சிறுவன் ஒருவனோ, “உங்க ரெஸ்டாரென்ட்டில் சாப்பாடு சரி இல்லை” என்றான்.
அவனை ஆழ்ந்து பார்த்த ஜெயதேவ், “அப்படியா?” என்று கேட்டான்.
அந்த பார்வையில் உள்ளுக்குள் சற்றே குளிரெடுத்தாலும் வெளியே, “ஆமா” என்று திடமான குரலிலேயே கூறி இருந்தான்.
தனது எதிரிகளில் யாரோ செய்யும் வேலை என்று நினைத்து கடும் கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்த ஜெயதேவ் இவர்கள் மேசையை நெருங்கிய போது ஆத்மிகாவை கண்டதும் கோபத்தை குறைத்து இருந்தான். குறைத்து இருந்தானே தவிர கோபம் நீங்கவில்லை.
‘என்ன விளையாட்டு இது! விளையாட்டிற்கும் ஒரு எல்லை வேண்டாமா! இந்த செயலால் ரெஸ்டாரென்ட் பெயர் தானே கெடும்! அந்த அறிவு வேண்டாம்!’ என்று ஆத்மிகா மீது தான் அவனது கோபம் திரும்பியது. அதனாலேயே அவர்களிடம் பொறுமையாக பேசிக் கொண்டு இருக்கிறான்.
அவன் அவள் முகத்தை பார்க்கவே இல்லை. தான் வந்ததில் இருந்து அவளது பார்வை தன் மீது தான் இருக்கிறது என்பதை அறிந்தும் தனது பார்வையை அவள் பக்கம் திருப்பவே இல்லை.
இன்னும் அழுத்தமான பார்வையுடன் அந்த சிறுவனைப் பார்த்தவன், “உப்பு, காரப்பொடி எல்லாம் நீங்க கலந்தது சிசிடிவியில் ரெக்கார்ட் ஆகி இருக்குது” என்றான்.
அவர்கள் மறைகாணி பதிவில் விழாதவாறு தான் செய்தார்கள் என்பது அவனுக்கு தெரிந்தாலும் ஜெயதேவின் உறுதியான அழுத்தமான குரல் அவனுள் சற்று பதற்றத்தை கொடுத்தது. அது தான் ஜெயதேவின் எண்ணமும் கூட, தன்னிடம் ஆதாரம் இல்லை என்றாலும் தனது விசாரணையின் மூலம் அவன் வாயில் இருந்தே உண்மையை வர வைக்க நினைத்தான். ஆனால் அவன் ஆத்மிகாவிடம் பயிற்சி பெற்றவன் என்பதை ஜெயதேவ் மறந்து போனான்.
சிறுவன் ஆத்மிகாவை பார்க்க, அவள் கண்ணை மூடி திறந்து பேசு என்பது போல் லேசாக தலை அசைத்து தைரியம் அளித்தாள்.
அடுத்த நொடி சிறுவனின் முகத்தில் தெரிந்த வித்யாசத்தை ஜெயதேவ் சிறு ஆச்சரியத்துடன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.
சிறுவன், “அப்படி எதுவும் இல்லைனு எனக்கு தெரியும்.. இருந்தா காமிங்க பார்ப்போம்” என்று தைரியமாகவே கூறினான்.
அவளும் ஆத்மிகாவைப் பார்த்த அடுத்த நொடி திடமான குரலில், “நான் எதையும் எதிலும் கலக்கலை” என்றாள். அவளது தோரணையே மாறி இருக்க, சற்று முன் பயந்த சிறுமியா இவள் என்று தான் தோன்றியது.
அவன் கடும் கோபத்துடன் குரலை உயர்த்தாமல், “நீ கெட்டதும் இல்லாம இந்த பசங்களையும் கெடுக்கிறியே! பெரியவளா பொறுப்பா நல்லதை கத்துக் கொடு” என்று சீறினான்.
“பொறுப்பு பருப்பெல்லாம் எங்களுக்கும் இருக்குது.. இதுவரை நாங்க தப்பா எதுவும் செய்தது இல்லை.. தப்பு செய்தவங்களுக்கு தான் எங்க பாணியில் தண்டனை கொடுத்து இருக்கிறோம்.. பொறுமை பொறுமை மிஸ்டர் கற்றாழை.. நீ பேசும் போது நான் குறுக்கிடாம கேட்டேன் தானே! ஸோ லிஸன்.. இப்போ இங்கே இவங்க கலாட்டா செய்தது அன்னைக்கு நீ என் கிட்ட பேசினதுக்காக.. அவங்க வயசுக்கு அவங்களால் முடிந்த பனிஷ்மென்ட் உனக்கு தந்து இருக்காங்க” என்று கூறி தோளை குலுக்கினாள்.
“நீயும் தானே பேசின! அப்போ நான் உனக்கு பனிஷ்மென்ட் தரவா?”
“எடுத்ததும் நானாவே உன் கிட்ட தப்பா பேசினேனா?” என்று தீர்க்கமான பார்வையுடன் அழுத்தமான குரலில் அவள் வினவ, அவனால் பதில் கூற முடியவில்லை.
பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக தான் நின்றான்.
“இவங்க செய்த கலாட்டா பக்கத்து டேபிளில் இருக்கிறவங்களுக்கு கூட கேட்டு இருக்காது.. ஸோ ரெஸ்டாரென்ட் பெயர் கெடாது” என்றவள் சற்று தள்ளி நின்றிருந்த பணியாளரைப் பார்த்து மென்னகையுடன்,
“சாரி அண்ணா.. உங்களை டென்ஷன் படுத்திட்டோம்.. என் அக்காவை தான் உங்க சாரோட தம்பி கல்யாணம் செய்துக்க போறாங்க.. அதான் சும்மா கலாட்டா செய்து விளையாடினோம்” என்றாள்.
‘ஆத்தி! இந்த பொண்ணுக்கு ரொம்ப தான் தைரியம்!’ என்று மனதினுள் நினைத்தவர், ‘சரி.. பரவாயில்லை’ என்று சொல்லவா வேண்டாமா என்று குழம்பியவராக ஒரு தினுசாக தலையை எல்லா பக்கமும் ஆட்டினார்.
அதை கண்டு சிரித்தவள், “பில்” என்றாள்.
அவர் ஜெயதேவை பார்க்க, அவன் தலை அசைக்கவும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்.
ஜெயதேவ் அவளை முறைத்துவிட்டு அவனது அறையை நோக்கி செல்ல,
அவள் கிஷோரிடம் பணத்தை கொடுத்து, “பில் பே பண்ணு.. நான் வந்துடுறேன்” என்றுவிட்டு வேகமாக ஜெயதேவ் பின்னால் சென்றாள்.
அறையினுள் சென்ற ஜெயதேவிற்கு எரிச்சலும் கோபமும் அடங்குவதாக இல்லை. தனது தவறு அவனுக்கு புரியாமல் இல்லை. எப்படி இவளிடம் மட்டும் தான் தவறுகிறோம் என்ற எரிச்சலும், இப்படி ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்கிறோமே என்ற கோபமும் கொண்டான்.
அறைக்கதை லேசாக தட்டியவள் அவனது அனுமதியை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றாள்.
அவன் கோபத்துடன், “மேனர்ஸ் இல்ல?” என்று எறிந்து விழுந்தான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “அது இருக்க போய் தான் கதவை தட்டிட்டு உள்ளே வந்தேன்” என்றாள்.
“நான் உன்னை உள்ளே வரச் சொல்லவே இல்லையே”
“அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை”
“அப்படி என்ன கலெக்டர் வேலையா மேடம் பார்க்கிறீங்க!” என்று அவன் நக்கல் குரலில் கூற,
அவளோ அவனை தீர்க்கமாக பார்த்தபடி, “இப்போ என்ன! உனக்கு என்னை மட்டம் தட்டனுமா?” என்று கேட்டாள்.
அவள் அப்படி கேட்கவும் அவனுக்கு ஒருமாதிரி ஆனது. ஒருவரை மட்டம் தட்டுவது அவனது இயல்பு குணம் இல்லையே! ஆனால் கோபத்தில் மதி இழந்து தான் அதை தான் செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தவன் அவளைப் பார்த்து மன்னிப்பு கேட்க நினைக்க,
அதற்குள் அதை உணர்ந்தார் போல் அவள், “சாரி வேண்டாம்” என்றிருந்தாள்.
தன்னையும் கணிக்க ஒருத்தியா என்று ஆச்சரியம் கொண்டவனின் மனம் எப்பொழுதும் போல், ‘இவ பெண்களில் சற்று வித்தியாசமானவள்’ என்று கூறிக் கொண்டது.
அவனது அந்த செய்கை அவளை கவர்ந்தது. அதை மனதினுள் ரசித்தவள், “உன் பார்வை சொல்லுச்சு” என்றாள்.
“நான் இல்லைனு சொன்னா!”
“நீ பொய் சொல்றனு சொல்லுவேன்” என்று சிறு தோள் குலுக்கலுடன் கூறினாள்.
“ஏன் சாரி சொல்ல வேண்டாம்னு சொன்ன?”
“ஸோ நீ சாரி தான் சொல்ல வந்த” என்று குறும்புடன் கூடிய வெற்றி புன்னகையுடன் பார்த்தாள்.
லேசாக சிரித்தவன், “சரி சொல்லு.. ஏன் வேண்டாம்னு சொன்ன?” என்று கேட்டான்.
“யாரையும் மட்டம் தட்டுவது உன் இயல்பு இல்லைனு தெரியும்.. கோபத்தில் வார்த்தை விடுவது சகஜம், அதுவும் உன் கோபத்திற்கு நான் தானே காரணம் அதான் வேணாம்னு சொன்னேன்” என்றவள் அவனது புருவ முடிச்சைப் பார்த்து, “நான் மட்டம் தட்டனுமானு கேட்டதும் உன் முகம் காட்டிய பாவனை! அண்ட் நம்மளோட முதல் சந்திப்பில் நீ என்னை தப்பா பேசினாலும் அதை மறைமுகமா தான் சொன்ன.. அதையே நான் நேரிடையா சொன்னப்ப உன் கண்ணில் விருப்பமின்மையை பார்த்தேன்.. அத்தானுக்காக பேசினாலும், பேசியது தவறுனு உணர்ந்து என் கிட்ட சாரி சொல்லச் சொல்லி அத்தான் கிட்ட சொன்ன தானே! ஸோ இதெல்லாம் வைத்து உன்னோட குணம் ஓரளவுக்கு புரிந்தது” என்றாள்.
‘ஓ’ என்ற பாவனை அவன் முகத்தில் தெரிந்ததே தவிர அவன் எதுவும் பேசவில்லை.
சத்யதேவை போல் இவளும் தனது ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம் புரிந்து பதில் அளிப்பதை நினைத்து ஆச்சரியம் கொண்டான். சத்யதேவாது தனது இரட்டை சகோதரன் ஆனால் இவள்! அதுவும் இந்த குறுகிய காலத்தில்! என்ற வியப்பு தோன்ற, ‘இவள் ஆச்சரியங்கள் நிறைந்தவள்’ என்று அவனது மனம் கூறிக் கொண்டது.
“ஆரம்பத்தில் இருந்தே நமக்குள் முட்டிக்கிட்டே இருக்குது.. அதை இங்கே முடிச்சுக்கலாமா?” என்று கேட்டாள்.
அதை ஆமோதிப்பது போல் சிறு புன்னகை புரிந்தவன், “இதை சொல்லத் தான் வந்தியா?” என்று கேட்டான்.
“இன்னொன்னும் சொல்லணும்”
“என்ன?”
“நான் ஏன் கற்றாழைனு சொன்னேன்னு உனக்கு தெரிய வேணாமா?”
‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.
“இந்த பார்வைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.. வாயை திறந்து கேளு”
அவன் முறைக்கவும், அவளோ, “நீ கேட்காம நான் சொல்லப் போறதும் இல்லை.. அதை சொல்லாம நான் வெளியே போகப் போறதும் இல்லை” என்றாள்.
‘ராங்கி பட்டாசு’ என்று அவன் முணுமுணுக்க, அதை கண்டுகொண்ட அவள் இதழ்கள் ரசனையான புன்னகையை உதிர்த்தது.
“சரி சொல்லு” என்றான்.
“கற்றாழை முள்ளோடு இருந்தாலும் உள்ளே இருக்கும் ஜெல் குளிர்ச்சியானது, நன்மையை மட்டும் தரும் நற்குணங்கள் கொண்டது”
அவளது பதிலில் ஆச்சரியம் கொண்டவன் வெளியே காட்டிக் கொள்ளாமல், “என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று கடின குரலில் தான் கேட்டான்.
அவனது கடின குரலை சிறிதும் பொருட் படுத்தாதவள், “விசா அத்தை சொல்லி கொஞ்சம் தெரியும்.. பட் அதையும் மீறி ஐ குட்(could) பீல் இட்” என்றாள்.
அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுள் ஏதோ செய்ய, அந்த உணர்வை வளர்க்க விரும்பாதவனாக, “பசங்க காத்திருப்பாங்க.. கிளம்பு” என்று கறாராக கூறினான்.
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “உனக்கும் என் மேல் க்ரஷ் வந்திடும்னு பயப்படுறியா?” என்று கேட்டாள்.
அவளை முறைத்தவன் இறுகிய குரலில், “உளறாம கிளம்பு” என்றான்.
“ஸ்டில் ஐ க்ரஷ் யூ” என்று கூறி கண்சிமிட்டிவிட்டு வெளியே செல்லப் போனவள், கதவை திறக்கும் முன் திருப்பி பார்த்து, “பட் ஐ தின்க்.. இப்போ க்ரஷவ் ஸ்டேட்டில் இருக்கிறேன்.. அதாவது க்ரஷுக்கும் லவ்வுக்கும் நடுவில் ஒரு ஸ்டேட்” என்றாள்.
அவன் கடுமையாக முறைத்தபடி வெளியே செல்லுமாறு செய்கை செய்ய,