போகும் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த மகனை கண்டு மகிழ்ச்சியுடன் மனம் நெகிழ்ந்த மீனாட்சி, “இதே சந்தோஷத்துடன் எப்போதும் இருங்க” என்றார்.
புன்னகையுடன், “கண்டிப்பா ம்மா” என்றவன், “நானும் போய் கிளம்புறேன் ம்மா” என்றான்.
அவர் விரிந்த புன்னகையுடன், “சந்தோஷமா போயிட்டு வாங்க” என்றார்.
அவனும் புன்னகையுடன் அறையினுள் சென்றான்.
முகம் கை கால் அலம்பி வந்த ஆத்மிகாவிடம் ஒரு பரிசு பொருளை கொடுத்தான்.
மகிழ்ச்சியுடன் கண்களை விரித்தவள், அவன் கொடுத்ததை பிரித்தாள். உள்ளே நவாப்பழ நிறத்தில் அழகிய புடவை இருந்தது.
“வாவ்! ரொம்ப அழகா இருக்குது.. ரொம்ப நாளா ஒரு டிசைனர் புடவை எடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. அதுவும் எனக்கு பிடித்த கலரில்.. வாவ்.. வாவ்” என்று குதூகளித்தவள், “தன்க்யூ கண்ணழகா” என்றபடி அவனை அணைத்து விலக,
விலகியவளை இடையோடு அணைத்து நீண்ட இதழ் முத்தத்தை கொடுத்தவன் புன்னகையுடன், “தேங்க்ஸ் இப்படி சொல்லணும்” என்றான்.
வெட்க புன்னகையுடன், “ஹ்ம்ம்” என்றாள்.
“இதை கட்டிட்டு கிளம்பு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெயிட்ங்” என்று கூறி கண் சிமிட்டினான்.
“இந்த புடவையே செம சர்ப்ரைஸ் தான்”
“இது அதுக்கும் மேல” என்று கூறியவன், “ஓகே ஓகே.. கிளம்பு.. நான் சத்யா ரூமில் போய் கிளம்புறேன்” என்று கூறி அலமாரியில் இருந்து நவாப்பழம் நிறத்தில் கொசுவச் சட்டையை எடுத்தான்.
அறையை விட்டு வெளியேற போனவன் கதவை திறக்கும் முன் திரும்பி அவளை பார்த்து, “இன்னைக்கு தான் லாஸ்ட்” என்றான்.
அவள் புரியாமல், “என்ன லாஸ்ட்?” என்று கேட்டாள்.
“நீ ட்ரெஸ் சேஞ் செய்யும் போது நான் வெளியே போறது” என்று கூறி அவன் கண் சிமிட்ட,
ஒரு நொடி அசைவற்று நின்றவள் பின் சுதாரித்து, “பின்னுறியே கண்ணழகா!” என்று கூற,
அவனோ, “பின்னிக்கலாமா?” என்று காதலும் மோகமுமாக கேட்டபடி புருவம் ஏற்றி இறக்கினான்.
கண்களை பெரிதாக விரித்தவள், ஆள் காட்டி விரலை ஆட்டி செல்லமாக மிரட்டியவள் பின் அவ்விரலை அசைத்து வெளியேறுமாறு செய்கை செய்தாள்.
அவன் விரிந்த புன்னகையுடன் உதட்டசைவில் முத்தமிட்டுவிட்டே சென்றான். அவளும் மனம் நிறைந்த புன்னகையுடன் தயாராக ஆரம்பித்தாள்.
அதே நேரத்தில் சத்யதேவ் சம்ருதிகாவுக்காக கோவிலில் காத்துக் கொண்டு இருந்தான். அன்று கோபித்துக் கொண்டு சென்றவள் அதன் பிறகு இவனது அழைப்புகளையும் எடுக்கவில்லை, கோவிலுக்கும் வரவில்லை. இன்று வருவதாக அவள் குறுஞ்செய்தி அனுப்பி இருக்க, எப்போதும் வரும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருக்கிறான்.
எப்பொழுதும் வரும் நேரத்திற்கு வந்த சம்ருதிகா கடவுளை வணங்கிவிட்டு அவன் அமர்ந்து இருந்த இடத்தில் சற்று தள்ளி அமர்ந்தாள்.
அவன், “சம்யு..” என்று ஆரம்பிக்க,
கையை உயர்த்தி அவனை நிறுத்தியவள் கல்யாண பத்திரிக்கை ஒன்றை நீட்டியபடி, “அடுத்த மாசம் பத்தாம் தேதி எனக்கு மேரேஜ்.. இன்விடேஷன் கொடுக்க தான் உங்களை வர சொன்னேன்” என்று உணர்ச்சிகளற்ற குரலில் கூறினாள்.
கலங்கும் கண்களை பெரும் சிரமத்துடன் கட்டு படுத்தியவன் ஒத்துழைக்க மறுத்த தொண்டையை செருமியபடி, “கங்ராட்ஸ்.. மை ஹார்ட்டி விஷ்ஸஸ்” என்று கூறி பத்திரிக்கையை வாங்கிக் கொண்டான்.
பின், “சரி நான் கிளம்புறேன்” என்றபடி அவன் எழ,
அவள், “பிரிச்சு பார்க்கலையா?” என்று கேட்டாள்.
“நான் வீட்டுக்கு போய் நிதானமா பார்த்துக்கிறேன்” என்றவனின் குரல் அவனையும் மீறி கரகரத்தது.
“ப்ளீஸ் இன்விடேஷன் கவரையாவது பாருங்க” என்று அவள் கெஞ்சும் குரலில் கூற,
அவளுக்காக பார்த்தவனின் கண்ணகளில் தேங்கி இருந்த கண்ணீர் கன்னங்களில் ஆனந்த கண்ணீராக இறங்க, அவளை திரும்பிப் பார்த்தான். அவளுமே ஆனந்த கண்ணீருடன் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“இப்பவும் பிரிச்சு பார்க்க மாட்டீங்களா?” என்று அவள் வினவ,
அவசரமாக பத்திரிக்கையை வெளியே எடுத்து பிரித்தான். முன்பு அடித்திருந்த அதே கல்யாண பத்திரிக்கையில் தேதியை மட்டும் பேனாவால் அடித்து புதிய தேதியை எழுதி இருந்தாள்.
அவன் விரலால் இருவர் பெயரையும் வருடியபடி அதையே பார்த்துக் கொண்டு நிற்க,
“நேத்து தான் அம்மா அப்பா அத்தையும் ஜோசியரை போய் பார்த்து தேதியை பிக்ஸ் பண்ணாங்க.. நான் தான் உங்க கிட்ட சொல்லுவேன்னு சொன்னதால் யாரும் உங்க கிட்ட சொல்லலை” என்றாள்.
“ஒரு வாரம் என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே!”
“முன்னாடி நான் தவிக்கலையா!”
அவளது கையை பற்றியவன், “சாரிடா” என்று வருந்த,
“அதெல்லாம் விடுங்க” என்றவள் புன்னகையுடன், “கறை நல்லதுங்கிற மாதிரி அதனால் தானே ஆத்மியும் உங்க அண்ணாவும் கல்யாணம் செய்துக்கிட்டாங்க” என்றாள்.
புன்னகையுடன், “அது என்னவோ உண்மை தான்” என்றவன், “ஆனா ரெண்டு பேரும் சரியான கேடிங்க.. ஜாடிக்கு ஏத்த மூடிங்க.. ரெண்டும் காதலிச்சுட்டு தான் இருந்து இருக்குதுங்க.. ஸோ எப்படியும் அவங்க தான் கல்யாணம் செய்து இருப்பாங்க.. நாம் இத்தனை மாசம் வேஸ்ட் செய்து இருக்க வேணாம்” என்று பெருமூச்சை வெளியிட்டான்.
அவனை முறைத்தவள், “ரொம்ப தான் கவலை.. அவ்ளோ ஏங்குறவர் தான் இப்போ வரை ப்ரொபோஸ் செய்யலை.. நான் தான் ப்ரொபோஸ் செய்து இருக்கிறேன்.. இதில் இன்னொருத்தருக்கு என்னை தாரைவார்த்து கொடுக்க அய்யா ரெடி ஆயாச்சு!” என்றவள், “எனக்காக ஒவ்வொரு சின்ன விஷயத்தை கூட பார்த்துப் பார்த்து செய்ற உங்க காதலை எப்படி மறுப்பேன்னு நினைச்சீங்க?” என்று சிறு ஆதங்கத்துடன் முடித்தாள்..
கை எடுத்து தலைக்கு மேல் கொண்டு சென்று கும்பிட்டவன், “திரும்ப மலை ஏறிடாதமா.. மீ பாவம்” என்றவன் அவள் மென்னகைக்கவும், “காதல்ங்கிற பெயரில் இன்னொரு கஷ்டத்தை நானே உனக்கு எப்படி கொடுப்பேன்! அதான்” என்றான்.
“ரொம்ப தான் தியாகி” என்றவள், “நானும் அன்னைக்கு லவ் ப்ரொபோஸ் செய்யப் போறீங்கனு எதிர்பார்ப்புடன் வந்தா! ஐயா பாவ மன்னிப்பு கேட்கிறீங்க!” என்றாள்.
“காதலை சொல்றதுக்கு முன்னாடி எல்லாத்தையும் தெளிவு படுத்திடலாம்னு தான்.. இன்னொரு பிரிவை தாங்குற சக்தி எனக்கு இல்லை”
“அப்போ இப்போ வாழ்த்திட்டு கிளம்பினீங்க!”
“உன்னை பிரிவது உயிரை பிரிவது மாதிரி தான்.. ஆனா உனக்காக அதைக் கூட தாங்கிப்பேன் தான்”
அவனது கையை இறுக்கமாக பற்றியவள் கண்ணீருடன், “லவ் யூ ஸோ மச் தேவ்” என்றாள்.
அவளது கண்ணீரை துடைத்தவன், “லவ்வை இப்படி தான் அழுதுட்டு சொல்வாங்களா?” என்றான்.
பிறகே சட்டென்று கண்கள் மின்ன, “ஹே! இப்போ என்ன சொல்லி கூப்பிட்ட?” என்று கேட்டான்.
அவள் வெட்க புன்னகையுடன், “பிடிச்சு இருக்கா?” என்று கேட்டாள்.
அவளை காதலுடன் பார்த்தவன், “கோவிலா போயிடுச்சு.. இல்லை இறுக்கி அணைச்சு..” என்றவனின் பேச்சை, “போதும்.. போதும்” என்று வெட்கத்துடன் தடை செய்தாள்.
“நாம கோவிலில் இருக்கோம்.. ஞாபகம் இருக்கட்டும்” என்று கண்களை உருட்டி அவள் மிரட்ட, அவன் தான் மனதை அடக்க சிரமப்பட்டான்.
“சரி வா.. ரெஸ்டாரென்ட் போகலாம்” என்று அவன் அழைக்க,
மறுப்பாக தலை அசைத்தவள், “கல்யாணம் முடியுற வரை எங்கேயும் வெளியே வர மாட்டேன்.. அப்பா சொல்லி இருக்கிறாங்க” என்றாள்.
“இதெல்லாம் டூ மச்” என்று அவன் முகத்தை சுருக்கி சிணுங்கலாக கூற,
“இந்த முறை எந்த பிரச்சனையும் வர கூடாதுனு நினைக்கிறாங்க.. அவங்களோட உணர்வுக்கும் நாம மதிப்பு கொடுக்கணும் தானே.. ப்ளீஸ் மூணு வாரம் தானே” என்று கெஞ்சியபடி கொஞ்ச, அதன் பிறகு மறுப்பானா என்ன!
“ஆனா எப்பொழுதும் போல கோவிலுக்கு வரணும்”
“அது”
“இல்லை நான் வீட்டுக்கு வருவேன்”
“நீங்க வேணா வீட்டுக்கு வாங்க”
“எது!”
“என்ன?”
“சும்மா சொன்னா நிஜமா சொல்ற! அங்க உன் கிட்ட எப்படி தனியா பேசுறது?”
“தோட்டத்தில் வச்சு இல்லை மொட்டை மாடியில் பேசலாம்”
“சரி” என்றவன், “என்னை யாரும் தேவ்னு கூப்பிட்டது இல்லை.. ஆனா ஜெயா பெயரிலும் தேவ் வருதே!” என்றான்.
“நானும் யோசிச்சேன்.. ஆனா அவரை யாரும் இப்படி கூப்பிடுறது இல்லையே!”
“ஹ்ம்ம்”
அதன் பிறகு ஏதேதோ நேரம் போவது தெரியாமல் பேசியவர்கள் பூமணியின் அழைப்பில் தான் நேரத்தை பார்த்து மனமே இல்லாமல் கிளம்பினர்.