ஆத்மிகாவின் திடீர் மாற்றத்தை பற்றி யோசித்த ஜெயதேவிற்கு அன்று இரவு தான் மனம் திறந்து பேசியதை அவள் கேட்டு இருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது.
அவள் முன்பே தனது காதலை உணர்ந்து இருந்ததை அவன் அறிந்து இருந்ததால், தான் பேசியவற்றை அவள் கேட்டதை நினைத்து அவன் அதிரவோ, பெரிதாக பொருட்படுத்தவோ இல்லை என்றாலும் அவனுள் சிறு வருத்தம் இருக்கிறது. ஆம், தனது வார்த்தைகளை கேட்கும் போது பல வர்ணஜாலங்களை காட்டும் அவளது விழிகளை கண்டு ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் அவனுக்கு.
தன்னவள் தனக்காக தான் சீண்டுவதை நிறுத்திவிட்டாள் என்பதை அறிந்ததும் மனதை தேற்றிக் கொண்டவன், சற்றே இழுத்தடித்து கொண்டிருந்த பண்ணை வேலைகளில் மனதை திருப்பினான்.
இதற்கிடையில் சத்யதேவ் கூறியதை ஆராயும் நோக்கத்துடன் ஆத்மிகா தமக்கையிடம் கைபேசியில் பேசினாள். சம்ருதிகா முன் போல் துள்ளலான உற்சாக குரலில் பேசவில்லை என்றாலும் தங்கையுடன் சிறு புன்னகையுடன் தான் பேசி இருந்தாள். அதனால் சத்யதேவ் கூறியது போல் சம்ருதிகா பெரிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆத்மிகாவிற்கு தோன்றவில்லை. ஒருவேளை நேரில் சில மணி நேரங்கள் பேசி இருந்தால் தமக்கையிடம் தென்படும் மாற்றத்தை கண்டு பிடித்து இருப்பாள் ஆனால் சில நிமிடங்களே நீடித்த தொலைபேசி பேச்சில் அவளுக்கு எதுவும் பெரிய அளவில் வித்யாசமாக தெரியவில்லை.
இதை பற்றி அவள் சத்யதேவிடம் கூறிய போது, அவன், “சரி அண்ணி.. எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ!” என்று சாதாரணமாக கூறி சென்றுவிட, அவளும் அத்துடன் அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை.
நினைக்கவில்லை என்று சொல்வதை விட, நினைக்க முடியவில்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஏனெனில் அவளது இறுதி ஆண்டு செயல் திட்டம்(project) மற்றும் கல்லூரியில் நடக்கவிற்கும் அவளது துறைக்கான கருத்தரங்ம் அவளது நேரத்தை மொத்தமாக விழுங்கிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் சத்யதேவிற்கு கூட பரிசோதனை எலிக்கான வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சத்யதேவ் தானே தன்னவளின் மனதை சரி செய்யும் முடிவில் இருப்பதாலே ஆத்மிகாவிடம் அவ்வாறு கூறினான். பூமணி வங்கி சம்பந்தமான கருத்தரங்கிற்கு இரண்டு நாட்கள் வெளியூர் சென்று வந்ததாலும், கை வலியில் அவதிப்பட்ட சித்ராவிற்கு உதவியாக வீட்டில் இருந்ததாலும் சில நாட்கள் சம்ருதிகா கோவிலுக்கு வரவில்லை.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று கோவிலுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்த சத்யதேவ் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டான்.
வேலைகள் முழுவதுமாக முடிந்து, பண்ணை சுற்றுலா தலமாக திறக்கும் நிலைக்கு வந்ததும் ஜெயதேவ் வீட்டினரை அழைத்துச் சென்று காட்டினான்.
பண்ணையை பார்த்ததும் ஆத்மிகா கண்கள் மின்ன, “வாவ்.. நான் எதிர்பார்த்ததை விட செம்மையா இருக்குது.. சூப்பர் ஜெய்” என்றபடி அவனது கையை பிடித்து குலுக்கினாள்.
தன்னவளின் பாராட்டில் பெரிய விருதே கிடைத்தது போல் உணர்ந்த ஜெயதேவ் விரிந்த புன்னகையுடன், “தேங்க்ஸ்.. ஆனா க்ரெடிட்ஸ் உனக்கு தான்.. வெறும் செயலாக்கம் மட்டும் தான் நான்.. எண்ணம் உன்னோடது தானே!” என்றான்.
மறுப்பாக தலை அசைத்தவள், “இந்த குட்டி குளம் என்னோட ஐடியாவா?” என்றாள்.
அவனோ, “இது கூட குட்டீஸ் அட்ராக்ட் செய்ய நீ சொன்ன ப்ளே ஏரியாவில் இருந்து வந்த ஐடியா தான்.. கொஞ்சம் வித்யாசமா செய்வோம்னு தோனுச்சு.. அதான் இந்த குட்டி குளம்..” என்றான்.
“ஹ்ம்ம்.. ஃபென்டாஸ்ட்டிக் ஐடியா.. ஐ ஜஸ்ட் லவ் இட்” என்றவள், “இதை இயற்கையோடு அமைத்த செயற்கையான குளம்னும் சொல்லலாம்.. மார்டன் ஸ்விம்மிங் பூல்னும் சொல்லலாம்” என்று கூறி புன்னகையுடன் கண் சிமிட்ட,
சத்யதேவ், “இந்த குளம் மக்களை நல்ல அட்ராக்ட் பண்ணும்டா.. செம பிஸ்னெஸ் மைண்டுடா” என்றான்.
“இது பிஸ்னெஸ்காக இல்லை.. என்ட்ரி சார்ஜ் கூட இங்கே சாப்பிடும் போதோ, ப்ளே ஏரியாவில் விளையாடும் போதோ, குளத்தில் குளிக்கும் போதோ ரிடீம் செய்துக்கலாம்னு தான் போடப் போறேன்”
“அடேய்! உனக்கு என்ன காமராஜர்னு நினைப்பா!” என்று சத்யாவும்,
“ஃபுல் அமௌன்ட்க்கு பதில் பாதி அமௌன்ட் திருப்பி கொடுத்தா போதாதா? என்ட்ரி சார்ஜ் எப்படியும் கம்மியா தானே வைப்பீங்க!” என்று ஆத்மிகாவும் கூறினார்.
“ஜாடிக்கு ஏத்த மூடி” என்று சத்யதேவ் அன்னையிடம் கூறினான்.
ஜெயதேவோ, “நம்மோட நோக்கம் பணம் இல்லையே! விவசாய விழிப்புணர்வுக்காக தானே செய்றோம்.. ஆர்கானிக் பார்மிங் பத்தி சொல்றதோடு வீட்டு மொட்டை மாடியில் ஆர்கானிக் முறையில் செடி வளர்க்கவும் சொல்லித் தரப் போறோம்.. கூடவே அதற்கான மெட்டிரியல்ஸ் இங்கேயே நியாய விலையில் வாங்கிக்க ஏற்பாடும் செய்யப் போறோம்” என்றான்.
“நம் நோக்கம் பணம் இல்லை தான் ஆனா நம்ம கையை கடிக்காம பார்த்துக்கணும் தானே!” என்று ஆத்மிகா கூற,
ஜெயதேவ், “எஸ்.. அதே தான்.. எனக்கு இதில் லாபம் வேண்டாம்.. கையை கடிக்காம இருந்தா போதும்.. சாப்பாடு, ப்ளே ஏரியா, குளத்தில் குளிக்கலாம் ப்ரீயா அலோவ் செய்யப் போறது இல்லையே! கூடவே நம்ம ரெஸ்டாரென்ட்க்கு இலவச விளம்பரம்” என்றான்.
“மனசுக்கு ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்குதுப்பா” என்ற மீனாட்சி ஆசிர்வதிப்பது போல் ஜெயதேவின் தலையில் கைவைத்தபடி, “அப்பாவும் இப்படி தான் செய்து இருப்பாங்க..” என்றார்.
அவனும் மனம் நிறைந்த நெகிழ்ந்த குரலில், “தேங்க்ஸ் ம்மா” என்றான்.
இருவரின் மனநிலையை மாற்ற சத்யதேவ், “குளம் தான் இந்த இடத்தோட ஹைலைட்.. அவ்ளோ நேச்சுரலா வந்து இருக்குது.. அன்னைக்கு நீ சொல்லும் போது கூட தெரியலை.. ஆனா நேரில் பார்க்கிறப்ப சான்சே இல்லை” என்று சிறு பிரம்மிப்புடன் கூறினான்.
மீனாட்சியோ, “என் மகன் பெஸ்ட்டா தான் செய்வான்னு எனக்கு அன்னைக்கே தெரியும்” என்றார்.
ஜெயதேவ் புன்னகையை மட்டும் பதிலாக தர,
அவன் முன் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி நின்ற ஆத்மிகா, “அப்போ இந்த குளம் எனக்கு மட்டும் தான் தெரியாதா?” என்று கேட்க,
‘ஆஹா! பத்த வச்சிட்டியே பரட்ட!’ என்று சத்யதேவின் மனசாட்சி அவனிடம் கூற, அவனோ, ‘நீ வேற! இப்போ இவன் என்னிய வச்சு செய்வானே!’ என்று கூறியபடி சற்றே பீதியுடன் தமையனைப் பார்க்க, அவனது கவனமோ சிறிதும் இவனிடமின்றி ஆத்மிகாவிடம் தான் நிலைத்து இருந்தது.
புன்னகையுடன், “எஸ்.. உனக்கு மட்டும் ஸ்வீட் சர்ப்ரைஸ்” என்று கூறிய ஜெயதேவின் கண்கள் முதல் முறையாக தன்னவளிடம் காதல் பேசிட, அவள் அதில் கட்டுண்டு நின்று விட்டாள்.
இருவரின் மோன நிலையை கண்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்த சத்யதேவ் அன்னையின் தோள் மீது கை போட்டபடி, “வாங்கம்மா நாம கரடி வேலை பார்க்காம அந்த பக்கம் போய் திரும்ப சுத்தி பார்ப்போம்” என்று அழைத்துச் சென்றான்.
தம்பியின் குரலில் சட்டென்று சுயம் பெற்ற ஜெயதேவ் சற்றே அசடு வழிய,
ஆத்மிகா விரிந்த புன்னகையுடன், “நீ அசடு வழியுறது தனி அழகுடா கண்ணழகா” என்று கொஞ்சியபடி உதட்டசைத்து முத்தம் கொடுத்தாள்.