ஆனால் அப்படியே இருந்தால் ஏன் காலமும் நேரமும் இருக்கிறது..
அவளை வைத்து ஒரு விளையாட்டு விளையாட நினைத்து விட்டார்கள் போல..
நடிகையாக வந்து இந்த குறுகிய காலத்திலேயே மிகவும் பெரிய பேரையும் புகழையும் பெற்று விட்டாள் இசை..
சினிமா நடிகைகள் என்றால் தான் கவர்ச்சியை காட்ட வேண்டும்..
சீரியல் நடிகைகளின் உடை மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் நேர்த்தியாக தான் இருக்கும்..
அவளின் பேருக்கும் புகழுக்கும் ஹோம்லி லுக்கும் சாந்தமான அழகும் தான் காரணம்..
கோமதியின் அமைதியும் சாந்தமான அழகும் மகளுக்கு அப்படியே அதிகமாகத்தான் இருந்தது..
தொழில் என்றாலே போட்டி இருக்க தான் செய்யும்..
அந்த போட்டியே பொறாமையாக மாறி பொறாமை வஞ்சம் கொள்ள வைத்தால் அதன் நிலைமை எதிர்பாராத விவரிதமாகத்தான் இருக்கும்..
தாலிக்கொடி சீரியலின் வில்லனாக நடிக்கும் அவன் சீரியல் கதாபாத்திரம் போல் நிஜத்திலும் இசையின் மேல் ஆசைப்பட்டான்..
அவன் இசையின் மேல் ஆசைப்படுவதை அறிந்த சக நடிகை அவனுடன் கூட்டு சேர்ந்து இசையின் பெயரைக் அவன் பெயருடன் சேர்த்து கெடுத்தால் இசையை அவனுடன் சேர்த்து வைப்பதாக கூறி அவனது மண்டையை கழுவி அதற்கு சம்மதிக்க வைத்தாள்..
ஐந்து வருடமாக அவள் நடிப்புத் துறையில் இருந்தும் அவளால் சாதிக்க முடியாததை ஒருவருடம் கூட முடியாத இசை சாதித்து விட்டாள்.. அதனால் ஏற்பட்ட பொறாமை வஞ்சம் தான் இசையின் வாழ்க்கையை அளிக்க அவள் திட்டமிடகாரணம்..
இருவரையும் சேர்த்து சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பி விட்டால் இசையின் குடும்பம் அதை கண்டு அவனுடன் சேர்ந்து வாழ வைப்பார்கள்.. சமூகத்தில் இசையின் பெயர் கெட்டு அவள் பாதையும் கிளியராகி ஆகிவிடும்..
அவள் இசையின் பெயரை கெடுக்க கங்கணம் கட்டியது இசையின் தாய் அதாவது கோமதி இசையுடன் பேசுவதாக நினைத்து ஒரு முறை அலைபேசியில் குடும்ப சூழ்நிலையை கூறி கவனமாக இருக்கும் படியும் அவளது பெயர் கெட்டால் அவர்களுடைய வாழ்க்கையும் கெட்டுவிடும் என்றும் எவ்வளவு கவனமாக அந்தத் துறையில் இருக்க முடியுமா அவ்வளவு கவனமாக இருக்கும் வரை தான் நம் வாழ்கை சந்தோசமாகவும் தெளிந்த நீரோடை போல் செல்லும்.. என்றும் கூறினார்..
அது மகள் பேசவில்லை மகளுடன் இருக்கும் ஒரு சாத்தான் பேசியது என்று கோமதிக்கு தெரியாமல் போனது தான் தற்போது பிழையாகிவிட்டது..
என்ன செய்து இசையை அங்கிருந்து துரத்துவது என்று அவள் பல வேலைகள் செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால் அதற்கு சரியான சந்தர்ப்பமும் நேரமும் அவளுக்கு தானாகவே கோமதியின் மூலம் அமையவும் அதை நன்கு பயன்படுத்தி இதோ அவர்கள் திட்டமிட்டபடி இசையின் புகைப்படத்தோடு அவனது புகைப்படத்தையும் இணைத்து அவனும் இசையும் ஒரே அறையில் தவறாக நடந்ததாக சித்தரித்து பத்திரிக்கை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பரப்பி விட்டார்கள்..
அந்த தகவல் அவள் மாமா முத்துராமன் மற்றும் தாய்க்கு தெரிந்து அவர்கள் அவளை அழைத்து விஷயத்தை கேட்கவும் தான் அவளுக்கு அப்படி நடந்தது தெரிய வந்தது..
உடனடியாக ஊருக்கு அழைக்கப்பட்டாள்.. இசை ஊருக்கு வந்ததும் எந்த பேச்சும் இல்லாமல் அவர்களது பெட்டியை மாமாவின் முன்னிலையில் அத்தை தூக்கி வீசிவிட்டார். அதை எடுத்துக் கொண்டு இங்கிருந்து செல்லும் படியும்.. இனி அவர்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் முன்பு சொன்னது போல் எந்த ஒட்டும் உறவும் சம்பந்தமும் இல்லை.. என்றும் கூறி சண்டை சச்சரவு இல்லாமல் அனுப்பி விட்டார்கள்..
முத்துராமனின் டாக்டர் மகளுக்கு இப்பொழுதுதான் திருமணத்திற்கு வரன் ஓரளவுக்கு அணைந்து வந்திருக்கிறது..
இந்த நேரத்தில் இப்படி இசை பிழை செய்யாவிட்டாலும் ஒரு கெட்ட பெயரோடு தங்கள் வீட்டில் இருந்தால் அதன் தாக்கம் தங்கள் மகளையும் பாதிக்கும்.. அதனால் மனைவி சொல்லை கேட்டு முன்பே எடுத்த முடிவு என்பதால் இம்முறை எந்த உறுத்தலும் இல்லாமல் தங்கையும் மகளையும் வீட்டை விட்டு முத்துராமன் அனுப்பி விட்டார்..
அவர்களைச் சொல்லியும் பிழையில்லை.. இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள்.. அவர்கள் சண்டை பிடிக்கவும் இல்லை.. அவர்களை அவதூறு பேசவும் இல்லை..
முன்பே முடிவை சொன்னதால் இம்முறை யாருக்கும் பாதகம் ஏற்படாமல் சமூகமாகவே வீட்டை விட்டு தங்கை குடும்பத்தை அனுப்பி வைத்து விட்டார்..
அவர்கள் இருவரும் சின்ன பிள்ளைகள் இல்லை.. அவர்கள் வாழ்க்கையை சமூகத்தையும் அவர்கள் இனித்தான் எதிர்த்து வாழ வேண்டும்.. அதையும் அவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.. எத்தனை காலத்துக்கு தான் கணவனை பிரிந்து வந்த தங்கையை தன் கூட்டுக்குள் வைத்து பாதுகாப்பது..
கோமதி அண்ணனின் சூழ்நிலை புரிந்து கொண்டு மகள் செய்த பிழையால் அவர்களை கோபித்துக் கொள்ளவில்லை..
இதோ அங்கிருந்து உடனடியாக எங்கே செல்வது என்று தெரியாமல் பவானி ஊர் கோவிலுக்கு வந்தார்கள்..
கோமதியும் மகளைப் பற்றி நன்கு தெரிந்ததால் அவள் பிழை செய்யாமலே தண்டிக்கப்பட்டு இருக்கிறாள்.. என்பதும் தெரிந்து
“ இதற்குத்தான் இந்த தொழிலே வேண்டாம் என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டேன்.. கேட்டியா?.. இப்ப உன்னை பெத்த பாவத்துக்கு நானும் சேர்ந்து அனுபவிக்கிறேன்..” என்று கோமதி திட்டிய காரணத்தால் தாய்க்கும் தன்னால் பிரச்சனை அவர் வாழ வேண்டிய வயதில் இருந்தே கணவனை பிரிந்து தனக்காக தான் பல கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. என்று உணர்ந்த இசை இனியாவது தாய் மாமா குடும்பத்தோடு பாதுகாப்பாக நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் கோமதி கோவில் தூணில் தலை சாய்ந்து கொஞ்சம் கண் அயர்ந்து விட்டார்..
தன்னால் தான் படித்து உத்தியோகம் பார்க்கும் தாய்க்கும் தெருவில் இருக்கும் இந்த நிலைமை என்னும் குற்ற உணர்ச்சியால் தாய் உறங்கிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இசை தற்கொலை செய்வதற்காக நடந்து சென்று பாலத்தில் ஏறினாள்.. அப்பொழுதுதான் நட்டுவிடமும் திருமாறனிடமும் மாட்டிக்கொண்டாள்..
தாயை கோவிலில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று நட்டு வின் காதில் கிசுகிசுத்தாள் இசை.. அவனும் மாறனின் தோளில் சுரண்டி அவனைக் கோபத்திற்கு உள்ளாக்கி மீண்டும் பைகை அந்த ரோட்டில் நிறுத்த வைத்தான்..
“ டேய் நட்டு திரும்ப என்னடா?.. உன்னை கொல்ல போறேன் பாரு.. புடிச்சு நான் உன்னை ஆத்துக்குள்ள தள்ளி விட்டுட்டு வீட்டுக்கு போக போறேன்.. பவானி வேற கால் பண்ணிக்கிட்டே இருக்கு.. தாமதமாக போறதுக்கு வீட்ல வச்சு திட்ட போகுது.. அந்தப் பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுறதுனு யோசிச்சிட்டு இருகேன்.. உனக்கு ஒரே விளையாட்டு குணம் கூடிப்போச்சு.. சீக்கிரம் என்னன்னு சொல்லி தொலை..” என்று வள்ளுன்னு பாய்ந்தான் மாறன்..
“ அதுவா அண்ணே நம்ம அண்ணியோட அம்மா..” என்றான்..
மாறனின் திரும்பி முறைத்த முறைப்பில் காதை பொத்திக்கொண்டு “ சாரி சாரி ஒரு ஃப்ளோல டங்கு ஸ்லிப் ஆயிருச்சு.. மேடத்தோட அம்மா கோவிலில் இருக்காங்களாம் அண்ணே.. அவங்களையும் அழைச்சிட்டு போகணுமாம்..மேடம் சொன்னாங்க அதை சொல்ல வந்தேன்.. முறைக்காத அண்ணே.. நேர ரோட்ட பார்த்து வண்டி ஓட்டு ” என்றான் நட்டு…
நட்டுக்கு அப்படி பேசுவது பயம்தான்.. ஆனாலும் வெளி ஆட்களுக்கு முன்பு வைத்து மாறன் கை நீட்ட மாட்டான்.. என்றொரு சின்ன நம்பிக்கையும் இருந்தது.. அதனால் இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பேசி தீர்த்துக் கொள்வான்..
“ ம்ம்ம்.. டேய் நட்டு உனக்கு வார்த்தை பார்த்து வரணும்.. இல்லன்னா இனி பேச வாய் இருக்காது..” என்று கூறி நட்டுவை எச்சரித்து விட்டு கோமதியையும் அழைத்துச் செல்ல கோவிலுக்கு பைக்கை விட்டான் திருமாறன் ..
“ இளவரசியாரே நமது ஒரு வேலையை நாம் சிறப்பாக செய்து முடித்து விட்டோம்.. இனி தான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது..
இந்த ரெண்டு மானிடர்களையும் காதல் வலையில் விழ வைக்க வேண்டும்..
நம் சித்து வேலையை ஆரம்பிப்போமா?..”
“ நன்றாகவே ஆரம்பிப்போம் இளவரசரே.. நான் ரெடி.. நீங்க ரெடி என்றால் ஜாலியா நாம் வைத்து விளையாட மானிட பொம்மைகள் கிடைத்து விட்டார்கள்.. அவர்களை வைத்து சந்தோசமாக விளையாடுவோம்.. ”
என்று திருமதியும் திருமகளும் பேசிக்கொண்டு அவர்களுக்கு முன்பாக மாறன் வீட்டிற்கு போய் அவர்களது வருகைக்காக காத்திருந்தார்கள்..
இனி நடக்கும் சம்பவத்துக்கு சங்கம் பொறுப்பேற்காது….