அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! – சித்தம் 25.7(Epilogue)
Post Views:15,571
சில வருடங்களுக்கு பிறகு………
“தங்க குட்டிமா.. என் செல்ல குட்டி தானே!” என்று ஆத்மிகா தனது ஆறு வயது மகள் அமிர்தஸ்ரீ பின்னால் ஒரு மணி நேரமாக கொஞ்சியபடி கெஞ்சிக் கொண்டே சுற்றிக் கொண்டு இருந்தாள்.
அக்காட்சியை மற்றவர்கள்(மீனாட்சி, பூமணி, சித்ரா, ஜெயதேவ், சத்யதேவ் மற்றும் சம்ருதிகா) புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருக்க,
சத்யதேவ் சம்ருதிகாவின் ஆறு வயது மகள் அபயஸ்ரீ மட்டும், “ஹே அமி போதும்.. ஆத்மிமா பாவம்” என்று கூறினாள்.
ஆத்மிகா, “அப்படிச் சொல்லுடா என் செல்ல தங்க குட்டிமா” என்று அபயஸ்ரீயை கொஞ்ச,
“அதெல்லாம் முடியாது” என்று முறுக்கிக் கொண்ட அமிர்தஸ்ரீ அன்னையை முறைத்தபடி, “இவ்ளோ நேரம் என்னை தானே செல்லம், தங்கம், குட்டிமானு கொஞ்சின! அப்போ அதெல்லாம் நடிப்பு!” என்று மிரட்டினாள்.
ஆத்மிகா, “நீங்க ரெண்டு பேருமே ஆத்மிமாவோட செல்ல தங்க குட்டீஸ் தானே ராஜாத்தி” என்று தாஜா செய்ய,
அவனை ஓரப்பார்வை பார்த்த ஆத்மிகா, “ஜெல்லி பேபி.. இன்னைக்கு சத்யாப்பாக்கு புதுசா ஒரு டிஷ் செய்து தரனும்னு சொன்னியே!” என்று கூற,
சத்யதேவ் பீதியுடன் மகளை பார்க்க,
“எஸ்.. ரிமைன்ட் செய்ததுக்கு தன்க்யூ ஆத்மிமா” என்ற அபயஸ்ரீ, “அமி.. அதுக்கு கடலை மாவு தானே வாங்கணும்னு சொன்ன!” என்று கேட்க,
அவளோ தந்தையைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, “வைட் சாஸ் செய்ய அரிசு மாவு தான் வாங்கணும்னு சொன்னேன்” என்றாள்.
“எது! கடலை மாவையும் அரிசி மாவையும் வைத்து வைட் சாஸா!” என்று வாய்விட்டே சத்யதேவ் அலற, அனைவருமே சிரித்தனர்.
ஆத்மிகாவைப் பார்த்து, “சிரிச்சது குத்தமா! அதுவும் லைட்டா சிரிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா!” என்ற சத்யதேவ் கையெடுத்து கும்பிட்டபடி, “மீ பாவம்.. ப்ளீச் ஹெல்ப் மீ” என்று கெஞ்சினான்.
ஆத்மிகா, ‘அது!’ என்பது போல் பார்க்க,
அமிர்தஸ்ரீ, “யூ டோன்ட் வொர்ரி சத்யாப்பா.. நான் சும்மா தான் விளையாடினேன்.. கோதுமை மாவு வச்சு தான் வைட் சாஸ் செய்யணும்னு எனக்கு தெரியும்.. ஜெயாப்பா செய்யும் போது பார்த்து இருக்கிறேன்” என்றதும் தான் சற்றே அவன் முகம் தெளிந்தது. இருந்தாலும் பயம் முழுதாக நீங்கவில்லை.
அதை உணர்ந்தார் போல் அவன் முதுகில் தட்டிய ஜெயதேவ், “என் இரத்தம்டா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் கூறினான்.
இரு குழந்தைகளுக்கு இடையே யாரும் வித்யாசம் பார்ப்பது இல்லை. அதனாலேயே மெல்லிய குரலில் கூறி இருந்தான்.
அமிர்தஸ்ரீ பிறந்த ஒரு மாதத்தில் அபயஸ்ரீ பிறந்துவிட்டாள். இரு குழந்தைகளும் தோற்றத்தில் தந்தையை கொண்டு பிறந்து இருக்க, அச்சு அசல் ஒரே ஜாடையில் இரட்டை சகோதரிகள் போலவே தான் இருப்பர். தோற்றத்தில் மட்டுமில்லை இரட்டை சகோதரிகள் போலவே இருவருக்கும் இடையே நல்ல புரிதலுடன் கூடிய ஒற்றுமை இருக்கிறது. விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் இருந்து உறங்கும் போது கூட ஒன்றாக தான் உறங்குவர். அவர்கள் விருப்பம் போல் ஒன்று ஜெயதேவ் ஆத்மிகாவுடன், இல்லை சத்யதேவ் சம்ருதிகாவுடன் இருவரும் உறங்குவர்.
இரு குழந்தைகளும் அம்மா அப்பா என்று அழைக்காமல் ஜெயாப்பா, சத்யாப்பா, ஆத்மிமா, சமிமா என்றே அழைப்பதால் வெளி ஆட்களுக்கு யார் யாரின் மகள் என்றே கண்டு பிடிக்க முடியாது.
தனது வாழ்வில் வசந்தம் சேர்த்த காதல் தேவதை தந்த பரிசான மகளை அமிர்தம் என்று குறிக்கும் வகையில் அமிர்தஸ்ரீ என்று ஜெயதேவ் பெயர் சூட்ட, தன்னை போல் அல்லாமல் தன் மகள் பயமின்றி தைரியசாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சம்ருதிகா மகளுக்கு அபயா என்று பெயர் சூட்ட நினைக்க, சத்யதேவ் ‘ஸ்ரீ’ சேர்த்து அபயஸ்ரீ என்று சூட்டி இருந்தான். ஆத்மிகா மட்டும் அபயஸ்ரீயை அவ்வபோது ஜெல்லி பேபி என்று அழைப்பாள், ஜவ்வு மிட்டாயின் மகள் ஜெல்லி என்ற அர்த்தத்தில் அழைக்கிறாள்.
சத்யதேவும் மெல்லிய குரலில், “அண்ணியோட இரத்தமும் சேர்ந்து இருக்குமேடா!” என்றான்.
“ஆத்மியும் இப்போ சூப்பரா தானே சமைக்கிறா!”
“அது இப்போ.. ஆரம்ப காலத்தில் என்னை வைத்து தானே டெஸ்ட் செஞ்சாங்க.. சரித்திரம் திரும்புதுடா” என்று சோகமாக கூற, ஜெயதேவ் சிரித்தான்.
அமிர்தஸ்ரீயோ அன்னையிடம், “சத்தியப்பாவை நான் கவனிச்சுக்கிறேன்.. நீ நம்ம விஷயத்துக்கு வா” என்றாள்.
“ஜெயாப்பா தான் என்னை கூட்டிட்டு போறாங்க”
“அப்போ உனக்கு போக இஷ்டம் இல்லை!” என்றவள் தந்தையைப் பார்த்து, “ஆத்மிமாக்கு வர பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லையாம்” என்று கூறி தான் ஆத்மிகாவின் மகள் என்று நிருபித்தாள்.
ஆத்மிகா, “அடியே!” என்று சிறிது அலற, ஜெயதேவ் புன்னகையுடன் இருவரையும் ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
அமிர்தஸ்ரீ ‘என்ன!’ என்பது போல் புருவம் ஏற்றி பார்க்க,
“இப்போ என்ன தான் செய்யணும்னு சொல்ற?” என்று ஆத்மிகா தான் இறங்கி வந்தாள்.
“இது குட் கேர்ள்கு பியூட்டி” என்ற குழந்தை, “ஒரு டீலிங்கு போட்டுக்கலாம்” என்றாள்.
“என்ன டீலிங்?”
“எங்களை விட்டுட்டு நீயும் ஜெயாப்பா மட்டும் ஃப்ளவர் ஃபார்ம் போகணும்னா நான் சொல்ற டீலிங்கு நீ ஒத்துக்கணும்”
(இன்று ஜெயதேவ் ஆத்மிகாவின் திருமண நாள்.. வருடம் தோறும் இந்த நாளில் இருவர் மட்டும் தனியே பூக்கள் பண்ணைக்கு சென்று தங்கி அடுத்த நாள் வருவர். விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அமிர்தஸ்ரீ இப்படி கலாட்டா செய்வதும் வருடம் தோறும் நடக்கும்.)
“நீங்களும் தானே சத்யாப்பா சமிமா கூட காய்கறி பண்ணைக்கு போய் குளத்தில் ஆட்டம் போட போறீங்க!”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க தனியா போறீங்க! அதுவும் அருவியில் ஆட்டம் போட போறீங்க”
(ஆம், இப்போது பூக்கள் பண்ணையில் செயற்கை நீர் வீழ்ச்சியை உருவாக்கி வைத்து இருக்கிறான்.)
அவரோ மென்னகையுடன், “நீயாச்சு உன் அப்பா ஆச்சு” என்று கூற,
“யூ டூ சிட்டுக் குருவி!” என்றாள்.
மீனாட்சி, “ஜெயா இருக்க, நீ ஏன்டா கவலைப்படுற!” என்று கூற,
அவரை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்ட ஆத்மிகா, “அத்தமா தான் ஸோ ஸ்வீட்” என்று கொஞ்சி, அன்னையை பார்த்து உதட்டை சுளித்து பளிப்பு காட்டினாள்.
சம்ருதிகா, “இப்போ உனக்கும் அமி குட்டிக்கும் வித்யாசமே தெரியலை” என்று கூற,
அவளோ தன்னவனை பார்த்து, ‘அப்படியா!’ என்று வாயசைத்தாள்.
‘ஃபார்மில் வச்சு வித்யாசங்கள் சொல்றேன்’ என்று காதல் பார்வையுடன் அவன் வாயசைத்து கூற,
இருவரின் மௌன பாஷையை கவனித்த சத்யதேவ் அது புரியவில்லை என்றாலும், “நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கலையே!” என்றான்.
“என்ன சொன்னீங்க!” என்று ஆத்மிகா வினவவும்,
அவன் அவசரமாக, “ஒன்னுமில்லையே! ஒன்னுமே இல்லையே அண்ணி” என்றான்.
ஜெயதேவ், “பூ குட்டி” என்றதும் அமிர்தஸ்ரீ ஓடிவந்து அவன் மடியில் அமர்ந்து கொள்ள, அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “சமத்து குட்டிமா” என்றவன் அருகில் இருந்த அபயஸ்ரீயை தூக்கி மறு தொடையில் அமரவைத்து கன்னத்தில் முத்தமிட்டு, “சமத்து கனி குட்டி” என்றான்.
இருவரும், “ஸ்வீட் ஜெயப்பா” என்றபடி ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தமிட்டனர்.
ஜெயதேவ் புன்னகையுடன், “மாரியோ ப்ளே ஸ்டேஷன் ஒன் வீக்கில் வாங்கி தரேன்.. ஆனா டூ மேனி சாக்லெட்ஸ் அண்ட் ஐஸ்க்ரீம் ஸ்ட்ரிக்ட்லி நோ.. ஜஸ்ட் ஒன் டே சாக்லெட் அண்ட் ஒன் டே ஐஸ்கிரீம் ஓகே” என்றான்.
இரு குழந்தைகளும் ஒன்றாக, “ஓகே ஜெயாப்பா” என்றது.
ஆத்மிகா தமக்கை காதில், “இப்போ எவ்ளோ சமத்தா தலையை ஆட்டுது பாரு.. என் கிட்ட மட்டும் அவ்ளோ சேட்டை” என்றாள்.
“சில நேரம் ஜெய் மாதிரி அழுத்தகாரியும் தான்” என்று ஆத்மிகா காதலுடன் கூறினாள்.
அமிர்தஸ்ரீ, “நீங்க தான் சாக்லெட், ஐஸ்க்ரீம் ரெண்டும் செய்து தரனும்” என்று கூற,
அபயஸ்ரீயும், “ஆமா” என்றாள்.
“டன்” என்று கட்டைவிரலை உயர்த்தி புன்னகையுடன் கூறிய ஜெயதேவ், “குளத்தில் ரெண்டு பேரும் கவனமா என்ஜாய் செய்யணும்.. ஓகே!” என்றான்.
“ஓகே” என்று இரு குழந்தைகளும் கூற,
“ஓகே.. அப்போ நானும் ஆத்மிமாவும் கிளம்புறோம்” என்று கூறி எழுந்தவன் அனைவரிடமும் கூறிக் கொண்டு தன்னவளுடன் கிளம்பிச் சென்றான்.
பூக்கள் பண்ணைக்கு சென்றதும் பூக்களை பார்வை இட்டு முடித்ததும் தன்னவளை கைகளில் ஏந்தியவன் காதலுடன் அவளது இதழில் இதழ் பதித்து, “ஹாப்பி வெட்டிங் டே ராங்கி பட்டாசு” என்று அதிகரித்த காதல் கலந்த மோகத்துடன் கூற,
கைகளை மாலையாக அவனது கழுத்தில் கோர்த்திருந்தவளும் அதே காதல் கலந்த மோகத்துடன், “ஹாப்பி ஹாப்பீபீபீ வெட்டிங் டே கற்றாழை கண்ணழகா” என்று கூறி இதழில் இதழ் பதித்தாள்.
பின் அவன் செல்லும் பாதையை பார்த்து, “வுட் ஹவுஸ் போகலையா!” என்று கேட்டாள்.
“இன்னைக்கு சாரீயில்(saree) ஜலக்கிரீடை” என்றவன் மோக பார்வையுடன், “செம கிக்கா இருக்கும்” என்று கூறி கண்சிமிட்டினான்.
சிறு வெட்க புன்னகையை உதிர்த்தவள், “நாட்டி கண்ணழகா” என்றாள்.
அருவியில் அவளை இறக்கி விட்டவன் கொசுவச் சட்டையை கழட்டிவிட்டு தானும் அருவியில் நனைந்தான்.
குளிர்ந்த நீர் மேனியில் பட்டதும், “ஸ்.. குளிருது” என்று அவள் கூற,
“நான் எதுக்கு இருக்கிறேன்” என்றபடி அவளை அணைத்தவனின் கரம் அவளது மேனியில் ஊர்வலம் சென்று அவளுள் தீ மூட்டியது.
சிறிது நேரம் கழித்து அவளது காதினுள், “லில்லி பூ பதியம் போடுறதை பற்றி சொல்லி தரவா?” என்று கேட்டான்.
அவள் தனது அணைப்பின் மூலம் சம்மதம் கூற, மீண்டும் அவளை கைகளில் ஏந்தியவன் மரவீட்டை நோக்கி சென்றான்.
இதே காதலுடன் அவர்கள் இனிதே வாழ, வாழ்த்தி விடை பெறுவோம்..
******
ராங்கி பட்டாசும் கற்றாழை கண்ணழகனும் உங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.. அதனால் அவர்களை மறக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.. வோட்(VOTE) போடும் போது மறக்காமல் ராங்கி பட்டாசு, கற்றாழை கண்ணழகனுக்கு போடுங்க மக்களே….
இந்த வாய்ப்பை எனக்கு அளித்த மல்லி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
எனக்கு ஆதரவு அளித்து கமெண்ட்ஸ் போட்டு உற்சாக படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி.. ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து ஆதரவு அளித்து கமெண்ட்ஸ் மூலம் எனக்கு ஊக்கம் தந்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி…
சைலென்ட் ரீடர்ஸ் சின்னதாவது உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
உங்கள் அனைவரின் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் எழுத்தாளர்047.