ஜெயதேவுடன் கிளம்பிய ஆத்மிகா விதவிதமாக போகும் இடத்தை பற்றி கேட்டு பார்க்க, அவனோ, “சர்ப்ரைஸ்” என்ற ஒற்றை வார்த்தையையே பதிலாக கூறிக் கொண்டு இருந்தான்.
ஒரு கட்டத்தில் செல்லும் வழியை கவனித்து, “ஹே! ஃபார்ம் போறோமா!” என்று குதூகளித்தவள், “ஆனா அது ஒன்னும் எனக்கு பெரிய சர்ப்ரைஸ் இல்லையே!” என்று அவளே கூறிக் கொண்டு அவனை பார்க்க, அவனோ புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.
ஐந்து நிமிடங்கள் கடந்து இருக்க, வண்டியை சாலை ஓரம் நிறுத்தி, இளஞ்சிவப்பு நிற பட்டு துணியை எடுத்து அவளது கண்களை கட்டியவன், “நான் சொல்ற வரை கண்ணை திறக்கக் கூடாது” என்றான்.
“நான் திறப்பேன்” என்று அவள் வம்பு செய்ய,
அவனோ, “என்னோட ராங்கி பட்டாசு எனக்காக திறக்க மாட்டா” என்று கூறிட,
“ஹே! இது போங்கு” என்று சிணுங்கியவளின் உதட்டின் மீது மென்மையாக முத்தமிட்டு விலகியவன், “என்னை டெம்ப்ட் பண்ணாம அமைதியா உட்காரு.. இன்னும் டென் மினிட்ஸ் தான்” என்றான்.
“இன்னும் டென் மினிட்ஸா” என்றாலும் அதன் பிறகு அவள் அமைதியாகவே வர, அடுத்த எட்டாவது நிமிடம் வண்டியை நிறுத்தியவன், வண்டியை விட்டு இறங்கி மறுப்பக்கம் சென்று அவளை மெதுவாக இறங்க வைத்து அழைத்து சென்றான்.
“எங்க கூட்டிட்டுப் போற?”
“ஜஸ்ட் டூ மினிட்ஸ்” என்றவன் சொன்னது போல் இரண்டு நிமிடங்கள் கழித்து நடையை நிறுத்தி, “இப்போ கண்ணை திற” என்றான்.
மெல்ல கண்களை திறந்தவள் இரு கைகளையும் நாடியில் வைத்தபடி, “வாவாவாவ்” என்றாள்.
அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு அமர்ந்து இருந்தவன் அழகிய பூங்கொத்து ஒன்றை நீட்டியபடி, “பூக்களின் நடுவே அழகு பூவாய் நிற்கும் பட்டூ பூவே! உன்னை நேசிப்பதோடு சுவாசிக்கிறேன்” என்றான்.
ஆம், அவளை அழைத்து வந்து பல வண்ண பூக்களின் நடுவே தான் நிறுத்தி இருந்தான்.
முட்டி போட்டு அவனது கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தவள் அவனை இறுகி அணைத்தபடி, “லவ் யூ ஸோ மச் கண்ணழகா” என்று கூறி அவன் இதழில் இதழ் பதித்தாள்.
முத்தமிட்டு விலகியவள், “லவ்வை இப்படி சொல்லணும்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் வித விதமா சொல்றேன்” என்று காதல் கலந்த மோகத்துடன் கூறியவன் பூங்கொத்தை நீட்டி, “நம்ம ஃபார்மில் பூத்தது.. முதல் பொக்கே உனக்கு தான்” என்றான்.
“தன்க்யூ” என்றபடி அளவு கடந்த மகிழ்ச்சியுடன் வாங்கியவள் கண்களை விரித்து, “இப்போ என்ன சொன்ன! நம்ம ஃபார்மா?” என்றாள்.
அவளை எழுப்பியபடி தானும் எழுந்தவன் அவள் பின்னால் நின்று இடையோடு அணைத்து பிடித்தவன் நாடியை அவளது தோளில் பதித்தபடி, “ஹ்ம்ம்.. அம்மாக்கும் சத்யாக்கும் தெரியும்.. உனக்கு சர்ப்ரைஸ்.. நம்ம காய்கறி பண்ணை பக்கத்தில் தான் இது இருக்குது.. இதோட பழைய ஓனர் எனக்கு நல்ல பழக்கம் தான்.. அவருக்கு ஒரே பையன் தான்.. அவன் யு.எஸ் செட்டில்டு.. வைஃப் இறந்த பிறகு தனியா இருக்க முடியாம அடிக்கடி யு.எஸ் போயிட்டு போயிட்டு வந்துட்டு இருந்தார்.. இப்போ அங்கேயே போகப் போறார்.. ஸோ பெருசா பராமரிக்க முடியாம விற்கிற முடிவுக்கு வந்தவர் என்னிடம் கேட்டார்..” என்றவன் அவளது கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி,
“என் வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்த என்னோட செல்ல ராங்கி பட்டாசுக்கு வசந்தம் வீசும் மலர் தோட்டத்தை பரிசா கொடுக்க நினைத்து நாலு மாசம் முன்னாடியே வாங்கிட்டேன்” என்றதும் சட்டென்று திரும்பியவள் பேச்சற்று அவனை நோக்கினாள்.
சில நொடிகள் இருவரது விழிகளும் காதலில் கட்டுண்டு இருக்க, முதலில் சுதாரித்த ஜெயதேவ், “வா சுத்தி பார்க்கலாம்” என்றபடி அழைத்துச் சென்றான்.
“என்ன யாரையும் காணும்?”
“வெளியே நிற்கிற ரெண்டு செக்யூரிட்டி தவிர மத்த எல்லோருக்கும் நாளைக்கு வரை லீவ்” என்றவன், “ஏன்னா இன்னைக்கு நைட் நாம இங்க தான் ஸ்டே” என்று கூறி கண் சிமிட்டினான்.
“கலக்குறியே கண்ணழகா!” என்றவள், “அத்தை கிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டாள்.
“காலையிலேயே சொல்லிட்டேன்” என்றபடி அவளது வெற்றிடையை பற்றி தன்னுடன் சேர்த்து அணைத்தவன் மோகமும் தாபமும் கலந்த குரலில், “இயற்கையின் நடுவே பஸ்ட் நைட்” என்று கூற, சட்டென்று உணர்ச்சி பேரலை வந்து தாக்கிய உணர்வில் திணறினாள்.
ஆனால் ஒருவாறு சமாளித்தவள் வரவழைத்த அதிர்வு குரலில், “இங்கேயா! வெட்டவெளியிலா?” என்றாள்.
அவளை இன்னும் தன்னுடன் இறுக்கியவன் அவள் கன்னத்தில் உதட்டினால் கோலம் வரைந்தபடி, “நிலவொளியில் முதல் இரவு! நல்ல ஐடியா தான்” என்று கிறங்கிய குரலில் கூற,
“ஹே சீ” என்று சிணுங்கியவளின் குரல் அவனுக்கு போதையூட்ட, கன்னத்தில் இருந்து கழுத்து வரை உதட்டை கோடிழுத்து இளைப்பாறினான்.
அடிவயிற்றில் இருந்து தொண்டைகுழி வரை ஏதேதோ செய்ய, விழிகளை மூடியவள், காற்றாகிய குரலில், “சுத்தி காட்டுறேன்னு சொன்ன கண்ணழகா” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றபடி தொண்டைக்குழியில் முத்தமிட்டவன், “கண்டிப்பா சுத்தி பார்க்கணுமா?” என்று கேட்டான்.
காற்றாகிய குரலும் நின்றுவிட, அவளது தலை தானாக பின்னால் சாய, அவனுக்கு இன்னும் வசதியானது. மெல்ல அவனது கரம் இடையில் இருந்து மேலேறவும், சட்டென்று அவளுள் சிறு பயபந்து உருளவும், அவனை இறுக்கி அணைத்தபடி, “கொஞ்ச நேரம் சுத்தி பார்க்கலாம்” என்றாள்.
அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “ஆல்ரைட்” என்றபடி விலகியவனின் கரம் மீண்டும் இடைக்கு இடம் மாறி இருந்தது.