இடையில் இருந்த அவன் கை மீது கையை வைத்தபடி அவள் லேசாக நெளிய, அவள் நெற்றியில் முட்டியபடி, “பழகிடும்” என்றவன், “இன்னைக்கு மட்டும் தான் நமக்கு இங்கே இவ்ளோ ப்ரைவசி” என்றும் கூறினான்.
சரி என்பது போல் தலையை ஆட்டி அவனது கைவளைவிலேயே இடத்தை சுற்றிப் பார்த்தவள் ஒரு இடத்திற்கு சென்றதும், “க்ரீன் ஹவுஸ் தானே!” என்றாள்.
“ஹ்ம்ம்”
“சின்னதா தனியா எதுக்கு?”
“இது என்னோட பிளான்.. முன்னாடி கிடையாது.. கெர்பேரா டெய்ஸி(Gerbera Daisy) வெரைட்டி, அதான் உனக்கு பொக்கே கொடுத்த ஃப்ளவர்ஸ் இங்கே தான் வளர்க்கிறோம்.. வெளியவும் வளரும் தான் ஆனா க்ரீன் ஹவுஸில் ஈல்டு(yield) கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்.. இந்த மண்ணுல இந்த பூ வளராதுனு பழைய ஓனர் சொன்னார்.. இந்த பூவுக்கு ஏற்ற மாதிரி நான் ஆர்கானிக் முறையில் மண்ணை பதபடுத்தி வளர்த்தேன்.. உன்னை இங்கே கூட்டிட்டு வரப்ப ஹார்வெஸ்ட் ஆரம்பிக்கிற மாதிரி கணக்கு செய்து கல்டிவேஷன் ஆரம்பித்தேன்..” என்றபடி உள்ளே அழைத்து செல்ல,
“வாவ்.. வாவ்.. வேற என்ன சொல்லனே எனக்கு தெரியலை.. அவ்ளோ அழகா இருக்குது.. எவ்ளோ கலர்ஸ்! செம செம” என்றவள், “என்னை போட்டோ எடேன்” என்றாள்.
தனது கைபேசியில் அவளை புகைப்படம் எடுத்தபடி, “ஏன் செல்ஃபி எடுத்தா ஆகாதா?” என்றவன் கண்களை விரித்து தன்னை நோக்கியவளின் பாவனையையும் எடுத்தான். பின் வித விதமாக பூக்களின் நடுவே சேர்ந்து நின்றபடி சுயபடம் எடுத்தனர்.
அவள், “பொக்கேயில் இன்னொரு பூவும் இருக்குமே! பேர் தெரியலை.. ரொம்ப நாள் வாடாம இருக்கும்.. அது இங்கே இல்லையா?” என்று கேட்டாள்.
“நீ லில்லி பூ கேட்கிறனு நினைக்கிறேன்” என்றவன் கைபேசியில் இணையம் சென்று அதன் புகைப்படத்தை எடுத்து, “இதையா சொல்ற?” என்று கேட்டான்.
“எஸ்.. இதான்”
“இது வருஷத்துக்கு ஒருமுறை தான் பூக்கும்.. ஸோ முதல்ல டெய்ஸி வைத்து பொக்கே ஷாப்ஸ் ஆர்டர் கிடைச்ச அப்புறம் வளர்க்கிற பிளானில் இருக்கிறேன்”
“ஓ”
சட்டென்று அவளை கைகளில் ஏந்தியவன் நெற்றியில் முட்டியபடி, “இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது” என்று கூற,
“இங்கே இருக்கிற பூக்களை விட உன்னோட வெட்க சிரிப்பு அத்தனை அழகு” என்றவன் அவளது இதழில் இதழ் பதித்தான்.
பின், “ஷல் வீ!” என்றவனின் மோகம் கலந்த தாப பார்வையில் அவள் முகத்தை அவன் நெஞ்சில் மறைக்க, விரிந்த புன்னகையுடன் அவளை ஏந்தியபடி பூக்களின் நடுவே இருந்த சின்ன மரவீட்டிற்கு சென்றான்.
“இந்த வுட்-ஹவுஸ் வேலை போன வாரம் தான் முடிந்தது” என்றபடி உள்ளே சென்றான்.
சூரியன் மேகத்தினுள் மயங்க தொடங்கிய அந்த பின் மாலை வேளையில் வண்ண பூக்களின் மகரந்தம் சூழ்ந்த ஏகாந்த நிலை அவர்களின் மோகத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தது போல் இருந்தது.
“நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா” என்று பாடியபடி அவளை மெத்தை மீது கிடத்தியவன்,
“காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தில் மேல் என்னை
மன்னிப்பாயா” என்று பாடி புருவம் உயர்த்தியபடி அவள் அருகே தலைக்கு கையை முட்டு கொடுத்தபடி படுத்தான்.
அவள் வெட்கத்துடன் முகத்தை கைகளால் மூடிக்கொள்ள, அவன் சிரிப்புடன் கைகள் மீது முத்தமிட்டே கைகளை விலக்க வைத்தான். கைகளை விலக்கினாலும் விழிகளை அவள் திறக்கவில்லை. உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்தவளின் சுவாசம் தாளம் தப்ப, அவளது நெஞ்சாங்கூடு ஏறி இறங்கியது.
“ரிலாக்ஸ் பட்டூ” என்று அவளது காதில் மெல்லிய குரலில் கூறினான்.
பின் ஒற்றை விரலால் நெற்றியில் இருந்து கோடிழுக்க ஆரம்பித்தவன், “விவசாயம் பத்தி கேட்டியே! சொல்லித் தரவா?” என்று கேட்டான்.
‘என்ன?’ என்று கேட்க நினைத்தாலும் கேட்கும் நிலையில் அவள் இல்லை.
அவளது பதிலை அவனும் எதிர்பார்க்கவில்லை.
“வரிசை கொஞ்சம் வித்யாசப்படும்.. நான் நமக்கு ஏத்தபடி சொல்றேன்.. முதல்ல களை எடுக்கணும்” என்றவனின் கரம் அவளை தழுவி இருந்த புடவைக்கு விடுதலை கொடுத்தது.
“அப்புறம் நிலத்தை பதப்படுத்தனும்” என்றவனின் கரம் சிறு அழுத்தத்துடன் அவளது மேனியில் வலம் வர ஆரம்பித்து அவளை சித்தம் கலங்க செய்தது.
அவனது கரம் சில இடங்களின் அழுத்தத்தை கூட்டி தேங்க, அவள் வெட்கம் கலந்த சிறு பயத்துடன் அவனது கரத்திற்கு தடை விதிக்க, அடுத்து இதழ் ஊர்வலத்தை ஆரம்பித்து இருந்தான்.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பை தாள முடியாமல் அவள் அவனுள் புதைய, முத்தம் என்னும் திறவுகோலை வைத்தே அவளது அச்சம், வெட்கம் என்னும் பூட்டுகளை திறந்தவன் மெல்ல மெல்ல முன்னேறினான்.
முத்த சத்தமும், “அழகா!” என்ற அவளது தவிப்புடன் கூடிய அழைப்பும், “பட்டூ” என்ற அவனது தாப அழைப்புகள் மட்டுமே அறையை நிறைத்தது. யார் கொடுத்தார்கள், யார் எடுத்துக் கொண்டார்கள் என்பது அறியாமல் இருவரும் சேர்ந்து முத்த சரித்திரத்தை படைத்தனர்.
ஒரு கட்டத்தில் அவளது காதினுள், “விதையை விதைக்கலாமா?” என்று கேட்டு சம்மதத்திற்காக அவளது விழியை நோக்கியவன், தன்னவளின் வெட்கத்துடன் கூடிய சம்மதத்தில் இதழ் அணைத்தபடி அவளுக்கு நெருக்கமாகினான்.
கூடலின் முடிவில் அவன் நிறைவான புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டபடி, “லவ் யூ ஸோ மச் பட்டூ கண்ணம்மா” என்று கூற,
அவளோ நிறைவான புன்னகையுடன் அவனது இதழில் முத்தமிட்டு, “லவ் யூ ஸோஓஓஓஓ மச் கண்ணழகா” என்றாள்.
பின், “இன்னைக்கு எதுவும் கவிதை இல்லையா?” என்று அவள் வினவ,
சிறிதும் யோசிக்காமல்,
“சத்தம் இன்றி
முத்தம் இட்டு
உன்னில் உன்மத்தம் ஆக்குகிறாய்..
மொத்தம் தந்து
இரத்தம் சூடேற்றி
நத்தம் கொள்ள வைகிறாய்..
அத்தம் நீக்கி
என் சித்தம் நிறைந்தாய்!” என்று கூறினான்.
“வாவ்.. செம செம” என்றவள் தனது பரிசை முத்தங்களாய் தர, அதை அடுத்த கட்டத்திற்கு அவன் கொண்டு சென்று இருந்தான். அவளில் அவனது தேடல் எண்ணில் அடங்காமல் தொடர, பெண்ணவள் தான் சற்றே தவித்துப் போனாள்.