மீனாட்சியின் அறையில் அவள் வருகைக்காக காத்திருந்தான் பாண்டி..
அந்த மெல்லிய தேகத்தில் கனமான பட்டுப் புடவையை சுற்றிக்கொண்டு கையில் பால் செம்புடன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் மீனாட்சி..
அவள் வருகைக்காக காத்திருந்தவன் எழுந்து சென்று அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்..
குனிந்த தலை நிமிராமல் இருந்தாள் மீனாட்சி..
“ மீனம்மா.. என்னை பாருடி.. இப்ப நீ என்ன பார்க்காட்டி இன்னும் நாலு நாள் கழிச்சு என்னை நீ விருப்பப்பட்டாலோ இல்ல நான் விருப்பப்பட்டாலும் ரெண்டு பேரும் இப்படி பக்கத்துல இருந்து நேருக்கு நேரா பார்த்துக்க முடியாது..
இன்னைக்கு புதன்கிழமை.. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு எனக்கு பிளைட் இங்கே இருந்து அஞ்சு மணிக்கு எல்லாம் புறப்படணும்.. என்ன பார்த்து இருக்கிற நாள்ல சந்தோஷமா சிரிச்சு பேசிdi மீனம்மா… எனக்கு அதுதான் ஞாபகமே.. ஐந்து நாள் பொக்கிஷமான வாழ்க்கையை வைத்துத்தான் நான் அஞ்சு வருஷம் ஓட்டணும்..
என் மேல் எதாவது கோவமா மீனம்மா?..” என்றான்..
அவன் பேசும்போது அவனது குரலில் அவ்வளவு வலி தெரிந்தது..
ரொம்ப நாட்களாக மிட்டாய்க்கு ஏங்கிய குழந்தைக்கு அந்த மிட்டாய் அன்று கிடைத்து உடனே அதை பிடுங்கியது போன்று அவன் உணர்ந்தான்..
யார் கூறியது ஆண்கள் கல்நெஞ்சக்காரர்கள் அவர்கள் மனதில் ஏக்கம் ஆசை இருக்காது என்று..
பெண்களில் சிலர் அனைத்தையும் மனதில் பூட்டி வைப்பார்கள்.. சிலர் வெளிப்படுத்துவார்கள்.. ஆனால் ஆண்கள் எப்பொழுதுமே மனதில் ஏக்கங்களையும் சோகங்களையும் பூட்டித்தான் வைத்துருப்பார்கள்..
ஆண் ஒருவன் பார்க்க அமைதியாக முகத்தில் கோபத்தை படர விட்டு இறுக்கமாக முரடன் போன்று தான் இருப்பான்..
ஆனால் அவன் மனதிற்குள் வேதனைகள் ஆயிரம் இருக்கும்..
அவன் செய்வான்.. என அவனை நம்பி அவனது தோளில் பொறுப்பை சுமத்தி விட்டு தந்தை மறைந்து விட்டார்..
அதிக பாசம் வைத்த தந்தையின் வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கடமையை செய்ய அவன் தயாராகி விட்டான்..
இந்த ஐந்து வருடங்கள் அவன் அனுபவிக்க போகும் வேதனைகள் அவன் மட்டுமே அறிந்தவை..
சிறு வயதிலிருந்து தாய் தன்னுடன் பேச மாட்டாரா?.. தன்னை அரவணைக்க மாட்டாரா?.. தனக்கு உணவு ஊட்ட மாட்டாரா?.. என பல எதிர்பார்ப்புகளை அவன் மனதில் சுமந்து ஏமாற்றங்களும் ஏக்கங்களும் தான் மிஞ்சியது..
பெண்களுக்கு மட்டுமே தாயின் அரவணைப்பு நல்வழிப்படுத்தும் என்பது இல்லை.. ஆண்களுக்கும் தாயின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் தான் முதலில் அவனை நல்லவனாக மாற்றுவது..
ஆனால் இங்கே தாயின் அரவணைப்பு இல்லாமலும் அவனை நல்லவனாக தான் வைத்திருந்தது..
காரணம் அவன் கண்ணில் தோன்றிய குழந்தையின் சிரிப்போடு கள்ளமில்லா அழகில் அவன் மனதை கவர்ந்த மீனாட்சி தான்..
எப்போது முதல் முதல் அவளைப் பார்த்தனோ அன்றே அவள்தான் தனது மனைவி என தீர்மானித்து விட்டான்..
இதோ அன்று தீர்மானித்தபடி இன்று கை பிடித்து விட்டான்..
அவன் கூறியதைக் கேட்டு அவள் என்ன உணர்ந்தாள் என்று தெரியாது.. சற்று அவன் அருகே நெருங்கி அமர்ந்து அவன் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டாள் மீனாட்சி..
கடந்த சில நாட்களாக அவன் பேசும் பொழுதெல்லாம் ஒவ்வொரு முறையும் மீனம்மா என்று அழைப்பது அவள் மனதை ஏதோ செய்தது..
அவள் முதல் கிரீன் சிக்னல் கொடுத்ததும் அவனும் நெருங்கி வந்து அவளை தோளோடு அணைத்து அவன் மார்பில் சாய்த்து கொண்டான்..
“ நான் உனக்கு ரொம்ப பெரிய அநியாயம் பண்ணிட்டேன்னு எனக்கும் மனசாட்சிக்கு உருத்தலா இருக்கு.. உனக்கும் அது தெரியும்.. எல்லாம் தெரிஞ்சும் இந்த வாழ்க்கைக்குள் நீ வந்தா கஷ்டப்படுவன்னு தெரிஞ்சும் ஏன்டா சம்மதம் சொன்ன..?”என்றான் பாண்டி
“ ஒரு ஆம்பள வந்து கால்ல விழாத குறையா கெஞ்சி என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு அழுதா யார் தான் சம்மதம் சொல்ல மாட்டாங்க?… அதுதான் சரி போனா போகுது.. சார் ரொம்ப கெஞ்சுறார் வாழ்க்கை பிச்சை கொடுக்கலாமேன்னு சம்மதம் சொன்னேன்… ” என்றாள்..
அவள் வாய்தான் அப்படி இளக்காரமாக பேசியதே தவிர அவள் முகத்தில் அவனைப் பிடித்து இருப்பது தெரிந்தது..
“ மீனம்மா நீ அப்படி உண்மையாலுமே பிச்சையாக கொடுத்தாலும் எந்த தப்பும் இல்லை… எனக்கு எந்த ஒரு கவலை கோவம் எதுவும் இல்லை..
நீ சொன்னது ஒரு வகையில் சரிதான்.. நீ எனக்கு வாழ்க்கை பிச்சை தான் போட்டு இருக்க..
நீ எனக்கு வாழ்க்கையை பிச்சையாக கொடுத்த ராசாத்தி.. என் உடம்பில் உயிர் இருக்கிற வரைக்கும் உன்ன சந்தோஷமா பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் தான் என்னோட முதல் கடமை..
நான் இங்க விட்டுட்டு போனதும் உனக்கு ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே மறைக்காமல் என்கிட்ட சொல்லணும்.. குடும்பம் அத்தை என்ன நினைப்பாங்க?.. உன்னோட நாத்தனார் என்ன நினைப்பாங்க?.. மத்தவங்க என்ன நினைப்பாங்க?.. என்ற கவலையே உனக்கு தேவையில்லை.. பலமுறை சொல்லிட்டு தான் போவேன் உனக்கு எந்த ஒரு கஷ்டமும் கொடுக்க கூடாது.. உன்னோட படிப்பு விஷயத்துல அவங்க தலையிடக்கூடாது.. நீ அங்கே என் பொண்டாட்டியா அந்த வீட்டோட மருமகளா தான் இருக்கணும்.. அங்க இருக்கிற நாலு பேரும் வேலை எல்லாம் உன் தலையில கட்டிட்டு அவங்க ஜாலியா இருக்க முயற்சி செஞ்சா நீ எதுக்கும் வளைந்து கொடுக்க கூடாது.. ஒரு சின்ன வேலை அத்தை சொல்றாங்கன்னு படிப்ப விட்டுட்டு செய்ய ஆரம்பிச்சா அப்புறம் மொத்தத்தையும் உன் தலையில் கட்டி விடுவார்கள்… கவனம் முழுக்க உன் படிப்புல மட்டும்தான் இருக்கணும் மீனம்மா.. ” என்று கூற வேண்டிய அறிவுரைகளை கூறிவிட்டு..
அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் கையை அவன் தலையில் வைத்து கோதும்படி கூறி மேலும் சுவாரசியமாக பேசினார்கள்..
“ அம்மா மாடியில் படுத்துக்கணும்னு எவ்வளவு ஆசை தெரியுமா?.. அது எப்பவுமே நடந்ததே இல்லை.. இந்த மடி தான் எனக்கு தாய் மடி மாதிரி தெரியுது மீனம்மா.. இனி நீ தான் எனக்கு அம்மா மனைவி எல்லாம்.. அதனால் தான் வாய் நிறைய மீனம்மா மீனம்மா ன்னு சொல்றேன்..” என்று பேசிக்கொண்டே அடுத்து அவர்களது வாழ்க்கை கட்டத்திற்குள் முதல் அடி எடுத்து வைத்தார்கள்..
“ நீங்க கேட்டு நான் கல்யாணத்தையே இல்லைன்னு சொல்லாம பண்ணிக்கிட்டேன் .. இனி எதை இல்லைன்னு சொல்ல போறேன்..” என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு சம்மதம் கூறினாள்..
“ எனக்கு உன்னோட தைரியம் வைராக்கியம் பற்றி ரொம்ப நல்லா தெரியும்.. எந்த சூழ்நிலையிலும் நீ எதையும் சமாளிச்சுக்குவ.. அதனாலதான் நான் உன்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைச்சிருக்கேன்.. இப்ப ஒருவேளை நான் நினைச்ச மாதிரி நமக்கு ஃபர்ஸ்ட் அட்டம்லேயே பாப்பா வந்தால். பெற்று வளர்த்து ஆளாக்கி கிட்டே உன் படிப்பையும் ஆரோக்கியத்தையும் உன்னை சுற்றி இருக்கிறவங்களையும் நீ நல்லபடியா பார்த்துக்கொள்ளவன்னு எனக்கு ரொம்ப நம்பிக்கை..
உன்னை பத்தி அவ்வளவும் தெரிஞ்சுகிட்டு தான் நீ தான் என் வாழ்க்கைக்கு சரியா வருவேன்னு அடம் பிடிச்சு உன்ன நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.. இன்னும் இடையில மூணு நாள் இருக்குடி மீனம்மா.. அப்புறம் ஆறுதலா பேசிக்கலாம் இப்ப டைம் இல்ல.. ” கூறிக்கொண்டே லைட்டயும் அணைத்து அவளையும் அணைத்தான்..
அதன்பின் அவளது முழு சம்மதத்தோடு வளையல் சத்தமும் கட்டிலின் ஓசையும் உணர்ச்சிகள் நிரம்பிய சிணுங்கல்களும் மட்டுமே ஒலித்தது..
இருவரது ஆடைகளும் அவர்களுக்கு தொல்லை செய்யாமல் அறையின் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டது..
மெல்லிய தேகம் கொண்ட பெண் அவளை மிக மெதுவாகவே கையாண்டான்..
அவன் கண்கள் அவள் முகத்தை தவிர எங்கும் செல்லவில்லை..
அவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளே அவனுக்கு அவள் வலியில் இருக்கிறாளா? இல்லை சுகத்தில் இருக்கிறாளா?.. என தெரியப்படுத்தியது..
அவள் முகம் காட்டியா வர்ணஜாலங்களை வைத்துத்தான் அவன் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினான்..
மீனாட்சி வயதில் வேண்டுமானால் சிறு பெண்ணாக இருக்கலாம்.. ஆனால் தாம்பத்திய உறவைப் பற்றி அவள் எடுத்திருக்கும் ஹோம் சயன்ஸ் பாடத்தில் கணவன் மனைவி உறவு குழந்தை பிறப்பு வளர்ப்பு சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் படித்து தெரிந்து கொண்டவள்..
அதனால் அவளுக்கு பல சங்கடங்கள் இருந்தாலும் அதை பூரணமான தாம்பத்தியத்திற்காக தவிர்த்துக் கொண்டாள்…
குடும்பம் என்னும் தாம்பத்திய வாழ்க்கையில் ஒருவர் மட்டுமே இழுத்துச் செல்ல முடியாது..
ஆணுக்கு இருக்கும் அனைத்து ஆசைகளும் ஏக்கங்களும் பெண்ணுக்கும் இருக்கும்..
பெண் தன் உடலை ஆணுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு கல் மாதிரி கட்டிலில் கிடக்க மாட்டாள்..
அவள் உடலிலும் உணர்ச்சிகள் இருக்கிறது.. அந்த உணர்வு பொக்கிஷங்களை தூண்டிவிட்டால் போதும்.. தாம்பத்திய கடலில் இருவருக்கும் பரிபூரண திருப்தி கிடைக்கும்..
பல ஆண்களுக்கு இது புரியாமலும்.. சிலர் புரிந்து கொண்டு தான் ஆண் பெண் அவளுக்கு என்ன உணர்வு என்று நினைக்கும் பட்சத்தில் தான் குடும்பத்தில் முதல் வாக்குவாதங்கள் சண்டைகள் ஆரம்பிக்கிறது..
மூலம்தான் பலர் தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள்..
பெண்கள் அதிக கூச்சம் கொண்டவர்கள் அவளாக முன்னேற மாட்டாள்..
தான் காதலித்து அன்பாக கைப்பிடித்த கணவனாக இருந்தாலும் அவள் உணர்ச்சிகளை கணவனுக்கு அவளாக முன்வந்து தெரியப்படுத்த மாட்டாள்..
பெண்ணும் தன்னை போல் சக மனுசி அவள் உடலிலும் உணர்ச்சிகள் இருக்கிறது என்பதை ஆண்கள் உணர்ந்தாலே போதும்..
தாய் அன்பை. நட்பை பாசத்தை காதலை அதிகமாக அள்ளி அள்ளி கொடுக்கும் பெண் அவள் உடலில் தோன்றும் உணர்வு மாற்றங்களை மட்டும் யாருக்கும் தெரியப்படுத்த மாட்டாள்..
அதையும் மீறி ஒரு சில பெண்கள் தெரியப்படுத்தி விட்டால் அவளுக்கு சமூகத்தில் வேறு பெயர் கட்டி அவளை மூளையில் முடக்கி விடுவார்கள்..
அதேபோன்று செந்தூரப் பாண்டியனுக்கு கிடைத்த மீனாட்சி என்னும் பொக்கிஷத்தை அவன் பொக்கிஷமாகவே அவள் உணர்வுகளையும் அவன் அவளுக்கு தெரியப்படுத்தி அதன் மூலம் இருவருமே தாம்பத்தியத்தில் சந்தோஷமாக ஒன்று கூடினார்கள்..
இதோ முதல் முறையாக அவர்களது தாம்பத்தியம் அழகாக அரங்கேறியது..
அவளுக்கு வெட்கம் ஒரு பக்கம் அவன் முகத்தை திரும்பி பார்க்க முடியவில்லை..
இதற்கு மேலும் அவளை அதிகம் சங்கடப்படுத்தாமல் அவனும் போர்வையை இருவருக்கும் சேர்த்து மூடிக்கொண்டு அவளை தனது மார்பில் சாய்த்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்..
அவர்களது திருமண வாழ்க்கையில் அழகான அடுத்த நாள் விடிந்தது..
அவன் நாட்டில் இருக்கப் போகும் நாட்கள் மிகவும் குறைவு என்பதால் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு முன் நிறுத்தி அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல் மூன்று நாட்களும் மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த மீனாட்சி உடன் இணைந்து அந்த தேவி மீனாட்சியையும் தரிசித்து விட்டு அங்கிருக்கும் அவனது நண்பன் மதியழகன் வீட்டிற்கு சென்று சவுதி அரேபியா நாட்டிற்கு செல்வதை கூறி விட்டு அவர்களை பார்த்துவிட்டு மீண்டும் வரலாம் என தீர்மானித்து அவளை தயாராகும் படி கூறினான்..
அவன் வீட்டுக்கு லதா பாண்டிக்கு அழைத்து மதுரைக்கு செல்வதாக அவளிடம் மட்டும் கூறிவிட்டு இங்கே மீனாட்சியின் குடும்பத்திடமும் கூறிவிட்டு இருவரும் அவனது டாக்ஸியிலேயே மதுரையை நோக்கி பயணித்தார்கள்..
மெல்லிய காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க இரவு தூக்கத்தை அவன் களவாடியதால் அவள் தற்போது தூக்கத்தை தழுவியிருந்தாள்..
அடிக்கொரு முறை அவள் முகத்தை பார்த்துக் கொண்டே ரோட்டையும் பார்த்து வேகமாக டாக்ஸி ஓட்டினான்..
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு நேராக அவர்களது வீட்டிற்கு வருவதாக மதியழகனிடம் செந்தூர பாண்டியன் அழைத்து பேசியிருந்தான்..
செந்தூரப் பாண்டியனும் மதியழகன் சிறுவயதில் இருந்து நண்பர்கள்..
நேரம் கிடைக்கும் பொழுது சந்தித்துக் கொள்வார்கள்..
மதி சிறைவாசம் என பல துன்பங்கள் அனுபவித்த நேரம் இவனை சற்று மறந்து தான் விட்டான்..
பாண்டியனுக்கும் இருக்கும் ஒரே நண்பன் மதியழகன் என்பதால் திருமணத்திற்கு அழைக்க முடியாத காரணத்தால் திருமணத்தைப் பற்றி பேசுவதற்காக மதிக்கு அழைத்திருந்தான்..
திருமணத்தை நல்லபடியாக முடித்துவிட்டு தங்களது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு மதியழகன் கூறி இருந்தான்..
நண்பனின் வார்த்தையை மதித்து வெளிநாடு செல்வதற்கு முன் அவனையும் சந்திக்க வேண்டும் என்பதால் மனைவியுடன் நண்பன் வீடு நோக்கி பயணித்தான்..
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை கூடை வாங்கிக் கொண்டு மீனாட்சி அம்மனின் சிறப்பு தரிசனத்தை பார்த்துவிட்டு கோவிலை சுற்றி அவளுடன் இணைந்து அனைத்து கோவில் வாசலுக்கும் சென்று பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் வந்த வாசல் வழியாக வெளியே வந்தார்கள்..
அதன் பின் அங்கிருந்து மதியழகனின் மகளுக்கு இனிப்பு வகைகள் பொம்மை என சிலவற்றை வாங்கிக் கொண்டு நண்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்..
பாண்டியும் மீனாட்சி யும் ஒன்றாக இறங்கியதும் வள்ளி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தாள்..
தற்பொழுதுதான் இசையை முதல் முதலாக பாண்டியும் பார்க்கிறான்..
மீனாட்சியை பார்த்ததும் இசை ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டாள்..
மீனாட்சியும் குனிந்து நான்கு வயதேயான இசையை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள்..
இசை மீனாட்சியுடன் நன்றாக ஒட்டிக்கொண்டதை பார்த்து வள்ளிக்கு ஆச்சரியம் தான்..
குழந்தை பருவத்தில் இருந்தே வள்ளி மற்றும் கோதையை தவிர்த்து யாரிடமும் செல்ல மாட்டாள்..
ஏன் சிறை சென்று மதியழகன் வந்து ஆறு மாதத்திற்குள் தன் மகளிடம் ஒட்டிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டான்..
பார்த்த முதல் பார்வையிலே மீனாட்சியை தன் மகளுக்கு பிடித்ததை நினைத்து தான் வள்ளி ஆச்சர்யபட்டாள்..
வீட்டுக்கு உள்ளே வந்ததும் பாண்டி மீனாட்சி ஜோடி கோதை அம்மாளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்..
அதன் பின் நண்பர்கள் இருவரும் பழைய கதைகளை பேச ஆரம்பித்து விட்டார்கள்..
கோதையும் மீனாட்சி யும் வள்ளியும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்..
மீனாட்சியை பற்றி அவர்கள் நன்கு தெரிந்து கொண்டார்கள்..
வள்ளி முகத்தில் தேஜஸ் இல்லை..
அவளது மாமன் அவளுடன் பேசாமல் இருந்தபோதே அவள் முகத்தில் புன்னகைக்கு பஞ்சம் இல்லை..
ஆனால் அவளது மாமன் பேச ஆரம்பித்ததன் பின் தான் அவளது புன்னகைக்கு பஞ்சமாகியது..
மீனாட்சியின் முன்பு அவளது குடும்ப பிரச்சினை தெரிய வேண்டாம் என்பதற்காகவே முகத்தில் மட்டும் இருக்கும் சிரிப்பு என்று மீனாட்சி தெரிந்து கொண்டாள்..
மினாட்சிக்கு அடுத்தவர்களை பற்றி பேசுவது பிடிக்காது..
இதுவரை அவள் யாரை பற்றியும் கோல்மூட்டியதில்லை..
அதனால் மீனாட்சி வள்ளியின் தற்போதைய கவலையான மனநிலையை மாற்ற சிரிக்க சிரிக்க பேசினாள்..
சரியாக நேரம் ஒரு மணி நெருங்க 15 நிமிடமே இருக்கும் போது கணவன் வாய் திறக்கும் முன்பே வள்ளி எழுந்து உணவு மேசையில் உணவுகளை தயார் படுத்தி அடுக்கி வைத்தாள்..
தாயின் முந்தானைச் சேலையை பிடித்துக் கொண்டு இசையும் அவர்களின் பின் சுற்றி வந்தாள்..
ஒரு மணி ஆகியதும் அவர்கள் அனைவரும் உணவு மேசையில் ஒன்றுகூடி இருக்க வள்ளி அனைவருக்கும் பரிமாறினாள்..
வள்ளியின் கை பக்குவத்தில் உணவு அமிர்தமாக இருந்தது..
மினாட்சியே ஒரு முறை அசந்து போய்விட்டாள்.. அவளும் நன்றாக சமைப்பாள்.. ஆனால் வள்ளியை விட என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்..
ஆயிரம் தான் பெண்கள் மசாலாவை கையில் அரைத்தோ இல்லை கடையில் வாங்கி சமைத்தாலோ கைப்பக்குவம் கை ருசி ஒன்று உள்ளது அது நம் வள்ளிக்கு இயல்பாகவே இருந்தது..
மதியழகன் நேரத்திற்கு நேரம் உணவு உண்ண ஓடி வருவதற்கு இதுவும் ஒரு காரணம்..
ரசித்து ருசித்து அனைவரும் உணவு உண்டதும் பாண்டி மீனாட்சி தம்பதியை அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தார்கள் ஓய்வெடுக்கும்படி..
அறைக்குள் வந்ததுமே மீனாட்சி பேசினாள். “ ஏங்க எனக்கு மதி அண்ணாக்கும் வள்ளி அண்ணிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை போல தெரியுது.. அவங்க இயல்பா இல்ல.. நாம இன்னைக்கே இங்க இருந்து புறப்படுவோம்..” என்றாள்..
பாண்டி சரி என கூறி பயணம் செய்த களைப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டு உறங்கி விட்டார்கள்..
மீனாட்சி கூறியது போன்று மாலை தேநீர் அருந்திவிட்டு இருவரும் புறப்படுவதாக சொன்னான் பாண்டி.. மதி.. எவ்வளவு தடுத்தும் கேட்காமல் புறப்படுவதாக கூறி வெளியே வந்து விட்டார்கள்..
அங்கிருந்து மதுரையில் பிரபலமான ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து இருவரும் தாங்கினார்கள் அன்று இரவு..
அன்றும் அவர்களுக்கு இடையே கூடல் இடம் பெற்றது..
“ எல்லாருக்கும் எல்லாம் அமையுறது இல்லை மீனம்மா.. இந்த நாலு நாள் நம்ம சந்தோஷ வாழ்க்கையில என் விருப்பப்படி ஒரு பாப்பா வந்துட்டா சந்தோசம்.. அப்படி அந்த பாக்கியத்தை கடவுள் நமக்கு கொடுக்கலைன்னா இந்த அஞ்சு வருஷமும் வேஸ்ட் ஆகிடும்.. அப்புறம் 30 வயசுல நான் வந்து திரும்ப ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து தான்.. நமக்கு பாப்பா வரும்..” என்றான்..
இதுவரை காலமும் அவனுக்கென்று அவன் எதுவும் கேட்டதில்லை.. இதை முதலாவதாக கேட்கிறான்.. என்பதால் மீனாட்சியும் மதுரை மீனாட்சி தாயை வேண்டினாள்.. அவர்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக ஒரு குழந்தை தள்ளி போகாமல் உடனடியாக வேண்டும் என்று..
அவளின் வேண்டுதல் பலிக்குமா..?
இங்கே பாண்டியின் தாய் தன்னை மதித்து அவளை இங்கு அழைத்து வராமல் ஊர் சுற்ற சென்று விட்டான் மகன் என்று கடும் கோபத்தில் இருந்தார்..
லலிதா பாண்டி தான் தாயின் கோபத்தை இன்னும் மூன்று நாட்களுக்கு பொறுத்துக் கொள்ளும் படியும் அதன் பின்பு அவள் இங்கே தான் இருக்க வேண்டும்.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி அடக்கி வைத்திருந்தாள்..
லதா பாண்டிக்கு முன்பு மீனாட்சியை கோவமாக திட்டினால் கூட உடனடியாக அது பாண்டிக்கு தெரிந்து விடும்..
ஒரே முடிவாக மீனாட்சியை தாயின் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று விடுவான்..
அதன் பின்பு எப்படி அவர்கள் தங்கள் அண்ணனின் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக அவளை வெளியேற்ற முடியும்..
அவர்கள் வெளியேற்ற வேண்டாம்.. அவள் வெளியேறி போவதற்கு இயற்கையே அவளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்..