மாலை நேரம் கோமதியும் அவர் மகள் இசையரசியும் அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து காபி குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.. அப்போது பக்கத்து தெருவில் ஒப்பாரி வைத்து அழும் சத்தம் கேட்டு இருவரும் அந்த வீட்டுக்கு ஓடி வந்தார்கள்..
ஒரு தாய் மற்றும் தந்தை இரண்டு சின்ன பிள்ளைகள் நால்வரும் தூக்கில் தொங்கியபடி இருந்தார்கள்..
அதை அந்த வீட்டு பெரிய பொண்ணு பார்த்ததும் தான் ஒப்பாரி வைத்து கத்தினாள்..
போலீசுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் தெரிவித்ததும் அவர்களும் வந்து இறந்தவர்கள் உடலை ஆம்புலன்ஸ் வந்ததும் போஸ்மார்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள்..
போஸ்மார்டம் செய்வதற்கு தயார்படுத்திய போது அந்தப் பெண்ணின் தந்தையின் கைக்குள் ஒரு பென் ட்ரைவ் இருந்தது..
அதை எடுத்து அருகே இருந்த காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார் டாக்ட்டர்..
அந்த பென் ட்ரைவில் ஒரு வீடியோ காட்சி இருந்தது..
அதை தொலைக்காட்சியில் போட்டு அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பார்த்தார்..
அந்த காணொளியில் இருந்தவை இதுதான்..
‘ எனது முதல் மகள் மாதவி.. நான் அவள் தந்தை, என் மனைவி, இது இரண்டாவது மகள், இது மூன்றாவது மகள்.. மிகுந்த கஷ்டத்தின் மத்தியில எங்கள் குடும்பம் இருந்தது.. அப்போது என் மகள் மாதவிக்கு வேலை தருவதாக கூறி பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்று தொலைபேசியை மூலமாக அழைத்து பேசினார்கள்..
நான் முதலில் அதை நம்பவில்லை.. அதன் பின் என்னையும் எனது மகளையும் அவர்கள் ஆபிஸில் அழைத்து பேசினார்கள்.. அப்போது அந்த விளம்பர நிறுவனத்தின் முதலாளி மிகவும் அன்பாகவும் தன்மையாகவும் பேசினார்..
நானும் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருப்பதால் அந்த வேலைக்கு என் மகளை செல்லுமாறு நானே அழைத்து சென்று விட்டு விட்டு வந்தேன்..
நாமும் தொலைக்காட்சியில் பல விளம்பரங்களை பார்த்து வருகிறோம்.. அதில் ஒரு விளம்பரம் என்று தான் நினைத்தேன்.. ஆனால் பெண்களை வேறு விதமாக விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை என் மகளின் புகைப்படம் மூலம் தான் பார்த்த தெரிந்து கொண்டேன்..
என் மகளின் உடலில் துணி எதுவும் இல்லாமல் அந்த விளம்பரம் எடுக்கப்படுட்டுள்ளது..அதன் ஒரு பகுதியான புகைப்படம் தான் என் அலைபேசிக்கு வந்திருந்தது..
வளர்ந்த மகளைப் பார்க்க கூடாத கோணத்தில் நான் என் மகளை பார்த்தேன்.. அதனால் இனி என் மகளை நான் எப்படி நேரில் பார்த்து பாசமாக முகத்திற்கு நேராக பார்த்து பேசுவது?.. அந்த வேதனை தாங்க முடியாமல் நாங்கள் இறந்தால் இன்னும் இருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளின் வாழ்க்கையும் இதே போல் ஆகும் என்று பயந்து அவர்களையும் எங்களுடனே அழைத்துச் செல்கிறோம்.. எங்களது மரணம் தற்கொலை.. உங்களால் முடிந்தால் எங்கள் மரணத்திற்கு காரணமான —– அந்த விளம்பர நிறுவனத்தை மூடி அங்கிருக்கும் பெண்களை காப்பாற்றி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
இதில் பாதிக்கப்பட்ட எனது மகளை விட்டு விட்டு நாங்கள் அனைவரும் மரணிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது..
என் பொண்ணு தவறே செய்யாமல் தண்டிக்கப்படகூடாது..
அவளது நிர்வாண உடலை ஊரே பார்த்துவிட்டது. இனியும் அவளிடம் மறைக்க என்ன இருக்கிறது ஆனால் அவள் மூலமாக தான் அங்கிருக்கும் பெண்களை ஆதாரப்பூர்வமாக காப்பாற்ற முடியும்..
அந்த விளம்பர நிறுவனத்திற்கும் அதேபோன்று விளம்பரம் நடத்தும் நிறுவனத்திற்கும் அரசினால் நடவடிக்கை எடுக்க முடியும்.. அதற்காகத்தான் எனது மகளை மட்டும் விட்டுவிட்டு நாங்கள் நான்கு பேரும் மரணித்தோம்..
அந்த விளம்பர நிறுவனத்தை தடை செய்து அதற்கு சீல் வைத்து அங்கிருக்கும் பெண்கள் காப்பாற்றப்பட்ட பின்பு என் மகளின் முடிவை அவள் எடுப்பதுதான்..
என் மகளைப் போன்று இன்னும் பல பெண்கள் இப்படி ஏமாற்றப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள்.. அவர்களுக்கும் நியாயம் கிடைக்கட்டும்.. என்னால் என் மகளை இதற்கு மேலும் முகத்துக்கு நேராக பார்த்து பேச முடியாத காரணத்தால் மட்டுமே நான் மரணிக்கிறேன்..
நல் உள்ளங்கள் இருந்தால் என் மகளுக்கு நியாயத்திற்காக உதவி செய்யுங்கள்..” என்று அந்த வீடியோ முடிக்கப்பட்டிருந்தது..
அந்த காணொளி ஒன்றே போதும் அந்த விளம்பர நிறுவனத்தை மூடுவதற்கு..
யாரின் நல்ல நேரமோ அந்த இளம் வயது இன்ஸ்பெக்டர் நேர்மையானவர் என்பதால் அந்த காணொளியை வைத்து அவரால் செய்ய முடிந்தவற்றை செய்தார்..
அந்த நான்கு சடலங்களையும் நல்ல முறையில் அடக்கம் செய்துவிட்டு மாதவி ஒடிந்து போய் அந்த வீட்டில் அமர்ந்திருந்தாள்..
மாதவி கண்ணில் கண்ணீரே வரவில்லை.. தன் தாய் தந்தை தங்கைகள் மரணத்திற்கு நியாயம் செய்து விட்டு தான் அழ வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தாள்..
அதற்கு பின் வந்த நாட்களிலும் மாதவியை ஆள் வைத்து நன்றாக பார்த்து வேளைக்கு உணவு கொடுத்து பார்த்துக் கொண்டது இன்ஸ்பெக்டர் தான்..
மாதவி வீட்டில் இருந்து வந்ததும் கோமதி தன்மகளை அழைத்து அவளது மனதை மாற்றிக் கொள்ளுமாறு பேசிக் கொண்டிருந்தார்..
அதாவது என்னவென்றால் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது..
கடந்த ஒரு மாத காலமாக கோமதியின் மகள் இசை பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியதால் இரண்டு வருடமாக வீட்டில் தாய்க்கும் அத்தைக்கும் உதவியாக இருந்தாள்..
அவர்களோடு சேர்ந்து இருப்பதால் அவர்கள் பார்க்கும் சீரியலை பார்த்து அவளுக்கும் நடிப்பில் ஆர்வம் அதிகம் வந்தது..
20 வயது ஆகியதால் அவளும் துணிந்து தனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும் சீரியல் நடிகையாக அவள் விருப்பப்படுவதாகவும் கூறினாள்..
கோமதியின் கணவர் மனைவியை சந்தேகப்பட்டு தன் மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்
நல்ல வேளை கோமதி கணவனை எதிர்பார்த்து இருக்கும் நிலைமையில் இல்லை..
அவர் தமிழ் ஆசிரியை.. அவருடன் பணிபுரியும் மாஸ்டரை வைத்து தான் கோமதியின் கணவன் சந்தேகப்பட்டு பிரிந்து சென்று விட்டார்..
எவ்வளவுதான் ஒரு பெண்ணிற்கு படிப்பும் பதவியும் இருந்தாலும் சமூகத்தில் தனித்து இருந்தால் பல பேச்சுக்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாக வேண்டும்..
இரண்டு வயது பெண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அவரால் தனித்து அந்த சென்னையில் இருக்க முடியாது என்பதால் மீண்டும் தன் சொந்த ஊரான ஈரோட்டில் இருக்கும் அண்ணன் வீட்டுக்கு வந்து விட்டார்..
அண்ணி கலா கொஞ்சம் நல்லவராக இருப்பதால் 18 வருடங்கள் அண்ணன் வீட்டில் கோமதியும் உழைத்து கொடுத்து அவர்கள் பிள்ளைகளையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வதால் சண்டை பிரச்சினை என்பது இல்லாமல் இருந்தது..
இத்தனை வருடம் கோமதி அந்த வீட்டில் இருக்கிறார் என்றால் அவர் பொறுமைக்கு எல்லையே இல்லை..
கோமதியின் அண்ணன் முத்துராமன் தங்கைக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் இல்லாமல் செல்வதால் எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக வேலைக்கு சென்று வந்து அந்த குடும்பத்தோடு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்..
ஒரு வேளை கோமதி ஆசிரியராக மட்டுமில்லாமல் சாதாரண வீட்டு பெண்ணாக இருந்திருந்தால் அவர் நிலை என்னவோ..
கோமதியின் அண்ணனுக்கும் இரண்டும் பெண் பிள்ளைகள்..
அவர்களுடன் சேர்ந்து இசையரசியும் வளர்ந்தாள்..
இதோ எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருபது வருடம் அந்த வீட்டில் அவர்களது வாழ்க்கை கடந்துவிட்டது..
முத்துராமனும் தங்கை பிள்ளை தன் பிள்ளை என்று இதுவரைக்கும் பாகுபாடு பார்த்ததில்லை.. பிள்ளைகளுக்கு மற்றும் தன் மனைவிக்கு தங்கைக்கு என ஒன்றாகவே ஒரே மாறி தான் செய்வார்..
அண்ணன் பிள்ளைகள் இருவரும் படித்து ஆசிரியராகவும், டாக்டராகவும் இருக்கிறார்கள்..
ஆனால் தன்மகள் 12 ஆம் வகுப்பு படிப்பை நிறுத்திவிட்டு படிப்பு வரவில்லை என்று வீட்டில் இருந்து இப்பொழுது நடிப்பில் ஆர்வம் காட்டுவதால் அவருக்கு சற்று மன கவலைதான்..
படிப்பு வரவில்லை என்று சொல்லும் பெண்ணை வைத்து எப்படி கொட்டி கொட்டி படிக்க வைப்பது அதனால் கோமதியும் விட்டுவிட்டார்..
கடந்த ஒரு மாத காலமாக மாமன் முத்துராமனிடமும், தாயிடமும் அத்தையிடமும் இசையரசி கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டாள்.. தற்பொழுது உண்ணாவிரதத்தை கையில் எடுத்து இரண்டு நாள் ஆகிறது..
அவள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் மாதவியின் குடும்பம் தற்கொலை செய்தது அவளது முடிவை இன்னும் அவர்கள் எதிர்க்க காரணமாகிவிட்டது..
“ சொன்னா கேளு இசை ப்ளீஸ் வேணாம்.. சின்ன வயதில் இருந்து நண்பர்களா பழகின எங்களை உங்க அப்பா சந்தேகப்பட்டு தவறு செய்யாத என்னை குற்றவாளியா உலகத்துக்கு காட்டிட்டு அவர் நல்லவரா இந்த உலகத்துக்கு காட்டி விட்டுட்டு போய்விட்டார்..
அப்படி இருக்கும் போது அப்பா இல்லாத பொண்ணு அடங்காம தவறு செஞ்சு இருக்கு பாருன்னு ஊரில் ஒரு கெட்ட பெயர் உனக்கு வேணாம் தங்கம்..
தவறே செய்யாம ஒரு பெண் பழி சுமக்குறதுக்கு நானும் ஒரு எடுத்துக்காட்டு,மாதவியும் ஒரு எடுத்துக்காட்டு..அப்படி இருக்கும் போது நீ இந்த பீல்ட் தெரிவு செய்திருக்கிறது எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை..
ஒரு மாசமா நானும் மாமாவும் அத்தையும் எடுத்து சொல்றோம்.. ஆனா நீ கேட்கவே மாட்டேங்குற?.. இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அடம் ஆகாது..
மாதவி வாழ்க்கையில நடந்ததை தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ திரும்பவும் அதே பிடிவாதம் பிடிக்க கூடாது..
உனக்கு பிடிச்ச தொழில் கல்வியை படி தையல், கம்ப்யூட்டர், மேக்கப், சாரி டிசைன் இப்படி ஏதாவது பிரயோசனமா படி இல்லையா சொல்லு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.. அத விட்டுட்டு நடிக்க போறேன்,அங்க போறேன் இங்க போறேன்னு இன்னும் எங்களை கஷ்டப்படுத்தாதே..
நம்மளை வெளி ஆளா எல்லாம் நினைக்காம அண்ணனும் அண்ணியும் கூடவே வச்சு பாதுகாப்பதற்கு அவங்களுக்கு நம்ம நன்றி செலுத்தனும்.. அதை விட்டுட்டு இன்னும் அவங்களுக்கு பாரமாகவும் கஷ்டமும் கொடுக்கக் கூடாது..
என் பொண்ணு எல்லாத்தையும் புரிந்து நடந்து கொள்வாள்.. என்று நான் நினைக்கிறேன்.. இதுக்கு மேல எனக்கு சொல்ல எதுவும் இல்லை..உன்னோட முடிவு தான் இனி..” என்று இப்போதும் மகளுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி விட்டு.
சமையலுக்கு உதவி செய்வதற்காக சென்றுவிட்டார் கோமதி..
யார் சொல்லியும் கேட்காமல் இறுதியாக அவளே வென்றாள்..
தொடர்ந்து மூன்று நாள் எதையும் உண்ணாமல் இருந்து மயங்கி விழுந்து மருத்துவமனை அழைத்து சென்று குளுக்கோஸ் ஏற்றி அதன் பின்பும் அவள் உணவு உண்ண வேண்டும் என்றால் நடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்.. அப்படி என்றால் மட்டுமே உணவு உண்பேன்.. என்று அடம் பிடித்தாள்..
அவர்களும் இனியும் தாங்களும் விட்டுக் கொடுக்காமல் விட்டால் அவள் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்து ஓரளவுக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.. அதன் பின் தான் உணவு உண்டு கொஞ்சம் தெளிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் இசை..
அவள் ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்து நன்கு தேறியதும் முத்துராமன் ஒரு கண்டிஷன் மட்டும் போட்டார்..
அவளது ஆசைப்படி சென்னைக்கு நடிப்பதற்காக அழைத்துச் செல்லுவதற்கு முன்பு அவர் தனியே சென்று அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்திவிட்டு வந்தார்..
அந்த கண்டிஷன் என்னவென்றால் அவளை பற்றி அவதூறான பேச்சுகளோ, புகைப்படங்களோ பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வந்தால் அது உண்மை இல்லை என்றாலும் அதற்கு அவள் தண்டிக்கப்படுவாள்..
அதன் பின் அவர்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அதற்கு சம்மதம் என்றால் போகும்படி முத்துராமன் கூறினார்..
தன் மாமா அப்படி ஒரு கண்டிஷன் போட்டும் தாய் இந்த கண்டிஷனை கேட்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்படி ஆயிரம் முறை எச்சரிக்கை செய்தார்..
“ இங்க பாருடி இசை.. இது உனக்கு விசப்பரிட்சிசை மாதிரி.. சின்னதா ஒரு தவறு நடந்தாலும் நாம ரெண்டு பேரும் பாதிக்கப்பட போறது உறுதி.. உன்னோட பிடிவாதத்துக்கு நாங்க சம்மதம் கொடுத்தது தவறோன்னு எங்களை யோசிக்க வச்சிடாத.. எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க முடியுமோ.. அவ்வளவு ஜாக்கிரதையா இரு.. போய்ட்டு வா..” என்று மகள் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தார்..
தற்பொழுது சீரியல் நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகள் அனைவரையும் பற்றியும் அவதூறு பேச்சுக்களும் தவறான புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமே இருக்கிறது.. அதைத்தான் அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்.. அந்த இடத்தில் இசை ஒரு போதும் வரக்கூடாது என்பதுதான் அவர் விருப்பம்..
“ அப்படி எதுவும் நடக்காது.. ஆடை விஷயத்தில் கூட தான் மிகவும் கவனமாக நடிப்பேன் மாமா ..”
என்று கூறி இசை வாக்குறுதி அழித்த பின் தான் முத்துராமன் கொஞ்சம் நிம்மதியாக அவருடன் படித்த நண்பன் அசிஸ்டன்ட் டைரக்டராக இருப்பதால் அவரிடம் கூறி அவளை அழைத்து சென்று சென்னையில் விட்டு விட்டு வந்தார்..
மூன்று மாதங்கள் கழித்து அந்த இன்ஸ்பெக்டர் மாதவியின் நிர்வாண புகைப்படத்தையும் இன்டர்நெட்டில் இருந்து அளித்து அவளை வைத்து விளம்பரம் எடுத்த கம்பெனியையும் இன்னும் ஸ்ட்ராங்கான ஆதாரத்தை கொடுத்து மூடி.. மற்ற பெண்களையும் காப்பாற்றி அவர்களோடு தொடர்பு கொண்ட மற்ற நிறுவனங்கள் மற்றும் அதே மாதிரி பெண்களை தவறாக பயன்படுத்தும் விளம்பர நிறுவனங்களையும் இழுத்து மூட காரணமாய் இருந்தான்..
தற்போது மாதவியை பற்றிய பேச்சுக்கள் ஓரளவு அடங்கிவிட்ட நேரம்..
அந்த பிரச்சினை முற்று முழுதாக முடிந்ததும் தைரியமாக அந்த இன்ஸ்பெக்டர் மாதவியை காதலிப்பதாகவும் அவள் எப்படி இருந்தாலும் அவளது கடந்த காலத்தை பற்றி தனக்கு எதுவும் கவலை இல்லை.. என்றும் கூறி அவளது விருப்பத்தை கேட்டு நின்றான்..
அவளும் தன்னால் தன் குடும்பம் இழந்ததை பற்றி மிகவும் துக்கத்தில் இருப்பதாக கூறி வருத்தப்பட்டாள்..
எல்லா விதத்திலும் நான் உனக்கு ஆறுதலாக இருப்பேன்.. என்று அவளுக்கு வாக்களித்து அதன்படி அவனது காதலால் அவளது குடும்பத்தின் இழப்பை மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அளிப்பதற்கு முயற்சி செய்கிறான்..
கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டு அந்த ஊரில் இருந்து மாற்றம் வாங்கிக் கொண்டு இதைப் பற்றி அறியாத ஓர் இடத்துக்கு அழைத்து சென்றான்..
தற்போது அவள் நன்றாக வாழ்வதை பார்க்க குடும்பம் இல்லை.. என்ற வருத்தம் அவளை இன்னும் வாட்டுகிறது..
இதோ அந்த அசிஸ்டன்ட் டைரக்டர் உதவியோடு ஒரு மாத காலம் இசைக்கு நடிப்பதற்கு பயிற்சி கொடுத்து புதிதாக தாலிக்கொடி எனும் சீரியலை ஆரம்பித்து அதில் கதாநாயகியாக நடிக்கிறாள்.. வெற்றிகரமாக அந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது..
நடிக்க சென்று ஒரு வருடத்தை அவள் நெருங்கும் போது இதுவரை எந்த பிரச்சினையும் வராமல் தான் இருந்தது..