டேய்.. டேய்.. சர்வேஷ் நில்லுடா..! என்று தன் ஒன்றரை வயது மகன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள் சுடர்கொடி.
‘ஒரு இடத்துல நின்னு சாப்பிட மாட்டியா..? எப்பப்பாரு ஓடிகிட்டு‘ என்றவாறே அவன் வாயை துடைத்தவள் முன் வந்து நின்றான் எழில்.தம்பியின் சோர்ந்த முகத்தை கண்டவள் அவனுக்கு காபி கலந்து வந்து நீட்டினாள்.
அமைதியாய் அதை வாங்கி பருகியவனின் முகம் இன்னும் தெளிவில்லாமல் கலங்கி இருப்பதை கண்டு சர்வேஷை மாடியில் தன் மாமியாரிடம் விட்டுவிட்டு வந்தவள்,“சொல்லுடா ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க..? என்ன ஆச்சு திரும்பவும் வீட்ல சண்டையா..?” என்றவளிடம் சென்னை சென்றது முதல் அலரிடம் சவால் விட்டது வரை அனைத்தையும் சொல்லி முடிக்கவும்,
“உன்னை யாருடா அவகிட்ட போய் நேரிடையா பேச சொன்னது..? மாமா கிட்ட பேசுறது தான முறை அதுவும் இல்லாம அவ இப்போதான் காலேஜ்ல சேர்ந்திருக்கா அதுக்குள்ள உனக்கென்ன அவசரம்” என்றவரிடம்காலை தனக்கும் அன்னைக்குமான நிகழ்வை பகிர ஆரம்பித்தான்.
இன்று காலை …
இன்று காலை அலுவலகத்திற்கு கிளம்பியவனின் முன் வந்து நின்ற சரஸ்வதி, “நாளை உனக்கு நிச்சயம் லீவ் போட்டுடு” என்றதும் ஒரு நொடி பூமி தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு அகனெழிலனுக்கு.
என்றைக்கு கீர்த்தியை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தானோ அன்று முதலே தினந்தோறும் பெண்களின் புகைப்படங்களை அவனிடம் நீட்டி தேர்ந்தெடுக்குமாறு மகனுக்கு குடைச்சல் கொடுத்த சரஸ்வதி அப்போதும் அகனெழிலன் அசைந்து கொடுக்காமல் இருக்கவும் இன்று அவரே பெண் பேசி முடித்து நிச்சயம் வரை வந்து அவனுக்கு செய்தி தெரிவித்தார்.
சரசுவிடம் அலரை தவிர வேறு ஒருத்திக்கு தன் மனதில் இடமில்லை என்று திட்டவட்டமாய் தெரிவிக்கவும் இருவருக்குமான வாக்குவாதம் தொடங்கி ஒருகட்டத்தில் வார்த்தை முற்றியதில் சரசு அவனை அடிக்க கை ஒங்கவும் அதை தடுத்து பிடித்த எழில் கண்மூடி தன்னை சமன்படுத்தி அவர் கையை விட்டான்.
இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சரஸ்வதி தான் நினைத்தது நிறைவேறாது என்பது புரிந்ததும், “அந்த கேடுகெட்டவளைத்தான் கட்டுவேன்னு சொல்றவனுக்கு என் வீட்டில் இடம் இல்லைவீட்டை விட்டு வெளியே போடா..!” என்றார்.
அனைத்தையும் பார்வையாளனாக பார்த்து கொண்டிருந்த நந்தன் எழிலின் தோள் அணைத்து, “இந்த பிசாசுக்கு தாலி கட்டின பாவத்துக்கு நான் அனுபவிக்கிறேன்ஆனா நீ வாழ வேண்டியவன்பா வேண்டாம் இவ மூச்சுக்காத்து கூட உன் மேல படவேண்டாம் நீ கிளம்பு” என்றவர் மருமகனுக்கு அழைத்து அனைத்தையும் தெரிவித்தார்.
பாலனோ வேலை பளு காரணமாய் இதை சுடர்கொடியிடம் தெரிவிக்காமல் விட்டிருக்கஇதோ அனைத்தையும் எழிலின் மூலம் அறிந்த சுடரும் “அப்பா சொன்னது சரி தான்டா அவர் காரணம் இல்லாமல் அப்படி சொல்லமாட்டார்இவ்வளவு நாட்களாய் அம்மாகிட்ட பேசாம எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் இருந்தவர் இப்போ உன்னை அங்க இருக்க வேண்டாம்னு சொல்லறாருன்னா அதுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும் சரி சொல்லு இதனால தான் நீ அமுலுவை பார்க்க போனாயா..?” என்ற சுடரிடம் தலை அசைத்து ஆமோதித்தவன்,
“என்னதான் அன்னைக்கு மாமா கட்டி குடுக்குறேன்னு வாக்கு கொடுத்திருந்தாலும் இன்றைய சூழ்நிலையே வேற இல்லையாக்காஅதான் அவ விருப்பத்தை முதல்ல தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் மாமாகிட்ட பேசுனா அவர் சம்மதிக்க அதிக வாய்ப்பிருக்குனு நினைச்சேன்”
ஆனால் இன்று அலரிடம் பேசிவிட்டு வந்தவனுக்கு ஒன்று புரிந்தது.. இனியும் அவன் அதிரடியாய் அணுகினால் அதில் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்காது மேலும் மேலும் அலரின் பார்வையில் தவறாக படும் அதனால் வேறுவிதமாக கையாள எண்ணியே அக்காவிடம் பகிர்ந்தான்.
“என்னை கேட்டால் நீ இப்போ தேவை இல்லாத வேலையை செஞ்சிட்டு வந்திருக்கன்னு சொல்வேன்”
‘என்னக்கா பேசுற..??’
“பின்ன என்னடா அமுலு என்னைக்கு மாமாவை மீறி ஒரு விஷயத்தை செஞ்சிருக்கா இல்லை அவர் சொல்லி ஒன்றை மறுத்திருக்காநீயே சொல்லு”
“மாமா ஒன்னு சொல்றார்னா கண்ணை மூடிட்டு அதை அப்படியே செய்யறவ கல்யாண விஷயத்துல மட்டும் என்ன முடியாதுன்னு மறுக்கவா போறா..! ஆனால் திருமணத்திற்கான நேரம் இது இல்லையே” என்று சுடர்கொடி கூறவும்
“அது எனக்கும் தெரியும்கா இனி அம்மாவோட நச்சரிப்பு இல்லை ஆனால் மாமா கேட்டதும் பெண்ணை கொடுப்பாரா..? அவள் படிப்பு முடியட்டும் நான் காத்திருக்கேன்ஆனா மாமாவோட நிலைப்பாடு தெரியனும் இப்போ இருக்கிற சூழலிலே அவரை எப்படி நெருங்குறது அதை சொல்லு”என்று அவளை தூரிதப்படுத்தினான்.
‘இருடா யோசிக்கிறேன்‘
“வீட்டை விட்டு போன்னு சொன்ன அம்மா எப்பவும் மாமா வீட்டு படி ஏறி பொண்ணு கேட்க போறது இல்லைஅப்பா பத்தி கேட்கவே தேவையில்லை.. அடுத்து உங்க மாமா கண்டிப்பா இதுல நாதன் மாமாகிட்ட பேசமாட்டாரு,வேற யாரு இருக்கா மாமா கிட்ட பேசக்கூடிய ஆளு” எனவும்..
‘அக்காபெரிய மாமா‘ என்றான் எழில்.
“அவர் என்னைக்குடா நாதன் மாமாக்கு நல்லது நெனச்சிருக்காருபோன வருஷம் அவர் கடைல ரெய்டு வந்ததுக்கு காரணமே பெரிய மாமா தான் மறந்துட்டியா..?
‘அப்போ கடைசி துருப்பு சீட்டு பிரகாசம் தான்‘ என்றான் காதல் கண்ணை மறைக்க.
“மனசாட்சி வேணாமாடா உனக்கு..! எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற கீர்த்திக்கிட்ட ஏடாகூடமா பேசி அவ வாயாலேயே உன்னை வேண்டாம்னு சொல்ல வச்சிட்டு வந்திருக்க ஞாபகம் இருக்கா இல்லையா தம்பி உனக்கு” என்று முறைக்கவும்,
‘நான் கீர்த்தி கிட்ட உண்மையை தான் சொன்னேன்”
“எப்படி இருந்தாலும் தன் பெண்ணே வேண்டாம்னு சொன்ன ஒருத்தன் யாரை கல்யாணம் பண்ணினா எனக்கென்னனு விட்டேத்தியா தான் பதில் சொல்லுவாரு இந்த அசிங்கம் உனக்கு வேணுமா..?” என்றதும் ‘இல்லை’ என்பதாய் தலை அசைத்தான்.
‘அப்போ வேற யாரைத் தான்கா மாமாகிட்ட பேச அனுப்புறது‘
“ஏன் நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே சென்னை வரை போய் சார் சவால் எல்லாம் விட்டுட்டு வந்திருக்கீங்க.. நீங்க போய் பேசுறது தான் கரெக்டா இருக்கும்” என்று சுடர் கேலி பேச,
“யார் சுடர் அதுசவால் விட்ட சவுண்ட் சிங்காரம்..!” என்று தன் மகள் வேதவியாசினியோடு வீட்டின் உள்ளே நுழைந்தவாறே கேட்ட பாலனிடம் சுடர்க்கொடி ஆதி அந்தமாய் அனைத்தையும் சொல்லி முடிக்க ,
“நீதான் மாப்பிளை உன் மாமனார்கிட்ட பேச சரியான ஆள்வேற யாரும் சரிப்பட்டு வரமாட்டாங்கஅதனால நீயே போய் பேசு” என்றார்.
“நீங்க வேற மாமாநானே அன்னிக்கு ஹோட்டல்ல என் கையை புடிச்சிட்டு மாமா முன்னாடி போய் பேசலாம்னு சொன்னவ இப்ப என்ன பண்ணபோறாளோனுஇருக்கேன்.. இந்த நேரத்துல புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து கடுப்ப கிளப்பிக்கிட்டு நான் கிளம்புறேன் போங்க..” என்று வாசலை நோக்கி விரைந்தான்.
இரு அதுக்குள்ள கிளம்பினா எப்படி..? என்றவர் அவன் இடக்கன்னத்தை தன் புறம் திருப்பி என்ன மாப்பிள்ளை இது ? என்று கேட்க,
‘ஒண்ணுமில்லை மாமா‘ என்று திரும்பினான் எழில்.
“என்ன அடி பலமோ..?” என்று நகைத்தவரை எழில் முறைக்கவும், “ஒரு சின்ன அட்வைஸ் இனி நீ தங்கச்சி கிட்ட நெருங்காம இருக்குறது உனக்கு நல்லது அவ்ளோ தான் சொல்வேன்” என்றார்.
பாலனும் மணமான நாளில் இருந்து மாமியாரை பார்ப்பவர் ஆயிற்றே எழிலின் காதல் அறிந்தவர் இதை என்றோ சரசுவிடம் எதிர்பார்த்தார்அதனால் நிலைமையை புரிந்து கொண்டு ‘மாப்பிள்ளை மாடி ரூம்ல தங்கிக்கோடா’ என்றார்.
‘இல்லை மாமா அது சரிப்படாது நான் மேன்ஷன்லஇருந்துக்குறேன்’ என்றவன் இருவரின் எந்த சமாதானத்திற்கும் ஒத்துக்கொள்ளாமல் தன் பிடிவாதத்தில் நிற்க,
“சொன்னா கேளு எழில் சொந்த அக்கா நான் இருக்க உள்ளுரிலேயே நீ தனியா தங்கினா நல்லா இருக்காது ஒழுங்கா இங்கயே இரு..” என்ற பிறகே சம்மதித்தான்.
‘அப்போ என் வார்த்தைக்கு மரியாதை இல்லையா மாப்பிள்ளை…??’
‘அப்படி இல்லை மாமா‘ என்று அவன் மறுக்கவும் ‘எழிலு‘ என்று சுடர் ஆர்ப்பரிக்கவும் சரியாய் இருந்தது.
அவள் குரலில் துளிர்த்த குதூகலத்தில் “என்னக்கா..?” என்றிட
“மாமா கிட்ட பேச சரியான ஆள் யாருன்னு கண்டுபுடிச்சிட்டேன்டா..” என்றாள் முகம் பிரகாசிக்க,
‘யாருக்கா சொல்லு‘
“நீலா பெரியம்மா !! மாமா, மாமி ரெண்டு பேருமே அவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பாங்க நானே பல முறை பார்த்திருக்கேன் அவங்க தான் சரியான ஆள்” என்றதும் தன் அக்காவை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு.
“ரொம்பரொம்ப தேங்க்ஸ்காநூற்கண்டு மாதிரி சிக்கலாகி போய் இருக்கும் என் வருங்காலத்தோட நுனியை எடுத்து குடுத்துட்ட ரொம்ப தேங்க்ஸ்.. நீ சொன்ன மாதிரி நீலாம்மா சொன்னா மாமா கண்டிப்பா கேட்பாங்க. அப்போ வாக்கா இப்பவே பெரியம்மாவை பேசி கூட்டிட்டு வரலாம்”
“மாப்பிள்ளை பொறுமை..! பொறுமை..! பொறுமை எருமையிலும் சிறந்ததுடா இப்பவாவது அதை கொஞ்சம் கடைப்பிடி” என்றதும் நிதானித்தவன்.
‘சொல்லுங்க’ என்றான்
‘இன்னைக்கு வேண்டாம் வர ஞாயிறு போய்ட்டு வாங்க‘ என்று அவர் சொல்ல அங்கு எழிலை தேடி வந்த வெற்றி “என்ன மச்சி தங்கச்சியை பார்த்துட்டு வரேன்னு போனநான் உன்னை வீட்ல போய் தேடுனா அத்தை எதுவும் தெரியாதுன்னு கோவமா சொல்லிட்டாங்க என்னடா ஆச்சு..?”
“ஹ்ம்ம் எல்லாம் உன் தொங்கச்சியால தான்டா” என்றவாறே அவனோடு சேர்ந்து நடந்தவன் வீட்டில் நடந்தது அலரிடம் பேசியது என அனைத்தையும் சொல்லி முடித்து நீலாவை அழைத்து வரப்போவதையும் தெரிவித்தான்.
“மச்சி நீ சொல்றது எல்லாம் சரிதான் டா ஆனா கல்யாணங்கிறது எவ்ளோ பெரிய விஷயம்நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்டம்அப்படி இருக்கும் போது சொந்த விருப்பு வெறுப்பு இருக்காதா..? அப்பவும் அமுலு நைனா வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு நீ எப்படி நம்புற..?”
மச்சான் உனக்கு தெரியாதுடா அவகிட்ட நான் பேசினப்போ எந்த இடத்திலேயும் என்னை பிடிக்கலைன்னோ வெறுக்கிறதாவோ வேண்டான்னோ சொல்லவே இல்லடாகடைசியா கேட்டப்போ கூட எங்க அப்பா கேட்கட்டும் நான் பதில் சொல்றேன்னு தான் சொன்னா. ஸோ மாமா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சா போதும்அவ கண்டிப்பா மறுக்கமாட்டா ஆனா..” என்றவனிடம் சிறு தயக்கம்,
‘ஆனா என்னடா..?’
அன்று உணவகத்திலும்இன்று சென்னையிலும் அவளின் பார்வை, பேச்சு, எதிர்பாராத கோபம் எல்லாம் அவனை குழப்ப அமைதியாக நின்றான்.
“ஆனா என்னடா சொல்லு..?” என்று வெற்றி உலுக்கவும்,
‘ஒண்ணுமில்லடா ஏதோ யோசனை..‘ என்று சமாளித்தவனுக்கே அவள் புதியதாய் இருக்கையில் நண்பனிடம் அதை அலசி உபயோகமில்லை என்று விட்டுவிட்டான்.
“சரி விடு மச்சான் நீதான் நீலா அத்தையை பார்க்க போறேன்னு சொல்லி..” என்று அவன் வாக்கியத்தை நிறைவு செய்யாமல் இருக்கவும் கைபேசியில் கவனம் பதித்தவாறு நண்பனின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அகனெழிலன் நிமிர்ந்து வெற்றியை பார்த்தான்.
அவனோ கல்லூரி முடிந்து பேருந்தில் இருந்து இறங்கிய செல்வியை கண்டு உலகம் மறந்திருந்தான்.
வெற்றி தலையில் தட்டிய எழில் தன் கர்சீப்பை நீட்டி “போதும் மச்சி ரொம்ப வழிஞ்சு ஓடுது தொடச்சிக்கோ..!” என்று கூறவும் அசடு வழிந்தவாறே நண்பனின் புறம் திரும்பினான் வெற்றி.
“வெற்றி அவ சின்ன பொண்ணுடா..! இப்படி அவ காலேஜுக்கு போற வர வழில நின்னு லிட்டர் கணக்குல ஜொள்ளு விட்டுட்டு இருந்தனா அந்த பிள்ளை தடுமாறாதா..? ஏன்டா இந்த மாதிரி பண்ற யாராவது பார்த்தா செல்விக்கு பிரச்சனை ஆகிடாதாவாடா போகலாம்” என்று நண்பனின் தோள் அணைத்தான்.
எழில் கையை தட்டிவிட்டு, “எப்படி..! எப்படிங்க சார் அவ சின்ன பொண்ணா..? அப்போ என் தங்கச்சி என்ன நூத்து கிழவியாடா..?” என்று கேலியாக பார்த்தவன்,
இதை தான் மச்சி நம்மூருல ‘சாத்தான் வேதம் ஓதுறதுன்னு’ சொல்லுவாங்க.. நானாவது தாமரை போற வர வழில அவளுக்கே தெரியாம தான் அவளை சைட் அடிச்சிட்டு இருக்கேன். ஆனா சார் என்ன செஞ்சிட்டு வந்திருக்கீங்க சிவனேனு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற பிள்ளைக்கு பொட்டு வெச்சி விடறது என்ன,தோட்டத்துல போய் பாக்குறது என்ன, ஹோட்டல்ல அவங்கப்பாக்கு தெரியாம இழுத்துட்டு போறது என்ன,எல்லாத்துக்கும் மேல படிச்சிட்டு இருந்த பிள்ளைய ரோட்டுல வழி மறைச்சி லவ்வை கூட சொல்லாம கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்டுட்டு வந்திருக்கீங்க.. ஏன்டா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..? என்று பொரிந்தான்.
எழில் இருக்கும் நிலையில் நண்பனின் கூற்றை ஆராயவோ ஏற்கவோ தோன்றாமல் அமைதியாக நின்றவன்ஞாயிறன்று காலையே அக்காவோடு பெரியம்மா வீட்டிற்கு பயணமானான் .
ஆரணியில் இருந்து ஒரு மணி நேர பயணம் நீலாவின் ஊருக்கு, அவர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி அவருக்காக வாங்கி வந்திருந்த பழங்கள் இனிப்புகள் அடங்கிய பையோடு உள்ளே நுழைந்தனர் சுடர்கொடியும் அகனெழிலனும்.
தங்கை பிள்ளைகளை கண்ட நீலா, “இப்போதான் உங்களுக்கு என்னை பார்க்கணும்னு தோணுச்சா..? இவ்ளோ நாள் பெரியம்மா ஞாபகம் ஒரு நாள் கூட வரலையா உங்கம்மா என்னோட பேசலைன்னா நீங்களும் ஒதுக்கி வெச்சிடுவீங்களா..?’ என்று உரிமையாய் கோபிக்க.,
“அப்படியெல்லாம் இல்லை பெரியம்மா இவனுக்கு ஆபீஸ் வேலையோட சேர்த்து உங்க தங்கச்சிகிட்ட இருந்து தப்பிக்கவும் சரியாய் இருக்கு. எனக்கு பிள்ளைங்களை விட்டு நகர முடியலை உங்க தங்கச்சி வீட்டுக்கே ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம்னு ஏதாவது விசேஷத்துக்கு தான் போறேன்னு ஏற்கனவே என் மேல புகார் சொல்றாங்க”
நீங்களே சொல்லுங்க பெரியம்மா கட்டி கொடுத்த இடத்துல நல்ல மனைவியா, மருமகளா, பிள்ளைகளுக்கு அம்மாவா நடந்துக்குறது தப்புங்குற மாதிரி பேசுறாங்க உங்க தங்கச்சி என்றிட,
“ஆமா உங்க அம்மா என்னைக்குதான் அடுத்தவங்களை பத்தி யோசிச்சிருக்கா ? சரி அதைவிடு நீ எப்படி இருக்கமாப்பிள்ளை, பசங்க, சம்பந்தி எல்லாம் நல்லா இருக்காங்களா..?’ எனவும்
‘எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க உங்களை பார்க்காம உங்க மகன் தான் கொஞ்சம் வீங்கி போய் இருக்கான்’ என்றாள் புன்னகையோடு.
“ஏன்டா தம்பி பெரியம்மா மேல அம்புட்டு பாசமா..?” என்று எழிலை நெட்டி முறித்தார்.
அதில் வாய் விட்டு சிரித்தவள் ‘ஆமாஆஆஆ பெரியம்மா’ என்றாள்.
அக்காவை முறைத்தவன் “ஆமா நீலாம்மா நானும் ரொம்ப நாளாவே வரணும்னு நெனச்சிட்டு இருந்தேன்வேலை அதிகம் என்னாலவரவே முடியல.., ஒரு வாரமா முடிவு பண்ணி இதோ உங்க முன்னாடி நிக்கிறோம்” என்றவனை ஏற இறங்க பார்த்தவர்,
‘சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே..! என்ன விஷயம்..??’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
யார் ஆரம்பிப்பது என்று யோசனையில் அவர்களிருக்கவும், ‘முதல்ல டிபன் சாப்பிடுங்க அப்புறம் பேசலாம்’ என்றவர் சப்பாத்தி குருமா எடுத்து வந்து வைக்க பழங்கள் இனிப்புகள் அடங்கிய பையை கொடுத்தாள் சுடர்கொடி.
‘ஓஓ.. என்கிட்டயே சம்பிரதாயம் பழகுற அளவு ரெண்டு பேரும் பெரிய மனுஷங்க ஆகிட்டீங்களா..?? என்று செல்லமாக கோபம் கொண்டவரை இருவரும் பாவமாக பார்க்க தன் வேடிக்கையை கைவிட்டு அவர்களை அமரவைத்து சூடாக பரிமாறினார்.
என்றுமே நீலா அன்னபூரணி தான்..!! தம்பி, தங்கை பிள்ளைகள் தன் பிள்ளைகள் என்ற பாகுபாடு கிடையாது, ‘போதும்..’என்று மறுத்தவர்களிடம்வராத பிள்ளைங்க வந்திருக்கீங்க ஒழுங்கா வயிறு நிறைய சாப்பிடுங்க என்று மேலும் இடியாப்பம் தேங்காய் பால் என்று பரிமாற அனைத்தையும் முழுதாக சாப்பிட்டு விட்டே எழுந்தனர்.
அடுத்து டீயை கொண்டு வந்து அவர்கள் முன் வைக்கவும் அதை பருகியவாறே எழில் சுடர்கொடிக்கு ஜாடை காண்பிக்க அவளோ முடியாது நீயே ஆரம்பி என்பதாய் தலை அசைக்க அதை கண்டும் காணாதது போல் இருந்த நீலா அவர்களே துவங்கட்டும் என அமர்ந்திருந்தார்.
இப்படியே சென்றால் இது வேலைக்கு ஆகாது யாரேனும் ஒருவர் தொடங்கித்தானே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளாய்சுடர் “பெரியம்மாஅம்மா எழிலை பொண்ணு பார்க்க கூட்டிட்டு போனாங்க …” என்று தொடங்கி நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.
பொறுமையாக கேட்ட நீலா, “எழிலுஎன் தம்பி மகளுக்கு உன்னைவிட பொருத்தமான ஜோடி இந்த ஜில்லாவிலேயே எவனும் கிடையாது என் தம்பி கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் உன்னை மாதிரி ஒருத்தன் மாப்பிள்ளையாய் கிடைக்க மாட்டான்… என் செல்லத்துக்கு ஏற்றவன் நீதான்அதுல எந்த சந்தேகமும் இல்லை, ஆனா காலத்துக்கும் மறக்க முடியாத வடு அவங்க மனசுல இருக்கப்போ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அதை அதிகப்படுத்தணும்னு நீ விரும்புறியா..?” என்றாவர் வார்த்தைகள் கசந்தாலும் நிஜம் அது தானே அதனால் அவருக்கு என்ன பதில் கூற முடியும் அவனால்..??
சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் பெருமூச்சுவிட்டவாறு, “நீங்க சொல்றது சரிதான் நீலாம்மா ஆனால் அது என்னால் ஏற்பட்டது இல்லையே…!”
“உன்னால் இல்லைனாலும் உன்னை பார்க்க பார்க்க அவர்களுக்குள் எழும் அந்நாளைய நினைவும் அதை தொடரும் அவமானமும் நிஜம் தானே…!” எனவும் அவனால் பதில் கூற முடியவில்லை.
இதை பற்றி சிந்திக்க எப்படி தவறினான் காதல் கண்களை மறைத்ததாலா..? அல்லது இதற்கு அவன் பெரிதாய் முக்கியத்துவம் கொடுக்காததாலா..? எதுவாகினும் அகனெழிலனுக்கே வெளிச்சம்.
தம்பியின் நிலை அறிந்த சுடர்கொடிஇருவருக்கும் இடையிட்டு “பெரியம்மா இந்த விஷயம் இறந்தகாலம் அதையே பிடிச்சுட்டு இருந்தா வருங்காலம்னு ஒன்னு இருக்குமா? சொல்லுங்க” என்று நீலாவிடம் அவன் நிலையை எடுத்து கூறினாள்.
“ஏன் இல்லாம? அவங்க அவங்களோட வழியில போகட்டும்..! இவன் இவனோட வழியில போகட்டும்..! அப்படி செய்தால்அனைவருக்கும் வசந்தமான வருங்காலம் உண்டு” என்றார் அவளை மறந்துவிடு என்ற மறைமுக கட்டளையோடு.
“நீங்க என்ன சொன்னாலும் அவ இல்லாம என் வருங்காலம் இல்ல பெரியம்மா..! எனக்கு முக்காலமும் அமுலு மட்டும் தான் ..!” எனவும் புரியாது அவனை பார்த்த நீலாவிடம், ஐந்து வருடங்களாய் அவளை தன் நெஞ்சில் சுமந்திருப்பதையும் அன்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவளிடம் பேசியதையும் எடுத்து சொல்லவும்,
“அறிவில்லையாடா உனக்கு? சின்ன புள்ள கிட்ட எதை பேசணும் எதை பேசக்கூடாதுனு விவஸ்தை இல்ல..! படிக்கிற புள்ள மனசுல இப்படி ஆசையை வளர்க்கிறது தப்புன்னு தெரியலையா உனக்கு? என்று விளாச துவங்கினார்.
அப்போது ஊடே சுடர் வரவும், “என்ன தம்பிக்கு வாக்காளத்தா? அவன் அக்காவா இல்லாமஒரு பெண்ணா யோசிச்சி பாருஅவன் பண்ணின தப்பு உனக்கே புரியும்” என்றார்.
“எனக்கு புரியாமல் எல்லாம் இல்லை நல்லாவே புரியுதுஆனா இப்போ வேற வழி இல்ல, இவன் கட்டினா அவளை மட்டும் தான் கட்டுவேன் இல்லாட்டி கல்யாணமே வேண்டாம் இப்படியே விட்டுட சொல்றான். நான் என்ன பண்ண ?உங்க தங்கச்சி கிட்டத்தட்ட மதம் பிடிச்ச யானை மாதிரி தான் ஆத்திரத்தில் அறிவிழந்து யாரை பேசுறோம்என்ன பேசுறோம்னு வரைமுறை இல்லாம பேசுறாங்கஇவனையும் வீட்டை விட்டு துரத்திட்டாங்க” எனவும்,
“என்னடி சொல்ற..?” என்று அதிர்ந்த நீலா எழிலிடம் “நீ என்னப்பா சொன்ன..?” என்றார்.
“இல்லை நீலாம்மா என்னால இனியும் அங்க இருக்க முடியாது காலையில் எழுந்ததில் இருந்து ராத்திரி தூங்குற வரை பொண்ணுங்க போட்டோ காட்டி டார்ச்சர் பண்றாங்க வேண்டாம்னு சொன்னா வாய்க்கு வந்ததை பேசுறாங்கநான் வீட்ல சாப்பிட்டே மாச கணக்காகுதுஅவங்க வெளியே போக சொல்றதுக்கு முன்னாடியே நான் முடிவு பண்ணிட்டேன் அப்பாவுக்காக தான் இவ்ளோ நாள் அங்க இருந்தேன்இப்போ அவரே போக சொல்லவும் வந்துட்டேன்”
“இனி எங்க அம்மாகிட்ட பேசி உபயோகம் இல்லை அதான் உங்களை தேடி வந்தோம்.. நீங்க தான் மாமா கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நடத்தணும்” என்றாள் சுடர்கொடி.
“என்னது நானா..?” என்று அதிர்ந்தார் நீலா.
“ஆமா நீலாம்மா உங்களைதான் மலை போல நம்பி வந்திருக்கேன். நீங்களும் என்னை உங்க பையனா நெனச்சி பாருங்க என்னோட நியாயம் புரியும்., அலர் என் மனசுக்குள்ள முதல்லயே வந்துட்டாலும் அன்னைக்கு மாமா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாருனு தெரியவரவும் தான் என் மனசுக்குள்ள அவ வேர்விட்டு விருட்சமானாள்”
‘அம்மாவே எல்லார் கிட்டயும் சொல்லிட்டு இப்போ பணத்துக்காக மாத்தி பேசுது என்னால அப்படி முடியாது.. அதோட நீலாம்மா மாமா இல்லைன்னா இன்னைக்கு எங்க குடும்பம் இருக்கிற இடம் தெரியாம போய் இருக்கும்., அதை எங்க அம்மா மறந்தாலும் என்னைக்கும் நாங்க மறக்கமாட்டோம்’ என்றான் தீவிரமாக.
‘அப்போ நீ நன்றிகடனுக்காக தான் அமுலுவை கல்யாணம் பண்ண நினைக்கறியா..? எனவும் மனதில் அடி வாங்கினான்.
“என்னை பார்த்தா உங்களுக்கு அப்படிதான் தெரியுதா நீலாம்மாஅப்படியே இருந்தா கூட என்ன தப்பு..?? ஆனா என்னைக்கு அலர் பிறந்தாளோ அப்போ இருந்தே எனக்கு அவ மேல உரிமையும் பாசமும் தானா வந்துடுச்சுஎன்னையும் அறியாம ஒரு கட்டத்தில் அது காதலாய் மாறிடிச்சி.. இருக்கிற பிரச்சனைக்கு நடுவுல எப்போ என் கை வந்து சேருவான்னு நான் தவிக்கிற தவிப்பு உங்களுக்கு எல்லாம் புரியாது விடுங்க நீலாம்மா” என்றான் வருத்தத்தோடு..
‘இப்பவும் மாமாக்கு எந்த கெட்ட பேரும் வந்துடாம அவர் சம்மதத்தோட அவ கையை பிடிக்கணும்னு தான் நான் ஆசைப்படறேன் அதுக்காக தான் உங்களை தேடி வந்திருக்கேன்’ என்றவனை பார்த்தவருக்கும் அவன் உணர்வுகள் புரியாமல் இல்லை ஆனால் பெற்றவர்களின் பாவ புண்ணியம் பிள்ளைகளுக்கு தானே..!! பெற்ற தாயால் தவறே செய்யாமல் தண்டனை அனுபவிப்பவன் அதற்காக அவன் காதலையோ திருமண எண்ணத்தையோ தவறு என்று சொல்ல முடியாதே..!!
அன்று தங்கை தம்பியிடம் பெண் கேட்டபோது அகமகிழ்ந்தவர் தானே நீலாவும்.. எழில் சில காலம் அவரிடம் வளர்ந்தவன் அந்த பிணைப்பு அவன் அலரை திருமணம் புரிவதையே விரும்பியது., இருப்பினும் அவன் காதலின் திடத்தை சோதிக்கவே கேள்வி கணைகளை தொடுத்தார்.
“எல்லாம் சரிப்பா ஆனா ரெண்டு குடும்பத்துக்கும் நடுவில் இருக்கும் விரிசலை நீ கணக்கில் எடுக்காம எப்படி விட்ட..? உன்னோட குறிக்கோளில் மட்டுமே உறுதியாய் இருக்க நீ.., மத்தவங்களோட உணர்வுக்கும் மதிப்பளிக்கனுமா இல்லையா..?” என்று கிடுக்கி பிடி போட.
‘இதில் நான் என்ன செய்திட முடியும்னு நீங்களே சொல்லுங்க நான் செய்றேன்.. இத்தனை நடந்த பிறகும் மாமா மாமி மேல உள்ள மரியாதை கொஞ்சமும் குறையல, ஏற்கனவே அவங்களுக்கு ஏற்பட்டிருக்க பாதிப்பை நான் கணக்கில் எடுத்ததால் தான் இதுநாள் வரை அவங்க முன்னாடி போய் நிற்காம இருந்தேன் இதோ இப்பவும் சம்மதம் வேண்டி உங்க முன்னாடி இருக்கேன் இல்லை எப்பவோ அவளை தூக்கிட்டு போய் தாலி கட்டி இருப்பேன்’ என்றான் திடமாக.
எழிலின் இறுதி வார்த்தைகளில் புன்னகைத்தவருக்கும் அதை செய்யக்கூடியவன் தான் என்று புரியாமல் இல்லை. ‘மத்ததை விடு ஆனா இப்போ உங்க அம்மாவை எப்படி சமாளிக்க போற எழிலு..??’
“எங்க அம்மா எல்லாம் திருந்த கூடிய ஆளா..? அவங்களுக்கு இருக்க பிடிவாதம் எனக்கும் இருக்குஅவங்க மட்டும் தான் நெனச்சதை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவாங்களா…? நானும் போவேன் அதை பற்றி நீங்க கவலைபடாதீங்க மாமாகிட்ட பேசி சம்மதிக்க வெச்சீங்கனா போதும் ப்ளீஸ் நீலாம்மா”
எங்க அம்மா எல்லாம் திருந்த கூடிய ஆளா..? என்ற அவன் கேள்வியில் உண்மை சுட நீலாவின் நினைவுகளோ தங்கையின் கோர தாண்டவங்களை நினைவு கூற ஆரம்பித்தது.