதோ கிளம்பிட்டோம்’ என்றவன் அலரை தோளோடு சேர்த்து அணைத்துகொண்டு.,
‘செல்லம் செல்விகிட்ட எல்லாம் நான் தெளிவா பேசிட்டேன் இனி உங்க அண்ணனுக்கு எந்த பிரச்சனையும் வராது .. அதைவிட முக்கியமா செல்வி இனி டிவோர்ஸ் பேச்சு எடுக்கமாட்டா அதை கெடுத்துடாம நீ கொஞ்சம் அமைதியா வாடி..’ என்று நல்ல கணவனாக அலருக்கு விழ இருந்த அடியை தடுத்து தன் மனைவியை காத்தவன் அடுத்த சில நிமிடங்களில் தன் குடும்பத்துடன் கிளம்பி இருந்தான்.