அடுத்த நாள் மாலை 3.55 மணிக்கு சத்யதேவ் ஆத்விகாவின் கல்லூரி வாசலில் வந்து நின்றான். தலை கவசத்தை கழட்டி வண்டியின் மீது வைத்து கையை அதன் மீது வைத்தபடி வெளியே வரும் பெண்களில் ஆத்மிகா யார் என்று ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
சரியாக நான்கு மணிக்கு ஆத்மிகா தனது நண்பர்களுடன்(2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள்) கல்லூரி வாசலை நோக்கி இருசக்கர வண்டியில் வந்து கொண்டு இருந்தாள். இவள் பின்னால் ஒரு தோழி அமர்ந்து இருக்க, இன்னொருத்தி தனியாகவும், தோழர்கள் இருவரும் ஒரே வண்டியிலும் இருந்தனர்.
தனியாக வரும் தோழி, “வந்து இருப்பானா?” என்று வினவ,
ஆத்மிகா, “கண்டிப்பா வந்து இருப்பான்” என்றாள்.
“ஆள் பார்க்க எப்படி இருப்பான்?” என்று இவள் பின்னால் இருந்தவள் வினவ,
“ஓகேயா இருப்பான்” என்றபடி கல்லூரி வாயிற் கதவை தாண்டி வந்த ஆத்மிகா பார்வையை சுழற்ற, அவள் கண்ணில் சத்யதேவ் விழுந்தான்.
அவனைப் பார்த்ததும், “சமி சொன்ன மாதிரி ஜெயதேவ் தான் வந்து இருக்கான்” என்றாள்.
“என்னடி சொல்ற! அப்போ அக்கா சொன்ன மாதிரி இனி உன்னை தொடர்ந்து வருவானோ? பிரச்சனை செய்வானோ?” என்று முதலில் பேசிய தோழி கூற,
இன்னொருவனோ, “நம்ம தலையே அவனை வெச்சு செய்வா” என்றான்.
இவள் பின்னால் இருக்கும் தோழி, “சரியா சொன்ன மச்சி” என்றபடி அவனுடன் கை தட்டிக் கொண்டாள்.
முதலில் பேசிய தோழன், “யாரு ஆத்மி? அந்த பைக்கில் இருக்கிறவனா?” என்றபடி வண்டியில் இருந்து இறங்க,
“டேய் இருடா.. நான் போய் பேசிட்டு வரேன்” என்றபடி ஆத்மிகா வண்டியை ஓரமாக நிறுத்த,
அவனோ, “நாங்களும் வருவோம்” என்று கூற, மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
“சரி வாங்க” என்றாள். மூன்று வண்டிகளையும் ஓரமாக நிறுத்திவிட்டு சத்யதேவை நோக்கி சென்றனர்.
சத்யதேவை நெருங்கியவள், அவன் முகத்தை அருகில் பார்த்ததும், “ஹே! நீங்க டிவின்ஸ்ஸா! முதல்லேயே தெரிந்து இருந்தா அவனையும் வர சொல்லி இருப்பேன்.. இதுவரை ட்வின்ஸ்ஸை நேரில் நான் பார்த்ததே இல்லை.. உங்க பெயர் என்ன?” என்று உற்சாக குரலில் புன்னகையுடன் பேசினாள்.
“சத்யதேவ்” என்றவன் ஆச்சரியத்துடன், “எப்படி கண்டு பிடிச்ச? பிடிச்சீங்க?” என்று கேட்டான்.
“சும்மா நீனே சொல்லுங்க.. உங்களை விட சின்ன பொண்ணு தான்.. விக்டரி அண்ட் ப்ராமிஸ்.. ஹ்ம்ம்.. நல்ல நேம்ஸ்” என்றவள், “கேட்(gate) கிட்ட வச்சு ஜெயதேவ்னு தான் நினைச்சேன்.. பக்கத்தில் வந்ததும் கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள்.
சத்யதேவ் ஆச்சரியம் விலகாமல், “அதான் எப்படினு கேட்கிறேன்? என் பிரெண்ட்சே குழம்புவாங்க.. க்ளோஸ் பிரெண்ட்ஸ் பேசினதும் கண்டு பிடிச்சிடுவாங்க.. ஆனா நீ பார்த்ததும் எப்படி கண்டு பிடிச்ச?” என்றான்.
“மிஸ்டர் விக்டரி முகத்தில் மிலிட்டரி லுக் இருக்கும்.. உங்களை பார்த்தா அப்படி இல்லை”
“ஒருவேளை நாங்க டிவின்ஸ்ஸா இல்லாம இருந்து ஜெயதேவ் ட்வின்ஸ்னு சொல்லி இப்படி நடிச்சு இருக்க வாய்ப்பு இருக்குதே!”
“அவன்.. சாரி அவர் நடிக்க வாய்ப்பு இல்லை”
சத்யதேவின் கண்ணில் ஆச்சரியம் கூடியது.
அவள் சிறு தோள் குலுக்கலுடன் மென்னகைத்தபடி, “ஆட்களை ஓரளவுக்கு சரியாவே கணிப்பேன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“ஹ்ம்ம்.. அவனுக்கு பொய் சொல்றது பிடிக்காது தான்” என்றவன், “நான் ட்வின்ஸ்ஸா இல்லாம இருந்தா எப்படி கண்டு பிடிச்சு இருப்ப?” என்று கேட்டான்.
“உங்களுக்கு உங்க மொபைல் வேணாம் போலவே!”
“அச்சோ!” என்று அவன் அலற,
“பின்ன! எவ்ளோ என்குவரி!!! நான் கேட்டு இருந்தா கூட அதில் நியாயம் இருக்குது” என்றபடி அவனது கைபேசியை அவனிடம் கொடுதவள், “நீங்க ட்வின்ஸ் இல்லைனா முதல்ல என் பிரெண்ட் வந்து உங்க கிட்ட பேசி இருப்பான்.. அப்புறம் உங்க போனில் இருந்து அந்த கஞ்சி டப்பாக்கு வீடியோ காள் போடச் சொல்லி இருப்பேன்” என்றாள்.
காலையில் தான் ஜெயதேவிடம், ‘அவ என்னை நம்பலைனா என்ன செய்ய? அதாவது நீ தான் ட்வின்ஸ்னு சொல்லி ஏமாத்துறதா நினைச்சா?’ என்று கேட்டதுக்கு அவன் ‘வீடியோ காள் போடு’ என்றது நினைவிற்கு வந்தது.
அவள், “பை” என்றபடி நகர போக,
“ஜெயதேவ் பத்தி உன்னோட கருத்து என்ன?” என்று கேட்டான்.
அவள் கூர்விழிகளுடன் புருவம் உயர்த்தி பார்க்க,
மென்னகையுடன், “சும்மா ஒரு க்யூரியாசிட்டி” என்றான்.
“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?”
“சும்மா சொல்லேன் ப்ளீஸ்” என்று லேசாக கண்ணை சுருக்கி கேட்டான்.
லேசாக தோளை குலுக்கியவள், “ஜென்டில்மேன்.. உங்க மேல் பாசம் அதிகம்.. ஸ்ட்ரேட் பார்வர்ட்.. கோபம் அதிகம் வரலாம்.. ஹ்ம்ம்.. உங்களுக்கு எதிர்பதம்.. ஐ மீன் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி” என்றாள்.
அவன் ஆச்சரியத்துடன் பார்க்க, ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினாள்.
“ஜென்டில்மேன்!” என்று அரை நொடி நிறுத்தியவன், “அவன் பேசிய பேச்சுக்கு இதை சத்தியமா எதிர்பார்க்கலை” என்றான்.
“பெயரிலேயே சத்தியத்தை வச்சுட்டு சத்தியமா எதிர்பார்க்கலையா!” என்று அவனை கிண்டல் செய்தாள்.
எப்படி எதிர்விணை ஆற்றுவது என்று புரியாமல் அவன் விழிக்க,
அவள் மென்னகையுடன், “அவர் அதிகமா பேசி இருந்தாலும் அவரோட பார்வையில் கண்ணியம் இருந்தது.. அந்த பேச்சு உங்களுக்காக வேணும்னே ஹார்ஷா பேசியது.. அது கூட மறைமுகமா தான் சொன்னார்.. அதையே நான் நேரடியா சொன்னப்ப, அவர் கண்ணில் பிடித்தமின்மையை பார்த்தேன்..
மே பி உங்களுக்கு கூட பிறந்த அக்காவோ தங்கையோ இருந்து இருந்தா இதைக் கூட ஜஸ்ட் லைக் தட் பேசி இருக்க மாட்டாரோனு கூட தோணுச்சு.. உடனே எங்களுக்கு சிஸ்டர் இல்லைனு எப்படி தெரியும்னு கேட்காதீங்க.. இதுவும் கெஸ் தான்..” என்றவள்,
“என்ன இருந்தாலும் அவர் அப்படி பேசியது தப்பு தான்.. அதான் போனை அவர் கிட்ட கொடுக்கலை.. தப்பா பேசியதுக்கு சாரி கேட்டு இருந்தா போனை அவர் கிட்டயே கொடுத்து இருப்பேன் அண்ட் ஒரு ஜவ்வு மிட்டாய் கிட்ட இருந்து தப்பிச்சும் இருப்பேன்” என்று குறுஞ்சிரிப்புடன் முடித்தாள்.
“அவன் போனை கேட்டதும் கொடுத்து இருந்தா சாரி கேட்டு இருப்பேன்னு சொன்னான்” என்றவன், “அவனிடம் யாரும் இதுவரை இப்படி பேசியது இல்லை.. அதான் உன்னோட எதிர்வினையில் ஷாக் கலந்த கோபத்தில் இருந்து இருப்பான்.. அவன் பேசியதுக்கு நான் சாரி கேட்கிறேன்.. சாரி”
“அவர் பேசியதுக்கு நீங்க சாரி கேட்பது சரி இல்லையே! அண்ட் நானும் தான் பதிலுக்கு பேசிட்டு வந்தேன்.. ஸோ லீவ் இட்”
“ஹ்ம்ம்.. ஆமா அது என்ன ஜவ்வு மிட்டாய்! நான் ஜவ்வு மிட்டாய்யா!!”
“வந்தோமா மொபைலை வாங்கினோமோ கிளம்பினோமானு இல்லாம விஷயத்தை ஜவ்வ்வ்வ்வா இழுத்துட்டு” என்று இழுத்து நிறுத்தியவள், “நீங்க நயன்டீஸ் கிட்டா?” என்று கேட்டாள்.
“அய்யோ! அவ்ளோ ஏஜ் இல்ல.. ஏன் கேட்கிற?”
“கடலை வறுக்கலை.. சைட் அடிக்கலை”
சத்தமாக சிரித்தவன் அவளது தோழர்களை காட்டியபடி, “இப்படி பாடி கார்ட்ஸ் கூட வந்து நின்னா இதெல்லாம் எப்படி!” என்றான்.
“இல்லைனா மாட்டும்” என்று அவள் நக்கல் செய்ய,
அவன் புன்னகையுடன், “அவன் மங்கூஸ் மண்டையன், நான் ஜவ்வு மிட்டாய்யா!” என்றான்.
“அதையும் சொன்னாரா?”
“அதை கேட்டு, நான் வயிறு வலிக்க சிரித்து, அடிதடியில் போய் முடிந்தது”
அவள் சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும்,
“அவன் ஒரு டெரர் பீஸ்.. அதான் அவனையே நீ அப்படி கலாய்க்கவும்” என்று மென்னகையுடன் இழுத்து நிறுத்தினான்.
“வீட்டிலும் டெரரா?”
“வீட்டில் கொஞ்சம், வெளியே ரொம்ப” என்றபோது ஜெயதேவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவள் மென்னகையுடன் கையசைத்து கிளம்ப, தானும் மென்னகையுடன் அவளுக்கு கை அசைத்தபடி அழைப்பை எடுத்தவன் ஒலிபெருக்கியை இயக்கி இருந்தான். அதை கவனிக்காமல், “சொல்லுடா” என்றான்.
“என்னடா மொபைலை வாங்கிட்டியா.. என்ன சொல்றா அந்த ராங்கி பட்டாசு?” என்ற ஜெயதேவின் குரலில் ஆத்மிகா திரும்பி வந்து நின்றாள்.
அதிர்ந்த சத்யதேவ் பதற்றத்துடன் ஒலிபெருக்கியை அணைக்க முயற்சித்து கைபேசியை கீழே போட்டுவிட, அதை ஆத்மிகா எடுத்தாள்.
“அவ கூட தான் பேசிட்டு இருக்கனா நேத்து நான் பேசியதுக்கு சாரி சொன்னேன்னு சொல்லிடு” என்று ஜெயதேவ் தொடர்ந்து பேசினான்.
“தப்பா பேசும் போது இருந்த தைரியம் சாரி கேட்கும் போது இல்லையோ!” என்று நக்கலுடன் ஆத்மிகா வினவ,
இதை சற்றும் எதிர்பார்த்திராத ஜெயதேவ் ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்த நொடியே, “ஏய் சுண்டைக்கா! யாருக்கு பயம்?” என்று எகிற,